Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

எங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO) நியமனங்களுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு எதிரானதல்ல. மாறாக,

1) SLMC இனாலோ அல்லது WHO இனாலோ மருத்துவக் கற்கை வழங்குவதற்கான கல்லூரிகளுக்கு இருக்க வேண்டிய அவற்றின் தகுதி நியமங்களை ஒழுங்கான முறையில் கொண்டிருக்காத,

2) 2008 ம் ஆண்டு SAITM (South Asian Institution of Technology and Management) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, பின்பு அப்போதைய உயர்கல்வி அமைச்சரை வளைத்துப் போட்டு, "M for Medicine" என பெயர் மாற்றி, அவ் அமைச்சரைக் கொண்டு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு சட்டவிரோதமான முறையில் உருவாக்கம் பெற்ற,

3) "சட்ட விரோதமாக உருவாக்கம் பெற்ற, ஒரு மருத்துவக் கல்லூரிக்கு இன்றியமையாத தேவையாக உள்ள போதனா வைத்தியசாலையொன்றை ஆரம்பத்தில் கொண்டிராத, பின்பு சாட்டுக்காக "நெவில் பெர்ணாண்டோ போதனா வைத்தியசாலை" என்ற பெயரில் ஐந்து பத்து நோயாளிகளைக் கொண்ட ஓர் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியாகும் மருத்துவப் பட்டதாரியை அங்கீகாரம் அளிக்க மாட்டோம், ஆகவே உங்கள் பிள்ளைகளை அங்கு கல்வி கற்க அனுமதிக்க வேண்டாம்" என பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் எச்சரித்த SLMC ஐயும் மீறி, தம் பிள்ளைகளை அங்கு சேர்த்து விட்டு, இன்று எமக்கும் ஸ்டெத்தஸ்கோப் ஏந்த உரிமை உண்டு,

நேற்றைய தினம் (17/01/2017) கொழும்பு கோட்டையில், சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினர் பெண்களை வெளிநாடுகளிற்கு அடிமைகளாக அனுப்புவதனை தடை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இலங்கையிலிருந்து வெளிநாடுகளிற்கு வீட்டு அடிமைகளாக வேலைக்கு அனுப்பப்படும் பெண்கள் துன்புறுத்தல், அடிமைத்தனம், பாரபட்சம் மற்றும் பாலியல் கொடுமைகளிற்கு உள்ளாகின்றனர். அடிமைகளாக கடத்தப்படும் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்தான ஒரு விழிப்புணர்வை இந்த போராட்டம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் அமைந்திருந்தது.

உழைப்புக்காக வெளிநாடு சென்ற பெண்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்!

துஸ்பிரயோகம் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களிற்கு இழப்பீடு வழங்கு!

மரணத்திற்கு பதிலாக வாழ்க்கை  - அவமானத்திற்கு பதிலாக கௌரவம்!

உழைப்பு கொள்ளைக்காக பெண்களை வெளிநாடுகளிற்கு கடத்துவதை நிறுத்து!

ஆகிய பதாகைகளை தாங்கி பெண்கள் விடுதலை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழர்களின் வாழ்வு அழிக்கப்படுகிறது. நீர், நிலம் என தமிழ் மண்ணின் வாழ்வாதாரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. உண்ணும் உணவில் வேதியல் நஞ்சு கலக்கப்படுகிறது. எம் மக்களின் தாய்மொழி, தமிழ்மொழி மதவெறியர்களாலும், இனவெறியர்களாலும் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுகிறது. ஆனால் நாம் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. "தமிழன்டா" என்று தட்டி வைக்கவில்லை.

"இயற்கை அனர்த்தங்கள்" குறித்து இந்நாட்களில் அதிகமாக பேசப்படுகின்றது. அதற்கான சமீபத்திய காரணம் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கன மழையும், அதனால் இலட்சக்கணக்கான மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கிய வெள்ளமும் மற்றம் நூற்றுக்கணக்கான மக்களை பலி கொண்டு மேலும் பலரை அனாதைகளாக்கிய மண்சரிவும் தான். கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவியது. பின்பு மழையால் துன்புற வேண்டிய காலம் உதயமாகியது. வெப்பநிலை காரணமாக மரணிக்க நேர்ந்த மக்கள் இப்போது மழையால் மரணித்துக் கொண்டிருக்கின்றனர். இங்கே எமக்குள்ள கேள்வி இதுதான். நாங்கள் முகம் கொடுப்பது “இயற்கை அனர்த்தத்திற்குத்தான்” என்பது உண்மையா? அல்லது மனித செயற்பாடுகள் தான் அனர்த்தத்திற்கு காரணமா?  மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச நிறுவனங்கள் தேவையான அளவிலும், வினைத்திறனுடனும் செயற்பட்டிருக்கின்றனவா என்ற கேள்விக்கும், இந்த பேரழிவின் முன்னால் பெரும்பாலான மக்கள் வெளிப்படுத்திய மனிதப் பண்புகளை சமூத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவது எப்படி என்ற கேள்விக்கும் பதில் தேடுவதற்கு முன்பு, அது குறித்து நாம் விளக்கமொன்றை பெற்றுக் கொள்ள வேண்டும். 

நேற்று 15-01-2017, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒன்று கூடிய சமவுரிமை இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் பொங்கல் விழாவினை கொண்டாடினர். இந்நிகழ்வில் இலங்கையின் மூவின மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். பொங்கல் நிகழ்வினை தொடர்ந்து கோலாட்டம், நாடகம் மற்றும் பாடல் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறிப்பாக "இனவாதம்" நாடகம் தமிழ் மற்றும் சிங்களம் மொழிகள் இணைந்தும் தமிழ், சிங்கள கலைஞர்கள் சேர்ந்து நடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது பாரிஸ் சமவுரிமை இயக்கதினரின் இரண்டாவது பொங்கல் தின விழாவாகும்.

இயற்கையை அழித்து உணவை நஞ்சாக்கி விடுவதே, சந்தைச் செயற்பாடாகி இருக்கின்றது. பணத்தை குவிப்பதையே உற்பத்திக் கொள்கையாக்கிய உலகமயமாக்கம், விவசாயத்தை உயிருடன் கொன்று வருகின்றது. இதை பொருளாதார வளர்ச்சியாக, மக்கள் நலனாக அரசுகள் முன்வைக்கின்றது.       

இன்று இரசாயன பூச்சிக்கொல்லியும் உரமுமின்றி, விவசாயம் என்பது, பொதுப்புத்தியில் கற்பனையாக்கப்பட்டு இருக்கின்றது. நிலத்தையும் சுற்றுச்சூழலையும் நஞ்சாக்கி ஒரு தனிமக் கூறை வீரியமடையச் செய்யும் முறைமையே, இன்றைய விவசாயமாக மாறியுள்ளது. அதேநேரம் விவசாயத்தை பெரும்பான்மை மக்களின் வாழ்வில் இருந்தும் தனிமைப்படுத்தி அன்னியமாக்கப்பட்டு இருக்கின்றது. 

இரண்டாம் உலக யுத்தத்திற்கு முந்தைய இயற்கை சார்ந்த விவசாய முறையை யுத்தத்தில் மனிதனைக் கொல்ல பயன்பட்ட இரசாயனப் பொருட்களைக் கொண்டு அழித்ததையே விவசாய வளர்ச்சியாக காட்டுகின்றனர். பாரம்பாரியமாக விவசாயிகள் விதைகளைச் சேகரிக்கும் முறைமையை அழித்தும், மலட்டு விதைகளைக் கொண்ட உணவு உற்பத்தியை திணித்தும், மரபுரீதியான மாற்றங்களைச் செய்த பயிர்களைக் கொண்ட உணவு உற்பத்தி முறைமைகளை, உலகமயமாக்கம் பன்நாட்டு கம்பனிகளின் சொத்தாக்கி இருக்கின்றது.    

"போத்துக்கேசியர்கள் இலங்கை வந்த போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிங்களவர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள். அங்கு சில தமிழ்ச் சாதிகளும் இருந்தன. கேரளாவில் இருந்து இங்கு வந்த சில மலையாள மக்களும் இருந்தார்கள். சிங்கள அரசர்களால் அவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டிருந்தார்கள். டச்சுக்காரர்கள் வந்ததின் பின்னர், அவர்கள் தங்கள் புகையிலை பயிர்ச்  செய்கையை யாழ்ப்பாணத்தில் செய்வதற்காக இந்தியாவில் இருந்து தமிழர்களைக் கொண்டு வந்தார்கள். சொல்லப்  போனால் உண்மையில் இந்தியாவில் கூட தமிழ் அடையாளம் என்ற ஒன்று இருக்கவில்லை".

பிரதமரின் தலைமையில் ஜனவரி 7ம் திகதி அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவல பிரதேசத்தில் நடைபெற்ற "தெற்கு அபிவிருத்தி வலயம்" திறப்பு விழாவிற்கு சமமாக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஜனநாயகத்தை விரும்பும் இந்நாட்டின் சகல மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் இசியேங் லியானும் முன்னின்று நடத்திய இந்த விழாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எதிராக நீதிமன்றம் 6ம் திகதி தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த விழா நடைபெறும் தருணத்தில் அப்பிரதேசத்திற்குள் பிரவேசித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர். அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உட்பட 26 பேரிடம் தனிப்பட்ட ரீதியில் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி அம்பாந்தோட்டை துறைமுக வளாகம், வான் பாலத்தை அண்டிய பிரதேசம், நிர்வாக இடங்களை அண்டிய பிரதேசங்கள் மற்றும் பெருந்தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊர்வலங்கள் ஆகியன 14 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன. 

"பாடசாலைகளில் பணம் அறவிடுவதனை நிறுத்து", "கல்விக்கு 6% த்தை ஒதுக்கு", "பல்கலைக்கழகங்களிற்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரி", "மாலபே திருட்டு பட்டக்கடையை இழுத்து மூடு" ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று 11-01-2017 ஒரு நாள் விரிவுரைகளை பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" பத்திரிகை இதழ் 28 வெளிவந்து விட்டது. இலங்கையில் உழைக்கும் மக்கள் மத்தியில் பரவலாக விநியோகப் செய்யப்படுகின்றது.

இந்த பத்திரிகையின் உள்ளே.....

1, சோசலிஸத்திற்காக உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு கட்சி!

2, எமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் ஐந்து வருடங்கள்!!!

3. மகிழ்ச்சியை வாழ்வாக்கிய சர்வதேசவாதியே பிடல் காஸ்ரோ

4. கொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை எதிர்க்க மக்களே முன் வாருங்கள்!

5. தோட்டத்தொழிலாளர்களின் போராட்டங்களும் மலையக அரசியல் கட்சிகளின் கபட நாடகங்களும்...

எதிர்வரும் ஞாயிறு 15-01-2017 அன்று மாலை 2 மணிக்கு பாரிஸில் சமவுரிமை இயக்கத்தினர் பொங்கல் விழா கொண்டாட இருக்கின்றனர். உழைப்பில் ஈடுபடும் விவசாயிகள் தமது உழைப்பினையும் அதன் விளைவையும் கொண்டாடுவதே பொங்கல் விழாவாகும். இந்த வருட பொங்கல் விழாவினை மொழி, சமயம், சாதி வேறுபாடுகளை கடந்து இலங்கையர் மற்றும் வெளிநாட்டினர் அனைவரையும் ஒன்றிணைத்த கொண்டாட்டமாக கொண்டாட பாரிஸ் சமவுரிமை இயக்கத்தின் கிளை அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர் தர வகுப்பில் உயிரியல் தொழிநுட்ப பிாிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவனான மகேந்திரன் தார்த்திக்கரன் என்பவர் முதலாம் இடத்தைப் பெற்று உள்ளார். கூலித் தொழிலாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவன் கிளிநொச்சியில் உருததி்ரபுரம் எள்ளுக்காடு என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் இடைத்தரக் கல்வி பெறுவதற்காக செல்லும் போது இவரது ஆரம்பப் பாடசாலை தலைமை ஆசிரியர் "நீ உருப்படவே மாட்டாய்" என்று திட்டித் தான் இவரை அனுப்பி வைத்தாராம்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டை முன்னிட்டு, இடதுசாரியக் கருத்தியல், உழைக்கும் மக்களின் விடுதலை, உழைக்கும் வர்க்கம் தனது ஆட்சியதிகாரத்தை வென்றெடுக்க போராட்ட குணாம்சம் கொண்ட உழைக்கும் மக்களின் வர்க்க கட்சியின் தேவையை வலியுறுத்தி முன்னிலை சோசலிசக் கட்சியின் தோழர்களால் நாடு தழுவிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தெருமுனைக் கூட்டங்கள், மக்களுடன் கலந்துரையாடல்கள், துண்டுப்பிரசுர விநியோகங்கள் என பல்வேறு வழிகளில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதா என்ற கொள்ளைக்காரியின் மரணத்தை அடுத்து சசிகலா என்ற மன்னார்குடி மாபியாக்காரி பின்பக்கம் மண்ணில் தொடக் கூடிய அளவிற்கு குனிந்து கும்பிடும் அடிமைகளின் கட்சியில் பொதுச் செயலாளராக வந்திருக்கிறார். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் பதவிகளிற்கு வந்த பிறகு கொள்ளை அடித்தார்கள். மன்னார்குடி மாபியாக்காரியும், அவரது புருசன், அண்ணன்கள், அக்காக்கள், மக்கள், மருமக்கள் மற்றுமுள்ள  ஊரை அடித்து உலையில் போடும் உறவினர் கும்பல்கள் எந்தப் பதவியில் இல்லாத போதே தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் மொட்டை அடிக்கிறார்கள். எனவே தமிழ் நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களிற்கு வேண்டிய சகல தகுதிகளும் சசிகலாவிற்கு இருக்கிறது. அதனால் நாளை ஒரு நன்னாளில் சசிகலா என்ற மாபியாக்காரி தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆகக்கூடும்.

கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்டடோர்கள் மற்றும் அரசியல் கொலைகளிற்கு உள்ளானோர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறும், அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரி  05-01-2017 அன்று ஜனநாயகத்துக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர்  சந்திப்பினை நடாத்தியுள்ளனர். இதில் இடதுசாரிய கட்சிகளான முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனீனிச கட்சி, ஐக்கிய சோஷலிஸக் கட்சி, இலங்கை சோஷலிஸக் கட்சி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் இவர்களுடன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலார் பிரகீத் எகலியகொட அவர்களின் மனைவியும் கலந்து கொண்டார்.

வெளிநாடுகளிற்கு இலங்கை பெண்களை அடிமைகளாக கடத்துவதற்கு எதிராக சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. வெளி நாடுகளிற்கு அடிமை வேலையாட்களாக சென்று பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களது உறவினர்களை இணைத்து 21ம் நூற்றாண்டின் புதிய பெண்கள் அடிமை வியாபாரத்திற்கு எதிராக ஊடகவியலாளர் சந்திப்பினை இன்று 06-01-2017 கொழும்பில் நடாத்தியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE