மார்ச் 8 பெண்கள் தினம். தனியுடமையினால் உருவான ஆணாதிக்கச் சமூகத்தை ஒழிக்க, சமூகத்தை சமூகமயமாக்க சர்வதேசிய பெண்ணியவாதிகள் விடுத்த அறைகூவலே மார்ச் 8 ஆகியது. உழைக்கும் பெண்கள் தலைமையில் போராடுவதை குறிக்கின்றது.
உலகமயமாக்கமானது இந்தத் தினத்தை தனியுடமைக்கான பெண்களின் நுகர்வு தினமாகவும், அன்பளிப்புகளை பரிமாறும் சந்தைக்குரிய பெண்கள் தினமாகவும் கட்டமைத்து இருக்கின்றது. பெரும்பாலான பெண்கள் இப்படி தான் மார்ச் 8 ஐ அணுகுகின்றனர். ஊடகங்கள் இப்படித் தான் காட்டுகின்றது. பெண்களின் சிந்தனை இப்படித் தான் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது.
ஆணாதிக்கச் தனியுடமை சமூகத்தில் தான், இன்னமும் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். எல்லாச் சிந்தனையும், வாழ்க்கை முறைமைகளும் இதற்குள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி ஒரு பெண் "சுதந்திரம்" பெற்று வாழ்கின்றாள் அல்லது நான் "சுதந்திரமான" பெண் என்பது எல்லாம் பொய்களாலானது. நிலவும் சமூக அமைப்பென்பது ஆணாதிக்கமுடையது மட்டுமின்றி, பெண்ணை அடிமையாக்கிய தனியுடமைச் சமூகமாகவே இருக்கின்றது.
இந்த ஆணாதிக்கச் தனியுடமைச் சமூகத்தில் ஆணின் சமூகப் பொருளாதார வீழ்ச்சி என்பது, பெண்ணை மேலும் அடிமையாக்கும். இதுவே ஆணாதிக்க தனியுடமை சமூக பொருளாதாரக் கட்டமைப்பின் பொது விதியாகும்.
நவதாராளவாதமானது சமூகம் போராடிப் பெற்ற உரிமைகளை படிப்படியாக இன்று பறிக்கும் போது, ஆணாதிக்க சமூகத்தில் வாழும் பெண்;ணுக்கும் அது பொருந்தும்;. பெண் போராடிப் பெற்ற உரிமைகளை இழந்தாக வேண்டும்;. இதுதான் இன்றைய சமூகப் பொருளாதார அமைப்பின் விதி.
சொத்து சிலரிடம் குவிதல் என்பது சொத்துடமை வர்க்கத்தால் மனிதவுரி;மைகளைப் பறிக்கின்ற நிகழ்ச்சி மூலமே சாத்தியம்;. எதிர்ப்பற்ற மனித சமூகம் மூலமே, சொத்துக்கள் குவிய முடியும்;. இந்த பொதுச்சூழலை உருவாக்க, மனிதனின் எதிர்ப்பாற்றலை இல்லாதாக்குவது என்பதே இனறைய சமூக பொருளாதார உள்ளடக்கமாகும். மனிதனின் சமூக ஆளுமைக்கு அடிப்படையான சமூகம் குறித்த பொது அறிவை இல்லாதாக்குவதன் மூலமே, சொத்துக் குவிப்பை எதிர்ப்பு இன்றி அடைய முடியும். இதைத்தான் இன்று ஏகாதிபத்தியங்களும் - நவகாலனிய நாடுகளும் செய்கின்றன.