Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் நடந்த ஊழல், இலஞ்சம், அதிகார துஸ்பிரயோகம், மோசடி, கட்டைப்பஞ்சாயத்துடன்.. கூடிய சமூக விரோதக் குற்றங்களை, நீதிமன்ற தீர்ப்பு ஒன்று அம்பலமாக்கி இருக்கின்றது. வெளியாகியுள்ள தீர்ப்பு "தமிழ் தேசிய" ஊடகங்களாலும், நவதாராளவாத சக்திகளாலும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.     

அதேநேரம் அண்மையில் தங்களை புனிதர்களாக காட்டி ஊழல் எதிர்ப்பு கூச்சல் போட்ட, "தமிழ் தேசிய" பிழைப்புவாதிகள் கூட்டுக் களவாணிகளாக இருப்பதால், மூடிமறைப்பதில் கூட்டுச் சேர்ந்துள்ளனர். சுண்ணாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ள நீதிமன்றத் தீர்ப்பை, "தமிழ் தேசியம்" மக்கள் முன் இருட்டடிப்பு செய்துள்ளது.  இந்த பின்னணியில் "நீரில் எரியும் நிலம் - சுன்னாகம் நீர் மாசு இரகசியங்கள்" என்ற வீடியோ வெளியாகி இருக்கின்றது. இந்தக் காணொளி ஒட்டுமொத்த சதிகாரர்களின் சதிகளை, ஆதாரபூர்வமாக அம்பலமாக்கி இருக்கின்றது. 

“நெடுந்தீவில் குதிரைகள் இறக்கின்றன என அறிந்த வட மாகாண சபை முதலமைச்சர் அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஒரு குழுவை நியமித்து நெடுந்தீவுக்கு அனுப்பியுள்ளார்.” என ஊடகங்களில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. 

கடவுள் பக்தி,  நீதி,  நேர்மை,  ஜீவகாருண்யம் கொண்ட முதலமைச்சர் இக்குழுவுக்கு ‘குதிரைகள் பற்றிய அறிவும் அனுபவமும் கொண்டவர்களையே’ தெரிவு செய்திருப்பார் என அவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்திய மக்கள் நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்கள். அத்துடன் அக்குழுவில் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியிழந்த முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் ஒருவரை உள்ளடக்கியதன் மூலம் முதலமைச்சர் ஊழலுக்கு எதிரான தனது கடும் போக்கையும் மக்களுக்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட தமிழ்-முஸ்லீம் மக்களை ஒடுக்குகின்ற முஸ்லீம் இன-மதவாதத்தை,  "இலக்கியவாதிகள் - முற்போக்குவாதிகள்" கண்டுகொள்ளாது மறைமுகமாக ஆதரிப்பதே பொது நடைமுறையாக இருக்கின்றது. இந்த வகையில் முஸ்லீம் இலக்கியவாதிகளுடன், தமிழ் இலக்கியவாதிகளும் கூட்டு அமைத்துள்ளனர். 

 

முஸ்லீம் இனமதவாதத்தை எதிர்க்கின்ற தமிழர்களை, "தமிழ் இனவாதியாக" முத்திரை குத்துவதன் மூலம், ஒடுக்கும் இனவாதத்தை ஆதரிக்கின்றவர்களாக தமிழ் "முற்போக்கு மற்றும் இலக்கியவாதிகள்" இருக்கின்றனர். இதன் மூலம் முஸ்லீம் இன-மதவாதிகளுடன் கூட்டமைத்துக் கொள்கின்றனர்.

இலங்கையில் இன்று நாடு பூராவும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நாளுக்கு நாள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இவற்றில் மக்களின் பங்களிப்பும் பாரிய அளவில் இடம் பெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் இந்த நடவடிக்கைகள் தென்னிலங்கை மக்களுக்கும் வட இலங்கை மக்களுக்கும் மத்தியில் நிலவும் அரசியல் போக்குகளின் ஒத்த தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன.

புதிய உலக தாராளவாத பொருளாதாரத் திட்ட பொறியமைப்புக்குள் பொருத்தப்பட்ட ஒரு அலகாகவே கடந்த பல வருடங்களாக (குறிப்பாக 1977யூலை முதல்) இலங்கை அரசாங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. நடந்து முடிந்த யுத்தம் உட்பட யாவுமே இந்த பொறியமைப்பின் திட்டமிடல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளன. 77ன் திறந்த பொருளாதாரக் கொள்கை தொடங்கி வன்முறை-யுத்தம்-சர்வாதிகாரம்-நல்லாட்சி அனைத்துமே ஏகாதிபத்தியங்களின் விருப்பு வெறுப்புக்கும் அவர்களின் உலக முதலாளித்துவ மூலதன விரிவாக்கத்திற்கான திட்டங்களுக்கும் ஏற்றதாகவே நடைமுறைத்தப்பட்டு வருகின்றன.

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

தமிழ்மொழி பேசும் மக்களை ஒடுக்கிவரும் பேரினவாத அரசின் திட்டமிட்ட இன ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியே, முஸ்லீம் தலைமைகள் இன்று முன்னெடுக்கும் இன-மத வாதமாகும். தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லீம் இன-மத வாதத்துக்கு அரச அதிகாரங்களைக் கொடுத்திருப்பதன் மூலம், தமிழ் மக்களை தொடர்ந்து ஒடுக்க முடிகின்றது. 

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் பரவலாக காணப்படுகிறது. வன்முறைக்கு உள்ளாவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்கிறது. இது காலங்காலமாக தொடரும் தொடர்கதையாகும். இது இன்றோ, நேற்றோ தோன்றிய சூழல் அல்ல. சரித்திர காலம் முதற் கொண்டு பெண்களின் நிலை பாதுகாப்பற்றதாகவே பேணப்பட்டு-கடைப்பிடிக்கப்பட்டு-உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆகவே இன்று காணப்படும் பாதுகாப்பற்ற சூழல் முன்னைய காலங்களை விட விகிதாசாரத்தில் சற்று அதிகமாக காணப்படுகிறதே அன்றி புதிய-வித்தியாசமான ஒரு விடயமல்ல.  

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது. 

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது. 

இலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக நிறுவனமான நாம்,   தற்போதைய அரசாங்கத்தால் இலவச கல்விக்கான உரிமைக்காக போராடும் மாணவ இயக்கங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்ற  கொடூர அடக்குமுறை நடவடிக்கைகளை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்.

இது,  இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள் எதிர்ப்பு உருவாகியுள்ளதருணமாகும்அதற்கான ஆரம்பம் இலங்கையில் முதலாவது தனியார் மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்து உயர்கல்வியைவியா பாரப்பண்டமாக ஆக்கும் முயற்சியோடு தொடங்கியது. இலங்கை அரசாங்கத்திற்கு கடந்தவருடம் 1.5 மில்லியன் டொலர் கடனை வழங்கிய சர்வதேச நாணயநிதியம் விதித்த நிபந்தனைகளில் சமூக பாதுகாப்பு சேவைகளை வர்த்தகச் சந்ததைக்கு திறந்துவிட வேண்டுமென்பது முக்கிய இடத்தை வகிக்கின்றதுஇலங்கையில் மாலம்பேபிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரி அதற்கு அத்தியாவசியமான சட்டபூர்வ நிபந்தனைகள்எதையும் பூர்த்திசெய்யாமல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன்இலங்கை மருத்துவசபை அதன் பட்டத்தை ஏற்றுக் கொள்வதை நிராகரித்துள்ளதுஇந்தபட்டத்தைவிற்கும் நிறுவனத்தைரத்துச் செய்யுமாறும்இலங்கையில் கல்வி – சுகாதாரசேவை உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளை தனியார்மயப்படுத்தும் திட்டத்தை சுருட்டிக்கொள்ளுமாறும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் இப்போது ஏகாதிபத்திய நவதாராளமய திட்டங்களுக்கு எதிரான பரவலானமக்கள் இயக்கமாக ஆகியுள்ளதுஅரசாங்கம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதற்குப் பதிலாகஅதற்காகப் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள்பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்மருத்துவர்கள்,  ஏனையசுகாதார  ஊழியர்கள்தொழிற்சங்கமற்றும் அரசியல்கட்சிகள்  மீதுஅடக்குமுறையை கட்டவிழ்த்து விட தீர்மானித்துள்ளது. 

மவுரிமைஇயக்கம், கேப்புலாபுலவு மக்களில் காணிகளை - வாழ்விடத்தை திருப்பிக்கொடு ! அனைத்து இராணுவதளங்களையும் அகற்று ! என்றகோசங்களை - கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டமொன்றை நாளை 27.06.2017 அன்று கொழும்பு கோட்டை புகையிரத்து நிலையத்துக்கு முன்னால்  நடத்தவிருக்கிறது

அனைவருக்குமான இலவசக் கல்வி, அனைவருக்குமான சம வாய்ப்பு என்ற அடிப்படைக் கல்வி கொள்கைக்கு, பழைய மாணவர் சங்கங்கள் உதவுகின்றதா அல்லது வேட்டு வைக்கின்றதா என்பது குறித்தான சுயவிசாரணை இன்று அவசியமாகின்றது. 

சமுதாயரீதியான சமூகப் பங்களிப்பு என்றால் என்ன? பணத்தைக் கொடுப்பதா சமுதாயப் பணி? பணரீதியான உதவிகள் சமுதாயத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றது? நேர்மையையும், அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் கொண்டிராத சூழலில், உதவிகள் எதைச் சாதிக்கும்? சமுதாய ரீதியான விளைவுகளை பற்றி அக்கறையற்ற சடங்குத்தனமான "பண ரீதியான" சமூக கடமைகள் குறித்தெல்லாம், இன்று சுயவிசாரனை அவசியமாகின்றது. 

சமுதாயரீதியான உதவிக்கு என்ன நடக்கின்றது? அதன் எதிர்கால விளைவு என்ன? 

கல்விக்கான உதவிகள் அனைத்தும், இலங்கையின் கல்விமுறைக்குள் வைத்து ஆராய்ந்தாக வேண்டும். இலங்கையின் கல்வி தொடர்பாக உலக வங்கி என்ன கொள்கையை முன்னெடுக்குமாறு, இலங்கையிடம் கோருகின்றது என்பதைத் தெரிந்தாக வேண்டும். 

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப் பட்டார்.

 

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகன் என்று உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

2006 இல் இராஜாபக்ஷ அரசாங்கத்தின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக, இரகசியமாக அவுஸ்திரேலியாவில் குடியேறி அங்கு வாழ்ந்து வந்த அவர் 2011 இல் மீண்டும் இந்த நாட்டுக்கு வருகை தந்திருந்த வேளை கொட்டாபே இராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் பாதுகாப்பு பிரிவு குழுவொன்றினால் கடத்தப்பட்டு, பின் நாடு கடத்தப்பட்டார்.

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப் பட்டார்.

 

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகன் என்று உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

2006 இல் இராஜாபக்ஷ அரசாங்கத்தின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக, இரகசியமாக அவுஸ்திரேலியாவில் குடியேறி அங்கு வாழ்ந்து வந்த அவர் 2011 இல் மீண்டும் இந்த நாட்டுக்கு வருகை தந்திருந்த வேளை கொட்டாபே இராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் பாதுகாப்பு பிரிவு குழுவொன்றினால் கடத்தப்பட்டு, பின் நாடு கடத்தப்பட்டார்.

 கல்வி  உரிமைகளுக்காக   போராட்டம்  நடத்திய  மாணவர் மீது  காட்டுமிராண்டித்தனமாக  தாக்குதல்  நடத்தியமையை  வன்மையாக  கண்டிக்கிறோம் . - முன்னிலை   சோஷலிஸக்  கட்சி.

பல்கலைக்கழக  மாணவர்  எதிர்ப்புக்கு அரசாங்கம்  போலிஸைக்  கொண்டு  நடாத்திய   காட்டுமிராண்டித்தனமான   தாக்குதலை கண்டித்து இ  முன்னிலை சோஷலிஸக் கட்சி   நேற்று  21ந்  திகதி  ஊடக  அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது.

மானம் கெட்டு அங்கும் இங்குமாக பனங்கொட்டைகளை சூப்பிய "தமிழனின் தமிழ் தேசிய உணர்ச்சி", மீண்டும் விபச்சாரத்துக்கு தயாராகிவிட்டது. யுத்தத்துக்குப் பின்பு "தமிழ்தேசியப்" பிணத்தை தூக்கிச் செல்வதில் முரண்பட்ட பங்காளிகள், மீண்டும் மாலை மரியாதையுடன் "தமிழ் தேசியக்" கோமாளிகளாக மாறி காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

அதிகாரவெறி பிடித்த ஆதிக்கக் கனவுகளுடன் நரிவேசம் போட்டுக் கொண்டு குலைத்த நாய்கள் எல்லாம், வாலை சுருட்டிக் கொண்டு மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.  

"ஊழல் என்றார்கள், சிங்கள ஆளும் வர்க்கத்தின் சதி என்றார்கள், முதலமைச்சரை தேசியத்தின் தலைவர் என்றார்கள், தமிழ் தேசியத்தின் மீட்பாளர்கள் என்றார்கள், நீதி தவறாத நீதவானின் தலைமைத்துவத்தின் மகத்துவம் என்றார்கள், ஊழலை மறைக்க ஊழல் விசாரணை என்றார்கள் .."  இப்படி எத்தனை எத்தனையோ தமிழ்தேசிய வில்லுப்பாட்டுக்கு தாளம் போட்டு, இறுதியில் செத்த பிணத்தை மீண்டும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்பத் தாளத்தையே மாற்றிப் போடுகின்றனர்.

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE