Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

போராடினால் உலகையே புரட்ட முடியும். இதுதான் மக்கள் சக்தியின் வலிமை. நவதாராளவாத தனியார்மயம் பெத்துப் போட்ட சைட்டத்தை, மாணவர்களும் - மக்களும் ஒன்றுகூடி தூக்கில் போட்டு இருக்கின்றனர்.

நவம்பர் புரட்சியின் 100வது வருடம் கொண்டாடப்படும் நாட்களிலே, அதை மாணவர்களும் - மக்களும் நடைமுறையில் சாதித்துக் காட்டி இருக்கின்றனர். ஆம் 1917 நவம்பர் புரட்சி அனுபவங்களை, மீளவும் செயல் வடிவமாக்கி இருக்கின்றனர். கடந்த 8 வருடங்களாக, வீரமிக்க, எழுச்சிகரமான, விட்டுக்கொடுப்பற்ற தொடர் போராட்டங்களை நடத்தி, இன்று வென்று இருக்கின்றனர்.

மர்மக் கொலை, கொலை மிரட்டல்கள், வன்முறைகள், ஊடக அவதூறுகள்.. என்று எதற்கும் அஞ்சாது, 100 வருடங்களுக்கு முன் போல்சவிக்குகள் போராடியது போல் வரலாற்றை மீள எழுதிக் காட்டி இருக்கின்றனர். காலில் இருந்த செருப்புகளை கூட விட்டுவிடாத அளவுக்கு, அரச பயங்கரவாத வன்முறை தொடர்ந்து தலைவிரித்தாடிய சூழலில், இந்தப் போராட்டம் ரணகளமாகியுள்ளது. போராடியவர்கள் ஏழை எளிய பெற்றோர்களின் குழந்தைகளே. அரைப் பட்டினியாக வகுப்பறைக் கல்வியைத் துறந்து, சமூகமாகக் கூடி வாழ்வதற்கான வாழ்வியல் கல்வியை போராட்டக்களங்களில் சுயமாகக் கற்றுக் கொண்டார்கள். எதிர்கால தலைமுறைக்கு சமூகமாகக் கூடி வாழ்வது எப்படி என்ற புரட்சிகர நடைமுறையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், சமூகத்தின் வழிகாட்டியாக - முன்னோடிகளாக தங்களை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

எட்டு வருடங்களாக  நடைபெற்ற சைடம் - தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராகவும், கல்வி தனியார்மயப்படுத்தலுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டம் நேற்று (08.11.2017) இல் வெற்றியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
 
இப்போராட்டத்தில், பங்குகொண்ட பல அமைப்புகளில் ஒரு தோழமை அமைப்பு என்ற வகையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியானது  இப்போராட்டத்தின் வெற்றி சார்ந்து மகிழ்ச்சி கொள்கிறது.
 
அதேவேளை, இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இடதுசாரிய  மாணவர் அமைப்புகள், நேரடி ஆதரவு கொடுத்த எமது சகோதர அமைப்பான  முன்னிலை  சோசலிசக்  கட்சி, மற்றும்  இடதுசாரிய அமைப்புகளுக்கு  வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
 
எம்மைப் பொறுத்தளவில் இவ் வெற்றியானது இன, மத, பிரதேச , மற்றும் மொழி சார்ந்த பிரிவினைகள் கடந்து,   இலங்கையில் வாழும் அனைத்து  மக்களின் வெற்றியாகும். இவ்வருடத்தில் இது மக்கள்-இடதுசாரிய இயக்கங்கள் வென்றெடுத்த  போராட்டத்தின் இரண்டாவது வெற்றியாகும்.  முதலாவது, சில மாதங்களுக்கு முன் புத்தூரில் மக்களும் புதிய ஜனநாயக மா- லெ கட்சியும் வென்றெடுத்த நில  உரிமைக்கான- சுகாதார வாழ்வுரிமைக்கான போராட்டம். இன்று வெற்றி கண்டுள்ளது இலவசக் கல்விக்கான போராட்டத்தின் ஒரு பகுதி !!!! போராடுவதன் மூலம் மட்டுமே நாம் உரிமைகளை பெறமுடியும்-அவற்றைப்  பாதுகாக்க முடியுமென்பதனை, மறுபடியும் இலங்கையின் இடதுசாரிய இயக்கம் - சோசலிச அமைப்புகள் நிரூபித்துள்ளளன.  

நாட்டை நவதாராளவாதம் விழுங்கி வருகின்றது. அடிப்படை மனித வாழ்வாதாரங்கள் எல்லாம் தனியார்மயமாக்கப்பட்டு, சந்தைப் பொருளாகின்றது. இயற்கை மூலதனத்தின் சூறையாடலுக்கு தாரைவார்க்கப்படுகின்றது. இனம், மதம், சாதி, பிரதேசம்… என்று, எந்தத் தடையுமின்றி, இதுவே தேர்தல் அரசியலாகவும், அரசின் சமூகப் பொருளாதாரக் கொள்கையாகவும் இருக்கின்றது.

தண்ணீர், கல்வி, மருத்துவம்.. என்று எதுவும் மக்களுக்கு எஞ்சவில்லை. நவதாராளவாதத்தின் கடன் கொள்கைக்காக மக்களின் அடிப்படைத் தேவைக்கான அடிப்படை உற்பத்தியை மறுத்து, ஏற்றுமதிக்கான உற்பத்தியே நாட்டின் கொள்கையாகி இருக்கின்றது. அன்றாட மனித தேவைகளையே, மக்களுக்கு மறுதளித்துவிடுவதே, தேர்தல் அரசியல் கட்சிகளின் கொள்கையாகி இருக்கின்றது. மக்களையும், தேசத்தையும் கொள்ளையிடும் மூலதனத்தின் கொள்கையே, நாட்டை ஆளுகின்றது.

மக்களின் உழைப்பைக் கொள்ளையிடும் இந்தக் கூட்டமே, மக்களை மோதவிட்டுப் பிரித்தாளுகின்றது. இனம், மதம், சாதி, பிரதேசம்.. என்று மக்களை ஒடுக்குவதன் மூலம், குறுகிய வட்டத்துக்குள் நின்று மக்களை மோதுமாறு வழிநடத்துகின்றது.

அண்மைக்காலமாக தமிழ் மொழி பேசும் வடகிழக்கு மக்கள் மத்தியில், இன ரீதியான, மத ரீதியான, சாதி ரீதியான, பிரதேச ரீதியான முரண்பாடுகள் கூர்மையாக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் தமிழ் மொழி பேசும் மக்கள் மேலான இனவொடுக்குமுறையை மூடிமறைக்கவும், நவதாராளவாத சூறையாடலை இனங்கண்டு கொள்ளமுடியாத வண்ணம், வடகிழக்கு மக்களிடையேயான மோதலைத் தூண்டிவிட்டு இருக்கின்றது.

யார் வேள்வியை ஆதரிக்கின்றனரோ அவர்களை ஒடுக்கப்பட்ட சாதியாக அடையாளம் காட்டுவதும், யார் வேள்வியை எதிர்க்கின்றனரோ அவர்கள் தம்மை ஒடுக்கும் சாதியாக காட்டிக்கொள்வதும், நடந்தேறுகின்றது. இந்த பின்னணியில் கருத்தியல் தளத்தில் விவாதங்கள் முன்னெடுக்கப்;படுகின்றது. அதேநேரம் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த போதும், தம்மை ஒடுக்கும் சாதியாக காட்டிக்கொண்டு வாழ்கின்றவர்கள், வேள்வியை மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றனர். இந்த பின்னணியில் வெள்ளாளிய சிந்தனையிலான சமூக மயமாக்கம் இன்று நடந்தேறுகின்றது. வேள்வித் தடையை வழங்கிய நீதிமன்ற தீர்ப்பு, தம்மை வெள்ளாளர் மயமாக்கிக் கொள்ளும் வெள்ளாளிய சிந்தனையிலான அரசியல் நிகழ்ச்சிப்போக்குடன் ஒன்றுபட்டு நிற்கின்றது.

இப்படி சமூகத்தை வெள்ளாளிய சிந்தனையிலான சாதி மயமாக்கும் நிகழ்ச்சிநிரலில் அங்கமாகவே, "வேள்வி" என்பது தமிழர் பண்பாடல்ல என்று கூறுகின்ற அளவுக்கு, வெள்ளாளியச் சிந்தனை முறை முன்னிறுத்தப்பட்டு வருகின்றது. வெள்ளாளிய சாதி மயமாக்கமும், இந்து மயமாக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கமாக மாறி சமூகத்தை ஒடுக்குகின்றது.

அண்மைக்காலமாக மக்களைப் பிரித்தாளுவதற்கு, ஆளும் வர்க்கங்கள் மதத்தைக் கருவியாக்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு அமைவாக மதரீதியான அணிதிரட்டல்களும், மதரீதியான முரண்பாடுகளும் வன்முறைகளும் கூர்மையாகியுள்ளது. இதற்கு உதவும் வண்ணமே, அரசின் சிவில் சட்ட அமைப்பு முறைமை முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றது. இன-மத-சாதி வாத அடிப்படையில் இயங்கும் நவதாராளவாத சமூக அமைப்பின் நீதிமன்றங்களும், நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

இதற்கு அமைவாகவே வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பின் பிரதிநிதியான இளஞ்செழியனின் தீர்ப்புகள் வெளிவருகின்றது. இந்துமதத்தை சாதி ஆகம மதமாக ஒருமைப்படுத்தும் அண்மைய முயற்சிகளுக்கு ஏற்பவே, எதிர்மறையான தீர்ப்புக்களை இளஞ்செழியன் வழங்கி வருகின்றார்.

மயானப் பிரச்சனைக்கு இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு இதே அடிப்படையிலானதே. மயானப் போராட்டம் சாதிரீதியாக பிளந்து இருக்கும் "இந்து" சமூகத்தை, ஒடுக்கும் சாதிக்கு எதிராக மக்களை அணிதிரட்டிய அதேநேரம், இந்து மதத்தை பிளவுபடுத்தும் வண்ணம் புத்தூர் மயானப் பிரச்சனை மக்கள் போராட்டமாக மாறியது. இதனாலேயே  குறித்த மயானத்தை பயன்படுத்துவதற்கு இளஞ்செழியன் தடைவிதித்தார். இதே போன்று வெள்ளாளிய சாதிய இந்து ஆகம முறைமைக்கு முரணாக, இந்துக்களை பிளவுபடுத்தும் வழிபாட்டு முறைமையைத் தடை செய்து இருக்கின்றார். இந்து ஒற்றுமையைப் பாதுகாத்து, இந்து மதத்தைப் பலப்படுத்தி மத மோதல்களுக்கு உதவுவதேயாகும். புலிகள் தமிழ் இனவாதத்தைப் பலப்படுத்த, செய்த அதே உத்தியும் அதே தந்திரமும்.

இலங்கையின் பாராளுமன்ற சனநாயக ஆட்சிப் பாரம்பரிய பாதையில் அரசியல் கட்சிகளின் தோற்றம் காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட படிப்பும்-சொத்தும் படைத்த ஒரு குறிப்பிட்ட தொகையினரான பணக்கார வர்க்கத்தினர் மத்தியிலிருந்தே ஏற்பட்டது. தங்கள் வாழ்க்கை வசதிகளை-சொத்துக்களை-சுகபோகங்களை பாதுகாப்பதற்கான அதிகாரத்தை அடையும் நோக்குடனேயே அன்று கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. காலனித்துவ எசமானர்களும் தங்களுக்கு எப்போதும் சேவகம் பண்ணக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற வகையிலேயே அவர்களைப் (லண்டனுக்கு அனுப்பி) படிப்பித்துப் பயிற்றுவித்தும் இருந்தனர்.

இன்றுவரை காலனித்துவ எசமானர்கள் திட்டமிட்ட பிரகாரம் அதிலிருந்து அணுவளவேனும் பிசகாமல் அவர்களின் நலன் கருதியே அன்று(1910ல்) தொடங்கிய கட்சியிலிருந்து(இலங்கைத் தேசிய காங்கிரஸ்) இன்று முளைவிட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கும் கட்சிகள் வரை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கொள்கைகள்-கொடிகள்-கோசங்கள்-சின்னங்கள்-நிறங்கள்-வாதங்கள்-போக்குகள் எதுவாக இருப்பினும் அனைவரும் மக்களை பணயம் வைக்கும் அரசியலை முன்னெடுத்து ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சேவகம் பண்ணியபடி தங்களை வாழ வைப்பதையே குறியாகக் கொண்டு செயற்படுகின்றனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 27 ஆம் திகதி முதல் தமது வழக்குகளை

மீளவும் வவுனியா நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரி மூன்று தமிழ் அரசியல்

கைதிகள் முன்னெடுத்து வரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும்

நியாயமானதாகும். உயிராபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இம் மூன்று

அரசியல் கைதிகளையும் அரசாங்கமும் ஜனாதியும் பாதுகாக்க வேண்டும். இவ்

அரசியல் கைதிகளின் உயிர்கள் பறிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும்

ஏற்றுக்கொள்ள முடியாது.

 

சட்டபூர்வமாகவும், நியாயத்தின் அடிப்படையிலும், மனித உரிமைகளின்

அடிப்படையிலும் இம் மூன்று தமிழ் அரசியல் கைதிகளினதும் உணவுத்

தவிர்ப்புப் போராட்டக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டியது அவசியம்.

எனவே, இப்பிரச்சனையை ஆளும் வர்க்க பேரினவாத நிலைப்பாட்டில் இருந்து

நோக்காது, சட்டம், நீதி, மனிதாபிமான அடிப்படையில் அணுகித்

தீர்க்கப்படவேண்டும் என்பதை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

வலியுறுத்துகின்றது.

மனிதவியல் என்பது சமூகத்தன்மையிலானதே ஒழிய தனிநபரியமல்ல. மனிதனின் சமூகத் தன்மையை உயிர்ப்பூட்டுவதும் ஒளியேற்றுவதும் தான், கலையின் சாரமாக இருக்க முடியும். தனிமனித ஆத்ம திருப்திக்கானதோ, செயலற்ற சுய நடத்தையை செயலாகக் காட்டுவதற்கான கவசமல்ல கலை. இப்படிப்பட்ட கலை தனிநபரியத்தை முன்னிறுத்தியதாகவும், பணம் புகழ் சம்பாதிக்கும் முதலாளித்துவக் கலையின் பொது சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்டதே.

தனிநபரியவாத கண்ணோட்டத்தை முன்னிறுத்தி நிற்பவர்கள், கலைஞன் சுதந்திரமானவன் என்கின்றனர். கலை சுதந்திரமானது என்கின்றனர். ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட "சுதந்திரம்" குறித்த இந்தப் பொது அளவுகோலானது, முதலாளித்துவக் கலை வரை பொருந்தும். இங்கு "சுதந்திரம்" குறித்தான தனிநபரியவாத அபத்தங்கள், கலையை உழைக்கும் மக்களின் வாழ்க்கை நடைமுறையில் இருந்து பிரித்துவிடுவதையே "சுதந்திரமாகக்" கருதுகின்றனர்.

கலை இலக்கியத்தை வர்க்க சமூக அமைப்பில் இருந்து "சுதந்திரமானதாக" கருதி படைப்பது முதல் அதை தர்க்கம் செய்வது வரை, தனிமனித "சுதந்திரம்" குறித்த முதலாளித்துவ சிந்தனை முறையில் இருந்து வேறுபட்டதல்ல. "சுதந்திரம்" என்பது எதிலிருந்து என்ற கேள்வியை இயல்பாக எழுப்பிவிடுகின்றது.

அனைவருக்கும் "சுதந்திரம்" இருக்கும் போது, "சுதந்திரம்" என்பது பொருளற்றது. சுதந்திரத்தைப் பற்றி பேசும் போதும் - கோரும் போதும், அனைவருக்குமான சுதந்திரத்தை முன்வைப்பதும் - அதற்காகவும் வாழ வேண்டும். கலை இலக்கியம் "சுதந்திரமானது" என்று கூறுகின்றவர்களும் - கோருகின்றவர்களும், கலை இலக்கியம் அரசியல், வர்க்கம்.. அடிப்படையில் இருந்து "சுதந்திரமானது" என்ற பொருளில் தான் முன்வைக்கின்றனர். அதாவது சமூகத்தில் இருந்தும் சுதந்திரமானது என்று கருதுகின்ற அதேநேரம், இது கருத்துமுதல்வாத சிந்தனை முறையாகும். சாராம்சத்தில் நிலவும் சமூக அமைப்புமுறை சார்ந்த, தனியுடைமைவாத முதலாளித்துவக் கண்ணோட்டமாகும்.

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மூலதனமே உலகம் என்றும், தனியுடமை சிந்தனையிலான வாழ்க்கை முறை என்ற 2000 ஆண்டுகள் வாழ்வியல் முறைமையை, 1917 வர்க்கப் புரட்சி கவிழ்த்துப் போட்டது. மனித உழைப்பைச் சுரண்டி உருவாகும் தனியுடமையும், அதனாலான மூலதனத்தின் திரட்சியுமே, மனித குலத்தை அடிமைப்படுத்தியுள்ளதை இந்தப் புரட்சி நடைமுறைரீதியாக எடுத்துக் காட்டியது. அதேநேரம் மார்க்சியத்தின் மெய்நிகர் தன்மையை புரட்சிகர செயலாக்கியது.

ஆனாலும் பொதுவுடமையை முன்வைத்து முன்னேறிய வர்க்கப் புரட்சி, தொடர்ந்து நீடிக்கவில்லை. ஆம், தனியுடமையால் தோற்கடிப்பட்டிருக்கின்றது. அதேநேரம் மார்க்சிய தத்துவத்தையும், புரட்சிகர நடைமுறைகளையும் முறியடிக்க மூலதனம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றது. மார்க்சிய தத்துவத்தை எந்தத் தத்துவத்தாலும், எந்த நவீனத்துவத்தாலும் வெல்ல முடியவில்லை. இது தான் உண்மை. இது தான் இந்த வர்க்கப் புரட்சி எமக்கு கற்றுத்தரும் எதார்த்தமும்; கூட. முதலாளித்துவத்திற்கு அச்சம் தருவது மார்க்சியமும், அதன் நடைமுறையுமே என்பது, உலகின் மெய்நிகர் உண்மையாக இருக்கின்றது. இதனாலேயே வர்க்கப் போராட்டங்கள் பாரிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றது.

கல்வி மற்றும் சுகாதார சேவையை தனியார்மயமாக்குவதற்கு எதிராக வரலாற்றில் எழுந்த பாரிய மக்கள் இயக்கமாகிய சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கத்தினால் நடத்தப்பட்ட சைட்டம் திருட்டுக் கடைக்கு எதிரான போராட்டத்தில் தீர்மானமிக்க திருப்புமுனையை பதிந்துவிட்டு நாம் இவ்வாறு ஒன்று சேர்ந்துள்ளோம். 

மாணவர் அமைப்பானது இப்போராட்டத்தில் கலந்திருப்பது பொதுவான சைட்டம் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டோ அல்லது சைட்டம் திருட்டு பட்டக் கடையின் சட்டபூர்வ தன்மை மற்றும் தரம் சம்பந்தமான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டோ அல்ல. கல்வி சம்பந்தமாக நீண்டகால கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே இப்போராட்டத்தோடு இவ்வியக்கம் கலந்திருக்கின்றது. 

கல்வி என்பது ஒருவரை தொழிலுக்காக பயிற்றுவிக்கும் அடிமைத்தனமான பயிற்சியோ அல்லது பாத்திரத்தில் தண்ணீரை நிரப்புவது போன்று மாணவர்கள் மீது அறிவை நிரப்புவது அல்ல என்பதை ஒவ்வொரு கல்வியியலாளரும் விவாதமின்றி ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

கல்வி என்பது ஒருவருக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக் கொண்டுவர மேற்கொள்ளும் ஆளுமை வளர்ச்சி என்பதாக அறிவியல் கல்வியின் வளர்ச்சியோடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது கல்வி என்பது வெறுமனே அறிவு பரிமாற்றமல்லாத கற்பித்தல் செயற்பாடாகும். அதேபோன்று யுனெஸ்கோ உடன்பாட்டிற்கு அமைய கல்வி என்பது வாழ்வதற்கு கற்றுக் கொள்வதாகும். அதாவது கல்வி என்பது வாழ்க்கையாகும். 

கல்விக்கான உரிமை இழக்கப்படுவது என்பது வாழ்வதற்கான உரிமையை இழப்பதாகும். வாழ்க்கைக்காகவும் மனிதகுலம் வரலாறு பூராவும் பெற்றுக்கொண்ட கலாச்சார பொக்கிஷங்களுக்காகவும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை இருப்பதால்தான் கல்வியானது அனைவருக்கும் உரிய மீறமுடியாத உரிமையாக இருக்கின்றது. வரலாறு பூராவும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் வளர்ச்சிபெற்ற அறிவு தனியொரு மனிதனது முயற்சியின் பலனல்ல, சமூகம்சார் உழைப்பின் பிரதிபலனாகும். ஆகவே, அந்த அறிவை பெற்றுக்கொள்ள சமூகத்திற்கு உரிமை உண்டு.

தனியார்மய நடவடிக்கையின் ஊடாக கல்வியை வர்த்தகப் பண்டமாக்கும் போது சமூகத்திற்கு சொந்தமான இந்த உரிமை இழக்கப்படுகின்றது. அதேபோன்று ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உரித்தான கலாச்சார பாரம்பரியங்கள் இலாபத்தின் பின்னால் ஓடும் வியாபாரிகளின் தனிப்பட்ட சொத்துக்களாக ஆகிவிடும். கல்வி தனியார்மயத்தை நாம் எதிர்ப்பது அது ஒருபோதும் நெறிமுறைகளை கொண்டிராததால் மாத்திரமல்ல. அது சமூக முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதனாலும் தான்.

என்றாலும், “ஒஸ்கார் வைல்ட்” என்ற பிரபல எழுத்தாளரின் கூற்றிற்கு அமைய எந்தப் பொருளினதும் மதிப்பை அறியாத, ஆனால் ஒவ்வொரு பொருளுக்கும் விலை நிர்ணயிக்க மாத்திரமே அறிந்த கேவலமான சமூகமொன்று உருவாவதன் ஊடாக கல்வியும் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுவதும் விலைக்கு வாங்கப்படுவதுமாக உள்ளது. 

இலங்கையை உதாரணமாக எடுத்துக் கொண்டால் இலவசக்கல்வி தொடர்பில் நீண்டகாலமாக நிலவிய பாரம்பரிய முறைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. முன்பள்ளிக் கல்வி முற்றாக பணத்திற்கு பெற்றுக்கொள்ளும் ஒன்றாக ஆக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முன்பள்ளிக் கல்வி தொடர்பில் தரத்தை ஆய்விற்கு உட்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகியிருக்கும் நிலையில் ஆரம்ப குழந்தைப்பருவ அபிவிருத்தி குழம்பியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் சமயத்தில் இரு வசனங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. ஒன்று ‘அநீதிக்கு எதிராதல்’. மற்றது ‘சட்டத்தின் ஆதிக்கம்’ என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அதாவது நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது. என்றாலும் இந்த சட்டத்தின் ஆதிக்கம் மாலம்பே சைட்டம் திருட்டு பட்டக் கடை தொடர்பில் செயற்படுகின்றதா? இந்த வியாபார நிறுவனத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால், ஆரம்பத்திலிருந்தே இது நடைமுறை சட்டத்தை மீறி அமைக்கப்பட்டிருப்பதும், தொடர்ந்து சட்டவிரோத வேலைகளை செய்வதாலும் இதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இது விடயத்தில் சட்டத்தை செயற்படுத்தவில்லை என்பது தெரிகின்றது. இது தொடர்பிலான நூற்றுக்கணக்கான உதாரணங்களில் சிலவற்றை அலசிப் பார்ப்போம்.

1. முதலீட்டுச் சபையின் அனுமதியுடன் சைட்டம் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 2010 ஆகஸ்ட 09ம் திகதி முதலீட்டுச் சபையின் தலைவருடைய ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை மருத்துவ சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய 2008 மார்ச் 31ம் திகதி சைட்டம் நிறுவனம் தகவல் தொழில்நுட்பம், முகாமைத்துவம் மற்றும் நிதியியல், பொறியியல், தொழிற்பயிற்சி, தாதியர், மொழிகற்கை மற்றும் சுகாதார விஞ்ஞான பாடங்களை கற்பிற்பதற்காக அனுமதி பெற்றுள்ளது. அந்நிறுவனம் மருத்துவ விஞ்ஞானத்தை கற்பிற்க அனுமதி பெற்றிருக்கவில்லை. அதன் பெயர் South Asian Institute of Technology and Management அல்லது தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனம் என ஆரம்ப அனுமதியில் குறிக்கப்பட்டது.

போலியான தேர்தல் ஜனநாயகம் மூலம் ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றவர்கள், சமூகப் பொருளாதார வர்க்கக் கட்டமைப்பில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது. இப்படி முகமாற்றம் மூலம் ஆட்சிக்கு வந்தவரே இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்;க. இப்படி  ஆட்சிக்கு வந்த ரணில்,  "சமவுரிமை, சம அந்தஸ்து" மூலம் இன-மத முரண்பாட்டுக்கு தீர்வு காணப் போவதாகக் கூறியிருக்கின்றார்.

மறுபக்கத்தில் தமிழ் மக்களை ஒடுக்கும் தமிழ் தலைமையின் துணையுடன் ஆட்சிக்கு வந்த முகமாற்ற ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, இன-மத முரண்பாடுக்களுக்கு தீர்வைக் காண முடியும் என்று பொது நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தினர்.

மக்களை ஒடுக்கும் தமிழ்-சிங்கள தரப்புகள், பரஸ்பரம் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்ற அரசியல் பின்னணியானது, அமெரிக்க சார்பு நவதாராளவாத உலகப் பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்கான தடையற்ற பொதுக் கொள்கையைக் கொண்டதேயாகும்.

இந்த அரசியல் பின்னணியில் ரணில் "சமவுரிமை" மூலம் இன-மத பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்கின்றார். ஐந்து வருடங்களுக்கு முன் சமவுரிமை இயக்கத்தை ஆரம்பித்த போது, இன-மத பிரச்சனைக்கு சமவுரிமையே தீர்வு என்ற கொள்கையை முன்வைக்கவில்லை. மாறாக இன-மத ரீதியாக ஒடுக்கப்படும் தமிழ் மொழி பேசும் மக்களின் சமவுரிமைக்காக எல்லா இனத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம், தங்கள் பிரச்சனைக்கு தாங்களே தீர்வு காணும் அரசியல் நடைமுறையை முன்வைத்தது. இதன் அடிப்படையில் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பொதுப் புரிந்துணர்வுகளை உருவாக்கி வருகின்றது.

மொழிக்கு வர்க்கம், சாதி, பால்.. கிடையாது. மொழி சமுதாய முரண்பாட்டுக்கு ஏற்ப, வர்க்கத் தன்மையைப் பெறுகின்றது. அதாவது ஒடுக்குபவனின் மொழியும் - ஒடுக்கப்படுபவனின் மொழியும், ஒரே உணர்வையும் உணர்ச்சியையும் கொண்டிருப்பதில்லை.     

தமிழனின் கலாச்சாரம், பண்பாடு என்று முன்வைக்கப்படும் எல்லா வகையான "ஒழுக்கம் மற்றும் தூய்மைக்" கோட்பாடுகளும், நிலப்பிரபுத்துவ வாழ்வியல் முறையையும், அதன் மொழியையும் முன்வைக்கின்றது. இது முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை நிராகரிக்கின்ற, ஜனநாயக விரோத அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கின்றது. இந்தப் பிற்போக்கான நிலப்பிரபுத்துவ வாழ்வியல் முறை சார்ந்த "ஒழுக்க மற்றம் தூய்மைக்" கோட்பாடுகளின் அடிப்படையிலேயே, மொழியியல் "ஒழுக்கத்தையும்", "தூய்மையையும்" கோருகின்றனர். ஒடுக்கும் தரப்பின் மொழிக்கு எதிரான ஒடுக்கப்பட்டவர்களின் மொழியை ஒழுக்கமற்ற மொழியாகவும், இழிவு கொண்டதாகவும், பண்புகெட்டதாகவும், நாகரீகமற்றதாகவும், அருவருப்புக்குரியதாகவும் காட்ட முற்படுகின்றனர். அதாவது வெள்ளாளியச் சிந்தனையிலான நிலப்புரத்துவ "ஒழுக்க" மொழியை மீறுகின்ற போது, அதை தீட்டுக்குரிய சாதியக் கண்ணோட்டத்தில் முன்னிறுத்திக் காட்ட முற்படுகின்றனர். இங்கு ஒடுக்கப்பட்டவர்களின் மொழியை விமர்சிப்பதன் நோக்கம், அந்த மொழி கொண்டு இருக்கும் ஒடுக்குவோருக்கு எதிரான அரசியல் உள்ளடக்கத்தை நிராகரிப்பதேயாகும்.

வெள்ளாளிய சிந்தனையிலான தங்கள் சாதிய மயானத்தைப் பாதுகாக்கவே, தமிழ் தேசியத் தலைவர்கள் முதல் தமிழ்தேசியவாதிகள் வரை தலைகீழாக நின்றனர், நிற்கின்றனர்.. தங்களது வெள்ளாளிய சிந்தனையில் நின்று, மயானத்தை அகற்றும் போராட்டத்தின் மீது காறி உமிழ்ந்தனர். தமிழ் தேசியம் மூலம் தாங்கள் பெற்ற அதிகாரத்தைக் கொண்டு, தீர்வுகளைத் தரமறுத்தனர், மறுக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் தங்கள் சாதிய-வர்க்க மனப்பாங்கில் நின்று போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதுடன், திட்டமிட்டே போராட்டத்தை புறக்கணித்தனர். இதன் மூலம் சாதிய ஒடுக்குமுறையைக் கையாண்டனர். இப்படிப்பட்ட இந்த தமிழ் தேசிய சாதிய அரசியலை எதிர்த்துப் போராடியதன் மூலமே, ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் வெற்றி பெறப்பட்டு இருக்கின்றது.

உழைக்கும் வர்க்கக் கட்சியின் தலைமையில் மக்கள் அணிதிரண்டு போராடுவதன் மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணமுடியும் என்பதற்கு, இப்போராட்டம் சரியான எடுத்துக்காட்டாகும். நிலவும் சாதிய - சுரண்டல் சமூக அமைப்பு முறை மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாது என்பதை, இந்தப் போராட்டம் தெள்ளத் தெளிவாக அம்பலப்படுத்தி இருக்கின்றது.

சயிட்டத்துக்கெதிரான மாணவ மக்கள் அமைப்பினால் வவுனியாவில் நேற்று (27.09.2017 ) ஒழுங்குசெய்யப்பட்டிருந்த  மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கையின் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகள் ஒன்றுதிரண்டு தமது எதிர்ப்பினை தெரிவத்திருந்தனர்.

அங்கு பல்வேறு அமைப்புகள் தமது காட்டமான தமது எதிர்ப்புக்களை உரை வடிவிலும், ஆர்ப்பாட்ட  ஊர்வலத்தில் கலந்து கொண்டு “வேண்டாம் வேண்டாம் பட்டக் கடை” போன்ற சையிட்டத்துக்கு எதிரான பல கோசங்களினூடு வெளிப்படுத்தியிருந்தனர். ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை புகைப்படங்களிலும் உரையாற்றுகைகளின் ஒரு பகுதியை இங்கு காணொளியிலும் காணலாம்.

 

மயானங்கள் என்பது, பிணங்களை எரிக்கும் இடமென்றால், மயானப் பிரச்சனை வெறுமனே சுற்றுச்சூழல் பிரச்சனையாக இருக்கும். யாழ்ப்பாணத்து மயானங்களின் பாரம்பரியம் குறித்து பேசுவதும், நிலவுடமை குறித்து மூன்றாம் தரப்பு அக்கறைப்படுவதும், மயானப்புனரமைப்பு பெயரில் சங்கங்கள் அமைப்பதும்.. வெள்ளாளியச் சிந்தனையிலான சாதிய மயான அமைப்பு முறையை எடுத்துக் காட்டுகின்றது.

வெள்ளாளிய சிந்தனையிலான, வாழ்வியல் முறையிலான சாதிய மயானங்களை அகற்றக் கோரிய போராட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் புத்தூர் கலைமதிக் கிராமத்திற்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வரவழைத்தது. அங்கு அவர் ஒடுக்கும் சாதியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிரான மக்கள் விரோத கருத்துக்களை முன்வைத்திருந்தார். வாக்களித்த மக்களை  பிரதிநிதித்துவப்படுத்தாது, வெள்ளாளிய சிந்தனையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், ஒடுக்கும் சாதியப் பிரதிநிதியாகவும் நடந்து கொண்டார். தனது சாதிய நடத்தைகளைக் கொண்டு தன்னை வேறுபடுத்தியதுடன், சாதியக் கண்ணோட்டத்திலான 'தமிழ் தேசிய' உரையை ஆற்றியிருந்தார். அவரின் சாதியக் கண்ணோட்டமானது

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE