Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண மகிந்த தலைமையில் முகமாற்ற ஆட்சி வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கூறியிருக்;கின்றார். சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிலுள்ள அதிருப்தியாளர்களும், கூட்டமைப்பில் இடம் கிடைக்காதவர்களும், தமிழ் அரசியல் விமர்சகர்களும் "மாற்றுத் தலைமை" வேண்டும் என்கின்றனர். நவதாராளவாத நாணயத்தின் இருபக்கங்கள் இவை.

முகமாற்ற ஆட்சிமாற்றம் மூலம் அதிகாரத்துக்கு வந்த நவதாராளவாத "நல்லாட்சி" அரசு,  மக்களுக்காக எதையும் முன்வைக்க முடியாது அம்பலமாகி வருகின்றது. "நல்லாட்சி" அரசுடன் கூடிக் குலாவி தேன்நிலவை நடத்திய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் முன் கோவணத்துடன் காட்சியளிக்கின்றனர். நல்லூரில் கோவணத்தை தரிசிக்க திரளும் பக்தர்களால், கூட்டமைப்பின் கோவணத்தை துதிபாட முடியாதளவுக்கு நாறுகின்றது.

மூன்று வருடங்களுக்கு முன்பு அமெரிக்க ஆதரவு "நல்லாட்சி" மூலம் தமிழர்களின் துன்ப துயரங்களுக்கு தீர்வு காணமுடியும் என்று கூறியே, மைத்திரி-ரணிலை முகமாற்ற ஆட்சியை கொண்டு வந்தவர்கள் கூட்டமைப்பு. இதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நவதாராளவாதத்தை இலங்கையில் பலப்படுத்தும் "மாமா" வேலையை கூட்டமைப்புச் செய்தது. கூட்டமைப்பு இனத்தில் பெயரில் இனவாத வாக்குகளை பெற்றதன் மூலம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்தே அரசுடன் உறவாடினர். தங்கள் மூன்றாண்டு கால இந்த தேன்நிலவைத் தொடர முடியாத அளவுக்கு, "மாற்றுத் தலைமை" என்ற பிசாசு தலைவிரி கோலமாக தமிழ்மக்கள் மத்தியில் உலாவுகின்றது.

குடியிருப்புக்குள் மயானங்கள் இருக்கும் பிரச்சனை என்பது சுற்றுச்சூழல் பிரச்சனையல்ல, மாறாக ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட சாதிகளுக்கு இடையிலான பிரச்சனையாகும். மயானங்களுக்கு அருகில் ஒடுக்கும் சாதிகளின் குடியிருப்புகள் இருந்தால், சாதி அடிப்படையிலான தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா எனின் இல்லை. இதிலிருந்து ஒரு உண்மை மிகத்தெளிவாகின்றது. அதாவது ஒடுக்கப்பட்ட சாதிகள் மயானங்கள் அருகில் வாழ்வதை, ஒடுக்கும் சாதிகளின் வாழ்வியல் கண்ணோட்டம் அங்கீகரிக்கின்றது. இங்கு ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒடுக்கும் சாதிய மனநிலை தான், குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானங்கள் தொடர்ந்து தக்க வைக்கப்படுகின்றது. ஒடுக்கும் சாதி மனநிலையில் இருந்து கருத்துகள் முன்வைக்கப்படுவதுடன், அரசியலும் கட்டமைக்கப்படுகின்றது. இந்தப் பின்னணியில் அடக்குமுறைகளைக் கையாள்வதும், அரசு அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதும் நடந்தேறுகின்றது.


குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் மயானங்களை அகற்றக் கோரி, யுத்தம் முடிந்த கையோடு சட்டரீதியான வழக்குகள் நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த வழக்குகள் இன்னமும் நீதிமன்றங்களில் தொடருகின்றது. அதேநேரம் இது போன்ற வழக்கு ஒன்றில் நீதிமன்றம் சாதிய வடிவத்தை பூசி மெழுகி வழங்கிய தீர்ப்பை அடுத்து, மோதல்களும் கைதுகளும் நடைபெற்றது. இதையடுத்து, மக்கள் குடியிருப்புகள் மத்தியில் உள்ள அனைத்து மயானங்களையும் அகற்றக் கோரி, தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வருகின்றது.

 

கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது என்ற கருத்து தமிழ் அரசியல் அரங்கில் பொதுவாக காணப்படுகின்றது. அதேநேரம் "மாற்றுத் தலைமை" வேண்டும் என்ற அறைகூவல்களும், விவாதங்களும் கூட நடக்கின்றது. கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து ஒடுக்குவதற்கான காரணம் என்ன? இந்த அடிப்படைக் கேள்வியில் இருந்து, "மாற்றுத் தலைமை" கோரப்படுகின்றதா எனின் இல்லை. இப்படி இருக்க கூட்டமைப்புக்கு பதில் "மாற்றுத் தலைமையால்" என்ன மாற்றம் நடந்து விடும்?

மாற்று அரசியலை முன்வைக்காமல், "சுற்றிச் சுற்றி சுப்பர் கொல்லைக்குள்" சுற்றுவதற்கே தொடர்ந்து வழிகாட்டப்படுகின்றது என்பதே உண்மை. உண்மையில் தமிழ் சிந்தனைமுறையானது, முழு அரசியலையும் வரலாற்றோடு பகுத்தாய்வதில்லை. 1948 முதல் தமிழ்மக்களின் தோல்விக்கு, இந்த தமிழ் சிந்தனை முறைதான் வழிகாட்டுகின்றது.

கூட்டமைப்பு அரசுடன் ஏன் கூடி நிற்கின்றது என்பதை புரிந்து கொள்வதே, மாற்று அரசியலுக்கான வித்தாகும். போராடுகின்ற மக்களை ஒடுக்குமாறு, அரசுக்கு ஆதரவாக கூட்டமைப்பு முன்வைத்த கருத்துக்கள், வெளிப்படையாகவே இதற்கான காரணங்களை போட்டுடைக்கின்றது. அதேநேரம் போராடும் மக்களை ஒடுக்கக் கோரும் கூட்டமைப்பின் கருத்துக்களுடன், "மாற்றுத் தலைமையை" கோருவர்கள் முரண்படவில்லை என்பதே மற்றொரு உண்மையாகும். அரசுடன் சேர்ந்து நிற்கும் காரணங்கள் தமிழ்ச் சிந்தனைமுறையின் ஓரு கூறாக இருப்பதால், போராடுபவர்களை ஒடுக்குமாறு அரசிடம் கோரிய கூட்டமைப்பின் கருத்துகள் இன்றுவரை யாரும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. இதை விரிவாக ஆராய்வோம்.

யாழ்ப்பாணத்தில் சாதி உறவுகள் மற்றும் மோதல்கள் வெவ்வேறு காலங்களில் வேறுபட்ட வடிவங்களை எடுத்துள்ளன. ஒடுக்கப்பட்;ட சாதியினரின் குடியிருப்புகளுக்கு அருகே உயர் சாதியினரின் மயானங்கள் அமைக்கப்படுவதன் காரணமாக ஏற்பட்ட மோதலின் விளைவாக மே, 13ல் யாழ்ப்பாண பஸ்நிலையத்துக்கு முன்பாக ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. புத்தூரில் உள்ள கலைமதி கிராமம் வரலாற்று ரீதியாகவே யாழ்ப்பாணத்தில் ஒரு கம்யுனிஸ்ட் கோட்டையாக திகழ்ந்து வருகிறது, அவர்களின் கிராமத்தின் மத்தியில் உள்ள ஒரு மயானத்தின் காரணமாக ஒரு தீவிரமான போராட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 23 கிராமவாசிகள் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார்கள் மற்றும் 11 பெண்கள் உட்பட 30 பேர் பிணையில் வெளியே வந்துள்ளார்கள். மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள அனைத்து மயானங்களையும் அகற்றக் கோரி இப்போது கலைமதி கிராமத்தில் ஒரு சத்தியாக்கிரகப் போராட்டம் பல வாரங்களாக நடைபெற்று வருகிறது. வேறு ஒடுக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த  சாதியினரும் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறார்கள், வேறு பலரும் தங்கள் ஒற்றுமையைக் காட்டுவதற்காக இங்கு வருகை தருகிறார்கள். இந்த சமீபத்தைய மோதல் பற்றி, புதிய ஜனநாயக மார்க்சிய லெனிசக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.கே செந்திவேல் தனது கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார், யாழ்ப்பாணத்தில் சாதி விரோத போராட்ட வரலாறு தொடர்பாக  அவர்களது வேலை கலைமதி கிராமத்தில் கடந்த நான்கு தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது.

கேள்வி: புத்தூருடன் உங்களுக்கு ஒரு நீண்ட தொடர்பு உள்ளது மற்றும் குறிப்பாக கலைமதி கிராமம் இன்று போராட்டத்தின் மையமாக உள்ளது. இந்த மோதல் பற்றி விளக்க முடியுமா?

பதில்: 700 குடும்பங்களைச் சேர்ந்த 4,500 பேரைச் சனத்தொகையாகக் கொண்ட கலைமதி கிராம மக்கள், சமூக நீதி வெகுஜன அமைப்பின் ஆதரவுடன் ஒரு சத்தியாக்கிரக போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை மக்கள் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள மயானங்கள் யாவும் அகற்றப்பட வேண்டும் என்பதாகும், புத்தூர் கலைமதி கிராமத்தின் பெரும் பகுதி மக்கள்  இதில் இரவு பகலாக பங்கேற்பதுடன் ஒரு சக்திவாய்ந்த மனச்சாட்சிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.இந்த மக்கள் கூட்டாக ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். அவர்கள் தங்கள் தினக்கூலி வேலைகளைத் தொடர்ந்து செய்து வரும் அதேவேளை வெவ்வேறு ஆட்கள் அந்த நாட்களில் வேலைகளில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு இந்தப் போராட்டத்தை ஒழுங்கு செய்வதில் தங்கள் சக்தியை பங்களிப்புச் செய்து வருகிறார்கள்.

2009 போர் முடிவுக்கு வந்த பின்பு, போரின் முடிவில் அரசபடைகளால் கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை தோழர். குகன் மற்றும் லலித் வன்னியிலும் மற்றும் பிரதேசங்களிலும் திரட்டினார்கள். தெற்கில் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

இவர்களாலேயே ஆரம்பத்தில் வடக்குக்கு வெளியில் அரசியற்கைதிகள் பற்றிய தகவல்கள் தெற்கில் ஊடகங்களுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும்  வழங்கப்பட்டது. 

மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் முன்னிலை சோசலிசக்  கட்சியில் இயங்கிய இருவரும், 2011 ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் நாள், யாழில் அரசபடைகளாலும் - அவர்களுடன் சேர்ந்து இயங்கிய தமிழ் ஆயுதக்குழுவினாலும் கடத்தப்பட்டார்கள்.

வவுனியாவைக் கடந்து வன்னிக்குள்  எவரும் அரசியல் நோக்கில் அல்லது மனித உரிமை சார்ந்த செயற்பாட்டு  நோக்கில் வரத்  தடை செய்யப்பட்டிருந்த மஹிந்த அரசின் ஆட்சியில், இவ்விருவரும் சர்வதேச மனிதவுரிமை நாளான மார்கழி 10 அன்று,  தெற்கிலிருந்து மக்களை வரவழைத்து அரசியற்கைதிகளை விடுவிக்கக்கோரும்  போராட்டமொன்றை யாழில் ஏற்பாடுசெய்திருந்த்னர்.

1.

தேசியம்-தேசியவாதம்  பற்றி எழுதும் போது "இடதுசாரி " தேசியம் என்ற பதத்தை, மார்க்சிசவாதிகள் எனத் தம்மை வரையறுப்போர் பலர் உபயோகிக்கின்றனர். அப்படி ஒன்று உள்ளது. ஆனால் இப்பதம் மார்க்சிசம் சார்ந்து உபயோகப்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில் மார்க்சிஸ தத்துவம் மற்றும் நடைமுறையானது, தேசியவாதத்தை, கடந்து போக வேண்டிய ஒரு சமூக வரலாற்றுப் போக்கின் நிலையாகவே பார்க்கிறது. முதலாளித்துவ பொருளாதாரத்துடன் தொடர்புள்ள தேசியவாதத்தை - முதலாளித்துவப் பொருளாதாரத்தை இல்லாதொழிப்பதுடன்,  அதையும் (தேசியவாதத்தையும்) இல்லாதொழிப்பது  / அல்லது சர்வதேசியமாக வளர்த்தெடுப்பதே   மார்க்சிச நிலைப்பாடு என்பது  மார்க்சிச ஆசிரியர்களினதும் கருத்து. குறிப்பாக லெனின், - லெனின் தனது "தேசியப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள்" என்ற தொகுப்பின் "கலாச்சார அடிப்படையிலான தேசங்களில் தன்னாட்சி " தலையங்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்.

//தேசியவாதம் எவ்வளவுதான் "நியாயமான ", "பரிசுத்தமான ", நயமான, நாகரிக வகைப்பட்டதாக இருப்பினும், அதனுடன் மார்க்சியத்தை இணைக்கமுடையதாக்க முடியாது. எல்லாவகை தேசிய வாதத்துக்கும்  பதிலாக  மார்க்சியம் சர்வதேசியவாதத்தை முன்வைக்கிறது; எல்லா தேசங்களும் உயர்நிலை ஒற்றுமையில் ஒன்றிணைவதை முன்வைக்கின்றது.// - லெனின், தேசியப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள் .  / V.I . Lenin, Critical remarks on  the National Question : “CULTURAL-NATIONAL AUTONOMY” .  

இக்கட்டுரையில் கட்டுரையில் லெனின்  முதலாளித்துவ கட்டமைப்பின் தேசியவாதத்துக்குப் பதிலாக, தேசங்களும், தேசிய இனங்களும், சிறுபான்மை தேசிய இனங்களும் சர்வதேசியத்தை அடிப்படையாக்க கொண்ட     பாட்டாளி வர்க்க ஆட்சிக்கட்டமைபுக்கு உட்பட்ட "உயர்நிலை ஒற்றுமையில் ஒன்றிணைவதை" வலியுறுத்துகிறார். 

பெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள் உருவாகின்றன. அவற்றிற்கு நகர நிர்வாகங்கள் முகம் கொடுக்க தயாரற்ற நிலையில் அந்த நகரங்கள் சிதைந்து விடுகின்றன. பிற்காலத்தில் அப்படியான இடங்களில் இருந்து மக்கள் வெளியேறுவார்கள்.

16 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் மூன்று பெரும் நகரங்களில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்ந்தமை பற்றி அறிந்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. அவை பீக்கிங், கெய்ரோ மற்றையது மெக்சிகோவில் அஸ்ரெக் மக்களது நகரம். பிற்காலத்தில் ஸ்பானியர்களால் அழிக்கப்பட்டு தற்பொழுது அதன்மீது புதிய மெக்சிக்கோ நகரம் உருவாகியுள்ளது.

தற்போதைய ஐரோப்பிய பெரிய நகரங்களான பாரிஸ், இலண்டன் ஆகியன 17 -18 ஆம் நூற்றாண்டில் உருவாகியவை. முடிக்குரிய நிலங்களில் விவசாயம் செய்த மக்கள் அந்த நிலங்களை பிரபுக்களிடமும், முதலாளிகளிடமும் இழந்ததால் தொழிற்புரட்சி நடந்த பெரிய நகரங்களை நோக்கி மக்கள் குவிந்தார்கள். அப்படியான மக்கள் தொகையால் தொடர்ச்சியாக நகரங்கள் வளர்ந்தன. தற்போது இந்தியாவில் இப்படியான நிலையைப் பார்க்க முடிகிறது 18 நூற்றாண்டு இலண்டனின் நிலக்கரியைப் பாவித்ததால் ஏற்பட்ட அழுக்கையும், தூசியையும் சார்ள்ஸ் டிக்கன்ஸனின் நாவல்களில் பார்க்கமுடியும்.

இலங்கையின் இனவாத வரலாற்றில், ஒடுக்கும் இனவாதமானது காலத்துக்கு காலம் இடம் மாறி வந்திருகின்றது. இலங்கை அரசின் ஒடுக்கும் இனவாத கொள்கைக்கு அமைவாக, பிற இனங்களிடையேயான இனவொடுக்குமுறை ஒரே மாதிரி இருக்கவில்லை. இயக்கங்களும் - புலிகளும் ஆயுதப்பலம் பெற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த காலத்தில், முஸ்லிம் மக்கள் மேலான இனவொடுக்குமுறை இருந்தது. புலிகளின் அழிவின் பின் அரசு ஆதரவுடன் அதிகாரத்தில் உள்ள முஸ்லிம்-இஸ்லாமிய இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்கும் இனவாதமாக மாறி இருக்கின்றது.  

   

இனவாத அரசியலின் எதார்த்தம் இது. இப்படி உண்மை இருக்க, ஒடுக்கும் தன்மை கொண்ட இனவாதம் எது என்பது குறித்து, நடைமுறைரீதியான சமூக செயற்பாடுகளின்றியும், தத்துவார்த்த புரிதலுமின்றி இனவாத ஒடுக்குமுறைகளை மூடிமறைப்பதே இன்று அரசியலாகின்றது. "மார்க்சியவாதிகள் - இடதுசாரிகள் - முற்போக்குவாதிகள் - இலக்கியவாதிகள் - சமூக அக்கறையாளர்கள்" என்று தம்மைத் தாம் முன்னிறுத்திக் கொள்கின்றவர்களில் யார் இன்று ஒடுக்கும் முஸ்லிம் இனவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றனர்? இதற்கு எதிராக நடைமுறையில் யார் போராடுகின்றனர்?  

இன்று தமிழ் மக்களை ஒடுக்கும் இனவாதமானது, முஸ்லிம்-இஸ்லாமிய இன-மதவாத அதிகார வர்க்க சக்திகளால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு எதிராக முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து, எந்தக் குரலையும் கேட்க முடிவதில்லை. தமிழ் தரப்பில் இருந்தும், இதற்கு எதிராக எந்தக் குரல்களும் எழுவதில்லை. இனவாதத்தால் பாதிக்கபட்ட மக்களிடம் இருந்து குரல்கள் எழும் போது, அதை "இனவாதமாக" முத்திரை குத்தும் குரல்கள் மட்டும் எழுகின்றது. இதன் மூலம் ஒடுக்கும் இனவாதத்துக்கு மறைமுகமாக உதவுகின்றனர்.       

ஆகஸ்ட் 02 தேசிய எதிர்ப்பு தினத்தை வெற்றிகரமானதாக்குவோம். 

இந்த நிமிடம் வரை சைட்டம் திருட்டு பட்டக் கடையை ரத்து செய்யக்கோரி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவ பீடங்கள் எட்டிலும் உள்ள விரிவுரையாளர்களின் தொழிற்சங்கங்கள், மற்றும் மாணவர்கள், அந்த மாணவர்களின் பெற்றோர்கள், பல்கலைக்கழக பொது மாணவர்கள், அரச மருத்துவ சங்கம், தொழிற்சங்கங்கள், மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிஸக் கட்சி, கூட்டு எதிர்க்கட்சி உட்பட பொது மக்கள் போராடுகிறார்கள்.

வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் ரணில், மைத்ரி கூட்டு அரசாங்கத்திற்கு தேவையாக இருப்பது மருத்துவ பட்டத்தையும் மற்ற அனைத்தையும் போன்று விற்பனை சந்தையில் விற்று தின்பதற்கே.

நோயாளிகளின் உயிர் தொடர்பாகவோ, கல்வியின் தரம் தொடர்பாகவோ இந்த கொடிய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வதில்லை. அதனால் செவிட்டு யானைகள் போன்று தமது நடத்தையினால் வெளிக்காட்டி, சைட்டம் முதலாளியின் தாளத்திற்கு ஆடி , பொது மக்களை அடக்கி ஒழிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது. 

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது. 

கனடா ஸ்காபரோ நகரில் “கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” என்ற கருத்தரங்கு நிகழ்வு 22 யூலை மாலை 4.30 மணிக்கு பார்மஸி அவனியு வில் நடந்தேறியது. சமவுரிமை இயக்கம் கனடா கிளையினால் இக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அங்கு முன்னிலை சோசலிசக் கட்சியின் தோழர் சேனாதீரவின் உரையின் காணொளியினை இங்கு பார்க்கலாம்.

பல்வேறு அவலங்களுக்கு மத்தியில் ஏங்கித் தவிக்கும் மக்களே, வேதனையிலும் விரக்தியிலும் மூழ்கியுள்ள மக்களே, ஒன்றுமே நடக்கவில்லை என்பதை போன்று அடுத்தநாள் எல்லாவற்றையும் மறந்துவிடும் மக்களே! இது எமது கண்ணில் படாத அல்லது நாங்களாகவே மறந்துவிட்ட எமது தோழர்களினதும் தோழிகளினதும் பரிதாப நிலையாகும்.

மஸ்கெலியாவைச் சேர்ந்த வசந்தகுமாரின் மனைவி பீ.கே. தர்ஷனீ தோட்டத் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை பராமரிக்கப் போதாமையால் வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக சவூதிக்கு செல்ல தீர்மானித்தார். நாளொன்றிற்கு 600 ரூபா சம்பளத்திற்கு கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களின் வாழ்வில் சொத்து சுகம் என்ற வார்த்தை எட்டிக் கூட பார்ப்பதில்லையல்லவா. இந்த நிலைதான் தர்ஷனிக்கும். ஒரு பிள்ளையின் தாயான தர்ஷனீ அடிமைத் தொழிலுக்குச் சென்று சீல் வைக்கப்பட்ட பெட்டியில் வெறும் எலும்புக் கூடாக இந்நாட்டிற்கு வர நேருமென்று குடும்பத்தவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதுதான் நடந்தது. தான் கர்ப்பமுற்றிருந்த சமயத்தி;ல் கணவன் பட்ட கடனை திருப்பிச் செலுத்த முடியாமையாலும், தோட்டத் தொழிலாளியான அவரது கணவருக்கு கிடைக்கும் சொச்ச சம்பளத்தைக் கொண்டு குடும்ப செலவீனங்களை பூர்த்திசெய்ய முடியாமையினாலும் குடும்பத்தை சுமப்பதற்கு ஓரளவாவது ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவர் பணிப்பெண்ணாக சவூதிக்குச் சென்றார்.

சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், பொருளாதார ஒத்துழைப்பின் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வழிவகைகளை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது.

உலகின் சுறுசுறுப்பாக இயங்கி வரும் கப்பல் வழிகளில் ஒன்றான சிறிலங்காவின் இந்திய மாக்கடல் கேந்திர முக்கியத்துவம் கொண்டுள்ளதாக அமைந்துள்ள நிலையில் இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகமயமாதல் முன்வைக்கும் நவதாராளவாதத்தையே, பேரினவாத அரசு முன்னெடுக்கின்றது. நவதாராளமயம் மூலம் மக்கள் சுரண்டப்படுவதை மூடிமறைக்கவே, மக்களிடையே இன-மத-சாதி.. போன்ற சமூக வேற்றுமைகளைத் தூண்டிவிடுவதன் மூலம், அரச ஒடுக்குமுறைகளை ஏவுகின்றது. இன-மத-சாதி மோதலை தூண்டி விட்டவர்கள், அரசின் பொருளாதார அடிப்படையில் தமக்குள் முரண்படாது ஒன்றுபடுகின்றனர்.

நவதாராளவாத சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில், இனம்–மதம்–சாதியை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் கட்சிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த அரசியல் பின்னணியில் இன-மத-சாதி ரீதியாக சிந்திக்கின்ற அறிவியலாக மனித சிந்தனையைக் குறுக்கி, அதை வாழ்க்கை முறையாக்கி விடுகின்றனர். இந்த இன-மத-சாதிவாதக் கட்சி அரசியல், அறிவியல், வாழ்க்கைமுறை, சிந்தனை.. என்று அனைத்தும், எந்த விதிவிலக்குமின்றி, நவதாராளவாத முதலாளித்துவ முறைமையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.

நாட்டின் அரசியல் கருத்தாடலானது பெரும்பாலும் இரு முக்கிய போராட்டங்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கின்றது. ஒன்று, டெலிகொம் நிறுவனத்தில் மனிதவலு (Man Power) ஊழியர்களின் பணி உரிமைகளுக்காக நடக்கும் தொழிலாளர் போராட்டம். இரண்டாவது, கல்வியை வியாபாரப் பண்டமாக ஆக்குவதற்கு எதிராகவும், சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவும் நடக்கும் மாணவர் போராட்டம். கட்சி என்ற வகையில் நாம் அவ்விரண்டு போராட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதோடு அது விடயத்தில் செயல்ரீதியில் தலையீடு செய்கின்றோம்.

 

கனடா ஸ்காபரோ நகரில் “கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” என்ற கருத்தரங்கு நிகழ்வு நேற்று 22 யூலை மாலை 4.30 மணிக்கு பார்மஸி அவனியு வில் நடந்தேறியது. சமவுரிமை இயக்கம் கனடா கிளையினால் இக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கருத்தரங்கு நிகழ்வு அழைப்பினை ஏற்று வருகை தந்தோரில் ஒரு பகுதியினரையும் அங்கு முன்னிலை சோசலிசக் கட்சியின் தோழர் சேனாதீர உரையாற்றுவதையும் இங்கு புகைப்படங்களில் நீங்கு காண்கிறீர்கள்.

தோழர் சேனாதீரவின் பேச்சின் ஒரு சிறு பகுதி காணொளியாக இங்குள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE