Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

கல்வி குறித்த அரசின் கொள்கைகளைக் கொண்டாடுவதன் பொது வெளிப்பாடுதான், பரீட்சை முடிவுகள் குறித்த பொதுக் கண்ணோட்டமாகும்;. பரீட்சை முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட தனிநபர் கல்விக்கொள்கையானது, அனைவருக்குமான சம கல்வி வாய்ப்பையும் - பொது சமூக அறிவையும் மறுதளிக்கின்றது. அதேநேரம் பரீட்சையில் சித்தி பெறுவதற்கான வியாபாரத்தையே கல்வியாக்கி வருகின்றது. பரீட்சைச் சித்தியை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் பிரிதாளப்படுவது நடந்தேறுகின்றது. பரீட்சையில்  தோற்றவர்களை புறக்கணிப்பதும் - இழிவுபடுத்துவதும், பொதுவான சமூக நடத்தையாகின்றது. சமூக உணர்வுள்ளதாகக் கருதப்படும் பழைய மாணவ சங்கங்கள் கூட, இதற்கு விதிவிலக்கில்லை.

இந்த சமூகப் பின்னணியில் பரீட்சையில் "அதி உயர்" சித்தி பெற்ற மாணவர்களை முன்னிறுத்தி, கொண்டாட்டங்களை நடத்துகின்றனர். அதிபர்கள் முதற் கொண்டு பரீட்சையில் வென்றவர்களுடன் சேர்ந்து போட்டோக்;களை எடுப்பதும், அதை பாடசாலை வாசல்களில் விளம்பரப்படுத்துவதும் நடந்தேறுகின்றது. பழைய மாணவர் சங்கங்கள் இதைக் காட்டி தங்களைப்  பெருமைப்படுத்திக் கொள்வதும் - பரிசில்களை வழங்குவதும் நடந்தேறுகின்றது. தனியார் (ரியூசன் சென்றர்கள்) கல்வி நிறுவனங்கள்; போட்டி போட்டுக் கொண்டு, தங்கள் கல்வி வியாபாரத்துக்கு ஏற்ப இதை விளம்பரப்படுத்துகின்றனர். பரீட்சையில் வெற்றி பெறும் கல்வி வியாபாரத்தை முன்னெடுக்கும் புத்தகக் கடைகள் தொடங்கி பரீட்சைக் கேள்விகளை முன்கூட்டியே ஊகித்து அதை மாணவர்களுக்கு கொடுக்கும் வியாபாரிகள் பரீட்சைமுறை மூலம் கொழுக்கின்றனர். தன் இன, மத, சாதி, பிரதேச, ஊர்.. பெருமைகளைப் பீற்றிக் கொள்ளும் தங்கள் குறுகிய அடிப்படைவாதங்களுக்கு ஏற்ப, பரீட்சை முடிவுகளைக் காட்டி பெருமைப்படுகின்றனர்.

வியாபாரமும் அதற்கு ஏற்ப விளம்பரங்களும், பரீட்சை முடிவுகளைத் தொடர்ந்து  நடந்தேறுகின்றது. இதை முதன்மையாக்கிக் கொள்ளும் தனிமனித செயற்பாடே, சமூக உணர்வாகி விடுகின்றது.

இனவாத  மதவாத மோதல்கள், வன்செயல்கள்  மூலம்  சிங்கள, தமிழ்,  முஸ்லீம்  மக்களின் பொது  எதிரி  அவர்களுக்கு  மறக்கடிக்கப்பட்டிருப்பதாக  முன்னிலை  சோஷலிஸக்  கட்சியின் அமைப்பு  செயலாளர் குமார் குணரட்னம்  கூறுகிறார்.

தற்போதுள்ள   முறுகல்  நிலைமை  தொடர்பாக  ” திவயின”  ஞாயிறு பத்திரிகை   அவரை  தொடர்பு கொண்ட வேளை அவர் இவ்வாறு  தெரிவித்தார்.  கீழே  வருவது  அவருடனான  நேர்காணல்  ஆகும்

கேள்வி :  நாட்டில் தற்போது  ஏற்பட்டிருக்கும்  கலவர நிலைமையை  முன்னிலை  சோஷலிஸக்  கட்சி  எவ்வாறு  பார்க்கிறது. ?

 

பதில் :  நாட்டின் பொது  முற்போக்கு  மக்கள் நினைப்பது  போலவே  எம்மிலும்   இது தொடர்பாக  பெரிய   அதிர்ச்சி  காணப்படுகிறது. இந்த  பிரச்சினையை  உடனடியாக  தீர்க்கவேண்டும்  என்ற  நிலைப்பாட்டில்   நாம்  இருக்கிறோம் . இது  முற்றுமுழுதாக  இனவாதத்தை  அடிப்படியாகக்கொண்டது.  எமது  நாட்டில்   இனவாதமானது  காலத்திற்குக்காலம்  அந்தந்த  அரசியல்  கட்சிகளின்  தேவைக்கு  ஏற்ப  வளர்த்து விடப்படும்  சூழ்நிலை  காணப்படுகிறது.

 

கேள்வி :  நீங்கள்  குறிப்பிட்டீர்கள்  இது  இனவாத  பிரச்சினை என்று . ஒவ்வொரு  இனமும்  ஒவ்வொரு  இனத்தவரை  இனவாதிகள்  என்று  குற்றம்சாட்டிக்  கொண்டுள்ளனர்.

அனைத்து இனவாதங்களுக்கும்  எதிராக சமவுரிமை இயக்கம் இன்று 08.03.2018 கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம்

புகைப்படங்களோடு

2018 மார்ச் 05 அன்று சமவுரிமை இயக்கம் வெளியிட்ட அறிக்கையும்

இனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்! 

 

இனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்! ( 2018 மார்ச் 05அன்று சமவுரிமை இயக்கம் வெளியிட்ட அறிக்கை) 

கடந்த சில நாட்களாக அம்பாறையில் மற்றும் பண்டாரவளையில் ஏற்படவிருந்த சம்பவங்களின் சூடு தணிவதற்கு முன்பே தெல்தெனிய பற்றி எரிகின்றது.  இதற்கு முன்பு கின்தோட்டையிலும், அதற்கும் முன்பு அளுத்கமவிலும் இனவாதத் தீப்பிளம்புகள் கிளர்ந்தெழுந்தன. இந்த மோதல்களின் சமீபத்திய சம்பவமானது பெற்றோல் நிலையமொன்றிற்கு அருகாமையில் நடந்த கருத்து மோதலின்போது ஒருவர் தாக்கப்பட்டு மரணமடைந்துதான். இறந்த இளைஞர் சிங்களவர் என்பதனாலும் தாக்கியவர்கள் முஸ்லிம்களாக இருப்பதாலும் பிரச்சினை இனவாதத் தீயாக பற்றி எரியத் தொடங்கியது. சில தசாப்தங்களாக இனவாதத் தீப்பொறி அடிக்கடி தோன்றுவது தற்செயலானதல்ல. அது பல தலைமுறைகளுக்கு பகைமையின் தீப்பொறியை எடுத்துச் செல்லக் கூடியதும் அதனால் மீண்டும் மீண்டும் அவலங்கள் ஏற்படக் கூடியதுமான நிலைமையின் வெளிப்பாடுதான். இந்நிலைமை எரிமலையின் முகட்டைப் போன்று இருப்பதோடு சிறு சம்பவம் கூட அந்த எரிமலையை வெடிக்கச் செய்துவிடும். இந்த நிலைமை தானாக உருவானதொன்றல்ல.

கடந்த சில நாட்களாக அம்பாறையில் மற்றும் பண்டாரவளையில் ஏற்படவிருந்த சம்பவங்களின் சூடு தணிவதற்கு முன்பே தெல்தெனிய பற்றி எரிகின்றது.  இதற்கு முன்பு கின்தோட்டையிலும், அதற்கும் முன்பு அளுத்கமவிலும் இனவாதத் தீப்பிளம்புகள் கிளர்ந்தெழுந்தன. இந்த மோதல்களின் சமீபத்திய சம்பவமானது பெற்றோல் நிலையமொன்றிற்கு அருகாமையில் நடந்த கருத்து மோதலின்போது ஒருவர் தாக்கப்பட்டு மரணமடைந்துதான். இறந்த இளைஞர் சிங்களவர் என்பதனாலும் தாக்கியவர்கள் முஸ்லிம்களாக இருப்பதாலும் பிரச்சினை இனவாதத் தீயாக பற்றி எரியத் தொடங்கியது. சில தசாப்தங்களாக இனவாதத் தீப்பொறி அடிக்கடி தோன்றுவது தற்செயலானதல்ல. அது பல தலைமுறைகளுக்கு பகைமையின் தீப்பொறியை எடுத்துச் செல்லக் கூடியதும் அதனால் மீண்டும் மீண்டும் அவலங்கள் ஏற்படக் கூடியதுமான நிலைமையின் வெளிப்பாடுதான். இந்நிலைமை எரிமலையின் முகட்டைப் போன்று இருப்பதோடு சிறு சம்பவம் கூட அந்த எரிமலையை வெடிக்கச் செய்துவிடும். இந்த நிலைமை தானாக உருவானதொன்றல்ல.

மக்கள் மத்தியில் அடிக்கடி நிர்மாணிக்கப்படும் பல்வேறு பிரிவினைகள், வீண்புரளிகளை சிருஷ்டிக்கும் இயந்திரங்கள், தமது அதிகார நோக்கத்திற்காக சமூகத்தின் இருப்பை துச்சமாக மதிக்கும் அரசியல்வாதிகள் போன்ற அனைவரும் இது விடயத்தில் பங்கேற்றிருக்கின்றார்கள். இந்த கருத்தியல் யுத்தத்திற்கு சிறந்த உதாரணம் முஸ்லிம் வியாபாரிகளால் கொடுக்கப்படுவதாகக் கூறப்படும் மலட்டுத் தன்மையை உருவாக்கும் குளிசை சம்பந்தமான பிரச்சாரமாகும். இரு சம்பந்தமாக எந்தவித விஞ்ஞான அல்லது தர்க்க ரீதியிலான சான்றுகள் இல்லாத போதிலும், அவற்றிற்கு ஒரு சிறப்பு மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை சமூகத்தை சூழ்ந்து கொண்டுள்ள பிற்போக்குத்தனத்தின் ஆழம் எவ்வளவு என்பதை விளக்கும் நேரடியான உதாரணமாக அவை இருக்கின்றன. இந்த வீண் வதந்திகள், விசேடமாக பாலியல், தனிப்பட்ட தகவல்கள், ஏனைய இனங்களினால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் பல்வேறு வன்முறை நடவடிக்கைகளை உயர்த்திப் பிடித்தல் போன்றவை, பிரச்சாரங்களின்போது அவற்றிற்குள்ள புதுமையான தொடர்பாடற் சாத்தியங்களாகும். அவை பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வீட்டுக்கு வீடு, வாய்க்கு வாய் சில நொடிகளில் பரப்பப்படுகின்றது. பின்பு அவை உண்மையல்லவென எவ்வளவுதான் உறுதி செய்தாலும் அவை ஒருநாளும் சரியாக மாட்டாது. 

அன்றாட வாழ்வின்போது இலங்கை சமூகத்தில நடக்கும் ஏதாவது சிறு மோதல் கூட இனவாத – மதவாத மோதலாக உருவெடுத்து மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து நிலவுகின்றது. சமூகம் என்ற வகையில் இப்போது நாம் அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். ஒருவரை அடித்துக் கொல்வது பாரதூரமான செயலாக இருப்பதைப் போன்றே அதைக் கொண்டு இனவாத மோதல்களுக்கு ஆரம்பத்தை எடுப்பது அதனையும் விட படுமோசமான நிலைக்கு இலங்கை சமூகம் தள்ளப்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும். 

நல்லாட்சி என்னும் முகமூடி அணிந்த இன்றைய கூட்டு அரசாங்கத்தின் கீழ் பேரினவாத வெறியாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதையே அம்பாறை நகரின் முஸ்லீம் கடைகள் பள்ளிவாசல் மீதான அண்மைய தாக்குதல்களும் எரிப்புச் சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன. சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு மணி நேரம் கழித்தே பொலிசார் அவ்விடத்திற்கு வந்ததாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மூலம் மேற்படி தாக்குதல் பேரினவாத நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது முஸ்லீம்கள் மீது இடம் பெற்று வந்த தொடர் தாக்குதல்களில் ஒன்றாகவே அமைந்துள்ளது. எனவே பேரினவாத வக்கிரம் கொண்ட அம்பாறைத் தாக்குதலை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. 

இவ்வாறு கடந்த 26ம் திகதி இரவு அம்பாறை நகரின் முஸ்லீம் கடைகள் பள்ளி வாசல் மீதான தாக்குதல் வாகனங்கள் எரியூட்டப்பட்மை பற்றி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில், கடந்த காலத்தைப் போன்றே இன்றும் பேரினவாதச் செயற்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சட்டபூர்வமாகவும் சட்டங்களை மீறியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டின் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் கடுமையாகன பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். நல்லாட்சி நல்லெண்ணம் சமாதானம் போன்ற திரைகளின் பின்னால் இடம் பெற்றுவரும் பேரினவாத செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தில் அங்கம் பெற்று வரும் முஸ்லீம், மலையகத் தமிழ் பிரதிநிதிகளோ அல்லது எதிர்க்கட்சி என்ற பெயரில் இருந்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ திடமான தமது எதிர்ப்பைக் காட்டுவதில்லை. வெறும் வாய் உபசாரத்திற்குச் சம்பவங்கள் இடம் பெறும் போது அறிக்கைகள் வெளியிட்டு விட்டு தத்தமது பதவிகளில் ஒட்டி இருந்து சுகபோகம் அனுபவித்து வருகிறார்கள். அடையாள அரசியலை உசுப்பிவிட்டு, பாராளுமன்றம் வரை சென்று தமக்குரிய பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் முஸ்லீம் தலைமைகள் சாதாரண முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் பேரினவாதப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில்லை. கொடுக்கவும் மாட்டார்கள்.

எனவே, பேரினவாதத்தை எதிர்கொண்டு வரும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் குறுகிய நிலைப்பாடுகளுக்கு அப்பாலான சிங்கள உழைக்கும் மக்களோடு இணைந்து வெகுஜனத் தளங்களில் முன் செல்வதையிட்டுச் சிந்திப்பதே பேரினவாதத்தை முறியடிப்பதற்குரிய வழிமுறையாகும். ஆளும் வர்க்க சக்திகள் ஒரு போதும் பேரினவாதத்தைக் கைவிட மாட்டார்கள். அதே போன்று தத்தமது இனங்கள் மத்தியில் இருந்து வரும் அடையாள அரசியல் சக்திகள் மக்களைக் குறுகிய நிலைகளுக்குள் வைத்துத் தமது ஆதிக்க அரசியலை முன்னெடுப்பதையே நோக்காகவும் போக்காகவும் கொண்டுள்ளனர். இதனை அனைத்துத் தரப்புகளின் உழைக்கும் மக்களும் புரிந்து கொள்வது அவசியமாகும். 

சி. கா. செந்திவேல்

பொதுச் செயலாளர். 

சிரியாவில் நடப்பது உள்நாட்டு யுத்தமல்ல. சிரியாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் யுத்தமுமல்ல. அங்கு வாழும் சன்னி, சியா, அலாவி மதப்பிரிவுகளுக்கு இடையிலான மத யுத்தமுமல்ல. அமெரிக்கா - ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், சிரியாவைச் சூறையாடத் தொடங்கிய யுத்தமாகும்

இன்றைய மனித அவலங்களுக்கு யுத்தத்தை நடத்தும் சிரியாவும் - ருசியாவுமே காரணம் என்று, இவர்கள் உருவாக்கிய போரில் அகப்பட்டு உயிரிழக்கும் மக்கள் பிணங்களைக் காட்டி யார் பிரச்சாரத்தைச் முன்னெடுக்கின்;றனரோ, அவர்கள் தான் இதற்கு முழுப் பொறுப்பு. மனித உரிமை மீறலையும் - பிணத்தையும் காட்டியும் உலகெங்கும் தலையிடும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு ஏகாதிபத்திய நலன்களின் பின்னணியில், அமெரிக்க சார்பு கூலிக்கும்பல்கள் மக்களை பலிகொடுக்க - சிரியாவும் - ருசியாவும் பலியெடுக்கின்றது.

தற்போதைய கூட்டரசாங்கத்தின் மூன்றாவது வரவு-செலவு அறிக்கை நவம்பர் 09ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போதைய முதலமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் வரவு- செலவு திட்டம்தான் அது. சம்பிரதாயபூர்வமாக வரவு- செலவு திட்ட உரையை நிகழ்த்திய நிதியமைச்சர் இதனை "நீலப்பசுமை வரவு-செலவு" அறிக்கையாகுமென வர்ணித்தார். நீலம் என்பதின் கருத்தானது சமுத்திரத்திலுள்ள சகல சாத்தியங்களையும் அபிவிருத்திக்காக பயன்படுத்துவதாகுமெனவும், பசுமை என்பதன் கருத்தானது சுற்றாடல் சார்பான பொருளாதார முறையொன்றை முன்னெடுப்பதுமாகுமெனவும் குறிப்பிட்டார். அதேபோன்று அவர் தனது பொருளாதார அபிலாஷைகளை நுவெநசிசளைந ளுசi டுயமெய அல்லது தொழில் நிறுவனங்களை விருத்தி செய்யும் கொள்கை என்ற வகையில் பெயரிட்டார். நாம் முதலில் இந்த வார்த்தைகள் மற்றும் யதார்த்தத்திற்கிடையேயான வித்தியாசத்தை ஆராய்ந்து பார்ப்போம்.

நீல- பசுமை

அரசாங்கம் தனது பொருளாதார கொள்கையில் கடலுக்கு சொந்தமான மொத்த சாத்தியங்கள் சம்பந்தமாக அக்கறையுடன் சிந்திப்பதாகக் கூறினாலும் நவதாராளமய முதலாளித்துவ கொள்கை என்பது அதற்கு முற்றாக எதிரானது. நவதாராள முதலாளித்துவ கொள்கையில் உற்பத்தி மற்றும் உற்பத்தியோடு பிணைந்த சேவைகள் போன்ற உண்மையான மதிப்பை பெற்றுத்தரும் பொருளாதாரத்துறைகளுக்குப் பதிலாக நிதித்துறைகளுக்கு முதன்மையளிக்கப்படுகின்றது. இந்நிலையில் கடலின் பொருளாதார சாத்தியங்கள் குறித்து கூறப்படுபவை வெறுமனே வெற்று வார்த்தைகள்தான். உதாரணமாக, துறைமுக நகர திட்டத்தைப் பார்ப்போம். அத்திட்டம் காரணமாக கடலின் சாத்தியங்களை பயன்படுத்தும் இலங்கையின் பிரதான தொழிற்துறையான மீன்பிடித் தொழில் அழிகின்றது. ஆனால், அரசாங்கம் சீனாவின் வணிக மூலதனம் மற்றும் நிதி மூலதனத்திற்காக மீன்பிடித் தொழில்துறையை தியாகம் செய்ய தயாராக உள்ளது. துறைமுகம் என்பது கடல்வளம் ஆகக் கூடுதலாக பயன்படுத்தப்படும் துறையாகும். அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மற்றும் திருகோணமலை துறைமுகத்தின் அடிப்படை வசதிகளையும் கொழும்பு துறைமுகத்தின் இறங்குதுறை உட்பட துறைமுக வளங்களையும் வெளிநாட்டு கம்பனிகளிடம் ஒப்படைக்கின்றது. இதனால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரிப்பணத்தையும் இழக்கின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை விலைக்கு வாங்கும் சீன கம்பனிக்கு 25 வருட வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இம்முறை வரவு-செலவு அறிக்கையில் 97வது முன்மொழிவின் கீழ், துறைமுகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்கள் தலையிட ஏதுவாக வர்த்தக மற்றும் கடல்சார் சட்டமூலத்தை திருத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. துறைமுகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளை வெளிநாட்டு பல்தேசியக் கம்பனிகளிடம் ஒப்படைக்கத் தயாராவது சிறு பிள்ளைக்குக் கூட புரியும்.

சுகதானந்தாவை வாழ்த்துவோம்...!

இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும், சிங்களவர்கள் என்றாலே மனித குலத்தின் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டார்கள்.

அதுவும் இன்னும் துல்லியமாக
சொல்லவேண்டுமென்றால் பவுத்த
துறவிகளை சமூக விரோதிகளாக
வன்முறையாளர்களாகவே உலக
அளவில் பரப்பப்பட்டு வருகிறது.

அதற்கு காரணம் இல்லாமலும்
இல்லை. இலங்கை இன கலவரமும்
பர்மா ரோகியாங் படுகொலையும்
ஒட்டு மொத்த பவுத்த துறவிகளும்
பயங்கரவாதிகள் தான் என்ற பிம்பத்தை நிறுவியது.

எல்லாவற்றிலும் நேர் விசையும்,
எதிர்விசையும் , இருந்தே தீரும்
என்பது விஞ்ஞான உண்மை.
அப்படித்தான் சமூகத்திலும் நிலவும்
என்பதே யதார்த்தம்.

எல்லா மதத்திலும் ,எல்லா இனத்திலேயும் , மனித நேயம்
மிக்கவர்களும், ஏகாதிபத்திய
எதிர்ப்பாளர்களும், சோசலீச
சிந்தனையாளர்களும் , பிறந்து
கொண்டே இருக்கிறார்கள்.

சிங்கள அரசு மருத்துவத்தை தனியார் மயமாவதை எதிர்த்த 
போராட்டத்தை இடதுசாரி சிந்தனை
கொண்ட மாணவர் அமைப்பு வீரம்
செறிந்த போராட்டத்தை நடத்தி
வருகிறது.

அந்த போராட்டத்தின் முன்னணி
தளபதியாக பவுத்த துறவியான
27 வயதே நிறம்பிய
யாழ்பாணத்தை சேர்ந்த பவுத்த
துறவி. Sugathananda Tempitiya
போராடி வருகிறார். அவர் 
மருத்துவ கல்லூரி மாணவர்.
என்பதையும் தாண்டி "சே குவே வின் வாரிசாகவே பார்க்கி்றேன்.

 

அவரின் பிரச்சாரமும் , போராட்ட களத்தில் நிற்கும் துணிவும்,
சி்றை செல்லும் நெஞ்சுரமும்,
ஊடகங்களின் மூலம் அ்றிந்தேன்.

அவருக்கு இன்று பிறந்த நாள்
என்று அறிந்த போது ஒரு போராளி யோடு கைகுலுக்கும் நிறைவை
அடைந்தேன்.

இந்த இனிய நாளில் பல்லாண்டு
வாழ்க என வாழ்த்துவதோடு.....
அவரை பாதுகாக்கும் முயற்சிகளை
அங்கே உள்ள இடதுசாரி அமைப்புகள் எடுக்க வேண்டும்.

 

மணிவண்ணன் மணி 

2007 மார்ச் 5ம் திகதி அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் அப்போதைய தெற்காசியா தொடர்பிலான அரசாங்க செயலாளர் ரொபட் ஓ ப்ளெக்கிற்கும் அப்போதைய இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்குமிடையில் ஒப்பமிடப்பட்டது. அவர்கள் இருவரும் பத்து வருடங்களுக்கு முன்னர் ஒப்பமிட்ட ஒப்பந்தம் சம்பந்தமாக ஒரு தசாப்தம் கடந்த பின்பு இப்போது கதைப்பதற்கு என்ன காரணம் என்பதில் உங்களுக்கு சந்தேகம் எழலாம். காரணம் இதுதான். இவ்வொப்பந்தம் பத்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் ஒப்பமிடப்பட்டதுடன், 2017 மார்ச் 5ம் திகதி ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. கடந்த அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தில் ஒப்பமிடும்போது அதற்கு எதிராக கூப்பாடு போட்ட இன்றைய அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் காலாவதியான ஒப்பந்தத்திற்கு உயிரூட்டுவதற்காக அதில் புதிதாக ஒப்பமிட தயாராகின்றனர். அது மாத்திரமல்ல, 2017 ஜூன் 21ம் திகதி பிரதமர் கூறியதற்கமைய இம்முறை காலவரையறையின்றி எப்போதும் செல்லுபடியாகும் விதத்தில் ஒப்பந்தம் தயாரிக்கப்படுகின்றது. இந்த ஒப்பந்தம் என்ன?

இது ACSA என சுருக்கமாக அறியப்படும் சுவீகரித்தல் மற்றும் சேவைகள் பரிமாற்ற ஒப்பந்தம்,  Acquisition and Cross-Servicing Agreement வகை ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கிடையே யுத்த நடவடிக்கைகளின்போது வசதிகள் செய்து கொடுப்பது சம்பந்தமான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் ஊடாக ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு யுத்தத்தின்போது மிலிடரி ஒத்துழைப்பு வழங்குவதற்கான கடப்பாடு இல்லாதபோதிலும் உணவு, மருந்துகள், மருத்துவ சேவை, கப்பல் மற்றும் விமானங்களை பழுது பார்க்கும் சேவை, எரிபொருள் போன்ற அடித்தள வசதிகளை வழங்குவதற்கு கட்டுப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு ஒரு வரலாறு உண்டு. ஆரம்பத்தில் நேட்டோ நாடுகளுக்கு மத்தியில் மாத்திரம் இருந்த பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தமான NATO Mutual Support Act என்ற ஒப்பந்தமே இருந்தது. அந்த ஒப்பந்தம் நேட்டோ நாடுகளுக்கிடையே இருந்ததோடு, ஒரு நாடு யுத்தத்தில் 1992, 1994 மற்றும் 2003 ஆகிய வருடங்களில் ஒவ்வொரு முறையும் திருத்தப்பட்டதோடு, அத்திருத்தங்களின் ஊடாக நேட்டோ அல்லாத நாடுகளுடனும் அடித்தள வசதிகளை பரிமாறிக் கொள்வதற்கு இடமளிக்கப்பட்டது. அதன் பின்பு இவ்வொப்பந்தம் ACSA என மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட பின்பு சுமார் 78 நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்திற்கு வந்தன.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றை முன்னிலை சோஷலிஸக்கட்சி இன்று (11) நடத்தியது. இதன்போது அக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் துமிந்த நாகமுவ, இந்திரானந்த சில்வா மற்றும் புபுது ஜயகொட ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் சம்பந்தமாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் சார்பில் கல்விச் செயலாளர் தோழர் புபுது ஜயகொட தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம்:

“தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்திராத போதிலும் தற்போதைய தகவல்களுக்கமைய அது சம்பந்தமாக கருத்து தெரிவிக்க முடியும். சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்துள்ளன. என்றாலும் அந்த உள்ளுராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவது யார் என்பது குறித்து தெளிவில்லாத நிலை உருவாகியுள்ளது. இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும் வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளின்படி 42 வீத வாக்குகள் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை வழங்கும் குழு பெரும்பான்மை வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பது தெரிகின்றது.

2015ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை நிராகரித்து வாக்களித்த மக்கள் ரணில் - மைத்திரி கூட்டணியிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார்கள். இப்போது இந்த கூட்டரசாங்கம் நிராகரிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்போவதையே இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனை மிகப் பாரதூரமான நிலைமையாகவே நாம் காண்கிறோம். 2015ல் மஹிந்த ராஜபக்ஷவை படுதோல்வியடையச் செய்த மக்கள்தான் தற்போதைய அரசாங்கத்தையும் அதிகாரத்திற்கு கொண்டுவர வாக்களித்தார்கள். நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அந்த அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தன. மூன்று இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ரத்துபஸ்வல மக்களின் போராட்டம், ரொஷான் சானக என்ற தொழிலாளர்- தோழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கட்டுநாயக சுதந்திர வர்த்தக வலய தனியார்துறை தொழிலாளர்களின் போராட்டம், சிலாபத்தில் அந்தோனி என்ற மீனவத் தோழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மீனவ மக்களின் போராட்டம், சானக மற்றும் சிசித ஆகிய இரு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட கல்வி உரிமைகளை பாதுகாக்கும் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டம் ஆகியவற்றை ராஜபக்ஷ அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு அடக்கியதை நீங்கள் அறிவீர்கள்.

இராமாயணத்தில் கும்பகர்ணன் பிரமதேவரிடம் நித்தியத்தவம் வேண்டும் என கேட்க எண்ணி, நா புரண்டு நித்ரத் தவம் கேட்டதால் வாழ்நாள் முழுவதும் உறங்கிக் கொண்டிருக்கும் தவத்தினை பெற்றான். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சாப்பாட்டிற்கு மட்டும் கண் விழிப்பான். இந்த கூட்டமைப்பு யாரிடம் வரம் பெற்றார்களோ தெரியவில்லை. வருடக் கணக்கில் தூங்கிவிட்டு தேர்தல் காலங்களில் மட்டும் எழுந்திருப்பார்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு மக்களைப் பற்றிய கருசனை வரும்.., தமிழ்மக்களின் அரசியற் தீர்வு ஒன்று தேவை பற்றிய சிந்தனை ஞாபகத்திற்கு வரும்.., மக்களோடு பேச விருப்பம் வரும்.

இப்போது இடைக்கால வரைபு பற்றி விவாதிக்கிறார்களாம், ஒற்றையாட்சி நாடு தவறு, ஒருமித்த நாட்டிற்குள் சமஷ்டி.., அதிகாரப்பகிர்வு பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றார்களாம். இதைப் பற்றி மக்களோடு பேசவே இவர்களுக்கு பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் தேவைப்பட்டிருக்கு. இனி அடுத்த தேர்தல் வரை இது பற்றி விவாதிப்பார்கள். அடுத்த தேர்தல் நெருங்கியதும் கும்பகர்ணன் சாப்பிட எழுந்தது போல் திடீரென மக்கள் முன் தோன்றி சமஷ்டி வரைபின் இறுதிப் பக்கத்தினை முன்வைப்பார்கள். முதுகெலும்பு இல்லாத ஊடகங்களும் விவாதங்களை நிகழ்த்தி இன்றைய கேள்வியை அன்றைய நிலைக்கு தக்க மாதிரி மாற்றிக் கேட்டு மக்களை முட்டாளாக்கி தங்கள் பிழைப்பினை தக்கவைத்துக் கொள்வார்கள். மக்களுக்கும் ஏமாற்றம் பழக்கப்பட்டு போனதால் மக்கள் எதையும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுவார்கள். மக்களின் இந்த மௌன நிலை தான் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களிற்கும் கிடைத்திருக்கும் பெருங்கொடை.

முதலாளித்துவ சமூக உச்சத்தில் இருக்கின்ற பெண்கள் மேலான பாலியல் வன்முறைகள் குறித்த தகவல்கள், அங்குமிங்குமாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. இதில் ஈடுபட்டவர்கள் முதலாளித்துவ அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்.

இந்த சமூகப் பின்னணியில் குற்றங்கள் நடந்தவுடன், அதைச் சட்டரீதியாக எதிர்கொண்டு தண்டிக்க முடியாத பெண்களாகவே, பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்திருக்கின்றார்கள்.  இது எமக்கு எதை எடுத்துக் காட்டுகின்றது? முதலாளித்துவம் குறித்தும், அதன் புனித நீதி குறித்த பொய்மையை அம்பலமாக்கி இருக்கின்றது.

முதலாளித்துவ சமூக அமைப்பின் உச்சத்தில் உள்ள பெண்களைக் காட்டி, அவர்களைச் சுதந்திரமானவர்களாகவும், பெண் விடுதலையைப் பெற்றவர்களாகவும் முன்னிறுத்துகின்ற பொதுப் பின்னணியிலேயே, பாலியல் குற்றங்களும் அவற்றை இந்தப் பெண்களால் தண்டிக்க முடியாத அவலமும் வெளிவந்திருக்கின்றது.

முதலாளித்துவ ஜனநாயகம் குறித்த கற்பனைகளை எல்லாவற்றையும் இது போட்டு உடைத்து இருக்கின்றது. அதேநேரம் ஆணாதிக்க முதலாளித்துவ சமூக உச்சத்திற்கு பெண்கள் முன்னேறுவதற்கு, பாலியல் ரீதியாக ஏதோ ஒரு வகையில் இணங்கியாக வேண்டிய, பொது எல்லையில் தான் பெண் வாழவைக்கப்பட்டு இருக்கின்றாள் என்பதை அம்பலமாக்கி இருக்கின்றது.

யார் "தூய கரங்கள் தூய நகரங்கள்" என்ற கோசத்தை முன்வைத்து வாக்கு கேட்கின்றனரோ, அவர்கள் சமவுரிமை இயக்கத்தின் பெயரிலும் இன்று வாக்கைக் கோருகின்றனர். (பார்க்க அவர்களின்  துண்டுப்பிசுரங்களை) இவர்கள் எப்படிப்பட்ட போலியான மோசடிப் பேர்வழிகள் என்பதும், கறைபடிந்த அரசியல்வாதிகள் என்பதும், இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகின்றது. இவர்கள் முன்வைக்கும் "தமிழ் தேசியம்" கூட, இதைப் போன்ற வாக்குப் பெறுவதற்கான பித்தலாட்டத்தாலானதே. மக்களை ஏமாற்றி வாக்குப் பெறுவதற்காக எதையும் செய்யவும், மக்களை ஏமாற்றவும் முனைகின்ற முடிச்சு மாறிகளே இவர்கள்.

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைக்காக சமவுரிமை இயக்கத்தின் நேர்மையான கடந்தகால போராட்டத்தைத் தமதானதாகக் காட்டி அறுவடை செய்ய எண்ணும் போது, அவர்களிடம் நேர்மையான அரசியல் எதுவுமில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. பிறர் மக்களுக்காக நடத்திய போராட்டத்தைத் திருடி, அதை தமதானதாக இட்டுக்கட்டிக் காட்டுவதைத் தவிர, மக்களுக்காக நடைமுறையில் போராடுகின்ற எதையும் அவர்களால் முன்வைக்கவும் - காட்டவும் முடிவதில்லை. இங்கு சமவுரிமை இயக்கத்தின் போராட்டம், மக்கள் மத்தியில் தனித்து நிற்பதுடன்;, சமூக ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தி நிற்பதால், அதை தமதானதாகக் காட்ட முற்படுகின்றனர்.

ஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை அணுகும்போதெல்லாம், இயல்பு மொழியானது சிங்களமாகவே உள்ளது. நீmgங்கள் கூகுள் வரைபடத்தை பயன்படுத்தும் போதெல்லாம், சாலைகள் மற்றும் இடங்கள், இப்போது புகழ்பெற்ற கட்டிடங்களின் பெயர்கள்கூட சிங்களத்தில் தான் தரப்படுகிறது. யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள சுண்ணாகம் என்கிற இடத்தை தேடினால் கூகுள் வரைபடம் அந்த இடத்தின் பெயரை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்து ஹ_ணுகம (சுண்ணாம்பு ஊர்) என்று தெரிவிக்கிறது - பல மட்டங்களிலும் தவறானது. தமிழ் இடங்களின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை, யாழ்ப்பாணம் யாப்பன எனும் சிங்களப் பெயரைப் பெறுகிறது, அதே சமயம் அங்கிருந்து ஒரு கல்லெறியும் தூரத்தில் உள்ள நல்லூருக்கு மட்டும் தமிழ் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் கூட கூகுள் வரைபடங்களில் ஒரு சேரிடத்தை குறித்து, அங்கு செல்வதற்கான ஓட்டுனர் வழிமுறைகளைப் பாருங்கள்;. உதாரணத்திற்கு  நான் வசிக்கும் இடத்தில் இருந்து கொழும்பில் ஒரு இடத்தை அடையவேண்டி கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தினால் கிடைக்கும் அறிவுறுத்தல்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம் கலந்த ஒரு விசித்திரக் கலவையாக உள்ளது - நான் செல்லவேண்டிய ஒரு பாதை ஆங்கிலத்தில் சொல்லப்படும் அதேவேளை மற்றொரு அறிவுறுத்தல் முற்றிலும் சிங்களத்தில் தரப்படுகிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களில் சிங்களத்தில் உள்ள எழுத்துக்களை சரளமாக வாசிக்க முடியாதவர்கள் ஏன் இதில் மொழிமாற்றம் செய்வதற்கான தெரிவு இல்லை என்று சொல்லி தங்கள் விரக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

பாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை

போராட அணிவகுப்போம்.

நாங்கள் இன்றுவரை 45 சதுர அடிக்கும் குறைவான லைன் அறைகளிலேயே வாழ்கின்றோம். எமது முந்தைய தலைமுறையினர் அனைவரும் இங்குதான் பிறந்தார்கள், இந்த லைன் அறைகளிலேயே மடிந்தார்கள். எமது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் இப்படித்தான் வாழ வேண்டுமா? இன்னும் எத்தனை தலைமுறைகள் இப்படியே வாழ வேண்டும்.

புகையிரதப் பாதைகளை அமைத்ததும், நெடுஞ்சாலைகளை அமைத்ததும் எமது மூதாதையரின் கரங்களே. அவர்கள் சிந்திய இரத்தம், வியர்வை, கண்ணீரினால் ஆயிரக்கணக்கான கோப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், இரப்பர் தோட்டங்கள் செழித்து வளர்ந்தன. அந்தத் தோட்டங்களுக்கு உரிமையுடைய கம்பனிகளின் துரைமார்களுக்கு கொழும்பில் கட்டப்பட்ட மாளிகை போன்ற வீடுகள் உள்ளன. உல்லாச வாகனங்கள் உள்ளன. அது மட்டுமல்ல, எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த அமைச்சர் மற்றும் பிரதானிகளின் சுகபோக வாழ்விற்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், வீடு கட்டிக்கொள்ள எமக்கு ஒரு காணித்துண்டும் கிடையாது. குடியிருக்க வீடு கிடையாது. தண்ணீர் கிடையாது. கழிவறைகள் கிடையாது. போக்குவரத்து வசதிகள் இல்லை. பிள்ளைகளுக்கு படிக்க வசதியில்லை. போசாக்கின்மையால் நோய்களுக்கும் குறைவில்லை.

மக்களின் அன்றாட சமூகப் - பொருளாதார வாழ்வுடன் ஓன்றுபட்டு ஒன்றி வாழ்வதும் - போராடுவதுமே அரசியல். இந்த வகையில் சமூக செயற்பாட்டாளனாக மக்களுடன் மக்களாக தன்னை அர்ப்பணித்து ஒன்றி வாழாத ஓருவன், தேர்தல் மூலம் வெற்றி பெற்று மக்களுக்கு பணியாற்றப் போவதாகக் கூறுவதே மோசடியாகும். இதுதான் இன்று தேர்தல் அரசியலாக இருக்கின்றது. இவர்களைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது தேர்தலாகவும், அதில் வெற்றி பெறுவதே சமூக சேவையாகவும் இட்டுக் காட்டுகின்றனர். இந்த அரசியல்  பின்னணியிலேயே, மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதையே ஜனநாயகமாகவும் காட்டுகின்றனர்.

இன்று உள்ளுராட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக ஏட்டிக்குப் போட்டியாக களமிறங்கி இருக்கின்றவர்களில் 99.9 சதவீதமானவர்கள், மக்களின் அன்றாட வாழ்வியல் சார்ந்த சமூக நடைமுறைகளில் ஈடுபடாதவர்கள். தேர்தல் மூலம் கிடைக்கும் அரசு அதிகாரங்கள் மூலம் மக்களை மொட்டை அடிக்கவும், தங்கள் சொந்த வாழ்க்கையை செழுமைப்படுத்தவுமே களமிறங்கி இருக்கின்றனர். தேர்தல் மூலம் வெல்வது என்பது, இலகுவாக பணத்தை சுருட்டிக் கொள்வதற்கான இடமாக மாறி இருக்கின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE