எங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO) நியமனங்களுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு எதிரானதல்ல. மாறாக,
1) SLMC இனாலோ அல்லது WHO இனாலோ மருத்துவக் கற்கை வழங்குவதற்கான கல்லூரிகளுக்கு இருக்க வேண்டிய அவற்றின் தகுதி நியமங்களை ஒழுங்கான முறையில் கொண்டிருக்காத,
2) 2008 ம் ஆண்டு SAITM (South Asian Institution of Technology and Management) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, பின்பு அப்போதைய உயர்கல்வி அமைச்சரை வளைத்துப் போட்டு, "M for Medicine" என பெயர் மாற்றி, அவ் அமைச்சரைக் கொண்டு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு சட்டவிரோதமான முறையில் உருவாக்கம் பெற்ற,
3) "சட்ட விரோதமாக உருவாக்கம் பெற்ற, ஒரு மருத்துவக் கல்லூரிக்கு இன்றியமையாத தேவையாக உள்ள போதனா வைத்தியசாலையொன்றை ஆரம்பத்தில் கொண்டிராத, பின்பு சாட்டுக்காக "நெவில் பெர்ணாண்டோ போதனா வைத்தியசாலை" என்ற பெயரில் ஐந்து பத்து நோயாளிகளைக் கொண்ட ஓர் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியாகும் மருத்துவப் பட்டதாரியை அங்கீகாரம் அளிக்க மாட்டோம், ஆகவே உங்கள் பிள்ளைகளை அங்கு கல்வி கற்க அனுமதிக்க வேண்டாம்" என பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் எச்சரித்த SLMC ஐயும் மீறி, தம் பிள்ளைகளை அங்கு சேர்த்து விட்டு, இன்று எமக்கும் ஸ்டெத்தஸ்கோப் ஏந்த உரிமை உண்டு,