முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் நடந்த ஊழல், இலஞ்சம், அதிகார துஸ்பிரயோகம், மோசடி, கட்டைப்பஞ்சாயத்துடன்.. கூடிய சமூக விரோதக் குற்றங்களை, நீதிமன்ற தீர்ப்பு ஒன்று அம்பலமாக்கி இருக்கின்றது. வெளியாகியுள்ள தீர்ப்பு "தமிழ் தேசிய" ஊடகங்களாலும், நவதாராளவாத சக்திகளாலும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் அண்மையில் தங்களை புனிதர்களாக காட்டி ஊழல் எதிர்ப்பு கூச்சல் போட்ட, "தமிழ் தேசிய" பிழைப்புவாதிகள் கூட்டுக் களவாணிகளாக இருப்பதால், மூடிமறைப்பதில் கூட்டுச் சேர்ந்துள்ளனர். சுண்ணாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ள நீதிமன்றத் தீர்ப்பை, "தமிழ் தேசியம்" மக்கள் முன் இருட்டடிப்பு செய்துள்ளது. இந்த பின்னணியில் "நீரில் எரியும் நிலம் - சுன்னாகம் நீர் மாசு இரகசியங்கள்" என்ற வீடியோ வெளியாகி இருக்கின்றது. இந்தக் காணொளி ஒட்டுமொத்த சதிகாரர்களின் சதிகளை, ஆதாரபூர்வமாக அம்பலமாக்கி இருக்கின்றது.