Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மயானங்கள் என்பது, பிணங்களை எரிக்கும் இடமென்றால், மயானப் பிரச்சனை வெறுமனே சுற்றுச்சூழல் பிரச்சனையாக இருக்கும். யாழ்ப்பாணத்து மயானங்களின் பாரம்பரியம் குறித்து பேசுவதும், நிலவுடமை குறித்து மூன்றாம் தரப்பு அக்கறைப்படுவதும், மயானப்புனரமைப்பு பெயரில் சங்கங்கள் அமைப்பதும்.. வெள்ளாளியச் சிந்தனையிலான சாதிய மயான அமைப்பு முறையை எடுத்துக் காட்டுகின்றது.

வெள்ளாளிய சிந்தனையிலான, வாழ்வியல் முறையிலான சாதிய மயானங்களை அகற்றக் கோரிய போராட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் புத்தூர் கலைமதிக் கிராமத்திற்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வரவழைத்தது. அங்கு அவர் ஒடுக்கும் சாதியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிரான மக்கள் விரோத கருத்துக்களை முன்வைத்திருந்தார். வாக்களித்த மக்களை  பிரதிநிதித்துவப்படுத்தாது, வெள்ளாளிய சிந்தனையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், ஒடுக்கும் சாதியப் பிரதிநிதியாகவும் நடந்து கொண்டார். தனது சாதிய நடத்தைகளைக் கொண்டு தன்னை வேறுபடுத்தியதுடன், சாதியக் கண்ணோட்டத்திலான 'தமிழ் தேசிய' உரையை ஆற்றியிருந்தார். அவரின் சாதியக் கண்ணோட்டமானது

சாதி குறித்த விவாதங்கள், போராட்டங்கள் மேலெழுந்துள்ள நிலையில், கடந்தகால போராட்டங்கள் குறித்து தவறாக வியாக்கியானப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக விடுதலைப் புலிகள், மற்றும் ஜே.வி.பியின் சாதிய அணுகுமுறைகள் குறித்து தவறான கருத்துக்கள், இடதுசாரியத்தின் பெயரில் முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. அதேநேரம் ஆயுதப் போராட்டம் குறித்தும், இடதுசாரியம் குறித்தும், சாதியம் குறித்தும், போராட்டங்களை அழித்த அரசின் நோக்கம் குறித்தும் தவறான அரசியல் தர்க்கம், சமூக விஞ்ஞான கண்ணோட்டத்துக்கு முரணாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.     

நடந்த ஆயுதப் போராட்டமானது, தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததாலா நடந்தது?

விடுதலைப் புலிகளும், ஜே.வி.பியும் "நடைமுறையில் உள்ள தேர்தல் அரசியலில் தமக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது என்று தெரிந்து ஆயுதப் போராட்ட வழியை பின்பற்றினார்கள்." என்று முன்வைக்கப்படும் கருத்து, நடந்த ஆயுதப் போராட்டம் குறித்து தவறான அரசியல் கண்ணோட்டமாகும். தேர்தல் அரசியலில் வாய்ப்பு கிடைக்காததாலேயே, ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று கூறுவதன் மூலம் இனவொடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறையை மறுதலிக்கின்ற அரசியல் உள்ளடக்கத்தை இது கொண்டு இருக்கின்றது. அதேநேரம் இந்த முரண்பாடுகளை தேர்தல் அரசியல் மூலம் தீர்வு காணமுடியும் என்ற கருத்தையும், ஆயுதப் போராட்டம் என்பது தவறானது என்ற பார்வையையும் முன்வைக்கின்றது. 

மக்களை இனரீதியாக பிரித்தாளும் ஆளும் வர்க்க அரசியல் இனவொடுக்குமுறை செய்த பொதுப் பின்னணியிலும், தெற்கில் இனரீதியான வன்முறைகளை அரசு முன்னின்று நடத்திய வரலாற்று வளர்ச்சியிலேயே, இனரீதியான ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் ஒடுக்கப்பட்ட சூழலிலும், பாராளுமன்றம் மூலமான தீர்வுகள் தோற்கடிக்கப்பட்ட பின்னணியிலும், "தமிமீழத்துக்கான" ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. புலிகள் மட்டுமல்ல 32 இயக்கங்கள் தோன்றியதுடன், "இடதுசாரிய" இயக்கங்களும் உருவானது. இங்கு "தேர்தல் மூலம் வாய்ப்பு கிடைக்காததால்" இவை தோன்றியது என்று கூறுவது, எவ்வளவு முட்டாள்தனமான அரசியல் அபத்தமாகும்.

இங்கு விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில், கூட்டணியின் ஆயுதப்படையாகவே தோற்றம் பெற்றது. 1970 க்கு பிந்தைய 1980 வரையான காலகட்ட ஆயுத வன்முறைகளின் பின்னணியில், தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணியின் வழிகாட்டல் இருந்ததுடன், அவர்கள் யாரைக் கொல்ல விரும்பினார்களோ அவர்களை திட்டமிட்டே புலிகள் கொன்றனர். இது தான் வரலாறு. அமிர்தலிங்கம் -  பிரபாகரன் அடிக்கடி சந்தித்து வந்ததும், உலகறிந்த உண்மை. ஆயுதப் போராட்டம் என்பது, தமிழனை அடக்கியாளும் சொந்த ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் கூட்டணியின் அரசியலின் ஒரு அங்கமாகத் தோன்றியது. இங்கு அரசியல் ரீதியாக அமிர்தலிங்கம் -  பிரபாகரன் இடையில், எந்த வித்தியாசமும் கிடையாது.

    

ஜே.வி.பியின் ஆயுதப் போராட்டம் என்பது, வரலாற்று ரீதியான இடதுசாரிய அரசியல் வழிமுறையில் இருந்து தோன்றியது. ஆயுதப் போராட்டம் குறித்து சீனப் புரட்சி மற்றும் காலனிய நாடுகளின் ஆயுதப் போராட்ட அனுபவங்களில் இருந்து தோற்றம் பெற்றது. இக் காலத்தில் உலகில் பல நாடுகளில் ஆயுதப் போராட்டங்கள் நடந்து வந்தது. ஜே.வி.பி பாராளுமன்றம் மூலம் வெற்றி பெற முடியாது என்பதால், ஆயுதப் போராட்டத்தை நடத்தியது என்பது வர்க்கப் போராட்டம் குறித்த தவறான புரிதலும், கண்ணோட்டமுமாகும்.

18.09.2017 திங்கட்கிழமை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மயானத்தை அகற்றக்கோரிய வழக்கு மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது மயானத்தை அகற்றக்கோரி வழக்கு பதிவு செய்த வழக்கறிஞர் முன்வைத்த நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 04.06.2017 அன்று மல்லாகம் நீதிமன்றத்தால் 10 அடி உயரத்திற்கு சுற்று மதில் அமைத்து அதன் பின்னர் ஒரு வருடகாலத்திற்குள் GAS CHAMPER உடல்களை எரிப்பதற்கு நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஒரு வருடத்திற்குள் GAS CHAMPER பொருத்தப்படாவிட்டால் இவ் மயானத்தில் பிணம் எரிப்பது தடுத்து நிறுத்தப்படும். முக்கியமாக அப்பகுதியில் உள்ள மக்கள் அதை அனுமதித்தால் மட்டும் தான் மயானத்தை புனரமைக்க முடியும் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், புத்தூர் கலைமதி மக்கள் யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு 17.09.2017 இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது கலைமதி மக்கள் தொடர்ச்சியான எதிர்ப்பை சத்தியாக்கிரக போராட்டமூடாக வலியுறுத்தி வருகின்றமையை சுட்டிக்காட்டிய நீதிபதி மக்களின் எதிர்ப்பையும் மீறி புனரமைப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயான விவகாரத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரையும் யாழ்.மேல் நீதிமன்றுக்கு வருமாறு நீதிபதி இளஞ்செழியன் அச்சுவேலிப் பொலிஸார், கிராம சேவகர் ஊடாக தெரிவித்திருந்தார்.

யாழ். ரயில் நிலையம் மற்றும் பேரூந்து நிலையம்:

காலை 6.55 . 15.10.2017 

எங்கும் சிங்கள மொழிக் குரல்கள். சிங்கள மொழிபேசும் சகோதர சகோதரிகள் நாகரீக உடைகளின் தமது லேப்டாப் பைகளை அழகாகத் தம்  தோழ்களில் தொங்க விட்டபடி ஓட்டோ ரிக்ஸாகளில் ஏறி நகரின் பிரபல நட்சத்திர விடுதிகளுக் சொல்லுமாறு பணிகின்றனர். இவர்கள் அனைவரும் தெற்கின் புத்தி சீவிகளும் கலைஞ்யார்களுமாம். இவர்கள் திரைப்படம், கவிதை, அரசியல், சமூகவியல் , மனித உரிமைகள் போன்ற அனைத்து  வியங்களிலும் வித்தகர்களாம். அதைவிட அவர்களிற் பலர் இலங்கையின் பிரபலமான பத்திரிகை நிருபர்களும், பத்தி எழுத்தாளர்களுமாம் .  யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவுக்காக சில நாட்கள் யாழில் உள்ள நட்சத்திர விடுதிகளில் முகாமிடவுள்ளனராம். 

யாழ்.பஸ் நிலையம் :

காலை 8.00. 

மூன்று சிறுவாகனங்கள் யாழ். பஸ் நிலையத்தை சுற்றி  வருகின்றன. தாம் தேடியது காணக்கிடைக்காதவர்களாக, ஆட்டோ ஓட்டுநர்களிடம் புத்தூர் மயானதுக்கு எதிரான  போராட்டம் எங்கு நடக்கிறதென விசாரிக்கின்றனர். விசாரணையில் எந்தவொரு சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.   அவசர அவசரமாக யாழில். உள்ள தமக்கு தெரிந்தவர்களுடன் தொலைபேசி ஊடே தொடர்பு கொள்கின்றனர். இவர்களும் தெற்கில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், இவர்கள் பல்லினத்தவர்கள். இடதுசாரிக் காட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள். பூத்தூரில் உள்ள கலைமதி கிராமமக்கள் அவர்களில் ஊரின் நடுவில் இருக்கும் மயானத்தை அகற்ற போராடுகின்றனர். தமிழ் தலைமைகள், சமுக தலைவர்கள், மாகாண சபை அதிகார வர்க்கங்கள்   மக்களின்  கோரிக்கைகளை கண்டு கொள்ளாததனால், போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்றை யாழ் . மாவட்ட செயலகம் மற்றும் வடமாகாண சபைக்கு முன்பாக நாடாத்த வந்துள்ளனர்.

குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி இன்றுயாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும், வடமாகாணசபைக்கு முன்பாக(15.10.2017)போராட்டம். 

අද (15.10.2017) උතුරු පළාත් සභාව ඉදිරිපිට උද්ඝෝෂණය. නේවාසික ප්රදේශයේ ආදාහනාගාරය එරෙහිව විරෝධය. පුතූර් බටහිර ;යාපනය.අද පෙරටුගාමී සමාජවාදී පක්ෂයේ මහ ලේකම් සේනාධීර ගුණතිලක මහතා ආදාහනාගාරයට එරෙහිව සටන් කරන ජනතාව වෙත ගොස් තිබේ. සම අයිතිය ව්යාපාරය සහෝදරවරුන්ට ද ආදාහනාගාරය එරෙහි සටන සඳහා සහය දක්වයි. 

Today (15.10.2017),Protest in front of the Northern Provincial Council and Jaffna Disrict secretariet at Jaffna, against open wood-based crematorium in residential areas in Puthoor West, Jaffna . Frontline Socialist Party(FLSP) general secretary Seenadera Gunathilaka and Movement for equel rights(MER) leaders visited the people who are fighting against the crematorium. and more than 6 leftish party leders from hole Sri Lanka also gave their support to the people's struggle against the crematorium.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும், வடமாகாணசபைக்கு முன்பாகவும் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி புத்தூர் கலைமதி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய கவனயீர்ப்பு போராட்டம். 

ஏற்பாடு :- சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு 

 

கலந்துக்கொண்ட கட்சிகள் அமைப்புகள் வருமாறு :

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி , முன்னிலை சோசலிசக்கட்சி , சமவுரிமை இயக்கம் -இலங்கை, சோசலிசக்கட்சி, ஜக்கிய சோசலிசக்கட்சி ,  சுயாதின இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு,  கலைமதி சன சமூக நிலையம், பெண் விடுதலை சிந்தனை அமைப்பு,  புதிய ஜனநாயக இளைஞர் முன்ணனி, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம் ஆகியவையாகும்.

காணொளிகளுக்கு உள்ளே செல்க

மருத்துவக் கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுக்காக இந்தியா முழுவதும் பொதுத் தரப்படுத்தல் பரீட்சையை (NEET) இந்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. திறமை இருந்தும் ஆயிரக் கணக்கில் செலவு செய்து இப் பரீட்சைக்காகப் பிரத்தியேக வகுப்புக்களில் படிக்க முடியாத ஏழை மாணவர்கள் சித்தியடைய முடியாதுள்ளது. தமிழ்நாடு அரியலூர் மாணவி அனிதா 12 ஆம் வகுப்பு (Plus 2) தேர்வில் 1200 க்கு 1176 புள்ளிகள் பெற்றும் இந் நீட் நுளைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார். எமது நாட்டில் உழைக்கும் மக்களின் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆவதைச் சைட்டம் இல்லாமல் செய்திருப்பதைப் போல, இந்திய அரசின் நீட் தேர்வு அறிமுகத்தால் இந்திய ஏழை, கிராமப்புற, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவிற்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

1977 வரை இலங்கையில் அரசியலில், அரச நிர்வாகத்தில் ஊழல்கள் நடைபெற்றன. ஆனால் பெரும்பாலும் அவற்றை விசாரித்துத் தண்டிக்கும் வல்லமையுள்ள ஒரு நீதி நிர்வாகம் செயற்பட்டுக் கொண்டிருந்தது. 1977ல் புதிய தாராளவாதப் பொருளாதாரத் திட்டங்கள் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஊழல்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. அவற்றை பரவலாக்கப்படுத்துவதற்காக நீதித்துறையை அரசியல் கைப்பற்றிக் கொண்டது. அன்று முதல் நீதித்துறை தனது சுயாதீனத்தை இழந்தது.  “நீதி”  நிதிக்கும்,  அநீதிக்கும், அராஜகத்திற்கும் சேவகம் செய்யத் தொடங்கியது.

இன்று நாட்டில் ஊழல் ‘நீக்கமற எங்கும் நிறைந்து’ காணப்படுகிறது. கிராம மட்டத்திலிருந்து தலைநகர் வரை ஊழல் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரச நிர்வாக நடைமுறைகளையும் சுற்றி ஒரு நிழல் நிர்வாகம் இயங்குகிறது. இந்த நிழல் நிர்வாகம் ஊழல்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடிமகன் இந்த நிழல் நிர்வாகத்தை பணம்(லஞ்சம்) கொடுத்துத் திருப்திப்படுத்தாமல் அதனைக் கடந்து சென்று பொது மக்களுக்கான அரச நிர்வாகத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம். ஆனால் இதற்கு எதிராக ஒரு சாதாரண குடிமகன் ஒருவனால் எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத கையறு சூழ்நிலையும் சுற்றாடலுமே இன்று இலங்கையில் காணப்படுகிறது.

இலங்கையில் இன்று காணப்படும் “பிரச்சனைகளை” பட்டியல் போட ஆரம்பித்தால் அது ஒரு புத்தகமாகிவிடும். பிரதேச சபை தொடக்கம் அரசாங்கம் வரை குடிமக்கள் பல வகைப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். 

நிர்வாக அதிகார துர்ப்பிரயோகம்-ஊழல்-நிதி மோசடி-இராணுவ பொலிஸ் அத்துமீறல்-சட்ட மீறல்-நீதி விலகல்-காணி-காணாமற் போனோர்-கடத்தப்பட்டோர்-கைதிகள்-அகதிகள்-பெண்கள்-குழந்தைகள்-ஒப்பந்தங்கள்-விசாரணைகள்-வழக்குகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என எழுதிக் கொண்டே போகலாம். இவை மத்தியில் குடிமக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி-சுகாதாரம்-வாழ்க்கைச் செலவு பாரிய பிரச்சனைகளாகும். இவைகளுக்கும் மேலாக எம்மை ஆளும் அரசாங்கத்திற்குள்ளே பிரச்சனைகள். அரசாங்கத்தின் திட்டங்களிலும் பிரச்சனைகள். இவை யாவற்றையும் ஊடறுத்தபடி நிற்கிறது இலங்கையின் “இனப்பிரச்சனை”.

இந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வு நாட்டின் குடிமக்களின் புரிந்துணர்வு-நட்பு-தோழமை-கூட்டுறவு-கூட்டுழைப்பு என்பவற்றிலேயே தங்கியுள்ளது. அதற்கான முயற்சிகள்-முன்னெடுப்புக்கள்-போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. இதனால் மக்கள் அடக்குமுறைக்குள்ளாகி அடிபடுகிறார்கள். சிறைப்படுகிறார்கள். சட்ட விரோதமாக கைது செய்யப்படுகிறார்கள். அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். கடத்தப்படுவதற்கான முயற்சிகளும் இடம் பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணத்து தமிழனின் மரபு, சாதிய மரபேயாகும். தமிழனின் பண்பாடு, சாதியப் பண்பாடாகும். தமிழன் கோரிய தமிழீழத்தின் ஆட்சியதிகாரம் என்பது சாதியம் தான். தமிழ்த்தேசியம்,  தமிழன் என்ற அடையாள அரசியல் அனைத்தும் சாதியத்தைக் கோருகின்றது. “இனப் பிரச்சனைக்கு தீர்வு”, “உள்ளக-வெளியக சுயநிர்ணய உரிமை", “சமஸ்டி" தொடங்கி தமிழீழம் வரை எதைக் கோரிய போதும், அது யாழ் வெள்ளாளிய சாதிய சமூகத்தின் ஆதிக்க இருப்பை முன்வைக்கின்றது. தமிழனை தமிழன் அடக்கியாளும், சாதிய  அதிகாரத்தையே கோரினர், கோருகின்றனர். 

சாதிய மரபுவழி வந்த சாதிய மயானத்தையே அகற்ற மறுக்கும் சாதிய அதிகாரத்தைக் கொண்டு, யாழ் அதிகார வர்க்கம் திமிர்த்தனமாக பதிலளிக்கின்றது. இதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம், தமிழனின் சாதிய மரபுரிமையைப் பாதுகாப்பது பற்றிப் பேசுகின்றனர். மரணித்தவர்களை எரித்த இடத்தின், சாதியப் புனிதம் குறித்துப் பேசுகின்றனர். காணிகள் மீதான சட்ட உரிமை பற்றிப் பேசுகின்றனர். தனிநபர்களின் நடத்தையே இந்த மயானப் பிரச்சனைக்கு காரணமென்று, காரணங்களைக் கற்பிக்க முனைகின்றனர்.       

சாதியை பிறப்பில் தீர்மானிக்கின்ற கேடுகெட்ட இழிவான காட்டுமிராண்டித்தனமான சமூக அமைப்பே தமிழனின் மரபும், பண்பாடுமாகும். கோயில்கள் தொடக்கம் சடங்குகள் வரை, சாதி அடிப்படையில் பிறந்தவர்களைக் கொண்டு முன்னெடுக்கும், சாதிய ஒடுக்கும் பண்பாட்டைக் கொண்டு இயங்குகின்றது. இந்த சாதியத்தை தங்கள் மரபுகளாக கொண்டவர்களே, மயானத்தை தக்கவைக்க முனைகின்றனர். விதவிதமாக காரணங்களை முன்வைக்கின்றனர்.

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர். 

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

ஒடுக்கும் பார்ப்பனிய சாதிய தனிவுடமைச் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து வளர்ந்த ஏழைக் குழந்தையின் நீண்ட கனவுகள் சிதைக்கப்பட்ட போது, அனிதா கொல்லப்படுகின்றார். அதாவது தற்கொலை செய்யுமாறு தூண்டப்படுகின்றார். 

பார்ப்பனிய சாதிய மனுதர்மங்கள் காலாகாலமாக ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு கல்வியை மறுத்து வரும் பின்னணியில், அனைவருக்குமான இலவசக் கல்வி என்ற அரசின் கல்விக் கொள்கை ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு கல்வி கற்கும் ஒரு சூழலை உருவாக்கியது. இப்படி கல்வி கற்கத் தொடங்கிய முதல் தலைமுறையின் கற்கும் உரிமையை, தனியார்மயம் மூலம் மீள மறுக்கத் தொடங்கி இருக்கின்றது அரசு. இதன் பலிக்கடா தான் அனிதா.

இந்தியாவில் மாட்டு இறைச்சிக்கு கொண்டு வந்திருக்கும் சட்டரீதியான தடையைப் போன்று, அண்மைக் காலமாக இலங்கையில் முன்மொழியப்பட்டு வருகின்றது. முகமாற்ற நல்லாட்சியின் ஜனாதிபதியாக மைத்திரி தெரிவான காலத்தில், மாட்டு இறைச்சியை தடை செய்வது பற்றிய கருத்துக்களை முன்வைத்திருந்தார். 

தொடர்ந்து பலராலும் மாட்டு இறைச்சி தடை கோரப்படுவது தொடருகின்றது. அண்மையில் இலங்கையில் உருவான சிவசேனா தொடங்கி வடமாகாண முதல் அமைச்சர் விக்கினேஸ்வரன் வரை, மாட்டு இறைச்சிக்கு எதிரான தொடர் பிரச்சாரத்தில் மாட்டு இறைச்சி உண்பது தீட்டாகவும், தீண்டாமையாகவும் கருதுமளவுக்கு, யாழ் இந்து வெள்ளாளிய சாதியம் மேலோங்கி இருக்கின்றது. இதே போன்று பௌத்த அடிப்படைவாதிகளும், மாட்டு இறைச்சிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

மதரீதியான புனிதம் - சாதியத் தீண்டாமையும் தீட்டும் - மிருகவதை என்று பல்வேறு முகமூடியை போட்டுக் கொண்ட போதும், மாட்டு இறைச்சி உண்ணத் தடைக்கான உண்மையான காரணம், நவதாராளவாத பொருளாதாரத் திட்டமாகும். 

மாலம்பே  சைட்டம்     நிறுவனத்தை தடை  செய்யுமாறு  அரசாங்கத்தை  வற்புறுத்தி  சைட்டம்  மாணவர்  மக்கள்  இயக்கத்தினால்  ஒழுங்கு  செய்திருக்கும்  தொடர்ச்சியான  உண்ணாவிரதம்  கொழும்பு  கோட்டை  புகையிரத  நிலையம்  முன்னாள்  இன்று (21)  ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்  உண்ணாவிரதத்தை  ஆரம்பிப்பதற்கு  முன் அவ் வியக்கம்    பாரிய  ஆர்ப்பாட்டத்தை  அவிவிடத்தில்  மேற்கொண்டது.

இப்போராட்டத்தின் கோரிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்!-கேமமாலினி அபேரத்ன

(අද දින යාපනය දිස්ත්‍රික්කයේ පුත්තූර් හි පවුල් 750 කට අදික ප්‍රමාණයක් පීඩාවට පත් කරමින් මතු වී ඇති සොහොන් බිමක ප්‍රශ්නය පදනම් කරගනිමින් එහි ජනතාව විසින් ආරම්බ කර තිබෙන උපවාස ක්‍රියාමාර්ගයට සහය පල කරන නිදහස උදෙසා කාන්තා ව්‍යාපාරය ....)

பெண்கள் விடுதலை இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் கேமமாலினி அபேரத்ன, புத்தூரில் சுடலைக்கு எதிராகப்போராடும் மக்களைச் சந்தித்து அவர்களின் போராட்டத்துக்கு இயக்கத்தின் சார்பில் ஆதரவை தெரிவித்தார். கேமமாலினி போராட்ட பந்தலில் கருத்து தெரிவிக்கையில் : 

சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் மாநாட்டில் சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் எதிர்கால இலக்கு தொடர்பான 5 தீர்மானங்களை வெளியிட்டு , வந்திருந்த இயக்கங்களின் பிரதிநிதிகள், மாணவர்களின் மற்றும் மக்களின் வாக்கெடுப்பு மூலம் அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாணவர் மக்கள் மாநாடு இன்று (15.08.2017) பிற்பகல் நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. 

 

ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த எந்த வெள்ளாளனாவது, மயானத்தின் அருகில் குடியிருக்கின்றானா எனின் இல்லை. மயானத்தை குடியிருப்புக்கு மத்தியில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுபவன் யார் என்றால், ஒடுக்கும் வெள்ளாளச் சிந்தனைமுறையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்களே.

பகுத்தறிவுபூர்வமாக அணுகினால், எவராவது மயானத்துக்கு அருகில் குடியிருக்க விரும்புவார்களா எனின் இல்லை. அப்படியிருக்க சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மயானத்துக்கு அருகிலேயே குடியிருக்க விரும்புவதாக கூறுபவர்கள், சாதி வெறிபிடித்த கிறுக்கர்களாக மட்டும்தான் இருக்க முடியும். அப்படி அவர்கள் குடியிருக்க விரும்புவதாக கூறி, தங்கள் சாதி அதிகாரம் மூலம் அதை தடை செய்வது என்பது, சாதி வெறிபிடித்த வெள்ளாளியச் சாதியச் சிந்தனையால் மட்டுமே முடியும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE