இனவாத, மதவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, எந்த அரசியல் நடைமுறைகளையும் கொண்டு செயற்படாதவர்களே இலங்கை இடதுசாரிகள். இன-மத வன்முறைகளின் போது திடீரென கோசம் போடுவதால், சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. இதைத்தான் இலங்கை இடதுசாரிகள் செய்கின்றனர்.
இன-மத வன்முறைக்கு எதிராக "இன்னொரு யுத்தம் வேண்டாம்!" என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைக்கின்றனர். "எங்கள் பிள்ளைகளுக்கு யுத்தம் வேண்டாம்" என்று சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கமும் முன்வைத்திருக்கின்றது.
![]() |