Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

நவம்பர் 26, 27 முன்னிறுத்தி புலிகள் பிரபாகரனின் பிறந்த தினத்தையும், புலிகளின் மாவீரர் நாளையும் நினைவுகொள்வதை எதிர்த்து, புலியெதிர்ப்புப் புராணங்கள் பாடப்படுகின்றது.

புலிகள் செய்த மனிதவிரோதக் குற்றங்களையும், அது ஏற்படுத்திய சமுதாயப் பின்னடைவுகளையும் காட்டி, ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த போலியான பொது விம்பத்தைக் கட்டமைத்துவிட முனைகின்றனர். இதன் மூலம் தமக்கு ஒளிவட்டம் போடுவதன் மூலம், சமூகத்தை தவறாக வழிநடத்த முனைகின்றனர்.

இப்படி செய்வதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் தேச மற்றும் தேசிய உணர்வை மழுங்கடிக்கவும், அதேநேரம் ஒடுக்கும் பேரினவாதத்தை பாதுகாக்கவும் முனைகின்றனர். இப்படிப்பட்ட புலியெதிர்ப்பு அரசியல் என்பது சாராம்சத்தில் பேரினவாதத்தை ஆதரிப்பதுடன், புதிதாக பேரினவாத ஆட்சிக்கு தலைமை தாங்கும் கோத்தபாயவை முன்னிறுத்துவதும் நடந்தேறுகின்றது.

இந்த பின்னணியில் முன்பு புலம்பெயர் நாடுகளில் ஜனநாயகத்தை முன்வைத்து, ஒடுக்கும் பேரினவாத அரசுக்கு ஆதரவான புலியெதிர்ப்பாக சீரழிந்தவர்களைக் காண முடியும். இவர்களுடன் புலிப் புராணம் பாடி அண்டிப் பிழைத்தவர்களும், இன்று புலியெதிர்ப்பு புராணம் பாடுகின்றனர். இன்று இவர்கள் ஆளும் தரப்புகளுடன் கூடிப் குலாவுவதன் மூலம் பிழைக்கும் புலியெதிர்ப்பாகும்.

தற்போது, இலங்கையின் அரசஅதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள கோத்தபாய ராஜபக்ச அவர்களையும், ராஜபக்ச குடும்பத்தையும் எவ்வாறு புரிந்து கொள்வது,- என்பது பற்றி கட்டுரைகளும் கருத்துக்களும் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் எழுதி குவிக்கப்படுகிறது. இக்கட்டுரைகளை - கருத்துக்களை பெரும்பாலும் எழுதுவோர், தற்போது வடக்கு -கிழக்கு தமிழ் சமூகத்தில் கருத்தியல்ரீதியாக சமூகத்தை சென்றடையக்கூடிய எழுத்தாளர்களாகவும், பிரபலமான "அரசியல்" ஆய்வாளராகவும் இருக்கின்றனர்.

இவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் கடந்த காலத்தில் புலிகளுக்கும் பிரச்சார பீரங்கிகளாகவும், அவர்களின் அதிகாரத் துஷ்பிரயோகம், படுகொலைகள், பாசிச நடவடிக்கைகளை நியாயப்படுத்துபவர்களாகவும் ஆகவும் விளங்கியவர்கள்.

இவர்கள் தற்போது வேறு, வேறு கட்சிகளை பின்கதவால் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், தங்களுக்குள் அரசியல்ரீதியான சில முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இருந்தாலும், கோத்தபாய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரின் அரசியல் போக்குகள் பற்றி மிகவும் நேர்மறையான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். தம்மை அதிகாரத்துக்கு எதிரான சக்திகள் என கூறிக்கொள்வதில் இன்பமடையும் இவர்கள், அடிக்கடி பாவிக்குமோர் சொல் "அரசியல் அறம்". புலிகளுக்கு காவடி தூக்குவதற்கு முன், இவர்கள் உறுப்பினராகவிருந்த இயக்கங்களுக்காகச் செய்த கொலைகள், கொள்ளைகள் தொடக்கம் இன்று அதிகாரத்தில் இருக்கும் மஹிந்த குடும்பத்துக்கு பல்லக்கு தூக்கிக்கொண்டிருப்பது வரையான இந்த காலத்தில் - இவர்களின் "அரசியல் அறம்" எங்கு போனதென்று இவர்களால் பதில் கூற முடியாது. "ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி" என்பது தான் இவர்களில் அரசியல் அறம்.

ஆளுகின்ற ஒடுக்கும் வர்க்க பிரதிநிதிகளை "தோழர்" என்கின்றனர். "கம்யூனிஸ்ட்" என்கின்றனர். முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடுகளை "கம்யூனிச நாடு" என்கின்றனர். இப்படி அழைப்பதன் மூலம் கட்டமைக்கும் அரசியலானது, ஒடுக்கப்பட்ட மக்கள் போராடுவதை தடுக்கின்ற, ஒடுக்கப்பட்ட உணர்வுடன் மக்கள் தமக்குள் தோழமை கொள்வதை வெறுக்கின்ற, ஆளும் வர்க்க அரசியல் சிந்தனைமுறையாகும். 

சமூக உணர்வற்ற தனிநபர்வாத பிழைப்புவாதமானது, மனிதனுக்குரிய சமூக அறங்களையே மறுத்து விடுகின்றது. இதன் மூலம், தங்கள் நடத்தையை "தோழமையானதாக" கூறிக் கொண்டு, சமூகத் தன்மையிலான மனித உணர்வை சிறுமைப்படுத்த முனைகின்றனர்.

மனித உணர்வு கொண்ட சமுதாயத்தினை மீட்டெடுக்கும் உள்ளார்ந்த உணர்வும், அதற்காக இணைந்து கொண்டு செயற்படும் தோழமையுடன் கூடிய நடைமுறையுமே, தோழராக அழைக்கத் தகுதி பெற்றது.

சமுதாய உணர்வு தான் தோழமை. மனிதனை ஒடுக்கிவாழும் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான சமுதாய உணர்வு தான், தோழமைக்கான சமூக அடித்தளம்.

தேசிய இனங்களும், தேசங்களும் ஒடுக்கப்படுவதையே, தேர்தல் முடிவுகள் மீளவொருமுறை பறைசாற்றி நிற்கின்றது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தங்கள் மொழி மற்றும் தாங்கள் பின்பற்றக்கூடிய மதம் சார்ந்து, புதிய ஆட்சியை ஒடுக்கும் இனத்தினது மொழி மற்றும் மதத்தின் அதிகாரமாக - வன்முறையாக காண்கின்றனர். ஆளும் ஆட்சியதிகாரத்தைப் பெற்றவர்கள், கடந்தகால யுத்தத்தின் விளைவாகவே தமிழ்மொழி பேசும் மக்கள், தமக்கு எதிராக வாக்களித்தனர் என்று காரணத்தைக் கற்பிக்க முனைவதன் மூலம், இன-மத ஒடுக்குமுறையை மூடிமறைக்க முனைகின்றனர். நேரடியாக யுத்தத்தைச் சந்தித்த தமிழ் இனம் மட்டும் எதிர்த்து வாக்களிக்கவில்லை, மாறாக முஸ்லிம் - மலையக மக்களும் கூட எதிர்த்து வாக்களித்து இருக்கின்றனர்.

யுத்தத்துக்குப் பின்னர் நடந்தேறிய இன-மத வன்முறைகள், இனமத பிரச்சாரங்களின் பின்னணியில், மகிந்த தலைமையிலான இன்றைய ஆட்சியாளர்கள் இருந்தனர் என்பது உலகறிந்த உண்மை. ஆட்சியைக் கைப்பற்ற இந்த இன-மத ஒடுக்குமுறை பெருமைகளை முன்னிறுத்தியும், அதைத் தொடர்வதற்கான அதிகாரத்தையும் கோரிப் பெற்றனர் என்பதே உண்மை. இதை ஒடுக்கப்பட்ட இனங்கள் பிரதிபலித்தன.

கோத்தபாய இலங்கை சனாதிபதியாக பதவியேற்று 24 மணி நேரத்துக்குள்ளேயே(19.11.2019), இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியம் ஜெயசங்கர், மற்றும் ஐம்பது பேர் கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும் கொழும்புக்கு வருகை தந்தனர். சிலமணிநேரங்கள் கொழும்பில் தரித்து நின்ற இவர்கள் கோத்தபாய, அவரின் அண்ணனார் மஹிந்த உட்பட ரணில் மற்றும் சில முக்கியஸ்தர்களை சந்தித்து விட்டுச் சென்றனர்.

"மரியாதையின் நிமித்தம் அரச அதிபர் கோத்தபாயவை சந்தித்தேன். இரண்டு நாடுகளுக்குமிடையில் உள்ள பிணைப்பை இறுக்கமடையச் செய்யும் விதத்தில், நாம் அவரை இந்தியாவுக்கு, பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஒன்றிற்கு வருமாறும் அழைப்பு விடுத்தேன்" என அறிவித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியம் ஜெயசங்கர்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பேரினவாதத்துக்கு எதிராக, தமிழ் - முஸ்லிம் - மலையக மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். கடந்தகால அனுபவமும், தேசங்களினதும் - தேசிய இனங்களினதும் சமவுரிமையை மறுக்கும் தேர்தல் கட்சிகளின் பிரச்சாரமுமே இதற்கான அடிப்படைக் காரணமாகும். இனவொடுக்குமுறை அதிகரித்துள்ளதையும், அதற்கு எதிராக தேர்தல் கட்சிகள் முதல் தனிநபர் செயற்பாட்டாளர்கள் வரை, யாரும் அக்கறையற்றுக் கிடப்பதையே, இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றது.

இனவொடுக்குமுறைக்கு எதிராகவும், சமவுரிமை கொண்ட தேசங்கள் - தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை முன்வைத்து, பெரும்பான்மை மக்களை அணிதிரட்ட வேண்டிய இடதுசாரிகள், அரசியல்ரீதியாக செயலற்றுக் கிடப்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றது.

இன-மத ஒடுக்குமுறை மீதான தமிழ் - முஸ்லிம் - மலையக மக்களின் பொது அச்சத்தை, தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகின்றது.

2009-போர் முடிவின் பின், எமது தேசத்தின் விடுதலை பாராளுமன்றவாதிகளினாலும், அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய அரசுகளினாலும் பெற்றுத்தரப்படும் எனும் நம்பிக்கை மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் முன்னணி, புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் புலிகளின் அமைப்புகள் என கூறிக்கொண்டவர்கள் எனப் பலர் இந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்த்தனர். இவர்களின் இந்த நம்பிக்கையூட்டல், அவர்களின் சொந்த இருப்பை தக்க வைத்துக்கொள்ள மட்டுமே பயன்பட்டுள்ளதென்பது இங்கு கூறித்தான், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடையமல்ல.


அதேவேளை, புலிகளுக்குப் பின்னான காலத்தில் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் எனத் தம்மை கூறிக்கொண்டவர்களுக்கு அரசியல்ரீதியாக வேறு எந்த வழியும்-தெரிவும் இருக்கவில்லை. போருக்குப் பின், போரை நடத்தி முடித்த மஹிந்த அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளின் பார்வையிலேயே இவர்களும் அரசியல் செய்யும் சூழல் இருந்தது. அந்த நிலையானது 2015 இல் மைத்ரி பதவி ஏற்கும் வரை தொடர்ந்தது.

தமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா?, எப்போது சாதி உருவாக்கப்பட்டது?, ஆதியில் யார் ஆண்ட சாதி?, இராசராச சோழன் எந்தச் சாதி?, சாதியைக் கொண்டு யார் தமிழர் எனக் கண்டுபிடிக்கமுடியுமா? என்பன போன்ற பல கேள்விகள் அண்மைக் காலத்தில் பரவலாக எழுப்பப்படும் கேள்விகளாகக் காணப்படுகின்றன.

அத்தகைய கேள்விகளிற்குப் பதில் காணுமுகமாக தமிழர்களிடம் சாதியின் தோற்றம் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கமாகவே இக் கட்டுரை அமையும். இதனை முழுமையாகப் பார்ப்பதற்கு தமிழர்களின் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளிலான எழுத்திலுள்ள வரலாற்றினைப் பார்க்கவேண்டும்.

ஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019

தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி, 2010 ஆம் ஆண்டு அவரது 33வது நினைவுதினத்தின் போது தோழர் சண்முகம் சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்டு, 02.09.2010 இல் தினகரனில் வெளிவந்த கட்டுரை நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.

வடக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வேரூன்ற வைத்தவர்
‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்’ என இலங்கையின் வடபுலத்து மக்களாலும், ‘காத்தார்’ என யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர் சமூகத்தாலும் அன்புடனும், அர்த்தத்துடனும் அழைக்கப்பட்டு வந்த முருகுப்பிள்ளை கார்த்திகேசன் (மு.கா) அமரத்துவமடைந்து, இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் 10ம் திகதியுடன் 33 வருடங்கள் உருண்டோடிவிட்டன.

என்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப் பதிவையிடுகிறேன் .

எனக்கு உடுப்பு கழுவி தந்து என்னைக் குளிக்கவைத்து எனது கால் கைகளைத் தடவிப்பிடித்து விட்டு 70வயதிலும் என்னைப் பார்த்துக்கொள்ளுமளவுக்கு ஆரோக்கியமாக இன்னும் எந்தவித நோயுமில்லாமல் உடல் பலத்துடன் இருக்கும் எனது தாய்...

ஆரோக்கியமான ஒரு தாய்க்குப் பிறந்த மகள் நான்.. எனது சகோதரர்கள் அனைவரும் இன்னும் ஆரோக்கியமாகவே உள்ளனர்... வீட்டில் கடைசிப்பெண்... பிள்ளை பெற்ற அந்நாளே எழுந்து வீட்டு வேலைகளை களைப்பின்றி செய்யுமளவுக்கு தேகாரோக்கியத்துடன் இருந்த நான்தான் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றால்.. அதற்கான பரம்பரைக்காரணம் எதுவுமில்லை!

மனம் திறந்து பேசுகிறேன்....

பார்ப்பனிய காப்பரேட்டை எதிர்த்து எழுதும் எழுத்தாளர்கள் இந்து பாசிச ஆட்சியின் ஆதரவுடன் கொல்லப்படுகின்ற சூழலில், இந்தப் பாசிச ஆட்சிக்கான பார்ப்பனிய சித்தாந்தத்தையே தன் எழுத்தாக கொண்ட ஜெயமோகனின் நடத்தை அரசியலாகியது.

ஜெயமோகனின் புளிச்சுப் போன பூனூல் இலக்கியத்துக்காக, பொங்கிய வெள்ளாளிய – பார்ப்பனிய இலக்கியவாதிகளும் ஓரே ரகத்தைச் சேர்ந்தவர்கள். மா புளிச்சுப் போனதோ இல்லையோ, புளித்துப் போன பூனூலின் புளிப்பு, ஒடுக்கப்பட்ட மக்களையிட்டு அக்கறைப்படாத யாருக்கும் புளிப்பதில்லை. என்ன இருந்தாலும் இலக்கியவாதி இலக்கியவாதி தான். இலக்கியவாதி மீது வன்முறையா!, அதைக் கொண்டாடுவதா!! என்று பொங்கிய இலக்கியவாதிகளின் சமூகப் பார்வை என்பது, ஓடுக்கும் தரப்பு சார்ந்தது.

கல்முனையில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடியவர்கள், இன-மத ரீதியாக மக்களைப் பிரித்து ஒடுக்கியாண்ட முறைமையே, பிற இன-மத முறுகல்களுக்கு வித்திட்டது. இப்படி இலங்கை ஆட்சி அதிகாரங்கள், இன-மதம் சார்ந்து மக்கள் விரோத தன்மை கொண்டதாகவே இருக்கின்றது. கல்முனை வடக்கு தரம் உயர்த்தப்பட்டால், அந்த ஆட்சிமுறை இதற்கு விதிவிலக்காக ஒரு நாளும் இருக்கப்போவதில்லை. அதுவும் அதே இன-மதவாதம் கொண்ட, செக்குமாடாகவே செயற்படும்.

இன்றைய மனிதனின் நடத்தைகள் தொடர்ந்தால், பூமியில் உயிரினம் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். மனித நடத்தைகள் என்றால் அவை எவை? அதை யார் தீர்மானிக்கின்றனர்? அரசுகள் என்ன செய்கின்றது?

பல்லுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையேயான அறிவியல் கொள்கை மன்றத்தால் (IPBES) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது, மனிதன் இயற்கை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி எச்சரித்திருக்கின்றது.

எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றைப் பேசுவதில்லை, ஒடுக்குவோரின் வரலாற்றைப் பற்றியே பேசும். வரலாறாக இருக்கின்ற அனைத்துமே, ஒடுக்கியோரின் வரலாறாகும். எழுதப்பட்ட வரலாற்றை காட்டி இதுதான் அன்றைய மனித வரலாறு என்று கூறுவோர், ஒடுக்குகின்ற தரப்பைச் சேர்ந்தவர்களே. ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறு என்ன என்பதை கண்டறிந்து சொல்வதே, ஓடுக்கப்பட்டவர்கள் சர்hபாக நின்று சொல்வதாகும்.

இது இராசராச சோழனின் வரலாற்றுக்கு விதிவிலக்கல்ல. ஓடுக்கியோரின் வரலாற்றின் எதிர்மறையில் தான், ஒடுக்கப்பட்டடோரின் வரலாற்றை கண்டறிய வேண்டும். வர்ண – சாதிய சமூக அமைப்பில், இராசராச சோழனின்; சாதிய சிந்தனை குறித்தும், ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும், தேவைப்பட்ட பாரிய மனித உழைப்பு எங்கிருத்து எப்படி பெறப்பட்டது என்பது குறித்தும், இராசராச சோழனின்; பின்னால் பதுங்கிக் கிடப்பவர்கள் பதிலளிக்க வேண்டும்.

அரபு மொழி இலங்கை மண்ணிற்கே உரிய தாய் மொழியல்ல. அரபு மொழி பேசவும் வர்த்தக சமூகத்துடன் உரையாடுவதற்கான ஒரு மொழியாக அரபு இலங்கையில் கற்கவில்லை. அரபு நூல்களை கற்க, அரபைக் கற்பிக்கவில்லை. அரபு மொழி அவசியமற்ற மக்கள் கூட்டத்தின் மேல், இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஒரு மொழியாக இலங்கையில் அரபு மொழி திணிக்கப்பட்டு இருக்கின்றது. வீதிகள், கட்டிடங்கள்.. பெயர்களில் அரபு முதன்மையான மொழியாகி இருக்கின்றது. குறிப்பாக பிற சமூகங்களில் இருந்து முஸ்லிம் சமூகத்தை அன்னியப்படுத்த விரும்பிய, இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளினால் கடவுளின் பெயரால் ஒரு அன்னிய மொழி திணிக்கப்பட்டது.

உடையை உற்பத்தி செய்வது இலாபநோக்குக் கொண்ட சந்தையே. இந்தச் சந்தையானது ஆணாதிக்க நுகர்வுச் சிந்தனையால் வடிவமைக்கப்பட்டது. இந்தச் சந்தையில் இருந்து எதை பெண் அணியவேண்டும் என்ற ஆணாதிக்க கட்டளைக்கு எதிரான, பெண்ணின் சுதந்திரமான உடைத் தெரிவு ஆணாதிக்கச் சந்தையைக் கடந்ததல்ல.

இந்த ஆணாதிக்க சந்தைச் சமூக அமைப்பில் உடை குறித்து சட்டங்கள், மத - இன - சாதி சார்பற்றதாக இருக்க வேண்டும். இதற்கு முதலில் அரசு இனம், மதம், சாதி கடந்த முரணற்ற ஜனநாயக அரசாக இருக்க வேண்டும். இதற்கு மாறாக அரசு மதம் சார்பானதாக இருக்கும் போது, சட்டங்கள் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும். இது ஒரு மதத்துக்கு எதிரான இன்னொரு மதத்தின் ஒடுக்குமுறையாக மாறுகின்றது. மறுபக்கத்தில் எல்லா மத தனி அடையாளத்தையும் பொது இடங்களில் அனுமதித்து, சமூகத்தைப் பிரித்து கூறுபோடுவதை செய்கின்றது. இதன் மூலம் பரஸ்பரம் ஒடுக்குமுறையை கொண்ட சமூகமாக, சமூகத்தை குறுக்கிவிடுவதே இலங்கையில் நடந்தேறுகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE