Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மார்ச் 8 பெண்கள் தினம். தனியுடமையினால் உருவான ஆணாதிக்கச் சமூகத்தை ஒழிக்க, சமூகத்தை சமூகமயமாக்க சர்வதேசிய பெண்ணியவாதிகள் விடுத்த அறைகூவலே மார்ச் 8 ஆகியது. உழைக்கும் பெண்கள் தலைமையில் போராடுவதை குறிக்கின்றது.

உலகமயமாக்கமானது இந்தத் தினத்தை தனியுடமைக்கான பெண்களின் நுகர்வு தினமாகவும், அன்பளிப்புகளை பரிமாறும் சந்தைக்குரிய பெண்கள் தினமாகவும் கட்டமைத்து இருக்கின்றது. பெரும்பாலான பெண்கள் இப்படி தான் மார்ச் 8 ஐ அணுகுகின்றனர். ஊடகங்கள் இப்படித் தான் காட்டுகின்றது. பெண்களின் சிந்தனை இப்படித் தான் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது.

ஆணாதிக்கச் தனியுடமை சமூகத்தில் தான், இன்னமும் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். எல்லாச் சிந்தனையும், வாழ்க்கை முறைமைகளும் இதற்குள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி ஒரு பெண் "சுதந்திரம்" பெற்று வாழ்கின்றாள் அல்லது நான் "சுதந்திரமான" பெண் என்பது எல்லாம் பொய்களாலானது. நிலவும் சமூக அமைப்பென்பது ஆணாதிக்கமுடையது மட்டுமின்றி, பெண்ணை அடிமையாக்கிய தனியுடமைச் சமூகமாகவே இருக்கின்றது.

இந்த ஆணாதிக்கச் தனியுடமைச் சமூகத்தில் ஆணின் சமூகப் பொருளாதார வீழ்ச்சி என்பது, பெண்ணை மேலும் அடிமையாக்கும். இதுவே ஆணாதிக்க தனியுடமை சமூக பொருளாதாரக் கட்டமைப்பின் பொது விதியாகும். 

நவதாராளவாதமானது சமூகம் போராடிப் பெற்ற உரிமைகளை படிப்படியாக இன்று பறிக்கும் போது, ஆணாதிக்க சமூகத்தில் வாழும் பெண்;ணுக்கும் அது பொருந்தும்;. பெண் போராடிப் பெற்ற உரிமைகளை இழந்தாக வேண்டும்;. இதுதான் இன்றைய சமூகப் பொருளாதார அமைப்பின் விதி.

சொத்து சிலரிடம் குவிதல் என்பது சொத்துடமை வர்க்கத்தால் மனிதவுரி;மைகளைப் பறிக்கின்ற நிகழ்ச்சி மூலமே சாத்தியம்;. எதிர்ப்பற்ற மனித சமூகம் மூலமே, சொத்துக்கள் குவிய முடியும்;.  இந்த பொதுச்சூழலை உருவாக்க, மனிதனின் எதிர்ப்பாற்றலை இல்லாதாக்குவது என்பதே இனறைய சமூக பொருளாதார உள்ளடக்கமாகும். மனிதனின் சமூக ஆளுமைக்கு அடிப்படையான சமூகம் குறித்த பொது அறிவை இல்லாதாக்குவதன் மூலமே, சொத்துக் குவிப்பை எதிர்ப்பு இன்றி அடைய முடியும். இதைத்தான் இன்று ஏகாதிபத்தியங்களும் - நவகாலனிய நாடுகளும் செய்கின்றன.

யுத்தத்தின் பின் ஒடுக்கும் அடையாளங்களாக பௌத்தம் மட்டும் வடகிழக்கில் திடீர்திடீரென முளைக்கவில்லை.  மாறாக இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய மத அடையாளங்கள்  - அங்குமிங்குமாக திடீர் திடீரென தோன்றுவது நடந்தேறுகின்றது. யாழ் சமூக அமைப்பின்  சிந்தனைமுறையாக இருக்கும் வெள்ளாளியமானது, சாதிய அடையாளங்களையும்  சாதிப் பண்பாடுகளையும், இந்து - கிறிஸ்துவ மத அடையாளங்களையும் சமூகத்தில் திணித்து வருகின்றன.

கோயில்கள் பெருக்கெடுக்கின்றன. சாதிய ஆச்சாரங்கள் கோயில்களில் குடிகொள்கின்றன. பாடசாலைகள் கூட மத அடையாளங்களால் குறுகி வருகின்றது. மக்கள் வறுமையில் வாட, மதங்களோ கொழுத்துக் கொண்டு இருக்கின்றன. கோயிலைச் சுற்றிய பணம் அதிகாரமாக, வன்முறையாக மாறுகின்றது. மனிதனுக்கே உரிய உழைப்பு, உருவாக்கும் சமூக அறங்கள் அழிந்து வருகின்ற பொதுப் பின்னணியில், மதங்கள் தலைமை தாங்குகின்றன. தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைகள் மதமாகவும், மத வெறியாகவும், மத வன்முறையாகவும் மாற்றப்படுகின்றது.

மாட கோபுரங்களாக மாறும் கோயில்;களைக்; கும்பிட மக்களில்லை. கோயில்களின் பின்னால் கொழுத்த கும்பல்களின் தோற்றம், சமூகத்தின் மேலான சமூக அதிகாரமாக மாறியுள்ளது. யுத்தத்தின் பின் அதிகமான புலம்பெயர் நிதி, கோயில்களில் வெறும் கொங்கிரிட் கற்குவியலாக மாறியுள்ளது. இந்தப் பணமானது பாரிய ஊழலை செய்து வளர்ந்த கொழுத்த கும்பலே, மத வெறியையும் -  மத வன்முறையையும் செய்வதை கடவுள் நம்பிக்கையாக மாற்றியுள்ளது.  இந்து – கிறிஸ்துவ கோயில்கள் வெள்ளாளிய சிந்தனையிலான, சாதிய ஆகம கோயிலாக்கி வருகின்றது. கிறிஸ்துவ கோயில் கூட வெள்ளாளிய சிந்தனையிலான சாதி அடிப்படையிலான சமூக பிரிவுகளையும் -  பிளவுகளையும் கொண்டதாக மாறி வருகின்றது. 

யுத்தத்தின் பின் தீவிரமாக மதமும், மத அடிப்படைவாதங்களும் சமூகத்தில் புகுத்தப்படுவதன் விளைவே மன்னார் வன்முறை. மன்னார் மோதல் சம்பவம் இனரீதியாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை, மத ரீதியாக பிளந்து விடவும், வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைவதைத் தடுக்கவும் விரும்பும் தரப்புகளின், ஒடுக்கும் சிந்தனை முறையின் விளைவாகும். இந்துப் பூசாரிகளாலும் இந்து கோயில் நிர்வாகிகளாலும், பாதிரிகளினாலும் திணிக்கப்படும் மத அடிப்படைவாதத்தோடு, ஒடுக்கும் ஆளும் வர்க்கக் கோட்பாடுகளின் விளைவே மன்னார்ச் சம்பவம்.

1

இன்று காலை(03.03.2019), யாழ்ப்பாணம் சென்றேன். போகும் வழியில், வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் நாதஸ்வர இசைக்கேற்ப மயிலாட்டம், குதிரை ஆட்டம் ஆடும் கலைஞர்கள் நடனமாடி வந்தனர். தெருக்கரையோரம் விடுப்புப் பார்த்தவரை விசாரித்தபோது,  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேசமகளிர் தினத்தைக் கொண்டாடும் மாநாடு   நடக்கவிருப்பதாகவும், அதையொட்டியே இந்த மேளதாளங்களுடனான மகளிர்பேரணி  வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் நிற்பதாக கூறினார். நாதஸ்வர வித்வான்கள் 

"ஒட்டகத்தைக் கட்டிக்கோ, கெட்டியாக  ஒட்டிக்கோ, வட்ட வட்டப் பொட்டுக்காரி...... பத்த வச்சாப்  பத்திக்கும், வாய் வெடித்த மொட்டுகாரி.....அதி காலை சேலை சொல்லுமடி மிச்சத்தை"

என்ற தமிழ் பெண்களின் சர்வதேச கீதத்தை உச்சஸ்தாயில் வாசிக்க, குயில் ஆட்ட கலைஞர்களும், குதிரை கலைஞர்களும் துள்ளித்துள்ளி ஆடினார்கள். மகிழ்ச்சி பொங்க, பெருமையாக நூற்றுக்கணக்கான பெண்கள் இசைக்கேற்ப அசைத்துக் கொண்டிருந்தார்கள்.

சனக்கூட்டத்துக்கு இடையில், உற்றுக் கவனித்த போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மணிவண்ணன், குதிரைக் கஜேந்திரன்   போன்ற தலைவர்களுக்கு மண்டபத்தின் வாசலுக்கு அதியுச்ச மரியாதையாக அழைத்து வந்தார்கள் சில பெண்கள். கட்சியின் கொடியை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றிவைத்தார். பெண்கள் மாநாடு என்றால், அதுவும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  நடத்தப்படும் மாநாடு என்பதால், அம்மாநாட்டில் பேசப்படும் உரைகளை கேட்கும் ஆர்வத்தில்  நானும் உள்ளே நுழைந்தேன்.

இந்திய பாசிசத்தின் வளர்ச்சியானது, இந்திய மக்கள் மீதான ஒடுக்குமுறையாக மட்டும் குறுகிவிடாது. மாறாக அடுத்த ஜந்தாண்டுகளில் தென்னாசியா முழுவதற்கும் பரவும் அதேநேரம், தன்னை நிலைநிறுத்த ஆக்கிரமிப்பு தன்மை கொண்டதாக மாறும். இதன் முதல் பலி பாகிஸ்தானாகவே இருக்கும். இதுதான் கிட்லரின் பாசிச வரலாறும் கூட. 

எப்படி 1930 களில் கிட்லரின் பாசிசம் முழு ஜெர்மனியையும் தன் பின் அணிதிரட்டியவுடன், பிற நாடுகளை ஆக்கிரமித்ததோ, அதே அபாயத்தை அடிப்படையாகக் கொண்டதே இந்திய காவி கார்ப்பரேட் பாசிசவாதமும். உள்நாட்டு நெருக்கடிக்கு தீர்வு காணவும், கார்ப்பரேட் பசிக்கு தீனிபோடவும் அருகில் உள்ள நாடுகளை  ஆக்கிரமிப்பது தான், பாசிசத்தின் அடுத்த இலக்காகும். இதை நோக்கி தான் இந்திய காவி கார்ப்பரேட் பாசிசம் தன்னை முன்னிறுத்திக் கொண்டு கொக்கரிக்கின்றது. கார்ப்பரேட் ஊடகங்கள் யுத்த வெறியை முன்வைத்து யுத்தத்தை நடத்தக் கோருகின்றது.

இந்தியாவில் காவி கார்ப்பரேட் பாசிசம் அமைப்பாகி வரும் இன்றைய சூழலில், கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத வண்ணம், கார்ப்பரேட் நலனை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது. அதேநேரம் பாசிசத்தை தொடர்வதன் மூலம் கார்ப்பரெட்டை கொழுக்கவைக்கும் அடுத்த ஜந்தாண்டு என்பது, பிற நாடுகளை ஆக்கிரமிப்பதன் மூலம் தான் சாத்தியம். முதலில் பாகிஸ்தானையே இந்து பாசிசம் தனது ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கும்.

இதனாலேயே கார்ப்பிரேட்டின் பாகிஸ்தான் பிரதிநிதியான இம்ரான்கான் இந்தியாவில் நடக்கவுள்ள தேர்தலில், மோடி தலைமையிலான காவி கார்ப்பரேட் ஆக்கிரமிப்பை  அடிப்படையாக கொண்ட பாசிசத்தை தோற்கடிப்பதற்கும், எதிர்காலத்தில் இந்து பாசிசத்திடமிருந்து பாகிஸ்தானை காப்பற்றவும் முனைகின்றார். இதனாலேயே அபிநந்தனை விடுதலை செய்ததன் மூலம், உடனடி யுத்தப் பதற்றங்கள் மூலம் தேர்தலை வெல்லும் காவி பாசிச பயங்கரவாத உத்தியை தோற்கடித்துள்ளார். இந்தியா முன்தள்ளிய பாசிச பயங்கரவாத சதியை முறியடித்துள்ளார்.

காவி கார்ப்பரேட் பாசிசமானது முஸ்லிம் வெறுப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் காவி இந்து கார்ப்பரெட் பாசிசத்தின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த, மீண்டும் மோடி தலைமையிலான பாசிசம் தோற்கடிப்படுவதன் அவசியத்தை பாகிஸ்தான் இனம் கண்டு சரியான  ராஜதந்திரத்தைக் கையாண்டுள்ளது. இந்த வகையில் பாசிசத்துக்கு எதிரான வரலாற்று ரீதியான நிகழ்வாக, பாகிஸ்தானின்  இராஜதந்திரம் மாறியுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்ட முடியாத எந்தப் போராட்டமும் தோற்கடிக்கப்படுவதுடன்,  வரலாற்றில் இருந்து காணாமலாக்கப்படும். தமிழ் மக்களை ஒடுக்கிய தமிழர்களும், தொடர்ந்து ஒடுக்கும் தமிழர்களின் கைகளில் காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டம் சிக்கியுள்ளதுடன்,   சின்னாபின்னமாக்கப்படுகின்றது. ஏகாதிபத்திய பொருளாதார நலனை அடிப்படையாகக் கொண்டு, மனிதவுரிமையை வரையறுக்கும் ஐ.நாவின் மூலம் தீர்வு என்று போலியான புரட்டைக் கொண்டு, போராட்டம் மழுங்கடிக்கப்படுகின்றது. 

தங்கள் உறவுகளைத் தேடி போராடுபவர்களின் உணர்வுகளுடன், தமிழ் சமூகம் அணிதிரளத்  தயாராகவில்லை. இந்த தமிழ் மக்களை அணிதிரளாது தடுக்கும் தேர்தல் கட்சிகள், தமிழ்மக்களை இதற்காக அணிதிரட்டும் மக்கள் அரசியலை செய்வதில்லை. தேர்தல் கட்சிகள் இந்த போராட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் இந்தப் போராட்டத்தில் தங்கள் முகத்தைக்  காட்டவும் - தங்கள் தலைமையில் நடப்பது போன்று ஊர் உலகத்துக்கு காட்டும் வக்கிரத்தையுமே அரங்கேற்றுகின்றனர். இந்தப் போராட்டத்தை நடத்தும் மனிதர்களின் மனித அறத்தையே காயடிக்கும், சமூக விரோதிகளாக மாறி தம்மை முன்னிறுத்துகின்றனர்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமென்பது, தங்கள் உறவுக்கு என்ன நடந்;தது என்பதை விசாரணை செய்யக் கோருகின்றது. இன்னமும் தங்கள் உறவுகள் உயிருடன் இருப்பதாக நம்பும் உளவியலுக்குள்ளாகி மனச்சிதைவுக்குள்ளாகும் மனிதர்களின் மனநிலை மீது, கண்டகண்ட நாய்களெலாம் மூத்திரம் பெய்வதும், அதை விளம்பரம் செய்வதுமே நடக்கின்றது.

யாரெல்லாம் மனிதர்களைக் காணாமாலாக்கினரோ, அவர்கள் இந்தப் போராட்டத்தை தோற்கடிக்கும் வண்ணம் வழிநடத்துகின்றனர். அவர்களை நம்பி நிற்கும் போராட்டமானது, வெற்றி பெற முடியாத சகதிக்குள் முடங்கிப் போக காரணமாகின்றது.

காணாமல் போனவர்கள் யார் – அவர்களை காணாமலாக்கியவர்கள் யார்? 

வெனிசுலாவில் ஏழை எளிய மக்களுக்கு செல்வம் பகிரப்படுவதற்கு எதிரான,   ஏகாதிபத்தியங்களின் கூச்சல் தான் "ஜனநாயகமாக" காட்டப்படுகின்றது. பணக்காரன் தொடர்ந்து பணக்காரனாக கொழுப்பதற்கு தடையான வெனிசுலாவின் பொருளாதாரக் கொள்கை என்பது, ஜனநாயகத்துக்கு முரணானது என்பதே மூலதனக் கொள்கை. மக்களால் தேர்ந்தெடுத்த தேர்தல் கட்சி ஆட்சி மூலம் தேசியமயமாக்கல் என்பது, ஏகாதிபத்தியங்களால் சகித்துக் கொள்ளப்படுவதில்லை. இதுதான் வெனிசுலா நெருக்கடியாகும்.

ஹியூகோ சாவேஸ் அரசு, 1999 முதல் 2013 வரையான ஆட்சிக் காலத்தில்,  அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செலுத்தி வந்த ராயல்ட்டி தொகையை 1 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயர்த்தியது. இப்படி வெனிசுலாவின் நெருக்கடி ஆரம்பமானது.

கிடைத்த புதிய செல்வத்தில், 66 சதவீதத்தை சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தினர். மின்சார நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் பொதுத்துறையாக்கப்பட்டன. உலகமயக் கொள்கைகளுக்கு முரணாக வெனிசுலா பயணம் தொடங்கியது. பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியை, கியூப ஆசிரியர்களின் உதவியுடன் வழங்கிய து. உலகில் மலிவான கட்டணத்தில் மின்சாரம் வழகியது.

பண்டமாற்று முறையில், எண்ணெய்க்குப் பதிலாக கியூபா மருத்துவர்கள் வெனிசுலா வந்தனர். வெனிசுலா மக்களுக்கு இலவசமாக முதல்தர மருத்துவ சிகிச்சை கிடைத்தது. உருகுவேயிடமிருந்து, எண்ணெய்க்குப் பதிலாக மாடுகள் பெறப்பட்டது.

இந்த அரசியல் பின்னணியில் 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி, அமெரிக்காவின் ஆசியுடன் திடீர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டது. ஹியூகோ சாவேஸ் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதுடன், சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திட்டமிட்டுக் கொடுத்த இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கான பணத்தை  “ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை” என்ற அமெரிக்க அரசின் துணை அமைப்பு வழங்கியது. அமெரிக்கக் கைக்கூலியான எண்ணெய் நிறுவன முதலாளி, புதிய அதிபராக்கப்பட்டார்.

தமிழ் மொழியை எடுத்துக் கொண்டால் அதற்கு, மண் தோன்றிக் கல் தோன்றாக் காலத்திலிருந்தே கலை - இலக்கிய  வரலாறு உள்ளதென கூறப்படுகிறது. ஆனாலும், "பல்லாயிர " வரலாற்றுக்கு வெளியில் அம்  மொழிக்கு Aesthetic -அழகியல் பற்றிய தத்துவப் பார்வை-ஆய்வுமுறை இருந்ததா என்றால் ....... எனக்குப் பதில் தெரியாது.

வளர்ச்சியடைந்த  மொழிகள் எல்லாவற்றினதும்  கலை -இலக்கிய உருவாக்கமென்பது, பெரும்பாலும் ஐரோப்பிய கலை -இலக்கிய  கோட்பாடுகளின் அடிப்படையையே இன்று அடித்தளமாகக் கொண்டவை.

ஆதலால், இன்றய தமிழின்  Aesthetic -அழகியல் பற்றிய கோட்ப்பாடுகளும் ஐரோப்பிய மெய்யியல் சார்ந்தவையாகவே கருதுகிறேன்.

Aesthetic (-அழகியல் ) என்ற ஆங்கில வார்த்தையின் தாய் வார்த்தை கிரேக்க மொழியிலான  aesthetica என்பதாகும். இதன் அர்த்தம், புலன்களினூடு வெளிப்படும் அறிவு என மொழிபெயர்க்கலாம்.

கலை -இலக்கியம் உருவாக்கப்படும் எந்த மொழியாக இருப்பினும், அம் மொழி பேசப்படும் -உபயோகிக்கப்படும் சமூகம் சார்ந்த ஆதிக்க சிந்தையே - அச் சமுகத்தில் உருவாகும் கலை -இலக்கியத்தின் உள்ளடக்கத்தை, அழகியலை தீர்மானிக்கிறது. ஆதிக்க சிந்தனையின் அடித்தளமானது அரசியல்-பொருளாதாரத்தின் வெளிப்பாடு-உற்பத்திப்பொருள்.

1987 ஆம் ஆண்டு மார்ச் 28ம் திகதி மாலை 6.30 மணியளவில் நான் (இரயாகரன்) காணாமலாக்கப்பட்டேன். வெளியுலகில் எனக்கு என்ன நடந்தது என்பது, பொது மக்களுக்கு தெரியாது. 80 நாட்களின் பின் நானாக தப்பிய பின் தான், புலிகளால் கடத்திச் செல்லப்பட்டதும், அவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்ய இருந்த செய்தி பொது மக்களுக்கு தெரிய வந்தது. ஆம் புலிகள் மக்களின் ஜனநாயகத்தைக் கண்டு அஞ்சினர். தங்கள் நடத்தைகள் மூலம் மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கி, சமூகத்தை சிறுகச்சிறுக பாசிசமாக்கிக் கொண்டு இருந்த காலத்திலேயே நான் காணாமலாக்கப்பட்டேன். மக்களை அறிவூட்டக்கூடிய, மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய, ஜனநாயகத்தினை கையாளக்கூடிய நபர்களை காணாமலாக்கி கடத்திச் செல்வதும், இனந்தெரியாத நபர்களின் போர்வையில் கொன்று விடுவதே புலிப் பாசிசத்தின் அரசியல் தெரிவாக இருந்தது.

புலிகள் தவிர்ந்த பிற இயக்கங்களும் 1986 முன் இதைத் தான் செய்தன. 1986 பின் பிற இயக்கங்களை அழித்த பின், தாம் அல்லாத அனைவரையும் புலிகள் கொன்றனர் அல்லது காணாமலாக்கினர். இதன் மூலம் ஜனநாயகம் மறுக்கப்பட்ட சமூகமாக, சமூகமே படிப்படியாக பாசிசமாகியது. ஜெர்மனியில் கிட்லரின் ஆட்சியின் கீழ் சமூகம் எப்படி பாசிசமாகியதோ, அதேபோன்று புலிப்பாசிசமே தமிழ் சமூகத்தின் பொது மொழியானது.

இன்று இலங்கை அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடத்தும்  போராட்டம், இறுதியுத்தத்திலும் - புலிகளின் அமைப்பில் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பானதே. இதைவிட காணாமலாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, வெவ்வேறு வரலாற்றுக் காலத்திற்கும், பல அரசியல் பின்புலமும் கொண்டு காணப்படுகினறது. பல அடுக்குகள் கொண்ட இலங்கைப் பாசிசமானது, இயக்கங்கள் - அரசு என்ற இரண்டு எதிர் முகாம்களில் கோலோச்சியிருந்தது. தமிழ் - சிங்கள – முஸ்லிம் இன மத வாதம் மூலம் மக்களின் ஜனநாயகத்தை ஒடுக்கும் பாசிசமாக இயங்கியது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைகளை மறுக்கவும், சிலர் கொழுக்கவும் முடிந்தது. இதுதான் இலங்கையின் பாசிச வரலாறு.

பாலஸ்தீனத்தை 1948 இல் இஸ்ரேல் ஆக்கிரமித்ததுக்கு நிகரானதே, 1948 இல் காஸ்மீர் மீதான இந்திய ஆக்கிரமிப்பு. 1948 இல் இந்தியாவால் காஸ்மீர் ஆக்கிரமிக்கப்பட்ட நாளில் இருந்து, காஸ்மீர் மக்களின் போராட்டமும் தொடர்ந்து நடந்து வருகின்றது.

காஸ்மீர் மக்கள் ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக, தங்களது தேசத்தின் சுதந்திரத்துக்கான ஒரு விடுதலைப் போராட்டத்தையே அன்று முதல் இன்று வரை நடத்துகின்றனர். அதேநேரம் இந்தியாவும் – பாகிஸ்தானும் தமக்கிடையில் காஸ்மீரை பங்குபோட்டுக் கொண்டு, நாட்டை பிரித்து வைத்திருக்கின்றனர்.  இதன் மூலம் இந்து - முஸ்லீம் என்ற மத அடிப்படைவாதத்தை சொந்த நாட்டுக்குள் தூண்டி விடவும், மக்களிடையே பிரிவினைவாதத்தை திணிக்கவும், இந்தியா - பாகிஸ்தான் மக்களை பிரித்து வைத்திருக்கவும், காஸ்மீர் மக்கள் மேலான அரசின் காவிப் பயங்கரவாதமானது ஏவிவிடப்படுகின்றது.

கலை-இலக்கியத்தில் மக்களின் வாழ்வியல் சாரத்தை மறுப்பதில் இருந்துதான், ஜெயமோகனும் - "ஈழத்து இலக்கிய" ஜாம்பவான்களும் கொடுக்கு கட்டிக்கொண்டு நிற்கின்றனர். நடக்கும் வாதப் பிரதிவாதங்களின் அரசியலென்பது, ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இருக்கின்றது. மக்களின் வாழ்வியலை ஒடுக்குகின்ற சமூகப் பொருளாதார சாரத்தை கொண்டாட்டமாக கொண்டாடும், கலை இலக்கியத்தையே ஜெயமோகனும், "ஈழத்து இலக்கிய"வாதிகளும் படைப்பாக்குகின்றனர்.

ஈழத்துக் கலை - இலக்கியவாதிகளின் எந்தப் படைப்பும், எந்தப் படைப்பாளியும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த விடுதலைக்கான சிந்தனையின் அடிப்படையில் செயற்படுவதைக் காண முடியாது. ஒடுக்கும் இந்தச் சமூக அமைப்பின் உள்ளான அக முரண்பாடுகளை சார்ந்து நின்று தான், கும்மி அடிக்க முடிகின்றது. நானும் நீயும் ஒன்று என்று கூறுமளவுக்கு,     ஈழத்து கலை இலக்கிய போக்கில் ஜெயமோகனும் பயணிக்கின்றார்.

இந்தியாவில் பார்ப்பனிய பாசிச மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களும் - இலக்கியங்களும் வளர்ச்சி பெற்றுக்கொண்டு இருக்கும் காலத்தில் தான், ஜெயமோகன் போன்ற பார்ப்பனிய இலக்கியவாதிகளின் கூத்தும் கும்மாளமும் அரங்கேறுகின்றது. இந்தியாவில் பார்ப்;பனிய இலக்கிய பிரதிநிதியாக இருக்கக்கூடிய ஜெயமோகன் போன்றவர்கள், கலை கலைக்காக என்று வாதிடக் கூடிய கூட்டத்தின் பிரதிநிதியே. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த இலக்கியத்தின் பிரதிநிதிகளல்ல. ஈழத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்கும் இலக்கியமாக சீரழிந்துவிட்ட இலக்கிய  சூழலில், தங்களையொத்த ஜெயமோகனின் அங்கீகாரத்துக்கான முரண்பாடு தான் -  ஈழத்தில் எதிரும் புதிருமான கருத்துகளும்;, விவாதங்களுமாக அரங்கேறுகின்றது.

இந்த விவாதம் ஈழத்து ஒடுக்கப்பட்ட மக்களின் இலக்கியம் குறித்தான அக்கறையில் இருந்தோ, அதை முன்னிறுத்தியோ ஜெயமோகனுக்கு எதிராக யாரும் தங்களை முன்னிறுத்தவில்;லை. ஈழத்து இலக்கியம், ஒடுக்கப்பட்ட மக்களின் கலை - இலக்கியமாக இல்லை என்பது உண்மை.

இது ஒரு சிறு குறிப்பு மட்டுமே. விரிவாக பல ஆயிரம் பக்கங்கள் எழுதப்பட வேண்டிய விடையங்களை ஒரு வரியில் இங்கு பதிந்துள்ளேன். மேலும், இது இலக்கியம் பற்றிய கட்டுரை அல்ல. அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

1.

இந்திய எழுத்தாளர் ஜெயமோகன், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை பூச்சி மருந்தடித்து, இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறிய வீடியோ பிரபலமாகியுள்ளது. இதனால் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் இடையே காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

விவாதங்களில் ஜெயமோகன், இந்திய - பார்ப்பன மேலாதிக்கத்தை இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் மீது நிறுவுவதற்காக முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஜெயமோகன் புலம்பெயர்ந்த மற்றும் இலங்கை வாழ் எழுத்தாளர்களை வரிசைப்படுத்தி "ஒரு" பாரம்பரியத்தை முன்மொழிகிறார். அத்துடன், இலங்கையில் இலக்கிய ஆய்வுமுறை மற்றும் விமர்சனப் பாரம்பரியம் இருந்ததில்லை என்பது போன்ற கருத்தையும் முன்வைக்கிறார். இவரது இந்த கருத்துக்கள்,  உண்மையிலேயே அவரது இந்திய மேலாதிக்க பார்ப்பன கண்ணோட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதில், எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

இலங்கைத் தமிழர்கள் எழுதியுள்ள நூல்களில் "நினைவழியா வடுக்கள்" என்ற சிவா சின்னப்பொடியின் நூல் தனித்துவமிக்கது. ஈழத்து சாதிய அனுபவத்தை பதிவாக்கியுள்ள முதல் நூல். 1960களில் நிலவிய சாதியக் கொடூரத்தின் சுய அனுபவத்தையும், பிற மனிதர்கள் சந்தித்த அவலங்களையும் இந்த நூல் தன்னுள் உள்ளடக்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் சாதிய வாழ்க்கையையும், அதன் போராட்டத்தையும் தத்ரூபமாக இந்த நூலில் தரிசிக்க முடியும்.

இந்த நூலை சாதிய சமூகமான தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தனதும், தனது தாய் தந்தையரின் சாதிய கொடூரங்களையும் மூடிமறைக்க இந்த நூலை இருட்டடிப்பு செய்யும். மறுபக்கத்தில் கடந்தகாலத்தில் சாதியத்தைக் கட்டிப்பாதுகாத்த தமிழ் தேசிய இயக்கங்களின் அரசியலுடன் பயணித்த சிவா சின்னப்பொடியின் கடந்தகாலம், இந்த நூலின் முக்கியத்துவத்தை மறுதலித்துவிடுவதற்கான புறநிலையான மற்றொரு சூழலும் காணப்படுகின்றது. "தமிழ் தேசியம்" சார்ந்து சாதிய இயக்கங்களுடன் இணைந்துகொண்ட சிவா சின்னப்பொடியின் பயணம் மீதான விமர்சனத்தைக் கடந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதமாக இந்த நூல் மிளிர்கின்றது என்பது மிகையல்ல.

சாதி சமூகம் என்பது, ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டமாக எதிர்மறையில் பிரித்து விடுகின்றது. சாதிக்கொரு வாழ்வியலாக, மனிதர்களைப் பிறப்பில் இருந்தே பிரித்து விடுகின்றது. இதைக் கண்காணிப்பதும், அதன்படி ஒழுகுவதும் வாழ்க்கை முறையாகவும், சாதிப் பெருமையாகவும் பீற்றப்படுகின்றது.

இந்த சாதிய அடிப்படையில் ஓடுக்குவது – ஓடுக்கப்படுவது என்பது, சாதிக்குச் சாதி இடம்மாறிக் கொண்டு இயங்குகின்றது. அதாவது சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்பவன், இன்னுமொரு நிலையில் சாதி ஓடுக்குமுறையாளனாக இருக்கின்றான். தான் ஒடுக்குவதற்கு ஓரு சாதி கீழ் இல்லாத நிலையில் உள்ள சாதியும், தனக்கு மேல் இருந்து ஓடுக்க ஒரு சாதி இல்லாத சாதிகள் தவிர, அனைத்தும் ஓடுக்கப்படவும், ( சாதிப் படிநிலையில் ஆக அடியில் வைக்கப்பட்டவனும், ஆக மேல்நிலையில் உள்ளதாக தன்னை கருதுபவனும்) அதேநேரம் ஓடுக்கும் சாதிய வடிவங்களாகவே,  இந்திய சாதிய சமூக அமைப்புமுறை இருக்கின்றது. சாதிய ஓடுக்குமுறை வடிவமானது, சாதிய படிநிலைக்கு ஏற்ப, பண்பு ரீதியாகவும் அளவு ரீதியாகவும் மாறுபடுகின்றது.

நவதாராளவாதத்தில் ஒடுக்கும் சாதி வடிவில் மேல்நிலையில் உள்ள சாதிகள், இடை நிலையில் உள்ள சாதிகள் போல், நேரடியான வன்முறையில் ஈடுபடுவதில்;லை. ஓடுக்குவதில் மேல்நிலையில் இருக்கும் சாதி ஓடுக்குமுறை என்பது நவதாராளவாத வடிவத்தைக் கொண்டதாக, தன்னைத்தான் தகவமைத்து கொண்டு வருகின்றது. "நாங்கள் சாதி பார்ப்பதில்லை, எங்கே சாதி இருக்கின்றது" என்று கூறும் - கேட்கும் குரல்கள், நவதாராளவாத சாதிய வடிவத்துக்குள் சாதியை நிலைநிறுத்தும், மேல்நிலைச் சாதிய நவீன வடிவங்களாகியுள்ளது. சாதியை வன்முறை வடிவில் குறுக்கிவிடுகின்ற பொதுப் புத்தி, நவதாராளவாத சாதியத்தை காண முடியாததாக மாற்றுகின்றது.

இந்த வகையில் ஓடுக்கும் சாதியப் படிநிலையில் மேலுள்ள நவதாராளவாத சாதி ஓடுக்குமுறையை 'பரியேறும் பெருமாள்' சினிமா காட்சிப்படுத்தவில்லை. மாறாக சாதிய வன்முறையில் ஈடுபடும் இடைநிலைச் சாதிகளையே, சாதியாக, சாதிய ஒடுக்குமுறையாக காட்டியிருக்கின்றது. அதாவது சாதியை வன்முறை வடிவமாக மட்டும், காட்டி இருக்கின்றது. சாதியத்தின் ஒரு சிறிய கூறு தான் சாதிய வன்முறை. வன்முறை மூலம் சாதியை விளங்கிக் கொள்ளுதல் - விளக்குதல் என்பது, நவதாராளவாத சாதியை பாதுகாத்தல் தான். சாதியென்பது பார்ப்பனியச் சிந்தனையாகவும் - வாழ்வியலாகவும் இருக்க, இதில் ஓரு கூறுதான் சாதிய வன்முறை. 'பரியேறும் பெருமாள்' சாதிய வன்முறையை,  சாதியாக காட்டி இருக்கின்றது.

கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை விலை பேசப்;படுதல் என்பது, இலங்கைக்கு மட்டுமான விதியல்ல. "ஜனநாயகம்" என்பது "பெரும்பான்மை"யை நிறுவுவதே என்ற பொருளாகிவிட்ட பின், அதை எப்படியும் பெற்றாலும் சரி என்பதே "ஜனநாயகமாகி" விட்டது. இங்கு கொள்கை, கோட்பாடு, அறம்… எதுவும், பெரும்பான்மை ஜனநாயகத்திற்கு அவசியமற்றது. தனிநபரின் நடத்தைக்கு என்று எந்த விலக்கும் கிடையாது.

தேசிய முதலாளித்துவத்தை முன்னிறுத்தி உருவான பாராளுமன்றம் சாக்கடையாக, கள்ளர் குகையாக, பன்றித் தொழுவமாக, பிரபுக்களின் அடிமைமடமாக இருந்த நிலைமையானது, நவதாராளவாத முதலாளித்துவத்தில் பாசிசத் தன்மை கொண்டதாக - தனக்குதானே புதைகுழியை தோண்டுகின்ற அளவுக்கு முதிர்ந்து வருகின்றது. ஜனநாயகம் என்பது, தனக்கான சொந்த சவக்குழியாக மாறி இருக்கின்றது. ஆக

1. இன்று ஆட்சி பிடிக்க மக்கள் கொள்கை அவசியமில்லை. அதிகாரத்தை பெறுவதற்கான பெரும்பான்மை உறுப்பினர்கள் தான் தேவை. மக்களை தமக்கு வாக்களிக்க வைக்க இனவாதம், மதவாதம், சாதிவாதம், நிறவாதம்.., போதும். இதுவே இன்று கட்சிகளின் கொள்கையாகிவிட்டது. இனம், மதம், சாதி, நிறத்தைச் சொல்லி வென்றாலும், அதன் மூலம் மக்களுக்கு எதையும் கொடுக்க முடியாது. மாறாக இனம், மதம், சாதி, நிறத்தைக் கொண்டு ஓடுக்குவதை பார்த்து மகிழ்ச்சி அடையக் கோருவதுடன், தங்கள் அதிகாரப் பலம் மூலம் தாம் அல்லாத மக்களை ஒடுக்கி சூறையாடக் கோருவதை மட்டுமே தான் முன்வைக்க முடிகின்றது. இதுதான் இன்றைய தேர்தல் முறையாகிவிட்டது.

மக்களை ஒடுக்கியாள்பவர்கள், தாங்கள் உருவாக்கிய சிவில் சட்ட அமைப்பில் நம்பிக்கையற்றவர்களாக, சிவில் சட்டத்தை பொருட்டாக மதிக்காதவர்களாக, சிவில் சட்டம் தமக்கு பொருந்தாது என்று நம்புகின்றவர்களாக இருக்கின்ற போது, சதிகள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் தேர்தல் ஜனநாயகமும், அது உருவாக்கும் ஜனநாயக வடிவங்களைக் கூட, தம் அதிகாரத்துக்கு எதிரானதாக பார்க்கின்றனர். இதனால் ஆட்சியை சட்டவிரோதமாக கைப்பற்றுகின்றனர்.

மகிந்த – மைத்திரி தரப்பு தங்கள் கட்சியின் ஆதரவை பெரும்பான்மையிலிருந்து விலக்கியவர்கள், ஜனநாயக முறைப்படி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவக் கோரவில்லை. மாறாக தமக்கு பெரும்பான்மை இல்லையென்பதாலேயே சட்டவிரோதமாக ஆட்சியைக் கவிழ்த்து, சட்டவிரோதமான ஒரு ஆட்சியை அமைத்திருக்கின்றனர்.

தேர்தல் "ஜனநாயகத்துக்கு" மக்களை வழிகாட்டி, பாராளுமன்ற ஜனநாயகமே புனிதமானது என்று கூறியவர்கள் தான், பாராளுமன்றத்திற்கு வெளியில் சர்வாதிகார ஆட்சி அதிகாரம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றனர். ஜனாதிபதியுடன் சேர்ந்து கூட்டாக தாங்கள் நடத்திய இந்த சதிக்கு - பாராளுமன்றம் மூலம் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, பணத்தையும்;, பதவிகளையும் பரிசாக கொடுப்பது தொடங்கியிருக்கின்றது. இதன் மூலம் பெரும்பான்மையை விலைக்கு வாங்கிப் பெற்று, தங்கள் ஆட்சியே "ஜனநாயக"மானது என்று, சிவில் சட்டம் நடைமுறைகள் மூலம் நிலைநாட்ட முனைகின்றனர்.

மீ.ரூ இயக்கமானது ஆபிரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்த தரனா பார்கெ என்பவரால் 2006 இல் தொடங்கப்பட்டது. 2017இல் ஹாலிவுட் நடிகையான அலிஸா மிலானோ சமூக வலைத்தளம் மூலம் தனக்கு நடந்த பாலியல் கொடுமையை மீ.ரூவாக்கிய பின்பு, உலகம் தழுவியளவில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஒரு சில பெண்கள் தமக்கு நடந்ததை மீ.ரூவாக்கி வருகின்றனர். அலையலையாக வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு காலகட்டத்தில் மி.ரூ மேலோங்கி வருகின்றது. தமிழகத்தில் மீ.ரூ சின்மயி மூலம்  மேலெழுந்திருக்கின்றது.

இந்த நிலையில் மீ.ரூவானது வர்க்க ரீதியான மேற்தட்டுப் பெண்களிடத்தில் இருந்து வெளி வருகின்றது. அதேநேரம் சமூக வலைத்தளங்கள் மூலம், பொது சமூக நீதியைக் கோருகின்ற வரம்புக்குள் நடக்கின்றது. இதனால் இந்தக் காரணங்களைச்; சொல்லி ஆணாதிக்கத்தை ஆதரிக்கும் போலி இடதுசாரியம், பெண்களுக்கு எதிராக புளுத்து வருகின்றது.

மேற்தட்டு பெண்களின் மீ.ரூ போராட்டத்தினால் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கும், பிற சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒடுக்கப்படும் பெண்களுக்கும் என்ன லாபம் என்று கேட்பதன் மூலம், பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தை பாதுகாக்க முனைகின்றனர். அதேநேரம் மேற்தட்டுப் பெண்களின் மீ.ரூ போராட்டமானது, பெண்விடுதலைக்கு சம்மந்தமில்லாத ஓன்று என்று கூறி மீ.ரூவை எதிர்ப்பதன் மூலம், ஆணாதிக்கத்தை ஆதரிக்கின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE