Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மதத்தின் பெயரில் மனிதர்களைக் கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு வித்திட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம், இலங்கையில் தோன்றுவதற்கு இனவாதம் பேசிய தமிழர்களே காரணமாக இருந்து இருக்கின்றனர்.


புலிகள் முஸ்லிம் மக்கள் மேல் நடத்திய நூற்றுக்கணக்கான வன்முறை (சில விபரங்களை கட்டுரையில் பார்க்க), மறுபக்கத்தில் முஸ்லிம் மக்களை அரசியல்ரீதியாக அரவணைத்துச் செல்ல புலிகள் அல்லாத தமிழ் "முற்போக்கு" தரப்பும் தவறிக்கொண்டு இருந்த சூழலில், அதை எதிர்த்து எழுதிய கட்டுரை.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.துரைராஜா அவர்கள், நோர்வே பல்கலைக்கழகங்களில் ஒன்றான தொரம்சோ(Tromso) பல்கலைக்கழகத்துடன் கடல்வளத் துறை பீடம் மற்றும் அத் துறைசார்ந்த நிபுணத்துவத்தினை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கையினை ஒப்பமிடுவதற்காக 1995 ம் ஆண்டு அழைக்கப்பட்டிருந்தார்.

அப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளை மேற்கொண்டிருந்த தமிழ் மாணவர்களால் கருத்தரங்கு ஒன்று அவ்வேளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக் கருத்தரங்கில் அவரிடம் முஸ்லிம் மக்கள் வெளியேற்றுகை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது வருந்தத்தக்கதே என்று தனது பதிலில் குறிப்பிட்டார். அறிவியல்துறை சார்ந்த ஒரு தமிழ் தேசிய ஆதரவாளராக முதல் முதலாக தமிழ் தேசியத்தின் தவறான இப் போக்கு குறித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்டவராக அன்று நெருக்கடியான சூழலிலும் அவர் இருந்தார்.

வழிபடுவதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வும், மன ஆறுதலும் கிடைக்கின்றது என்று நம்புகின்ற ஒரு மனிதனின் உணர்வை மதிப்பதைக் கடந்து, மதத்தை யாரும் விதந்துரைக்க முடியாது. கடவுள் நம்பிக்கையுள்ள மனிதன் இதைத்தான் வாழ்வியல் நெறியாக கொள்ள வேண்டும். தனிமனித நம்பிக்கையைக் கடந்து, அதைப் பொது நம்பிக்கையாக மாற்றுவது என்பது, மனிதனை ஏமாற்றுகின்ற சுயநலமாக மட்டும் தான் இருக்க முடியும்.

மதம் மூலம் தன்னை அடையாளப்படுத்துவதும், மத அடையாளங்களைக் கொண்ட சமூகத்தில் தன்னை மதமூடாகக் காட்டிக் கொள்வதும், சமூகம் மீதான அத்துமீறல். உன்னுடைய நம்பிக்கை உன்னுடையதே ஓழிய, பிறருக்கு அதைக் காட்சிப்படுத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ, திணிப்பதோ மானிடத்துக்கு எதிரான குற்றமாகும்.

எங்கிருந்தோ வந்தார்கள், புதிய மார்க்கமும் வந்தது, கூடவே பணமும் வந்தது, பெண்களுக்கு புர்காவும் வந்தது, திடீர் திடீரென மசூதிகள் முளைத்தது. இப்படி, அது வந்தது, இது வந்தது என்று கூறுகின்றதன் மூலம், சூழலுக்கு ஏற்ப தப்பிப் பிழைக்கின்ற இலக்கிய – அரசியல் போக்கே, தங்கள் சமூகம் குறித்த சுயமதிப்பீடாக கட்டமைக்க முனைகின்றனர். இப்படி இன்று கூறுகின்றவர்களின் சமூக நேர்மையென்பது கேள்விக்குரியது. அன்று ஏன் நாங்கள் இதைக் கூறவில்லை என்பதைச் சொல்லுவது தானே, குறைந்தபட்சம் சமூக சார்ந்த நேர்மை. எல்லாவற்றையும் சொந்த சமூகத்துக்குள் பூட்டி, மூடிமறைத்தவர்கள் யார்? ஏன் மூடிமறைத்தனர்?

கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர் தங்கும் விடுதிகளை குறிவைத்தும் இஸ்லாம் மதவெறியர்களால் பாரியளவிலான மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழர்,சிங்களவர், வெளிநாட்டவர் என நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கை நாட்டை பொறுத்தவரை படுகொலைகள் புதிதான நிகழ்வாக இல்லாத போதும், பத்து வருடங்களாக வெடிகுண்டு சத்தமின்றி இருந்த காலத்தின் பின் நிகழ்ந்திருக்கும் நிகழ்வு என்னும் வகையிலும்; இந்த தாக்குதலின் உண்மையான நோக்கம்,இலக்கு, ஈடுபட்ட சக்திகள், தாக்குதலை நிகழ்த்திய கூட்டத்தின் நம்பிக்கை, அது சார்ந்த மக்கள் கூட்டத்தின் எதிர்காலம் என்னும் பல கேள்விகளுக்குள் இருக்கும் குழப்பமான சூழ்நிலை காரணமாக இச்சம்பவம் இலங்கையில் வாழும் சமூகங்களுக்கிடையிலான உறவின் எதிர்காலம் தொடர்பான ஒரு முக்கிய புள்ளியாக அமையப்போகிறது.

இஸ்லாமிய பயங்கரவாதமானது, ஏன் தமிழ் கத்தோலிக்கரை இலக்கு வைத்தது? மனிதாபிமான அணுகுமுறை மூலம் போலி இடதுசாரியமும், வலதுசாரிய ஜனநாயக "முற்போக்குவாதமும்", ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பாதுகாக்க முனைகின்றனர்? இவை வரலாற்று ரீதியான அரசியலாலானது.

1980களில் தோன்றிய இயக்கங்களினதும்;, புலிகளினதும் ஜனநாயக விரோத ஏகாதிபத்திய கைக்கூலி அரசியலென்பது, அதிகாரத்துக்கான மக்கள்விரோத வன்முறையாக மாறியது. தமிழ்மொழி பேசும் மக்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வன்முறைகளில் ஈடுபட்டது.

இன்றைய சமூக அமைப்பின் சிந்தனைமுறையே ஏகாதிபத்திய சிந்தனை முறைதான். அதாவது முதலாளித்துவச் சிந்தனைமுறை தான். இப்படி இருக்க, இஸ்லாம் மட்டும் என்ன விதிவிலக்கா!? இதையா நாங்கள் மறுக்கின்றோம்;!? இப்படி புதிய ஜனநாயகக் கட்சிப் பின்னணியைக் கொண்டவர்கள், புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக்கு எதிரான அரசியல் அவதூறை முன்வைத்திருக்கின்றனர். இதன் மூலம் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை, ஒற்றைப் பரிணாமம் மட்டும் கொண்டதாக நிறுவ முனைகின்றனர்.

இலங்கையில் அரசு பாதுகாப்பு காரணமாக, முகத்தை மூடும் உடைகளுக்கு தடை விதித்திருப்பதாக அறிவித்து இருக்கின்றது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசு அனைத்து ஆணாதிக்க அடையாளங்களையும், மத அடிப்படைவாத அடையாளங்களையும் தடைசெய்யவில்லை.

மேற்கில் புர்கா தடை செய்யப்பட்ட போது, அது பெண் மீதான ஒடுக்குமுறையாக முன்னிறுத்தியே அதைத் தடை செய்தது. மேற்கில் தடைக்கு உள்நோக்கம் இருந்தாலும், பெண் விடுதலைக்கான சமூகக் கூறாக இருந்தது. பெண் விடுதலை நோக்கில் அதை ஆதரிக்க வேண்டியும் இருந்தது. பெண் சுதந்திரத்தில் முன்னேறிய மேற்கு சமூகத்தில், புர்கா உடை என்பது மனித சமத்துவத்தில் முன்னேறிய சமூகத்தை கீழ் இழுத்து வீழ்த்தும் அசிங்கமாக இருந்தது.

2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி பார்ப்பது ”ஹராம்” என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று அன்டனாக்களை உடைப்பது, சீடி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது.

கறுப்பு அபாயாக்களையும், நீண்ட அங்கிகளையும் கொண்டுவந்து இதுதான் இஸ்லாமிய உடை என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகம் செய்தார்கள். எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த மண்ணில் பெண்கள் எல்லாம் இதைத்தான் அணிகின்றார்கள். இது எங்கள் கலாசாரம் என்று ஏற்பதற்கு பெண்களையும் பிள்ளைகளையும் பழக்கப்படுத்தினார்கள். இது பெண்களுக்குப் பாதுகாப்பான கௌரவமான உடை என்பதான உணர்வை வலிந்து உருவாக்கிப் பெண்கள் வாயாலேயே சொல்லும்படி மூளைச்சலவை நடந்தது. பாடசாலை மாணவிகளும், பல்கலைக்கழகம் செல்லும் மாணவிகளும் கறுப்பு அங்கியை மட்டுந்தான் கட்டாயமாக அணியவேண்டும் என்று வெள்ளிக்கிழமை ஜூம்மாக்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இது எங்கள் ஊரில் மட்டும் நிகழ்ந்த சம்பவமில்லை. பெரும்பாலாக முஸ்லிம்கள் வாழும் எல்லா ஊரிலும் இப்படித்தான் நடந்தது.

தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள கோத்தபாய, இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க தன்னாலேயே முடியும் என்கின்றார். இதன் பொருள் இஸ்லாமிய பயங்கரவாதம் அடுத்த தேர்தல் வரை நீடிக்க வேண்டும். அதை வைத்து தேர்தலில் வெல்ல வேண்டும். இது அவரின் தோதல் கனவு.

ஜனாதிபதி மைத்திரியைப் பொறுத்தவரையில் அடுத்த ஜனாதிபதியாகும் கனவில், இஸ்லாமிய பயங்கரவாதத்தை தானே முன்னின்று ஒழித்துக்கட்ட முனைகின்றார். இதற்காக யூ.என்.பி அரசாங்கத்தை தனிமைப்படுத்தி, தானே எல்லாமாக காட்ட முனைகின்றார். யூ.என்.பி தன் பங்குக்கு தானே எல்லாம் என்று காட்ட, பயங்கரவாதம் தேர்தல் அரசியலாகிக் கொண்டு இருக்கின்றது. பயங்கரவாதத்தை ஒழிப்பது, ஒழியாமை என்பது பேரினவாத தேர்தல் கட்சிகளின் வெற்றி தோல்விக்குட்பட்ட ஒரு விடையமாக மாறி வருகின்றது. இப்படி வரவுள்ள ஜனாதிபதி தேர்தல் களம், இஸ்லாமிய பயங்கரவாத ஒழிப்பில் தொடங்கி இருக்கின்றது.

இஸ்லாமிய பயங்கரவாதத்தை அடுத்து, இஸ்லாமிய சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்று, தமிழ் இலக்கிய – அரசியல் "முற்போக்குவாதிகளின்" கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. சமூகத்துக்கு கேடானதும், சமூகத்தை மூடுதிரையாக்கி வைத்திருக்க விரும்புகின்ற, சமூக மாற்றத்தை விரும்பாத தனிமனிதத்தனமான போலி சமூக அக்கறை, இப்படித்தான் நடித்துக் காட்ட முடியும்.

இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை அரச படைகள், இஸ்லாமிய சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை இட்டு எந்தக் கருத்துமில்லை. அதை அங்கீகரித்தபடியே இவர்கள், சிந்தனைத் தளத்தில் முஸ்லிம் சமூகம் அடிப்படைவாதத்துடன் கொண்டுள்ள உறவை கேள்விக்கு உள்ளாக்கக் கூடாது என்கின்றனர்.

பெண் என்பவள் இயற்கை விதிப்படி உயிரை அழிப்பவளல்ல. சமூகத்துக்கே உயிர் கொடுப்பவள். இதன் வழி பாத்திமா மஜிதா, ஸர்மிளா செயித், தங்கள் கருத்துகள் மூலம், முஸ்லிம் சமூகத்திற்கு உயிர் கொடுக்க முனைகின்றனர். அந்த கருத்து உயிர் வாழ்வதற்கே போராடுகின்ற பொது அவலத்தைக் காண்கின்றோம். உண்மையில் குண்டு வைத்த பயங்கரவாதியை விட, மத அடிப்படைவாதம் சமூகத்தில் புரையோடிக் கிடப்பதைக் காட்டுகின்றது.

இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கையில் நடத்திய தாக்குதலின் பின்னணி குறித்து, அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நாங்கள் கதைக்க முற்பட்ட போது, புதிய ஜனநாயகக் கட்சி எங்கள் அரசியல் நேர்மை குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றது. அதாவது "உங்களை மிகக் கேவலமாக வெளிப்படுத்திக் கொண்டீர்கள். உங்கள் அரசியல் நேர்மை பற்றி இருந்த சந்தேகங்கள் தீர்ந்தன." என்கின்றனர். இதற்கு அவர்கள் கட்சியைச் சேர்ந்த பலர் லைக் போட்டு பாராட்டி இருப்பதன் மூலம், தங்கள் இந்தக் கருத்தை உறுதி செய்துள்ளனர். நாங்கள் எங்களை நோக்கியும் உள்ளீடாக ஆராய மறுப்பவர்கள் அல்லர். விமர்சனம் சுயவிமர்சனம் என்ற நெறிமுறை வழி மாற்றங்களை எமக்குள் விளைவித்துக் கொண்டிருப்பவர்கள். அதுவே தான் அரசியல் நேர்மை. அதேநேரம் நாங்கள் எழுப்பிய அரசியல் எப்படி நேர்மையற்றது என்று சொல்ல முடியாத அளவுக்கு, அரசியல்; நேர்மையற்று வக்கற்றுக் கிடப்பது நீங்கள் என்பதே உண்மை.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்று கூறுவது தவறு, இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது, இப்படி மழைக்கு முளைத்த காளான்கள், இடதுசாரியத்தின் பெயரில் உளறுகின்றனர். இந்தியாவில் இந்துப் பயங்கரவாதம் குறித்தும், காவிப் பயங்கரவாதம் குறித்தும், பார்ப்பனிய பயங்கரவாதம் குறித்தும் பேசும் இந்திய இடதுசாரி அரசியலுக்கு முரணாக, இலங்கை இடதுசாரிகள் பயங்கரவாதத்தின் மூலத்தை மறுதளிக்க முனைகின்றனர். பார்ப்பனியம், வெள்ளாளியம் .. என்று, சாதிய சிந்தனையைக் கூறக் கூடாது என்று எப்படி வாதிடப்படுகின்றதோ, அப்படித்தான் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறக் கூடாது என்கின்றனர்.

இலங்கை ஆட்சி அதிகாரத்தை கொண்ட பௌத்த பேரினவாதம் மீது, இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவில்லை. சிறுபான்மை இன மதப் பிரிவுகள் மீது, திட்டமிட்ட ஒரு தாக்குதல் நடந்தது என்பதே வெளிப்படையான உண்மை.

பாதிக்கப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட இன மதத்திற்கான குரல்கள் மட்டுமே, அந்த மக்களின் அவலம் குறித்து அக்கறைப்படும் என்பது வெளிப்படையானது. ஆனால் அதற்கான குரல்கள் எதுவும், எதார்த்தத்தில் எழவில்லை என்பதும் உண்மை.

பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாதவர்கள், இஸ்லாமிய பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்கள் குறித்து பேசுவதன் மூலம், போலியான மனிதாபிமானத்தையும், ஐக்கியத்தையும் கட்டமைத்து காட்ட முனைகின்றனர்.

இலங்கை இஸ்லாமிய பயங்கரவாதமானது, தமிழ் மக்களை இலக்கு வைத்தது என்பது தற்செயலானதல்;ல. சிங்கள – பௌத்த சமூகத்தை குறிவைப்பதை, இஸ்லாமியப் பயங்கரவாதம் தவிர்த்திருக்கின்றது. 1980 க்குப் பிந்தைய இஸ்லாமிய அரசியல் வரலாறு என்பது, பௌத்த பேரினவாதத்துடன் கூட்டு அமைத்துக் கொண்டு தமிழ் மக்களை ஒடுக்கியது தான். மிக திட்டமிட்ட நீண்ட அரசியல் நகர்வின், மற்றொரு பரிணாமமாகவே இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலை புரிந்து கொள்ள முடிகின்றது.

இது வரலாற்று ரீதியானதும் கூட. இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் முதல் அரசியல் வரை, தமிழ் மக்களை எதிரியாக முன்னிறுத்தியே அரசியலை நடத்தி வந்திருக்கின்றது, நடத்தி வருகின்றது. ஆளும் பௌத்த பேரினவாதத்துடன் கூட்டு அமைத்துக் கொண்ட முஸ்லிம் மத அடிப்படைவாத அரசியல் என்பது, தமிழ் மக்களை ஒடுக்குவது தான். முலையகக் கட்சிகள் போல் பிழைப்புவாதக் கட்சியாகவும், தமிழ் மக்களை எதிரியாக காட்டும் மதவாதக் கட்சியாகவுமே தன்னை நிலைநிறுத்தி வந்திருக்கின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE