Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

உலகளாவில் வேகமாக பரவுகின்ற கொரோனா வைரஸ், அரசுகளின் பொறுப்பற்ற - செயற்பாடற்ற மக்கள்விரோத சந்து பொந்துகளில் புகுந்து, பலமடங்காக வேகம் பெற்று பரவி வருகின்றது. பாரிய உயிரிழப்புகளை நோக்கி பயணிக்கும் கோவிட் 19 வைரஸ் தாக்குதலை, தாராளமய தனியார்மயம் தடுத்து நிறுத்த எதையும் செய்யவில்லை. தாராளமய தனியார்மயத்திற்கு பணத்தை கறக்கவும் - திருடவுமே தெரியும்.

அரசுதுறை மருத்துவத்தால் மட்டும்தான் மக்களுக்கு மருத்துவம் செய்ய முடியும் என்ற உண்மை, உலகெங்குமான நிகழ்ச்சிநிரலாகி வருகின்றது. அரசுதுறை என்றால் செயலற்றது, இலஞ்சம் நிறைந்தது, சமூகப் பொறுப்பற்றது, ஊழல் நிறைந்தது என்று, தனியார்மய ஆதாரவாளர்கள் கூறுகின்ற சில உண்மைகளால் மூடிய பொய்யை, அரசுதுறை தவிடுபொடியாக்கி வருகின்றது. தாராளவாத தனியார்மயமாக்க அரசு தான் திட்டமிட்டு இலஞ்சத்தையும், ஊழலையும் அரசுதுறையில் அனுமதித்து, அதை செயலற்றதாக்குகின்ற சதிகளையும், தனியார்மயத்தில் ஊழல், இலஞ்சம் கிடையாது என்று கூறி, அரசுதுறையை திட்டமிட்டு தனியார் மயமாக்குகின்ற உண்மையையும், அரசுதுறை தனது செயலாற்றல் மூலம் மெய்ப்பித்து வருகின்றது.

சமூகம் குறித்த அக்கறையோ, மனிதாபிமானம் குறித்த சிந்தனைமுறையோ அரசுகளிடம் கிடையாது. சுயநலமாகச் சிந்தி, கொள்ளையிடு, இதைத்தான் மனித நடத்தையாக – மனிதப் பண்பாக அரசு முன்வைக்கின்றது. இதற்கு எதிராக தான் மருத்துவமனைகளில் மருத்துவத்துறைச் சேர்ந்தவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றனர்.

இப்படி உண்மைகள் இருக்க, பதுக்கல் வியாபாரிகளையும், விலையைக் கூட்டி விற்கும் முதலாளிகளையும் இனம் கண்டு கொதிக்கும் மனம், அரசுகளும் பன்னாட்டு முதலாளிகளும் கூட்டாக தொடங்கியுள்ள பகல் கொள்ளையைக் கண்டுகொள்ள முடிவதில்லை.

வைரஸ்சை அடுத்து மதவாதிகள் தங்கள் முகமூடிக்கே செயற்கை முகமூடியை அணிந்தபடி, மூலதனத்தைப் பாதுகாக்கும் தங்கள் மதப் பணியை மீளத் தொடங்கியிருப்பது போல், அரசுகள் மற்றும் பன்நாட்டு முதலாளிகளை பாதுகாக்க துடியாத் துடித்து களத்தில் இறங்கியுள்ளனர்.

அமெரிக்கா ஒரு டிரிலியன் (100000 கோடி) டொலரை முதலாளிகளுக்கு வாரி வழங்கவுள்ள அறிவித்தலை விடுத்துள்ளது. இது பிரிட்டன் வருடாந்த வரவு செலவு தொகைக்குச் சமமானது. பிரான்ஸ் அரை டிரிலியன் (50000 கோடி) டாலரை முதலாளிகளுக்கு கொடுக்கவுள்ள அறிவித்தலை விடுத்துள்ளது. வைரஸ்சைக் காட்டி எல்லா அரசுகளும் பெரும் பன்னாட்டு முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து, மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் திட்டத்தை தொடங்கி இருக்கின்றது.

சீனாவை மிஞ்சும் மரணங்கள் - பல மடங்காக மாறுவதை மேற்குலகம் தவிர்க்க முடியாது. மருத்துவரீதியாக மக்களைக் கைவிடும் அறிவுரைகளும், "ஜனநாயக" வக்கிரங்களுக்கும் எள்ளளவும் குறைச்சல் இல்லை. கொரோனோவுக்கு எதிராக, மேற்கில் அரங்கேறி வருவது ஏகாதிபத்திய வக்கிரங்கள் தான்.

வைரஸ் தொற்று தொடங்கியது முதல் அதன் பரவலை கட்டுப்படுத்தும் கொள்கை எதையும் மேற்கு கையாளவில்லை. எந்த மருத்துவ தயார்படுத்தலையும் செய்யவில்லை. தொற்று இனம் காணப்பட்டவுடன் நேரத்துக்கு நேரம் தங்கள் முந்தைய திட்டத்தை மாற்றுவது – தடுமாறுவதுமாக காலத்தைக் கடத்திய பின்னணியில், மூடிமறைத்த "ஜனநாயக" வக்கிரங்களை காறி உழிழ்ந்தனர். ஊதிப் பம்மி பிணமாகக் கிடக்கும் மேற்கத்தைய நவதாராளவாத மருத்துவ முறையையும் - கொள்கையையும் கொண்டு, எதையும் செய்ய முடியாது என்ற உண்மையை மூடிமறைக்க, எத்தனை "ஜனநாயக வேசங்கள் - நாடகங்கள். கண்ணை மூடிக் கிடக்கும் பூனை போல், முதலாளிகளின் மடியில் படுத்துக்கிடந்து உலகைக் கனவு கண்டவர்கள், விழித்தெழுந்து பார்த்தால் ஒன்றுமே இருக்கவில்லை. உலகை கொள்ளை அடித்த பணத்தை குவித்து வைத்துக் கொண்டு, உலகை மேய்கின்ற வக்கிரத்துடன் வைரஸ்சை ஒழிக்கக் கனவு கண்டவர்கள், காற்றுப்போன பலூன் போல் பம்மிப் பம்மி கையை விரிக்கின்றனர்.

மேற்கு குறித்த கற்பனைகளை தங்கள் இயலாமையால் தகர்த்துக் கொண்டு இருக்கின்றனர். தங்கள் நாட்டின் வலிமை குறித்த மேற்கத்தைய போலி பிரமைகளையும் - பிம்பங்களையும், கொரொனோ தவிடுபொடியாக்கிக் கொண்டு இருக்கின்றது.

கொரொனோ வைரஸ் மக்களைக் கொல்வதுடன், மக்களை அரசியல் மயப்படுத்துகின்றது. தாராளவாத தனியார் மருத்துவக் கொள்கையை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது.

மக்களைத் தனிமைப்படுத்தி கோவிட் 19 (கொரோனோ வைரஸ்சை) கட்டுப்படுத்த அரசுகள் தவறுகின்ற, தாமதப்படுத்துகின்ற ஒவ்வொரு நிமிடம், முதியவர்கள் கொல்லப்படுகின்றனர். பலர் நோய்க்கு உள்ளாகின்றனர். மனவுளைச்சலுக்கு மனிதர்களை தள்ளிவிடுகின்றது.

இதை ஏன் அரசுகள் செய்கின்றன? அரசுகள் மக்களுக்கானதல்ல, மாறாக மூலதனத்துக்கானது என்ற உண்மைதான், எல்லா முடிவுகளையும் நிர்ணயம் செய்கின்றது. மக்கள் அரசு குறித்து, தங்கள் அனுபவவாதத்தில் இருந்து முடிவுகளை எடுக்கின்றனர்.

இந்த வகையில் வைரஸ்சுக்கு கொல்லப்படுபவர்களில் பெருமளவில் முதியவர்கள் என்பதால், அவர்களின் ஓய்வூதியத்தை திருட அரசு தனிமைப்படுத்துவதை தாமதப்படுத்துகின்றது என்று நம்புமளவுக்கு, அரசு குறித்த மனநிலை மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அரசுகளும், மூலதனமும் ஓய்வூதிய வயதை அதிகரிக்கவும், ஓய்வூதியத்தைக் குறைக்கவும் செய்யும் இடைவிடாத முயற்சியின் பின்னணியில் இருந்து, இந்தக் கருத்து உருவாகின்றது. மக்களின் உழைப்பில் உருவான ஓய்வூதிய நிதியை மூலதனம் கொள்ளையிடுகின்ற பொதுப் பின்னணியை புரிந்துகொள்ளும் அனுபவவாதம், கொரோனொ மூலம் மக்களைக் கொன்று ஒய்வூதியத்தை திருட முனைவதாக மக்கள் நம்புகின்றனர்.

இந்தப் பார்வை சரியானதா - உண்மையானதா என்பதை விளங்கிக் கொள்ள முன், இதையொத்த இன்னுமொரு உரையாடலை நான் கேட்க முடிந்தது.

08.03.2019 நான் உள்ளடங்க 15 பேர் கொண்ட கூட்டம் ஒன்று நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்த பின், கொரோனோ குறித்த பலரும் தங்கள் கருத்தை முன்வைத்து உரையாடினர். அப்போது சமூக மேடைகளில் பல்வேறு பொதுக் கருத்தை முன்வைக்க கூடிய ஒருவர் "இரயா நீங்கள் இடதுசாரி, உங்களுக்கு தெரியும்" சீனக் கம்யூனிஸ்ட்டுகள் 1960களில் முதியவர்களை சமூகத்துக்கு அவசியமற்றவராக அறிவித்து, கொன்றுவிட வேண்டும் என்று கூறியதாக - கூறியதுடன், சீனா முதியவர்களை கொல்ல கொரோனோவை உருவாக்கி இருக்க முடியும் என்ற கருத்துப்படக் கூறினார். அத்துடன் கம்யூனிச சீனாவில் ஓய்வூதியம் கிடையாது, முதுமை வரை உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.

எல்லைகளற்ற மூலதனம், எல்லையற்ற வைரஸ்சை எதிர்கொள்ள, சுயநலத்துடன் எல்லை வகுத்துக் கொண்டு இறங்கியதன் மூலம், கொரோனா (கோவிட் 19) வைரஸ் பரவவும் - மரணங்கள் நிகழவும் காரணமாகியுள்ளது. எல்லை வகுத்துக் கொண்ட சுயநலமானது, ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தது.

மருத்துவ ரீதியாக கொரோனா (கோவிட் 19) வைரஸ்க்கு மருந்து கண்டறியப்படவில்லை. ஒரேயொரு தீர்வு கொரோனா (கோவிட் 19) பரவுகின்ற முறையை கட்டுப்படுத்துவது தான். மனிதர்களை தனிமைப்படுத்துவது தான். கொரோனா (கோவிட் 19) வைரஸ் பரவியுள்ள எல்லா இடங்களிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டு, மனிதர்கள் தனிமைப்படுத்தப்படாத வரை, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. உற்பத்தியை நிறுத்துவதை தாமதப்படுத்திய, இன்னமும் அதைச் செய்யாத அரசுகளும், அரசுக் கொள்கைகளும், சிந்தனைமுறைகளும், மனித உயிர்கள் குறித்து அக்கறையற்றதாக இருக்கின்றது. மாறாக மூலதன நலன்களை முன்னிலைப்படுத்தி, மூலதனத்திற்காக மனிதனைப் பலியிடுகின்ற - மூலதன வெறிபிடித்த கும்பல்களின் ஆட்சியாகவே தங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. அரசுகள் மக்களில் இருந்து தனிமைப்பட்டு இருந்ததையும், இருப்பதையும் – யாராலும் மூடிமறைக்க முடியாது.

மூலதனத்தையே சதா கனவு காணும் அரசுத் தலைவர்களின் கோமாளித்தனமான - முட்டாள்தனமான முடிவுகள், தங்களது ஏகாதிபத்திய சந்தைக்கே எல்லையை உருவாக்கிவிட்டனர். இனி அதை திறப்பது கூட, ஒழுங்கிணைந்ததாக இருக்கப்போவதில்லை. அதாவது தனிமைப்படுத்தல் முறையானது வெவ்வெறு நாடுகளின் - வேறுபட்ட கால இடைவெளியில் - வேறுபட்ட தனிமைப்படுத்தும் முறைகளும் பிரச்சனைக்குரியதாக இருக்கின்றது. தனியுடமை சார்ந்த மூலதனத்தின் வரம்பற்ற இலாபவெறி உருவாக்கியுள்ள எல்லைகளும், நாடுகளும் .. அது தன்னை பாதுகாத்துக் கொள்ள இனம், சாதி, மதம், நிறம் என்று கட்டமைத்துள்ள குறுகிய எந்த வரையறைகளும், வைரஸ்சுக்கு கிடையாது. இதுதான் எதார்த்தம்.

கொரோனோ வைரஸ் முழு உலக மக்களையும் தாக்கினால் என்ன நடக்கும்? சீனா தரவுகளின் படி – அதாவது 3.5 சதவீத மரணம் நிகழுமெனில் 30 கோடி மக்கள் மரணிப்பார்கள். இத்தாலி மரண வீதப்படி குறைந்தது 60 கோடி மக்கள் மரணிப்பார்கள். மருத்துவ வசதி உள்ள பிராந்திய புள்ளிவிபரங்கள்; இவை. மருத்துவ வசதியில்லாத இடங்களில் மரணம் நிகழும் போது, அது 100 கோடியை தாண்டாது என்பதனை அறிவியல் ரீதியாக மறுக்க முடியாது. நோய் மீண்டும் மீண்டும் - இடைவிடாது தாக்கக் கூடியது. இது கற்பனையல்ல. ஏகாதிபத்திய அரசுத் தலைவர்கள் மக்களுக்கு மரணத்தை பரிசளிக்கும் மூலதனத்தின் எடுபிடிகளாக இருந்தபடி - தொடர்ந்த மரணத்தின் மேல் மூலதன அரசியல் நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

கொரோனோ வைரஸ்சின் பரவலுக்கும் - மனித உயிர் பலியிடலுக்குமான பின்னணியில், வெறிபிடித்த ஏகாதிபத்திய மூலதனங்களே இயங்குகின்றது. மூலதனம் படுக்கையில் வீழ்வதையும் - மரணிப்பதையும் விரும்பாத மூலதனங்கள்; - கொரோனோ வைரஸ்சின் பரவலைத் தடுக்க முனையவில்லை. மாறாக அலட்சியப்படுத்தியதுடன், தொடர்ந்தும் அலட்சியப்படுத்துகின்றனர். இன்று கட்டுக்கடங்காத உலக தொற்று நோயாக மாறியுள்ளது. ஏகாதிபத்திய அரசுகளால், இனி கொரோனோ வைரஸ்சை மூடிமறைக்க முடியாது போயுள்ளது.

பிற நோய்களின் மரண எண்ணிக்கைகளைக் கொண்டு கொரோனோ வைரஸ்சினால் மரணித்த எண்ணிக்கையைக் குறைத்து (போலிப் புள்ளி விபரங்கள்) மதிப்பட்டுக் காட்டிய அரசுகள், முழுமையாக கொரோனோ வைரஸ் தாக்கினால் உலக மக்கள் தொகையில் குறைந்தது 20 சதவீதமான மக்களைக் கொன்று விடும் என்ற உண்மையை மூலதனத்துக்காக குலைக்கும் அரசுகள் கண்டு கொள்ளவில்லை. மருத்துவ அறிவியல், மரணங்கள் குறித்து - அதன் பயங்கரமான உண்மையைக் கூறத் தொடங்கியதை அடுத்தே, மூலதனம் உற்பத்தியை நிறுத்த இணங்கியது. கொரோனா வைரஸ் உற்பத்தி நடவடிக்கைக்காக உழைக்கும் மக்கள் ஒருங்கிணையும் போதுதான் பரவுகின்றது என்பதால் - சுரண்ட முடியாத மூலதனத்தின் நெருக்கடியாக மாறுகின்றது.

கொரோனா வைரஸ்சின் பரவல் குறித்து, சீனா ஏகாதிபத்திய மூலதனமே முதலில் மூடிமறைத்ததுடன் - அதை அலட்சியப்படுத்தியது. அலட்சியப்படுத்தல் மூலம் கட்டுப்படுத்த முடியாத புதிய வைரஸ்சாக, சீன மூலதனம் வைரஸ்சையும் சந்தைப்படுத்தியது.

மக்களின் பீதியும் - மரணங்களும் எல்லை மீறிய போது, அதை சீன மூலதனத்தால் மூடிமறைக்க முடியவில்லை. சீனா மற்றும் சீனாவில் குவிந்துள்ள பிற ஏகாதிபத்திய பன்நாட்டு மூலதனம் நிலைதடுமாறத் தொடங்கிய போது, முழு சீன மூலதனமும் படுக்கையில் விழுவதைத் தடுக்க, அவசரமாக மூலதனத்துக்காக உழைக்கும் செயற்பாடுகளை நிறுத்தி கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. இது உலக மூலதனத்தில் பாரிய அதிர்வை ஏற்படுத்தியது உழைக்கும் மக்கள் மீதான கட்டுப்பாடுகள், சீன மக்கள் மேலான ஒடுக்குமுறை மூலம் கட்டமைக்கப்பட்டது. மக்கள் நலனில் இருந்து - கட்டுப்பாடுகள் கையாளப்படவில்லை, மூலதன நலனில் இருந்தே, கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட தேசத்தையும், தேசிய இனங்களையும் கொண்ட இலங்கையில், தேர்தல் அரசியல் என்பது மக்களை மேலும் இனவாதமாகி சிந்திக்கவும் - மோத வைப்பதுமே அரங்கேறுகின்றது. ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்கள் தலைமையை முன்வைத்து யாரும் வாக்குக் கேட்பதில்லை, மாறாக சுயநலம் பிடித்த ஒடுக்குவோரே இனவாதம் பேசி மக்களை பிரிக்கின்றனர். அதேநேரம் ஒடுக்குகின்ற தங்கள் முகமூடியை மூடிமறைக்க மதம், சாதி பிரதேசம் என்ற குறுகிய அடையாளங்களை முன்னிறுத்தி வேட்பாளரை நிறுத்துவதுடன் - சாதி, மத, பிரதேச ரீதியாக வாக்கைக் கோருகின்ற அளவுக்கு - தேர்தல் அரசியலால் மக்களை குறுக்கும் நெடுக்குமாக பிளந்துவிடுகின்றனர்.

இந்த குறுகிய மனித விரோதிகள் மத்தியில் இருந்து ஒளி தெரிவதாகக் கூறுகின்ற – காட்டுகின்ற, புலம்பல்களுக்கு குறைவில்லை. இதன் மூலம் சுயநலம் பிடித்த, தேர்தல் அரசியலை முன்வைக்கின்ற பிழைப்புவாதிகளின் பிழைப்புக்கு வழிகாட்டுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பில், யார் அது என்பதை தேர்ந்தெடுக்க கோருகின்றனர். அதில் கொஞ்சம் நல்லவராக, வல்லவராக, ஊழல் அற்றவராக பார்த்து தேர்ந்தெடுக்க கோரும் பன்னாடைத்தனம் - அறிவாக புலம்பப்படுகின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களில் இருந்து சிந்திக்கும் எவரும், இந்தத் தேர்தல் கூத்தாடிகள் மக்களை இனம், சாதி, மதம், பிரதேசம் என்ற பிரித்து - பிளந்து விடும் மனித விரோத கூத்துக்கு துணைபோக முடியாது. இந்த உண்மையை மக்களுக்கு சொல்லாத எவரும், மக்கள் நலனின் இருந்து சிந்திக்கவில்லை என்பதே வெளிப்படையான உண்மை.

கொரோனா (கோவிட்19) வைரஸ் ஏற்படுத்தும் மரணங்கள், மனிதகுலத்தை பீதியடைய வைத்திருக்கின்றது. கொரோனா (கோவிட்19) வைரஸ் தொற்றைக் குணப்படுத்த மருந்து இல்லை என்பது, மனிதனின் பொது அச்சத்துக்கான அடிப்படையாக இருக்கின்றது. அறிவியல் பூர்வமாக அணுகினால், அச்சப்படக் கூடியளவிற்கு வீரியம் மிக்கதல்ல. அறிவியல் பூர்வமானதும்; - சமூகக் கண்ணோட்டமற்றதுமான அணுகுமுறையின் பொதுத்தன்மையே, வைரஸ்சை எதிர்கொள்வதற்கு தடையாக இருக்கின்றது.

இந்தப் பின்னணியில்

1.வதந்திகளே கொரோனோ வைரஸ்சை விட ஆபத்தான நோயாகி, கொரோனாவை எதிர் கொள்ளும் மனிதப் பகுத்தறிவின் ஆற்றலை அரித்து வருகின்றது.

2.கொரோனா வைரஸ் குறித்த பயத்தை உருவாக்கி பொருளை வியாபாரமாக்கும் சுயநலவாதிகளும் - நோயை எதிர்கொள்ளத் தேவையான அடிப்படை பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்கும் சமூக விரோதிகளுமே - கொரோனாவை விட அதிக அபாயமானவர்கள்.

3.பரபரப்பு செய்திகளைப் பரப்பி பணம் சம்பாதிக்கும் விபச்சார ஊடகங்களே, கொரோனாவை பற்றிய அறிவியலற்ற வதந்திகளையும் - பொய்களையும் பரப்பி, மக்களை கொரோனா தொற்றுக்குள்ளாக்குகின்ற வைரஸ்சாக இருக்கின்றனர்.

கொரோனா (கோவிட்19) வைரஸ் குறித்து தெரிந்து கொள்வேண்டியது

காவிப் பாசிட்டுகள் தாங்கள் இந்து மதத்தையும் - அந்த மதத்தைப் பின்பற்றக்கூடிய மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறுகின்றனர். இந்து மதத்தை முன்னிறுத்துவதன் மூலமே, காவிகள் தங்கள் காப்பரேட் பாசிசத்தை மறைக்கின்றது. அதேநேரம் இந்து அல்லாத மக்களையும், பிற மதங்களையும் இழிவுபடுத்தி ஒடுக்குவதன் மூலம், பாசிசமே அரச அதிகாரமாகி விடுகின்றது.

காவிப் பாசிசம் இந்து அடையாளங்களை உயர்த்தி ஒடுக்கும் அதேநேரம், ஒடுக்கும் பாசிசமே இந்துக்களின் அரசாக நம்பவைக்கின்றது. இதன் மூலம் காவிகளின் அதிகாரமாக அரசு மாறுகின்றது. மத அடையாளங்கள் மூலம், ஒடுக்குமுறைகள் கட்டமைக்கப்படுகின்றது.

உதாரணமாக பார்ப்பனிய சிந்தனையிலான படிமுறை ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்ட சாதிய சமூக அமைப்பில், பார்ப்பான் சாதி ரீதியாக தன்னை உயர்ந்தவனாக காட்டிக்கொள்ள பூணூல் அணிந்து கொள்கின்றான். பூணூல் மூலம் தன்னை வேறுபடுத்திக் காட்டுகின்றான். இது போன்று எல்லா சாதிகளும் தனி அடையாளங்களைக் கொண்டு தங்களை தனிமைப்படுத்திக் காட்டுவதன் மூலம், அடையாளங்கள் கூட ஒடுக்குமுறையாக இருப்பதுடன் - ஓடுக்குமுறையாளன் ஒடுக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்த அடையாளங்களையும் திணிக்கின்றான்.

காவி காப்பரேட் பாசிசம் தான், இனி நாட்டின் பொதுச் சட்டம். இதை யாரும் மீற முடியாது. தங்கள் பாசிச வன்முறையிலான அதிகாரத்தைக் கேள்வி கேட்கவோ, சட்டத்தின் முன் கொண்டு வரவோ முடியாது.

இதையே டெல்லியில் காவிப் பாசிசம் செய்ததுடன், நாட்டின் சட்டத்தையும், நீதித்துறையையும் வெளிப்படையாகவே ஒளிவு மறைவு இன்றி குதறியிருக்கின்றது. இதன் மூலம் நாட்டின் சிவில் சட்டம் மற்றும் நீதி மீதான பொது மக்களின் பொது நம்பிக்கையை குழிதோண்டிப் புதைத்திருக்கின்றது. இதன் மூலம் காவிப் பாசிட்டுகள் இந்திய மக்களுக்கு அரசியல் பாடத்தைப் புகட்டியிருக்கின்றனர். சட்டமோ, நீதியோ, பொலிஸ் பாதுகாப்போ இனி பொது மக்களுக்குக் கிடையாது, அது காவிகளுக்கும் - காப்பரேட்டுக்களுக்கும் மட்டும்தான். இனி இந்திய முதலாளித்துவம் இந்தத் திசையில் தான் பயணிக்கும். பாசிட்டுகளுக்கு பாதுகாப்பு வழங்கி, பாசிட்டுகளை எதிர்ப்பவர்களை ஒடுக்கும். இது தான் சட்டமும் - நீதியுமாகிவிட்டது.

இந்த உண்மையை அரசு நடத்திய டெல்லி வன்முறை மூலம் – தொடர்ந்து வன்முறைக்கு பிந்தைய அரசின் நடத்தைகள் மூலமும், வெளிப்படையாக அறிவித்திருக்கின்றது. சட்டம், நீதி என்றும், அரசு நடுநிலையானது என்றும் யாரும் இனி உளற முடியாது.

ம.க.இ.க, மக்கள் அதிகாரம்.. போன்ற பல வெகுஞன அமைப்புகளுக்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், தொடர்ச்சியாக கட்சியை விட்டு விலகி வருகின்றனர் அல்லது கட்சியில் இருந்து விலக்கப்படுகின்றனர்.

கட்சியை விட்டு விலகியவர்கள் மட்டுமல்ல, தொடர்ந்தும் கட்சிக்குள் இருப்பவர்களும் கட்சியின் இன்றைய இந்த நிலைக்குப் பொறுப்பாளிகளே. அதாவது கட்சி எந்த வகையிலும் தன்னை நியாயப்படுத்த முடியாது என்பதுடன், விலகியவர்கள் இன்றைய இந்த நிலைமைக்கு பொறுப்பல்ல என்பது பொருள் அல்ல.

போராட்டத்தையே வாழ்க்கையாக வரிந்து கொண்டவர்கள், கட்சிக்குள் போராட முடியாதளவுக்கு கட்சி இருக்கின்றது என்றால், கட்சி ஜனநாயக மத்தியத்துவத்தை கொண்டிருக்கவில்லை என்பது தான் பொருள்.

பல பத்து வருடங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்க விடுதலையையும், சமூக விடுதலையையும் இலட்சியமாக கொண்டு போராடியவர்களை, ஒரே நாளில் அதை இல்லை என்று மறுப்பவர் கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது. அதேநேரம் ஈடு இணையற்ற தியாகங்கள் மூலம், தங்கள் வாழ்க்கையை மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்தவர்கள். தனிநபராக தங்களை முன்னிறுத்த, சமூகம் குறித்து புலம்பியவர்களல்ல.

கட்சியில் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம், மக்களின் விடுதலைக்கு தலைமைதாங்கி அதை வென்று எடுக்க முடியும் என்று எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள்.

இப்படி ஒன்றிணைந்தவர்கள் இன்று அனாதைகளாக, ஒருவருக்கு ஒருவர் எதிரியாக, மக்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக எதிர்வினையாற்ற முடியாது மனநோயாளியாக… தள்ளிவிடுவதை கம்யூனிஸ்டோ, கம்யூனிஸ்ட் கட்சியோ செய்ய முடியாது. நேற்று வரையான தோழர்களை, இன்று எதிரியாக சித்தரிப்பது என்பது அடிப்படையில் மனிதவிரோதக் கூறு. இதுவே தனிமனித வக்கிரமாக - முரண்பாடாக மாறி இருப்பது கம்யூனிஸ்ட்டுக்குரிய பண்பல்ல.

 

இனமுரண்பாட்டினால் கொல்லப்பட்டவர்களை நினைவுகொள்ளும் முகமாக, மனிதவுரிமை தினத்தை முன்னிறுத்தி மூன்றாவது ஆண்டு நிகழ்வு 07.10.2019 பாரிசில் நடைபெற்றது. 9 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்வாக அது சுருங்கிப் போனது. நடைபெறும் வேலைநிறுத்தமானது கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்திய போதும், சமூகத்துக்காக மரணித்த மனிதர்களை முன்னிறுத்தும் சமூக உணர்வின் பொது வீழ்ச்சியையும் பறைசாற்றி நிற்கின்றது. இந்த வகையில்

1.இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்வைத்து உருவான இயக்கங்கள், மக்களை ஒடுக்கும் அன்னிய நாடுகளின் கூலிப்படையாக மாறிய போது, இதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திப் போராடிய பலர் கொல்லப்பட்டனர். அவர்கள் தான் இயக்கங்கள் இருந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான - நேர்மையான தோழர்களாக இருந்தவர்கள். அவர்கள் தங்கள் உயிர்த் தியாகங்கள் மூலம், செவ்வணக்கத்துக்குரிய கதாநாயகர்கள். இன்று இவர்களுக்காக யாரும் அரசியல்ரீதியாக அஞ்சலி செய்வதில்லை. மனிதவுரிமை தினத்தில் இவர்களை முன்னிறுத்துவதன் மூலம், தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுடன் எமது அரசியலை முன்வைத்து வருகின்றோம்.

இந்தியப் பார்ப்பனியமானது திருவள்ளுவருக்கே காவியை அணிவிக்கின்றது. பகத்சிங்கை தூக்கிட்ட போது, கீதையையே கையில் வைத்திருந்ததாக கூறுகின்றது. தீண்டாமையே இந்து மதம் என்று கூறி இந்து மதத்தில் இருந்து விலகிய அம்பேத்கருக்கு, பார்ப்பனியம் காவி முலாம் பூசுகின்றது. இதன் மூலம் தான் அல்லாத அடையாளங்களை காவிமயப்படுத்தி பார்ப்பனியமாக்குகின்றது. இலங்கையில் வெள்ளாளியச் சிந்தனையோ ஒடுக்கியோரையும், ஒடுக்குவோரையும் "தோழர்கள்" என்றும், மரணிக்கும் போது "புரட்சிகர செவ்வணக்கம்" செய்வதன் மூலம், புரட்சிகர அரசியல் கூறுகளை அழிக்கும் வெள்ளாளியச் சிந்தனையாக மாற்றுகின்றது.

தங்களை முற்போக்குவாதிகள், ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள், தலித்தியவாதிகள், மார்க்சியவாதிகள் என்று கூறிக்கொண்டு, ஒடுக்கும் அரசியல் பின்னணியில் தவழுகின்ற பொறுக்கிகள் தான், இந்த வெள்ளாளியச் சிந்தனைமுறை மூலம் ஒடுக்குமுறையாளருக்கு உதவ முனைகின்றனர்.

மக்கள் மத்தியில் புரட்சிகர சிந்தனையோ, அதற்காக உண்மையான நேர்மையான நடைமுறையோ இருக்கக் கூடாது, மாறாக தங்களைப் போல் ஒடுக்குமுறையாளனுடன் பொறுக்கித் தின்னக் கோருகின்றனர்.

எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான ஒடுக்குவோரை அனுசரித்து, எண்ணிக்கையில் சிறுபான்மையினரான ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வதே "சமவுரிமை" என்கின்றார்.

இப்படி எண்ணிக்கையைக் கொண்டு ஜனாதிபதியான கோத்தபாய, இனவொடுக்குமுறையை நியாயப்படுத்தியிருக்கின்றார். இனவொடுக்குமுறையை இல்லாதாக்குவதை பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறும் கோத்தபாய, ஒடுக்கப்பட்ட இனங்கள் வாழும் பகுதியை அபிவிருத்தி செய்வதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கின்றார்.

அதாவது ஒடுக்கப்படும் இனங்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட வேண்டும் என்று சிங்கள மக்கள் கோருகின்றனர் என்று கூறி ஒடுக்குவதும், அதேநேரம் சிங்கள மக்கள் அபிவிருத்தி மூலம் மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறி, அதை ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு தரப்போவதாக கூறுவது பித்தலாட்டம். இதுதான் எதார்த்தம் என்று கொண்டாடுகின்றது, கோத்தபாயவுக்கு ஆதரவான ஒடுக்கப்பட்ட இனத்தின் எடுபிடிகள்.

அபிவிருத்தி என்ற பெயரில் அரங்கேறும் நவதாராளவாதத் திட்டங்கள், சிங்கள மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வியலில் மகிழ்ச்சியை வித்திட்டு இருக்கின்றதா!, எனின் இல்லை. மாறாக வறுமையையும், சூழல் சிதைவுகளையும், நுகர்வு வெறிப் பண்பாட்டையும், மகிழ்ச்சியற்ற உளவியல் சிதைவையும் கொடுத்திருக்கின்றது. இதைத்தான் ஒடுக்கப்பட்ட இனங்கள் கோருவதாகவும், அதை கொடுக்கப்போவதாகவும் கூறுகின்றார்.

இதைத்தான் கோத்தபாய "சமவுரிமை" என்கின்றார். ஒடுக்கும் பெரும்பான்மையின் கருத்தியலுக்கும் - அதன் நடைமுறைகளுக்கும், அடங்கியொடுங்கிய சிறுபான்மையின் சுய நடத்தையே "சமவுரிமை" என்கின்றார். அதாவது தங்கள் அரசு அதிகார சமூகப் பொருளாதார வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு, அதற்கு தாமாக இணங்கி வாழ்வதே சமவுரிமை என்கின்றார்.

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த பாராளுமன்ற பிரதிநிதிகள், ஒடுக்கும் தேசிய இனத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசில் அங்கம் வகிப்பது எதற்காக!? இது ஒடுக்கப்பட்ட மக்களின் கேள்வி.

அரசில் அங்கம் வகிப்பதற்கு அவர்கள் கூறுவது, தன் இனத்திற்கு, தன் மதத்துக்கு, தன் சாதிக்கு, தன் பிரதேசத்துக்கு சேவை செய்வதற்காகவே என்கின்றனர். இப்படி தமிழ், மலையக, முஸ்லிம் தரப்புகள் கூறுவதுடன், தங்கள் பதவி மற்றும் அதிகாரத்துக்காக எதையும் செய்ய தயாராகவும் இருக்கின்றனர்.

தங்கள் பதவிகள் அதிகாரங்கள் மூலம் தன் இனம் வாழும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யப் போவதாகவம், தன் இனத்திற்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாகவும் கூறுகின்றனர். இப்படி காலத்துக்கு காலம் அரசுகளுடன் இணைந்து செயற்படும், மலையக, முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள், தாங்கள் அரசுடன் சேரவிட்டால், எந்த அபிவிருத்தியும் நடந்திருக்காது என்கின்றனர்.

இப்படி அபிவிருத்தியாக காட்டப்படும் திட்டங்களும், அதில் கிடைக்கும் வேலைவாய்ப்பும், அரசு மற்றும் இனரீதியாக தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களின் தேசிய கொள்கையினால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக உலகளாவில் உற்பத்தி மூலதனத்தை விட நிதிமூலதனம் குவிந்து விட்ட நிலையில், குவிந்த பணத்திற்கான வட்டி மூலம் மேலும் கொழுக்க வைக்கும் உலகமயமாக்கல் கொள்கையே, நாட்டின் அபிவிருத்தியாக – வேலைவாய்ப்பாக முன்தள்ளப்படுகின்றது.

இங்கு தேசம், தேசியம், உழைத்து வாழும் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதன் அடிப்படையில், எந்த அபிவிருத்திக்கும் இடமில்லை. நிதி கொடுப்பவன் அதை அனுமதிப்பதில்லை. மக்களின் வரிப்பணத்தில் இருந்து வட்டியை மட்டுமின்றி, உற்பத்தியை மக்கள் நுகராது ஏற்றுமதி செய்ய வைப்பதன் மூலமும், வட்டி அறவிடப்படுகின்றது. இந்த கொள்ளைக்கு வரும் சர்வதேச நிதி தான், அரசும் அரசுடன் கூடிக்குலாவும் தரப்புகளும் முன்வைக்கும் அபிவிருத்தி. இந்த அபிவிருத்தி நடந்தால் தான், ஊழல் செய்யமுடியும். ஊழல் செய்வதற்காகவே அரசிடம் அதிகார பதவிகளை பெறுவது நடந்தேறுகின்றது.

கீழ்வரும் வரிகள், அதிமேதகு மாட்சிமைக்குரிய ஜனாதிபதி நந்ததேச கோ. ராஜபக்ஸ அவர்கள், பதவியேற்றபின் இந்திய ஊடகமான பாரத் சக்தி Shakti.in மற்றும் SNI -இக்கு வழங்கிய பேட்டியிலிருந்து எடுக்கப்பட்டவை. 

இவ்வசனங்கள் இலங்கையின் தேசியப்பிரச்சனை பற்றி அவரிடம் ஊடகவியலாளர் நிதின் கோக்கல Nitin A.Gokhale வினவியபோது உதிர்த்தவை.
தன்னை இனவாதி அல்ல என்று குறிப்பிடும் அவர், தேசியப்பிரச்னைக்கு ஒரே தீர்வு பொருளாதார அபிவிருத்தி மட்டுமே என திட்டவட்டமாகக் கூறுகிறார்.
எனக் கூறும் நந்தசேன ராஜபக்ஷ, உண்மையிலே இனவாத சிந்தனை அற்றவரென்றால் பின்வருமாறு கூறியிருக்க மாட்டார்.

//"நாங்கள் பவுத்தர்கள். எமது நாடு சமாதானமானது. நாங்கள் மிகவும் அமைதியான சமாதானமான தேசத்தவர். எமது வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. எமக்கேயான சமூகப் பெறுமானங்களும் மதிப்புகளும், வளமான கலாச்சாரமும் உள்ளது."//

அதாவது : அவருக்கு இனவாதம் இல்லை என்றால், இலங்கையை பவுத்த நாடு என்று அவர் கூறியிருக்க மாட்டார். இலங்கையை ஒரு பல்லின -பல மத - தேசமென்று கூறியிருப்பார். இங்கு அவர் இலங்கையை ஒரு பவுத்த சிங்கள தேசமென்றே வரையறுக்கின்றார். இது தான் சிங்கள-பவுத்த பேரகங்கார வாதத்தின் அடிப்படை. நந்தசேன கோ. ராஜபக்ஷவைப் பொறுத்தளவில், இலங்கை அல்லது ஸ்ரீ லங்கா பவுத்த- சிங்களவரின் நாடு. மற்ற இனங்கள் இங்கு சீவிக்க விரும்பினால், சிங்களவர்களை சீண்டாது, எந்த வித உரிமைகளையும் கோராது, சாப்பிடுவதற்கு மட்டும் வாயை திறந்தால் போதுமெனக் கூறுகிறார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE