Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

கார்ல் மார்க்ஸின் 200 வருட பிறந்தநாளை ஒட்டி மே மாதம் 31 ம் திகதி கொழும்பு புகையிரத கேட்போர் கூடத்தில் நடந்த கலந்துரையாடல் மற்றும்  «Karl Marx- Who is he, Who are We?» என்ற நூல் வெளியீடும் நடந்தது. நிகழ்வின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

.

 போராடுபவர்களை ஜனநாயகவாதிகள் என்று அரசுகள் சொல்வதில்லை, "சமூக விரோதிகள்" என்றுதான் எப்போதும் எல்லா அரசுகளும் சொல்லுகின்றது. தனியுடமையிலான வர்க்க சமூக அமைப்பைப் பாதுகாக்கும் அரசு, தனக்கு எதிரான அனைத்தையும் "சமூக விரோதமாகக்" காட்டியே ஒடுக்கும். இது தான் உலகளவிலான அரசுகளின் சூத்திரமும் பாத்திரமும்.

முதலாளித்துவத்தில் எந்தவொரு அரசும் சுதந்திரமானதல்ல. எவையும் மக்கள் அரசுகளுமல்ல. வர்க்க ஒடுக்குமுறையைக் கையாளும் உறுப்புத்தான் அரசு. ஜனநாயகத்தை கொண்டு மக்கள் போராடும் போது, மக்களை ஒடுக்கவே தான் அரசு இருக்கின்றது. அரசு குறித்து வரலாற்று ரீதியாக பார்த்தால், சமுதாயம் இணக்கம் காணமுடியாத வர்க்க முரண்பாடு தோன்றிய போது அரசு தோன்றியது. மக்கள் போராடுவதற்கு ஜனநாயகத்தை கையில் எடுக்கும் போது, ஜனநாயகத்தை அரசு மறுதளிக்கின்றது. அரச பயங்கரவாதத்தை ஏவுகின்றது. இதுதான் தூத்துக்;குடியில் நடந்தது.

இதன் விளைவால் அரசு குறித்த நம்பிக்கைகளும், ஜனநாயகம் குறித்த பிரமைகளும் தகர்ந்;து இருக்கின்றது. போராடிய மக்களை மட்டுமல்ல, உலகம் தளுவிய அளவில் மக்களை, அரசுகளுக்கு எதிராக அணிதிரட்டி இருக்கின்றது. வர்க்க அமைப்பின் இருப்பை கேள்விக்குள்ளாக்கிப் போராடும் ஜனநாயகத்தை, சமூகத்தில் இருந்தும் ஒழித்துக்கட்ட முனைகின்றது. இதை நடைமுறைப்படுத்தவும், மக்களைப் பிளக்கவும் "சமூக விரோதிகள்" குறித்து அரசு பேசுகின்றது.

இனத்தின் பெயரில் மனிதர்களையே பலியிட்ட வெள்ளாளியச் சிந்தனை தான், மாடுகளின்  பெயரில் மனிதர்களையே ஒடுக்க முனைகின்றது. வெள்ளாளிய சாதிவெறி பிடித்த இந்துத்துவவாதிகள், மாட்டை முன்னிறுத்தி ஊரைக் கூட்ட முனைகின்றனர். மாட்டை உண்பவனை "இழிவானவனாகவும் - புனிதம் கெட்டவனாகவும் - பிற மதத்தினராகவும் - இழி சாதியாகவும்" காட்டவும், கட்டமைக்கவும் முற்படுகின்றனர். முஸ்லிம்களை குறிவைத்து குலைக்கும் இனவாத தமிழ் தேசியத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு, தீண்டாமையை சமூகத்தில் திணிக்க முனைகின்றனர். பல்வேறு வித்தியாசமான மரபுகளையும் - பண்பாடுகளையும் கொண்ட தமிழ் மொழி பேசும் மக்கள் மேல், ஒடுக்கும் வெள்ளாளிய இந்துத்துவ சாதிய வாழ்வியலை வாழ்வாக்க கோருகின்றனர். மாட்டை உணவுக்காக உண்பவர்கள் எமது எதிரியான முஸ்லிம்களே ஒழிய, இந்து - தமிழ் மக்களல்ல என்று ஒரு பிம்பத்தை நடைமுறைக்கு கொண்டு வரமுனைகின்றனர். இதன் மூலம் மாட்டை உண்ணும் "இந்துவை" தீண்டத்தகாதவனாக மாற்ற முனைகின்றனர். 2009 க்குப் பின் சாதிய ஒடுக்குமுறை கூர்மையடைகின்ற இன்றைய பின்னணியில், வெள்ளாளிய இந்துத்துவமானது மாடு மூலம் தீண்டாமையை சமூகத்தினுள் கொண்டு வரமுனைகின்றனர்.

இங்கு மரபு சார்ந்த உழைப்பின் வளங்களையோ - இயற்கையையோ – அதில் வாழும் மாட்டையோ காப்பாற்றுவது இவர்களின் நோக்கமல்ல. மாட்டின் பெயரில் மக்களை மோதவிட்டு சுரண்டவும், ஒடுக்கும் வெள்ளாளிய சாதிய சமூக கட்டமைப்பை பாதுகாக்கவுமே முனைகின்றனர்.  இதன் மூலம் நாட்டைச் சூறையாடும் நவதாராளவாதத்தை, வழிபாட்டுக்குரியதாக்க முனைகின்றனர்.

பன்முகமான மரபு சார்ந்த மனித வாழ்வியலையும் - மனித அறங்களையும், ஜனநாயகத்தையும் மறுப்பதையே, கொள்கையாகவும் - நடைமுறையாகவும் கொண்ட இந்து மதமானது, சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சாதிய இந்து மதம் தான், மாட்டை முன்னிறுத்தி சாதிய தீண்டாமை என்னும் கொடூரத்தை மனிதர்கள் மீது திணித்தது. அதாவது மாடு உண்பதைக் கொண்டு, தீண்டாமையை சமூகத்தில் நிலைநிறுத்தியதாக தீண்டாமை குறித்த வரலாறு கூறுகின்றது. கடந்தகாலத்தில் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்ட வெள்ளாளிய வாழ்க்கை முறையை, மாட்டைக் கொண்டு மீண்டும் நிறுவ முனைகின்றனர். இதை நிறுவ முஸ்லிம் மக்கள் பகடைக்காயாக பயன்படுத்தப்படுகின்றனர்.

மாடு குறித்த வெள்ளாளிய இந்துத்துவ பித்தலாட்டங்கள்

பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் எமது பாடசாலையில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்முறை குறித்த செய்தியொன்று, பரபரப்பான கொசிப்புச் செய்தியாக்கப்பட்டு வருகின்றது. மறுபக்கத்தில் பாலியல் வன்முறை குற்றஞ்சாட்டப்பட்டவர் சட்டரீதியாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன என்பதை ஆராய்வது எமது நோக்கமல்ல. சமூகத்துக்கு எதிரான இது போன்ற குற்றங்களையும் - அதற்கான தண்டனைகளையும் கோரும் அதேநேரம், சமூகத்தின் (எமது) பொறுப்பற்ற தனமே குற்றங்களின் அடிப்படையாக இருப்பதை புரிந்துகொள்ளுவதன் மூலம், எதிர்காலத்தில் இதை தடுக்கும் அணுகுமுறைiயே எமது எதிர்வினையாக இருக்க முடியும்.

இந்த வகையில் பகுத்தறிவின்றி கண்ணை மூடிக்கொண்டு போற்றும் அதிகார வர்க்க கல்வி முறையையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும், மனிதன் பற்றிய மதிப்பீடுகளையும்.. கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. இன்று இருக்கும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் படிநிலை, பெண் குழந்தைகள் மீது அதிகாரத்தை ஆணுக்கு கொடுக்கின்றது. இந்த அதிகாரம் என்பதே அடிப்படையில் வன்முறையால் கட்டமைக்கப்பட்டது. இந்த அதிகாரமானது சமூகத்தில் பலவீனமான – குரலற்ற பெண்களை பாலியல் ரீதியான வன்முறைக்கான அத்துமீறலை அனுமதிக்கும் அளவுக்கு, அதிகாரம் பலமானதாக இருக்கின்றது. இந்த வகையில் கல்வி நிறுவனங்களின் கல்வி செயற்பாடுகள் குறித்து, சுயபரிசோதனைக்குள்ளாக்குவது அவசியம். இந்த வகையில் சில கேள்விகள்

1.கற்றல் - கற்பித்தல் முறை என்பது அதிகாரத்துக்கு உட்பட்டதா? ஜனநாயகபூர்வமானதாக இருக்க வேண்டுமா?

2.ஒழுக்கம் சட்டத்திலானதா? வெளித் தோற்றத்திலானதா? மனிதத் (சமூகத்) தன்மையிலானதா?

3.மனித உறவுகள் பொருள் வகைப்பட்டதா? அதிகாரத்தால் நிர்ணயிக்கப்படுவதா? சமூக உணர்வுகளாலானதா?

அதிபர், ஆசிரியர், மாணவர்கள் படிமுறை அதிகாரத்துக்கு கட்டுப்படுத்தப்பட்ட கற்றல் - கற்பித்தல் முறையாக இருக்கின்றதே ஒழிய, ஜனநாயகபூர்வமான பரஸ்பர உரையாடல் கொண்ட கல்வி முறையாக இருப்பதில்லை. அதிகார முறையிலான கல்வி முறை, பெண் மீதான அதிகாரத்தை மேலுள்ளவருக்கு இயல்பாகக் கொடுக்கின்றது. இந்த அதிகாரத்தை இலகுவாக பாலியல் வன்முறைக்கு பயன்படுத்துமளவுக்கு, சமூகம் பலவீனமாக இருக்கின்றது. அதாவது சமூக உணர்வு கொண்ட சமூகமாக, எதிர்வினையாற்றும் சமூகம் இல்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பன்னாட்டு மூலதனமானது, மனிதர்களை பலியெடுக்கின்றது. மக்கள் தமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக போராட, மூலதனம் சுரண்டுவதற்காக மக்களை கொல்லுகின்றது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூலதனம் சூழலை நஞ்சாக்கி, உழைக்கும் மக்களைச் சுரண்டும் மூலதனத்தின் குவிப்புக்காக, போராடும் மக்களையே அரசு கொன்று வருகின்றது.

சுரண்டும் வர்க்க உணர்வுடையவர்கள், மக்களை கொன்று குவிக்கும் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகின்றனர். மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மூலதனத்தை பாதுகாப்பதே, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட அரசு என்கின்றனர். இப்படி கொல்வது அரசின் சட்ட உரிமை என்கின்றனர். வர்க்க அரசின் மெய்நிலைத் தன்மையை முன்னிறுத்தி, மக்களை மூலதன ஆட்சிக்கு அடங்கி போகக் கோருகின்றனர்.

இப்படி சுரண்டும் வர்க்கத்தை பாதுகாக்கும் வர்க்க சர்வாதிகாரமே அரசு என்பதை, தூத்துக்குடி சம்பவம் உலகறிய பறைசாற்றி இருக்கின்றது.

அமைதியாக 100 நாட்கள் ஜனநாயக வழிகளில் போராடிய தமிழ்நாட்டு மக்கள், தங்கள் வரலாற்றில் காணாத அரச வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். மக்களைப் பிளக்கும் சாதி – மதம் - இனம் - பால் கடந்து தமது சொந்த வாழ்வுரிமைக்காக, சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக அணிதிரண்டு நின்ற போராட்டத்தை ஒடுக்கும் அரச பயங்கரவாதத்தை, அனுபவ ரீதியாக எதிர்கொண்டு நிற்கின்றனர்.

குறி பார்த்துச் சூடும் மூலதனத்தின் கூலிப்படைகள் நடத்திய வெறியாட்;டத்தில், பலர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். முன்னணியாளர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

டென்மார்க்கில் நடைபெற்ற ஒன்று கூடல்..!

டென்மார்க் சம உரிமை இயக்கத்தினால் சனிக்கிழமை (19.05.2018) கொல்ஸ்ரபோ நகரில் ஒன்று கூடல் ஒன்று நடாத்தப்பட்டது. இந்த ஒன்று கூடல் நிகழ்வில் பல தமிழ், சிங்கள மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையினையும் வளர்தெடுப்பதே இந்த ஒன்று கூடலின் முக்கிய நோக்கமாகும். கலை நிகழ்வாக சிங்கள தமிழ் பாடல்கள் இடம்பெற்றன. 

சுவையான உணவு, தேனீர், சிற்றூண்டிகள், சிறுவர்களின் விளையாட்டு என ஒன்று கூடல் நிகழ்வு கூடியிருந்த மக்களுக்கிடையிலான நல்ல புரிந்துணர்வோடு சிறப்பாக நிகழ்ந்தது. 

 

சமஉரிமை இயக்கம்

டென்மார்க்.

 

படங்கள் இணைப்பு

படங்களின் மேல் அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்

அரபு பிராந்தியத்தில் மேலாண்மையை இறுக்குவதற்கான அமெரிக்காவின் சதியே, பலஸ்தீன மக்களின் மீதான புதிய ஒடுக்குமுறையாக பரிணமிக்கின்றது. ஐ.நா தீர்மானத்துக்கு முரணாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் இஸ்ரேல் தனது தலைநகரை கொண்டு செல்ல, அமெரிக்கா முதல் காலடியை வைத்திருக்கின்றது. இதை எதிர்க்கும் பலஸ்தீன மக்களை கொன்று குவிக்கின்றது. ஈரானை ஆக்கிரமிக்க விரும்பும் அமெரிக்க மூலதனத்துக்காக, ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நடத்துகின்றது. இவை அனைத்தும் அமெரிக்காவின் மேற்பார்வையில் நடந்தேறுகின்றது. இவை எதற்காக!?

இஸ்ரேல் என்ற நாட்டை மேற்கு ஏகாதிபத்தியங்கள் உருவாக்கியதே, தங்கள் பொருளாதார நலன்களை பாதுகாக்கவே ஒழிய. 2ம் உலக யுத்தத்தில் கொல்லப்பட்ட யூத மக்களின் மேலான அனுதாபத்தில் அல்ல. அமெரிக்கா தலைமையிலான மேற்கு ஏகாதிபத்தியங்கள்,  சென்ற நூற்றாண்டில் மூலதனத்தின் ஆதாரமாக இருந்த எண்ணை வயல்களை கட்டுப்படுத்தவும், தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருக்கவுமே, இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி, அரபுலகில் புதிய முரண்பாடுகளுக்கு வித்திட்டது.

இதன் மூலம் 2ம் உலக யுத்தத்தின் பின்னான காலனிகளுக்கு எதிரான அரபுலக போராட்டங்களை மழுங்கடிக்க முடிந்தது. மேற்கின் மூலதனத்திற்கு ஆதாரமாக திகழ்ந்த எண்ணையை தங்கள் கட்டுபாட்டில் தக்கவைக்க முடிந்தது. அரபுலகில் காலனிகளுக்கு எதிராக நடந்த தேசியப் போராட்டங்கள், வர்க்கப் போராட்டங்களில் இருந்து மூலதனம் தப்பிப் பிழைக்க முடிந்தது. குறிப்பாக அரபு நாடுகளில் எண்ணை வளம் சார்ந்து, ஏகாதிபத்திய மூலதனத்துக்கு எதிரான தேசிய அரசுகளாக உருவாகுவதைத் தடுக்க, மக்களை ஏமாற்றும் பொம்மையாக இஸ்ரேல் என்ற புதிய நாட்டை பலாத்காரமாக அரபுலகில் திணித்தது.

பலஸ்தீன மக்களின் நிலத்தை ஆக்கிரமித்ததன் மூலம், பிராந்தியத்தில் புதிய முரண்பாட்டை முன்னுக்கு கொண்டு வந்தது. இதற்காக யூத மத அடிப்படைவாதத்தைக் கொண்டு, யூத மக்கள் ஓருங்கிணைக்கப்பட்டனர். அரபு பிராந்தியத்துக்கு எதிரான இஸ்லாமிய வெறுப்புடன் இவை அனைத்தும் நடந்தேறியது. பலஸ்தீன மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னணியில், மக்களை வகைதொகையின்றி மேற்கின் கூலிப்படையான இஸ்ரேல் கொன்று குவித்தது. மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்ததன் மூலம் அகதியாக்கப்பட்டு மக்கள், எல்லை நாடுகளில் தஞ்சமடைந்தனர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தமானது பிராந்திய நாடுகளுக்கு எதிரானதாக மாறி, யுத்தங்களுக்கும் இட்டுச் சென்றது. இதன் மூலம் பிற நாடுகளின்  நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது.

ஒருவர் பலிகொடுக்க மற்றவர் பலியெடுக்க நடந்த இறுதி யுத்தமானது, மனித அழிவுகளையும் - அவலங்களையும் கொண்டது. பல ஆயிரம் மக்கள் கொல்லப்படவும், தங்கள் உடல் உறுப்புகளை இழக்கவும் காரணமாகியது. பலர் காணாமலாக்கப்பட்டனர். சரணடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் இல்லாமல் போனது. பெண்கள் பலர் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு உள்ளானார்கள். கட்டாயப்படுத்தியும், கடத்தியும் சென்று யுத்தமுனையில் கொல்லப்பட்டவர்களின் துயரங்களால் நிரம்பியது. பலவந்தமாக யுத்தமுனைக்கு கொண்டு செல்லப்பட்டு, காணாமல் போனவர்களின் துயரங்களாலானது. யுத்தமுனையில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட போது கொல்லப்பட்டவர்களின் துயரங்கள் நிறைந்து இருக்கின்றது. சித்திரவதைச் சிறைக்கைதிகளாக இருந்து காணாமல் போனவர்களின் துயரங்களால் நிறைந்தது. தாய் தந்தையை இழந்த குழந்தைகளின் அவலங்களாலானது. தங்கள் ஆண் துணையை இழந்த பெண்களின் வாழ்வியல் மற்றும் பாலியல் நெருக்கடிகளுக்கு காரணமானது. துணையை இழந்த பெண்களை ஆணாதிக்க வன்முறைகளுக்கு முகம் கொடுக்க வைத்துள்ளது.  சொத்தையும், வாழ்வையும் இழந்து நிற்கும் வாழ்வியல் துயரங்கள். யுத்தம் விட்டுச் சென்ற உளவியல் கொடுமைகளும் சித்திரவதைகளும் .. இப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் அவலமென்பது நீண்டது, நெடியது. இதுதான் முள்ளிவாய்க்காலில் மக்களை அணிதிரட்டுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் இந்த துயரங்களை, மக்களை ஒடுக்கும் தரப்புகள் தலைமை தாங்குகின்ற கொடுமை தான், மே 18 இல் அரங்கேறுகின்றது.

இம்முறையும் அதுதான் நடந்தேறியது. வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உரை, மக்களை ஒடுக்கும் தங்கள் "இன" வக்கிரத்தை மூடிமறைக்கின்றது. மற்றவர்கள் அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்பது தொடங்கி, மற்றவர்கள் எமக்கு எதிராக இதைச் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் மே 18 செய்தியாகின்றது. தங்கள் "இனம்" என்ன செய்ய வேண்டும் என்று கூறவில்லை. சொந்த இன சமூக ஒடுக்குமுறைகளும் அதனாலான அவலங்களும், யுத்தத்தின் பின்னான சமூகத்தின் கழுத்தை நெரிப்பதை கண்டுகொள்ளாது இருக்க "இனவொற்றுமை" பற்றி பீற்றல்களையே, பிரகடனமாக செய்ய முடிகின்றது. மனித அவலங்களை ஏற்படுத்திய யுத்தத்தை நடத்திய பின்னணியில் இருந்த "சர்வதேச சமூகம்" எமக்கு நீதியை தரும் என்று வாய் கூசாது பொய்யையே பிரகடனம் செய்ய முடிகின்றது. இதை செய்ய யாழ் பல்கலைக்கழக மாணவர்களை எடுபிடியாக்கி இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் குட்டைப் பாவாடை அணிந்த பெண் ஒருவர் தாக்கப்பட்டதை, "தாலிபானியத்" தனமாக வருணித்திருக்கின்றனர். இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தில் இருப்பது போல், எங்கள் சமூகத்தில் இல்லையென்று கூற முற்படுவதாகும். குட்டைப்பாவடைக்கு எதிரான  வன்முறையின் பின்னுள்ள இந்துத்துவ வெள்ளாளிய ஆணாதிக்கம் முன்வைக்கும் அடிப்படைவாத கலாச்சாரத்தை மூடிமறைத்து, பாதுகாத்து விட முனைகின்றனர்.

பெண்கள் குறித்தும், பெண்களின் ஆடை உடை குறித்துமான ஆணாதிக்க மத அடிப்படைவாதக் கருத்துகளும், வன்முறைகளும் "தலிபானுக்கு" மட்டும் உரியதல்ல. அதாவது முஸ்லிம் - இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குரிய சிந்தனை முறை மட்டுமல்ல. மாறாக இந்துத்துவ வெள்ளாளிய இனவாத ஆணாதிக்கச் சிந்தனைமுறையும் கூட.

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் "கலாச்சார" உடையை அணியக் கோரிய வன்முறையில் "விரிவுரையாளர்களும்", மாணவர் சங்கமும் அடங்கும். 1980 களில் புலிகள் பினாமிப் பெயரில் ஒழிந்திருந்து கட்டைப்பாவாடைக்கு எதிராக முழுப்பாவாடையை அணியக் கோரி விடுத்த எச்சரிக்கையும், வடமராட்;சிப் பெண்கள் முழுப்பாவாடையுடன் தான் வடமராட்சியில் வாழ முடிந்தது. வடமராட்சிப் பெண்கள் அரைப் பாவாடையுடனேயே, யாழ் பல்கலைக்கழத்தில் மட்டும் தான் அணியமுடிந்தது. இப்படி எம்மிடமே ஆணாதிக்க கலாச்சார வன்முறை இருக்க, தலிபானை இங்கு கொண்டுவர வேண்டிய அவசியம் கிடையாது. 1980 களில் வடக்கில் பெண்கள் பல ஆணாதிக்க தடைகளை தாண்டியே சைக்கிள் ஓடமுடிந்தது.

உண்மையில் தமிழ் சமூகத்தின் சிந்தனைமுறையான இந்துத்துவ வெள்ளாளிய ஆணாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதில்லை. இதை திசைதிருப்பத்தான் தலிபானைக் கொண்டு வருவது நடந்தேறுகின்றது. அண்மையில் திருகோணமலையில் "அபாயா" அணிவதை எதிர்த்த நிகழ்வைக் கூட, இந்தியாவின் இந்துத்துவ - பார்ப்பனியத்தின் வருகையாகவும் - அதன் தூண்டுதலாகவும் சித்தரித்து விவாதிப்பது நடந்து வருகின்றது.

இதன் மூலம் தமிழ் சமூகத்தின் இயல்பான இந்துத்துவ வெள்ளாளியச் இனவாத ஆணாதிக்கச் சிந்தனை முறையிலான ஒடுக்குமுறைகளை, மறுக்க முனைவது நடந்தேறுகின்றது.

இதே போல் "அபாயா" அணிவது "முஸ்லிம்- இஸ்லாமிய" சமூகத்தின் சுதந்திரமென்றும், ஒடுக்கப்படும் தமிழ் சிறுபான்மையினரின் உரிமை என்று கூறுவதும் கூட அரங்கேறின. இது தமிழ் இனவாத சிந்தனை முறையின் வெளிப்பாடு. இதன் மூலம் இஸ்லாமிய மதவாத இனவாத ஆணாதிக்கத்தை ஆதரிக்கின்ற, வக்கிரத்தையே இதன் மூலம் காண முடியும்.

இம்முறை மே 18 நினைவு தினத்தை யார் முன்னிறுத்துவது என்ற நாய்ச் சண்டையும், அதை எப்படி - எங்கே கொண்டாடுவது என்ற போட்டியும் நடந்து வருகின்றது. அறிக்கைப் போர் தொடங்கி "தமிழர்" இதிலாவது ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற கூறுகின்ற தரப்புகள் வரை, களமிறங்கி இருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களின் உறவுகளின் கண்ணீருடன் கூடிய மனித உணர்வுகளை, தத்தம் சுயநலன்களுக்கு ஏற்ப எப்படி பயன்படுத்துவது என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றனர்.

மனித விரோதத்துடன் கூடிய இனவாத யுத்தமானது, மனித அவலத்தை விதைத்து விட்டுச் சென்றுள்ளது. இந்த வாழ்வுடன் மல்லுக்கட்டி வாழ்கின்ற மக்கள், தங்கள் உறவுகளை நினைத்துக் கண்ணீர் விட்டு புலம்பும் நினைவுகள் வாழ்வாகி, அதுவே மனித   அவலமாக மாறி வருகின்றது. இந்த மக்களுக்கு யார் உண்மையில் தலைமை தாங்கி வழிநடத்தும் தகுதி பெற்று இருக்கின்றனர்? இன்று ஏட்டிக்குப் போட்டியாக நிற்பவர்களா? இதை எப்படி நாம் தெரிந்து கொள்வது?

யுத்தத்தின் இழப்பையும், துயரங்களையும் தாங்கி, அன்றாடம் தன்னெழுச்சியாகப் போராடும் மக்களுடன் யார் தங்களை இணைத்துக் கொண்டு இருக்கின்றனரோ அவர்களும், பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை யார் முன்னின்று  முன்னெடுக்கின்றனரோ அவர்களும் தான், உண்மையான மனித உணர்வுகளுடன் மே 18 இனை முன்னெடுத்து வழிநடத்தும் தகுதி பெற்றவர்கள்.

பலநாடுகள் ஒன்று சேர்ந்து ஈரானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக, இஸ்ரேலின் ஆதரவுடன் கிழித்தெறிந்ததுடன் - புதிய தடைகளை விதித்து வருகின்றது. இந்தப் புதிய சூழலில், இஸ்ரேல் முன்பு சிரியாவில் அத்துமீறி ஈரானிய படைகள் மீது நடத்திய தாக்குதலுக்கு, எதிரான பதில் தாக்குதலை, சிரியாவில் இருந்த ஈரான் படை நடத்தி இருக்கின்றது. தாக்குதல் நடந்த பகுதி சிரியாவிடம் இ;ருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதியை தெரிவு செய்ததன் மூலம், இஸ்ரேலை அம்பலப்படுத்தவும் - அரபு மக்களை தன் பின் திரட்டவும் முனைந்திருக்கின்றது. அதேநேரம் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது. மத்திய கிழக்கில் பல நாடுகளின் நலன் சார்ந்த புதிய யுத்தங்களுக்கான சூழலை உருவாக்கி இருக்கின்றது. இதன் பின்னுள்ள அரசியல் - பொருளாதாரப் பின்னணியை ஆராய்வோம்.

ஈரான் அணு உற்பத்தி செய்வதோ, இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதக் குழுக்களுக்கு உதவுவதோ, சிரியாவில் படையை நிறுத்தி இஸ்ரேலை அச்சுறுத்துவதோ.. இந்த புதிய நெருக்கடிக்கான காரணமல்ல. இப்படிக் கூறுவது அமெரிக்கா தனது நோக்கை மூடிமறைக்க முன்வைக்கும் காரணங்களே. டொனால்ட் டிராம் போன்ற அரசியல் "கோமாளியின்" தனிப்பட்ட ஒரு தலைப்பட்ச நடவடிக்கையாக இதைக் காட்டும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள், தங்கள் நோக்கை மூடிமறைக்க முனைகின்றனர்.

இந்த நெருக்கடியின் பின்னுள்ள உண்மைக் காரணம், 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து, தங்கள் முதலாளிகளை பாதுகாக்கும் ஏகாதிபத்திய முரண்பாடுகளே ஆகும்.

தேசிய மூலதனம் ஏகாதிபத்திய வடிவம் பெற்ற பின்பாக, உலகை ஆண்ட மேற்கு ஏகாதிபத்திய மூலதனங்கள், ஒன்றையொன்று அழித்துக் கொழுக்கும் முரண்பாடு தமக்குள் கூர்மையடைந்ததன் வெளிப்பாடு தான், ஈரான் விவகாரம். அதாவது உலகமயமாதலுக்கு பின்பான காலத்தில், தனியுடைமையான ருசியா – சீனா மூலதனத்தை கூட்டாக எதிர்கொண்ட மேற்கு ஏகாதிபத்திய மூலதனங்கள் உலகை ஆள முடியாத வண்ணம், மேற்கு மூலதனத்துக்குள் ஏற்பட்டுள்ள விரிசலே ஈரான் நெருக்கடி.

அண்மையில் பாரிசில் "UN LOCK" குறும் படம் காட்சிப்படுத்தப்பட்டது. 13 நிமிடங்கள் கொண்டது இந்தக் குறும் படம். இலங்கை இனவாத யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களைக் கொண்டு, தனக்கான அரசியலையும் - வியாபாரத்தையும் செய்திருக்கின்றது.

சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுவனின் தந்தையை அடிப்படையாகக் கொண்ட கதை. அன்றாட யுத்தச் செய்தியை சைக்கிள் டைனமோ மூலம் கேட்கும் மாணவன், பாடசாலை செல்லும் காட்சியுடன் படம் தொடங்குகின்றது. தந்தைக்கு விடைகொடுத்து பாடசாலை செல்லும் மாணவன், தனது நண்பன் கொல்லப்பட்ட இடத்தில் பழைய நினைவுகளுடன் தன்னை மறந்து புலம்பும் காட்சியும், தந்தையால் மீட்கப்பட்டு அழைத்துச் செல்லும் காட்சியுடன் கதை முடிகின்றது.

பழைய நினைவு தான் கதைப்புலம்;. வழமைபோல் பாடசாலை செல்லும் காட்சி. அவனின் நண்பன் தலைகீழாக இருந்த ஐ.நா (UN) வாகனம் ஒன்றின்  மேல் அமர்ந்திருந்த சூழலில் மையக் கதை தொடங்குகின்றது. ஐ.நா என்றால் என்ன என்று (படத்தின் பெயரில் உள்ள முதல் சொல்) அதற்கு விடையை கண்டுபிடிக்க முடியாத சிறுவன், தானே அதைக் கண்டுபிடிப்பதாக கூறி, இறுதியில் தந்தை அழைத்துச் செல்லும் போது ஐ.நா வாகனத்தை திரும்பிப் பார்த்த காட்சியுடன் கதை முடிகின்றது.

இதற்கு இடையில் 5 சிறுவர்கள் தங்கள் விளையாட்டுக்கு பாவிக்கும் ஆயுதப் பொருட்கள், ஆயுதங்கள் போன்று உருவமைக்கப்பட்ட பொருட்கள், வெவ்வேறு நண்பர் குழுக்களுக்கு இடையில் பண்டமாற்றாக இருக்கும் ஆயுதப்பொருட்கள், அதை பெற்றுக் கொள்ளும் போது இராணுவரீதியான செயல்கள் - அணுகுமுறைகள், விளையாடிக் கொண்டிருக்கும் போது நடந்த யுத்த வன்முறையில் தன் நண்பன் கொல்லப்பட்ட நினைவுக் காட்சி. இப்படி 13 நிமிடங்கள் கொண்ட குறும்படம்.

படத்தின் பெயரான "UN LOCK" மூலம் சொல்லும் அரசியல், (UN-United Nation) ஐ.நா குறிக்க, அது தமிழ் மக்களை கண்டு கொள்ளாததைக் குறிக்க (Lock) என உள்ளடக்கி, ஐ.நாவின் கண்களை திறக்க வைப்பதற்கான முயற்சி. காட்சிகள் இதைத்தான் மையப்படுத்தின. இது தான் படத்தை இயக்கியவர் முன்வைத்த கருத்தும் கூட. இன்னுமொரு பக்கத்தில் ஐ.நா பெயரை விடுத்து நேரடி ஆங்கிலச் சொல்லின் அர்த்தத்தில் பார்த்தால், மூடப்பட்டு இருக்கும் விடையம். இணைந்த சொல்லின் பொருளில் இதை தகர் என்று கூறக்கூடிய பொருளில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கின்றது. இந்தப் பெயர் எதைக் குறிக்கின்றது  என்ற கேள்வியின் போது, இதை இயக்கியவர் ஐ.நாவைக் கடந்து இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியுமா? என்று எதிர்க் கேள்வியைக் கேட்டதன் மூலம் தனது நிலையை தெளிவுபடுத்தி இருந்தார். 

இன்று அன்றாடம் நடக்கும் தன்னிச்சையான மக்கள் போராட்டங்களைக் கண்டு கொள்ளாதவர்கள் தான், மக்களுக்கு சாராயக் கடை அவசியம் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர். இனவாதத்தை முன்வைத்து வாக்குப்பெற்ற வெள்ளாளிய அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியான சிறிதரன், யாழ்ப்பாணத்தில் 64 சாராயக் கடைகள் இருப்பதை  எடுத்துக்காட்டினார். எமது பிரதேசமான கிளிநொச்சியில் ஒன்றுமில்லை என்று எடுத்துக்காட்டி, எமது பிரதேசத்திற்கு சாராயக் கடைகளை நாம் அமைக்க வேண்டும் என்றார்.

யாழ்ப்பாணம் போல் மக்களைக் குடிகாரராக்கி பணத்தைப் பெருக்க விரும்பும் சாராய முதலாளிக்காகவே, சுரண்டும் வர்க்க நாய்கள் எல்லாம் குலைத்திருக்கின்றது. மக்களை கடித்துக் குதறுவதை நியாயப்படுத்த, கசிப்பையும், கஞ்சாவையும் துணைக்கு அழைத்திருக்கின்றது. அதாவது கசிப்பையும், கஞ்சாவையும் ஒழிக்க சாராயக் கடையாம்! இது வேறு ஒன்றுமல்ல, இனவாத ஒடுக்குமுறைகளை ஒழிக்க இனவாதம் பேசுவது, இனவொடுக்குமுறைக்;கு தீர்வு காண அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்கின்ற வெள்ளாளியச் சிந்தனை முறைதான், குடியை ஒழிக்க குடியை அறிமுகப்படுத்தக் கோருகின்றது.

கசிப்பை, கஞ்சாவை குடிப்பதற்கான சமூகக் காரணங்களை கண்டறியவும், வரைமுறையின்றி குடிக்கின்ற நுகர்வாக்கப் பண்பாடுகளை கண்டறிந்து, சமூக உணர்வுள்ள கூட்டுச் சமூகத்தை நோக்கி வழிநடத்துவதன் மூலம் தீர்வுகாண வேண்டிய விடையம் இது. இப்படி இருக்க யாழ்ப்பாணம் போல் சாராயக் கடையில் குடிப்பதே, கிளிநொச்சிக்கு தீர்வு என்கின்றனர் வெள்ளாளியப் பன்னாடைகள்.

இவ்வாறு கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, தீர்மானமாக்கப்பட்டுள்ளது. இதே தீர்மானத்தை எடுக்க மேற்கு ஏகாதிபத்தியத்தால் இலங்கையை ஆள தெரிவுசெய்யப்பட்ட மைத்திரியின் தயவில் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன், "சட்டரீதியாக மதுபானசாலை அமைப்பதற்கு உரியவர்கள் விண்ணப்பித்தால், அதற்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்க வேண்டும் இல்லையெனில் சம்மந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள்" என்று கூறி எனவே அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்கின்றார். இப்படி மூலதனத்திற்காக குலைக்கவும், கடிக்கவும் தயாராகவுள்ள நாய்கள் எல்லாம் கூடி, மக்களுக்கு எதிரான தீர்மானங்களை எடுத்திருக்கின்றனர்.  இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது குழந்தைகளும், பெண்களும் தான்.

மேதினத்தில் ஜே.வி.பியும் - சுமந்திரனும் சந்திக்கும் புள்ளி, தேர்தல் முறை மூலம்   நவதாராளவாத முதலாளித்துவத்தை முன்னெடுப்பதில் இருக்கும் வர்க்க ஒற்றுமை தான். இதே போல் மக்களை ஏமாற்ற பௌத்த சிங்கள சிந்தனையை ஜே.வி.பி. கொண்டிருந்தது போல், எதிர்மறையில் வெள்ளாளிய தமிழ் சிந்தனையை சுமந்திரன் கொண்டிருந்ததால், முதலாளித்துவ அணிகளின் ஒத்த குறிக்கோள் மேதினத்தில் ஒரு அணியாக அணிதிரளவைத்தது.

மேதினத்தை கேலிக்குள்ளாக்குவதும், விடுமுறையாக மாற்றுவதும், முதலாளிகள் தொழிலாளர்கள் சேர்ந்து கேளிக்கைகளுடன் பொழுதைப் போக்கும் தினமாக மாற்றுவதே, மேதினம் குறித்த முதலாளித்துவ உள்ளடக்கமாகும்;. அதாவது தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர வர்க்கக் கூறுகளை அழிப்பதையே, ஆளும் வர்க்கமும் அரசும் தனது  நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது. அதேநேரம் புரட்சிகர சக்திகளை, புரட்சிகர வேசம் போட்டவர்களைக் கொண்டு அழிப்பதுமாக இருக்கின்றது.

தமிழ் இனவாதமானது தனக்குள்ளான அக ஒடுக்குமுறைகளை பாதுகாக்கும் வண்ணம் முன்னிறுத்தப்பட்டு வருகின்றது. இன்று "சுயநிர்ணயம்" என்பது பிரிவினையாகவும் -தனிநாடாகவும் எப்படி முன்னிறுத்தப்படுகின்றதோ, அதே பொருளில் தமிழ் இனவாதம் இயங்குகின்றது.

தமிழ் இனவாதமானது ஒடுக்கும் தனது குறுகிய அரசியலால் தனிமைப்பட்டு அம்பலமாகி விடுகின்றது. அரசியல் ரீதியாக தன்னை முன்னிறுத்த வக்கற்றுப் போகின்றது. இந்த அரசியல்  பின்னணியில் இனவாதமானது வன்முறை கொண்ட கும்பலாக மாறி, ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுகின்றது. இதுதான் புலிகளின் வரலாறு தொடங்கி தமிழீழம் (ஈழம்) கேட்ட ஈழத்து இயக்கங்களின் பொது வரலாறுமாகும். அதேநேரம் போலி இடதுசாரியமானது இதற்கு முண்டுகொடுக்கும், கோட்பாட்டு அரசியல் விபச்சாரத்தை செய்ததே எமது கடந்த வரலாறாகும்.

புலிகளின் அழிவின் பின் வன்முறை மூலம் அக ஒடுக்குமுறைகளை தொடரும் அதிகாரத்தை இனவாதம் இழந்து இருக்கின்றது. அக ஒடுக்குமுறையே தமிழனின் சமூக அமைப்பாக இருப்பதால், தமிழ் இனவாதம் புலிகளுடன் அழிந்துவிடவில்லை. இனவாதத்தை முன்வைத்து பிழைக்கும் இனவாதக் கும்பல்கள், தமிழ் இனவாதத்தை பாதுகாக்க போராடுகின்றது. இந்த பின்னணியில் தமிழினவாத போலி இடதுசாரியக் கும்பல்களும், பேர்வழிகளும் இனவாதத்தைப் பாதுகாக்கும் போலி இடதுசாரிய கோட்பாடுகளை வாந்தி எடுப்பது இன்னமும் தொடருகின்றது. இந்த வகையில் அண்மைக் காலத்தில் முன்வைக்கப்பட்ட இரண்டு போலி தமிழ் இடதுசாரிய இனவாத தர்க்கங்களைப் பார்ப்போம்.

1.ஒடுக்கப்பட்டவனின் இனவாதம் ஒடுக்கும் இனவாதத்தை விட முற்போக்கானது என்கின்றனர். அதாவது இரண்டு இனவாதமும் ஒன்றல்ல. ஆகவே ஒடுக்கப்பட்டவனின் இனவாதத்தை ஒடுக்கபட்டவர்கள் ஆதரித்து அணிதிரள வேண்டும்.

2.நாம் அனைவரும் இலங்கையர் என்பது ஒடுக்கும் இனவாதக் கோசமே ஒழிய, ஒடுக்கப்பட்டவர்களின் கோசமல்ல. ஆகவே நாம் இலங்கையர் என்பதை எதிர்த்து, நாம் தமிழர் என்பதை உயர்த்த வேண்டும்.

இனவாதத்துக்கும், இனவொடுக்குமுறைக்கும் எதிராக சமவுரிமை இயக்கத்தின் அண்மைய  நடைமுறைப் போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட கோசங்களை எதிர்த்து, தமிழ் இனவாத போலி இடதுசாரிகளின் பித்தலாட்ட தர்க்கங்களே இவை. தமிழ் இனவாதத்தை தங்கள் அரசியல் தெரிவாகக் கொண்ட போலித் தமிழ் இடதுசாரியமானது, புலிக்கு பிந்தைய வலதுசாரியத்தை மறுபடியும் தூக்கி நிறுத்த, இந்த தர்க்கத்தை முன்னிறுத்துகின்றது. இந்த வலதுசாரிய தமிழ் இனவாத தர்க்கத்தின் அரசியல் சாரத்தைப் பார்ப்போம்.

ஒடுக்கப்பட்டவரின் இனவாதமானது ஒடுக்கும் இனவாதத்தை விட முற்போக்கானதா!?

எமது இந்துக் கல்லூரியில் சேலை (சாறி) அணிவதே பாரம்பரியம் என்கின்றார், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன். இந்த வகையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் பாரம்பரியம், பேணப்பட வேண்டும் என்கின்றார்.

பத்திரிகை "ஜனநாயகம்" குறித்து, ஊடக "தர்மம்" குறித்தும் சுயதம்பட்டம் அடிக்கும் ஊடகங்கள் (குறிப்பாக தினக்குரல்), முஸ்லிம்-இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இனமதவாதத்தைக் கக்கியிருக்கின்றது. செய்திகளை திரித்தும் புரட்டியும் ஒரு பக்கச் சார்பாகவும், இன-மத வாதத்தை தூண்டிவிட்டும் வியாபாரத்தை நடத்தியிருக்;கின்றது.

பொதுபலசேன தன் பங்குக்கு முஸ்லிம்களின் உடை குறித்து இன-மத வெறியை கக்கத் தொடங்கி இருக்கின்றது.

எதிர்காலத்தில் மக்களை இன-மத ரீதியாக பிளக்கும் விவகாரமாக, பாடசாலைகளின் உடை குறித்த பிரச்சனையே அரசியல் அரங்குக்கு கொண்டு வரப்படுகின்றது.

இலங்கையின் எல்லாப் பாடசாலைகளும் மதப் பாடசாலைகளாக, தன்னைத்தான் வரையறுத்து  அடையாளப்படுத்துவதையே இந்த விவகாரம் கோருகின்றது. இனமதவாத கலாச்சாரத்தை திணிக்கும் இடமாக, பாடசாலையை தேர்ந்தெடுக்க கோருகின்றது. மதம்-சாதி-இனமற்று பழகிய மாணவப் பருவம் இனி இலங்கையில் கிடையாது என்பதும், ஒவ்வொருவரும் மத அடையாளங்கள் மூலம் தம்மை முன்னிறுத்துமாறும் இந்த விவகாரம் கோருகின்றது.

இதற்கேற்ப திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி பிரச்சனைக்கு தீர்வாக, மத -இன அடிப்படையில் இடமாற்றம் நடந்து இருக்கின்றது. இதன் மூலம் மனிதவிரோத  இனமதவாத இழிசெயலை அங்கீகரித்திருக்கின்றது. இனி இலங்கையில் இன-மத அடிப்படையில் அரச நியமனங்கள் என்ற புதிய இன-மதவாத அகராதியை தொடக்கி இருக்கின்றது. இலங்கையில் இனமத ரீதியான பிளவுகள், மேலும் ஆழமாக்கப்பட்டு வருகின்றது.

"இந்து" உடைப் பாரம்பரியம் என்பது வெள்ளாளியச் சாதிய அமைப்பின் பித்தலாட்டம்

அண்மையில் புத்தூரில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் வாழ்விடத்தில் பிணத்தை எதிர்ப்பதே எங்கள் பாரம்பரியம் என்று கூறிய அதே வெள்ளாளியச் சிந்தனையில் இருந்து தான், 150 வருட உடைப் பாரம்பரியம் குறித்து பேச முடிந்திருக்கின்றது. பழமைவாதச் சிந்தனையின் தொடர்ச்சிதான் இது.

தமிழர்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தும் எதிர்க்கட்சி தலைவர் சம்மந்தன் 150 வருடங்களுக்கு முந்தைய பாரம்பரிய கோவணத்துடன் பாராளுமன்றம் சென்று தன் தமிழன் அடையாளத்தைக் காக்க அதே கோவணத்துடன் அமெரிக்கா வரை விமானம் ஏறிச் சென்று இருந்தால், அவரின் "தூய" 150 வருட உடைப் பாரம்பரியம் குறித்த கூற்றை கேள்விக்கு உள்ளாக்க முடியாது.

150 வருடத்து பாரம்பரிய தமிழன் கோவணத்தை (பேரினவாதம் பிரபாகரனை கொன்ற பின்  கட்டிய அதே கோவணம் தான்) தனது உள்ளாடையாகக் கூட அணியாத சம்மந்தன், பாரம்பரிய உடைபற்றி பேசுவதன் மூலம், 150 வருடத்துக்கு முந்தைய ஆறுமுகநாவலர் வழிவந்த வெள்ளாளிய சாதிய மதச் சமூக அமைப்பினை பெண்களை ஒடுக்குவதன் மூலம் தாங்கிப் பிடிக்க முனைகின்றார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE