Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றில் அந்நிய ஆட்சியாளர்கள் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை ஒரு குறிப்பிட்ட “மேற்குடி மக்கள்” கூட்டத்தினரே அவர்களை அரசியல் பிரதிநிதித்துவம் செய்து வருகின்றனர்.

1931ல் அந்நியர்கள் அமுலாக்க முயன்ற ‘சர்வஜன வாக்குரிமையை’ சாதியையும், படிப்பையும், பெண்(பால்)களையும் முன்னிறுத்தி எதிர்த்து நின்றவர்கள்-அவர்களின் வழித்தோன்றல்கள்-வாரிசுகள்-சீடர்கள் தான் இன்றும் எமது தலைவிதியை நிர்ணயிக்கும் ஆதிக்க அரசியல் பிரதிநிதிகளாக எம்மால் தெரிவு செய்யப்பட்டு ராஜ(தந்திர அந்தஸ்து) பவனி வந்தபடி உள்ளனர்.

ஆங்கிலேயரிடம் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது (50மூ) வீதப் பிரதிநிதித்துவம் கோரிய ஜி.ஜி.பொன்னம்பலம் 1939ல் நாவலப்பிட்டியில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிங்கள மக்களின் பிறப்பையும் பௌத்த மதத்தையும் பற்றி மிகவும் இழிவுபடுத்தி பேசியதால் நாவலப்பிட்டி, பாசற, மஸ்கெலிய ஆகிய ஊர்களில் தமிழ் மக்கள் மீது வன்முறைத் தாக்குல்கள் இடம்பெற்றன. அது யாழ்ப்பாணத்திலும் எதிரொலித்தது. அக் காலப்பகுதியில் ‘சிங்கள மகா சபையை’ ஆரம்பித்து இயக்கி வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க இனவாதப் பேச்சு மூலம் தனது ‘சபை’யின் வளர்ச்சியை அதிகரித்தமைக்காக திரு பொன்னம்பலத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார்.(பொன்னம்பலத்தின் பேச்சு ‘சிங்கள மகா சபை’க்கு புதிய பல கிளைகளை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அமைப்பதற்கு வழி வகுத்தது).

புத்தபிக்குகள் கோத்தபாயவிடம் கிட்லர் ஆட்சியைக் கொண்டுவருமாறு கோரினர். யூ.என்.பியின் எம்பியும் - அமைச்சருமாக இருந்த விஜயகலா புலிகளின் ஆட்சியைக் கோரினார். உண்மையில் இவை தற்செயலான – கிறுக்குத்தனமான கோரிக்கையோ - கூற்றுக்களோ கிடையாது. மாறாக இனரீதியான முரண்பாட்டுக்குள், இனவாத சக்திகளின் ஆதரவு பெற்ற கருத்துக்களாகவும் - "ஜனநாயகம்" குறித்த அறியாமையின் பொது உள்ளடக்கமாகவும் இருக்கின்றது.

பேரினவாதக் கருத்தியலானது கிட்லரின் மீள்வருகை குறித்த கருத்தைக் கொண்டாடும் அதேநேரம், கிட்லரின் ஆட்சியையொத்த புலிகளின் ஆட்சி குறித்த கருத்தை எதிராக முன்னிறுத்துகின்றனர். தமிழினவாதக் கருத்தியலானது புலிகளின் ஆட்சியைக் கொண்டாடும் அதேநேரம், புலிக்கு நிகரான கிட்லராக கருதப்படும் கோத்தபாயவின் ஆட்சியை எதிர்க்கின்றனர். இப்படி ஒரே கருத்தை எதிரும் புதிருமாக சிந்திப்பதே, முரண்பட்ட சிங்கள  -  தமிழ் இனவாதச் சிந்தனைமுறையாக இருக்கின்றது.

இங்கு விஜயகலா கோரியது பேரினவாதம் கூறுவது போல் புலிகளின் மீள்வருகையை அல்ல, புலிகளின் ஆட்சிமுறையையே கோரினார். கோத்தபாயவிடம் புத்தபிக்குகள் கோரும் அதே ஆட்சிமுறையையே விஜயகலாவும் கோரினார். இந்த வகையில் தமிழ் - சிங்கள இனவாதிகள் எந்த வகையான ஆட்சிமுறை அவசியம் என்பதில் ஒன்றுபட்டு நிற்பதும், அவற்றின் பிரதிநிதித்துவத்தை கோருவதில் மட்டும் முரண்பாடு நிலவுகின்றது.

இலங்கையில் மரணதண்டனையை மீள அமுல்படுத்தும் யோசனைக்கு ஆதரவும் - எதிர்ப்பும் கட்டுரைகள், அறிக்கைகள், பேச்சுக்கள் வாயிலாக காட்டப்பட்டு வருகிறது. அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மறியல் பேராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய சக்திகள் எதுவும் இன்று இலங்கையில் இல்லை. எதிர்காலத்திலும் அதற்குத் தேவையான துணிச்சல் படைத்த மனிதாபிமான சக்திகள் உருவாகக் கூடிய சாத்தியங்களும் மிக மிகக்குறைவு. குடிமக்களின் இன்றைய மனோநிலையில் அப்படியான சாத்தியம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இதற்கான காரணம் “லாபம்” என்ற ஒன்றுதான். “மரணதண்டனைக்கு” எதிராகப் போராடுவதனால் யாருக்கு என்ன லாபம்? என்று கேட்டால் “யாருக்கும் லாபம் எதுவுமில்லை” என்றே பதில் கிடைக்கும். மாறாக “மரண தண்டனை” இருந்தால் சில குற்றங்களைத் தடுக்கலாம் அல்லது குறைக்க முடியும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட சிந்தனையே சாதாரண குடிமக்கள் மத்தியில் நிலவுகிறது.

1983 யூலை 25-27ல் வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் அன்றைய ஆட்சியாளர்களால் நன்கு திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அதே நாட்களில் நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரமும் அன்றைய அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டதேயாகும்.

இக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இதற்கு முன்னரும் கலவரங்கள் இடம் பெற்றிருந்தன. கொலைகள் இடம் பெற்றிருக்கின்றன. 1977 ம் ஆண்டுக் கலவரத்திலும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழர்களின் அரசியல் பயணம் வன்முறை வடிவத்தை அடையத் தொடங்கியிருந்த அன்றைய காலகட்டத்தில் வன்முறையானது தனியே இளைஞர்கள் மத்தியிலேயே முனைப்புக் கொண்டிருந்தது. மக்கள் இளைஞர்களின் வன்முறைகளை வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருந்தனர். ஏற்கனவே கலவரங்களுக்குப் பழக்கப்பட்டிருந்த சாதாரண பொதுமக்கள் 1983 கலவரத்தையும் வழமை போலவே சாதாரணமாகக் கடந்து போயிருப்பார்கள்.

ஊடகங்களுக்கான செய்தி கட்சியின் 40வது ஆண்டு நினைவு உரை 

சி.கா.செந்திவேல் 

பொதுச் செயளாளர்.

நாட்டின் அனைத்து மக்களும் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். அதேவேளை, அதிகார துஸ்பிரயோகங்களும் ஊழல்களும் பெருகிநிற்கின்றன. பழைய திருடர்களைக் காட்டிப் பதவிக்கு வந்தோர் புதிய திருடர்களாக இன்று உருவாகி நிற்கின்றனர். போதைப் பொருட்களின் பரம்பலும் பாவனையும் அதிகரித்து தெற்கே பாதாள உலகக் குழுக்களும் வடக்கே வாள்வெட்டுக் கோஸ்டிகளும் மக்களின் அன்றாட வாழ்வை அச்சுறுத்தியும் சீரழித்தும் வருகின்றன.

இவ்வாறு கடந்த 03.07.2018 அன்று யாழ்ப்பாணம் கொக்குவிலில் இடம்பெற்ற புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் 40 ஆவது ஆண்டையொட்டிய விசேட கலந்துரையாடலில் உரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் அவர்கள் தெரிவித்தார்.

சாதி அவசியமற்ற ஒன்றாக காட்டி, வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக கூறுவதே, நவீன பார்ப்பனீயம் - வெள்ளாளீயமாகும். அதாவது வெளிப்படையான சாதிய ஓடுக்குமுறைகளை மறுத்து, சாதிய திருமணங்களை நியாயப்படுத்துவது நடக்கின்றது. இலங்கையில் தீண்டாமை இயக்க போராட்டங்கள் கூட, இதைத் தான் முன்வைத்தது.

புலம்பெயர் குழந்தைகள் சாதியை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் பெற்றோரின் சொத்துடமையை பெறவும், சாதிப் பெருமைகளை நிலைநாட்டுகின்ற பண்பாட்டு வழி வந்த ஆடம்பர நுகர்வு  திருமணங்களை அனுபவிக்கவும், திருமணத்தில் கிடைக்கும் பெருந்தொகையான மொய்யை பெறவும்.. பெற்றோரின் சாதிய அடிப்படையை மறுதலிக்காமல் குழந்தைகள் தேர்ந்தெடுக்கின்றனர். சாதியை அடிப்படையாகக் கொண்ட பெற்றோரின் தேர்வை மறுத்தால், குழந்தைகளுக்கு இவை கிடையாது. இதுதான் குழந்தைகளின் சாதியத் தேர்வுக்கான காரணம் என்று புலம்பெயர் குழந்தைகளின் சாதியம் சம்பந்தமான முன்னைய கட்டுரை ஒன்றில் கூறி இருந்தேன்.

சாதி இருப்பதை மறுக்க - சாதி எதார்த்தம் குறித்த கிறுக்குத்தனமாக வாதம்

யாழ்ப்பாணத்து வெள்ளாளிய சாதிய சிந்தனையிலான சமூக அமைப்பு முறைமையிலான அதே வடிவில் சாதியம் புலம்பெயர் தேசங்களில் இருக்கவும் - நீடிக்கவும் முடியாது. ஏனெனின் மேற்கில் வளரும் குழந்தைகளின் சமூக சூழல் வேறு, யாழ்ப்பாணத்தின் சூழல் வேறானது. இருந்த போதும் கூட சாதியம் திருமண உறவை தீர்மானிக்கின்றது.

சாதியம் என்பது இன்று இலங்கையில் உற்பத்தி உறவு வடிவில் இல்லை. புலம்பெயர் நாட்டில் வடக்கில் இருக்கின்ற அளவுக்கு, சாதிய புறச்சூழல்கள் இல்லை. இதனால் புலம்பெயர் நாட்டில் சாதி இல்லை என்பதாகிவிடுமா!? நூற்றுக்கு நூறு ஒவ்வொரு வீட்டிலும், வெள்ளாளிய சிந்தனையில் சாதியமும் - சாதிச் சடங்குகளும் தொடரத்தான் செய்கின்றன.

யாழ்ப்பாணம் "கொதிநிலையில்" உள்ளது. காரணம் காட்டுபுலம் கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலை. 25 வருடங்களுக்கு மேலாக பல நூறு பெண்களைப் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கி, அவர்களைப் படுகொலை செய்த கட்சியின் தலைவர் தொடக்கம்,- தமது வீடு, வேலைத்தலம், பஸ், ரெயின், கோவில் என எல்லா இடங்களிலும் பாலியல் வன்கொடுமை புரியும் பெரும்பான்மையான யாழ்ப்பாணத்து ஆண்கள் இங்கு "கொதிநிலையில்" உள்ளனர். இவர்கள் ஒருபக்கம் "போராட", மறுபக்கம் தேசியம் பேசும் ஆண்களும், பல்கலைக்கழகத்தில் ராகிங் என்ற பெயரில் பாலியல் வன்கொடுமை செய்வோரும், பாலியல் இலஞ்சம் கோரும் அரச பணியாளர் மற்றும் அரசியல்வாதிகளும், உயர்கல்வி நிலையங்கள், கடற்கரை ஓரம், பற்றை பறுகுகளில் பெண்களை ஏமாற்றிக் கைவிடுவோரும் கூட காட்டுப்புலக் கொடுமைக்காக கொடுக்கிழுத்துக் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் எல்லாம் நீதி கேட்கிறார்களாம் !!!!!!!!!

சில "சர்வ சாதாரணமான" அனுபவங்கள் 

வித்தியாவுக்கு நடந்த கொடுமைக்காக மேற்கூறியவர்களில் பலர் போராடியதை நான் நேரடியாகப் பார்த்தேன். அப்போராட்டத்தில் பங்குகொண்ட நபர்கள், சில மணித்தியாலங்கள் கூட தமது பெண்கள் மீதான பாலியல்- மற்றும் சுரண்டல்களை நிறுத்தவில்லை. யாழ்ப்பாணத்தில் வித்தியாவுக்கான போராட்டம் நடந்தபோது, அப்போராட்டத்துக்கு பல பிரதேசங்களில் இருந்து போராட்டத்தில் பங்குகொள்ள வந்த பெண்களை - போராட்டம் முடிந்தபின், போராட்டத்தில் பங்குகொண்ட யாழ்ப்பாணத்து ஆண்கள் சமூகம் எப்படி நடத்தியது என்று அவ்விடத்தில் நின்று அவதானித்தவர்கள் அறிவார்கள்!!! போராட்டம் முடிந்து பஸ்சில் பயணம் செய்த பெண்களை, காமவெறி பிடித்து உரசியதும், பெண்களின் உறுப்புகளில் அத்துமீறி கைவைத்ததும் நடந்தேறியது. 

அப்போராட்டத்தின் பின் நான் பயணித்த பேருந்தின் நடத்துனர், பஸ்ஸின் பின்பகுதிக்குப் போகுமாறு குழுவாக நின்ற சில இளம் பெண்களுக்கு கட்டளையிட்டார். அவரின் கட்டளையை கேட்டும் கேட்காதது போல அசையாது நின்றார்கள் பெண்கள். நடத்துனர் மறுபடியும் பின்னால் போகுமாறு கத்தினான். அப்போ, பெண்களில் ஒருத்தி "பின்னால இடமில்லை - அங்க பொடியள் நிக்கிறான்கள்" என பதிலளித்தார். அப் பதிலைக் கேட்ட நடத்துனர் "கொஞ்சம் பின்னால போனா உங்கட சாமான் ஒண்டும் தேஞ்சு போகாது, பின்னால போறியளா, இல்லாட்டி பஸ்ஸை விட்டு இறங்கிறீங்களா??? !" என்று கூச்சல்  போட்டான். பெண்கள் அடங்கிப்போனார்கள். இந்நிகழ்வை அந்த பஸ்ஸில் இருந்த- வித்தியாவுக்கு"போராடிய" எல்லாப் "போராளிகளும்" பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகளின் சுயத்தை "ஏழ்மையாகக்" காட்டி, அரசு சார்பற்ற ஏகாதிபத்திய நிதியாதாரங்கள் மூலம் நாடுகளினதும் - மக்களினதும் சுயசார்பை அழித்தனர். இதுபோல் புலம்பெயர் சமூகம் மக்களின் வாழ்வு சார்ந்த சுயத்தை "ஏழ்மையாகக்" காட்டி, தங்கள் "குறுகிய உதவிகள்" மூலம் சுயசார்பை அழிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இன்று இவை குறித்த பொது விவாதம் அவசியமாகியுள்ளது.

பிறருக்கு "உதவுகின்றவர்கள்" இலங்கையில் தாங்கள் வாழ்ந்த காலத்தில் சந்தித்த சுய நெருக்கடிகளில் இருந்தும், அன்று தமக்கு தேவைப்பட்ட உதவிகளின் நோக்கில் இருந்தும், "உதவுகின்றதே" பொதுவான உதவியின் சாரம். எந்த சுய உள்நோக்கமும் இல்லாத பெரும்பாலானவர்களின் உணர்வுநிலை இதுவாகும். இந்த உணர்வுகள் கொச்சைப்படுத்த முடியாதவை. ஆனால் உணர்வுபூர்வமான அறிவு, பகுத்தறிவுபூர்வமானதல்ல. உணர்வுபூர்வமான அறிவும், பகுத்தறிவுபூர்வமான அறிவும் வேறுவேறானவை. இரண்டும் ஒன்றாக மாறும் போது மட்டும் தான், அது சரியானதாக மாறும்.

இன்றைய "உதவிகள்" உணர்ச்சிபூர்வமானதாக இருக்கின்றதே ஒழிய, அவை சமூகத்துக்கு பயன்படும் வண்ணம் அறிவுபூர்வமானதல்ல. உணர்ச்சிபூர்வமான முடிவுகள் சமூகத்தை அழிக்கும். இந்த வகையில் கடந்த யுத்தம் மட்டும் சமூகத்தை சீரழிக்கவில்லை, இன்றைய "உதவிகள்" கூட சமூகத்தை அழிக்கின்றது.

உணர்ச்சி சார்ந்த "உதவிகள்" தமிழ் சமூகத்தின் சுயத்தையே அழிக்கின்றது. பிறர் உழைப்பில் தங்கி வாழாத சுயமே, சமூக இருப்பின் அடித்தளம். உழைத்து வாழ்வதைப் பெருமையாகவும், தன் தேவைக்காக பிறரைச் சார்ந்து வாழ்வதை இழிவானதாகவும் கருதும் போது மட்டும் தான், சமூகம் முன்னேறும். இந்த அடிப்படையில் இன்று தமிழ்ச் சமூகம் வாழவில்லை. பிறரில் தங்கி வாழ்வதை தேர்வாக கொண்டு வாழக்கூடிய, அறம் சாராத வாழ்வை விரும்புகின்ற சூழலில் "உதவிகள்" அதை ஆழப்படுத்தி, சமூகத்தையே அழிக்கத் தொடங்கி இருக்கின்றது.

இலங்கையில் 1978 வரை “அவசரகாலச் சட்டம்” என்று ஒன்று இருந்தது. அந்தச் சட்டம் அமுலில் இருந்த காலங்களில் எல்லாம் அரசாங்கங்களின் அடாவடித்தனங்கள்-அடக்குமுறைகள்-மனித உரிமை மீறல்கள்-படுகொலைகள் யாவும் இடம் பெற்றுள்ளன. 

இலங்கையின் இனக் கலவரங்கள்-தென்னிலங்கை இளைஞர்களின் 1971 ஏப்ரல் கிளர்ச்சியினை அடக்க இடம் பெற்ற படுகொலைகள்(‘கதிர்காமம் அழகி’ பிரேமாவதி மன்னம்பெரிய கொலை உட்பட)-வழக்கு விசாரணையற்ற சிறைவாசங்கள்-சித்திரவதைகள் யாவும் இந்த “அவசரகாலச் சட்டத்தின்” பெயரிலே நடாத்தி முடிக்கப்பட்டன.

ஏப்ரல் 1971ல் தென்னிலங்கை சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியின் போது சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இராணுவ முகாமில் ஒப்படைக்கப்பட்ட 22 வயது யுவதியான பிரேமாவதி மன்னம்பெரிய அவரது தாய் தந்தை முன்னிலையில் மானபங்கப்படுத்தப்பட்டு பின்னர் பலாத்காரம் சித்திரவதை ஆகியவைக்கு உட்படுத்தப்பட்டு பட்டப் பகலில் பொதுமக்கள் மத்தியில் நடுவீதியில் நிர்வாணமாக நடக்க வைத்து அடிவதைகளுக்கு ஆளாகியபடி இராணுவத்தினரால் 17 ஏப்ரல் 1971ல் சுட்டுக் கொல்லப்பட்டார். 

சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக இந்தப் படுகொலையைத் தனது பிரச்சாரத்தின் போது பயன்படுத்தியே 1977 பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தார். பாராளுமன்றத்தில் தனக்குக் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி அரசியல் சட்டத்தை மாற்றி எழுதினார். நாட்டின் குடிமக்களின் உழைப்பைச் சுரண்டி அதன் வளங்களை கொள்ளையடிக்கும் பொறிமுறையான திறந்த பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார்.

“தமிழ் மக்களுக்கு பிரச்சனைகள் உண்டு. ஆட்சிக்கு வந்தால் தீர்த்து வைப்பேன்” என்று கூறி ஆட்சிக்கு வந்தார். அதேநேரத்தில் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர் தளபதி திரு அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார். அதனை சகித்துக் கொள்ளமுடியாத ஜே.ஆரின் சிங்களத் தேசியம் 77ல் ஒரு இனக் கலவரத்தை நடாத்தி முடித்து தனது இன வெறியை தணித்துக் கொண்டது. இனக் கலவரத்தின் கொடூரங்களால் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய வெறுப்பையும், கோபத்தையும் பயன்படுத்தி தமிழ்த் தேசியம் வன்முறை அரசியலை முன்நகர்த்திய போது ஜே.ஆர். ஜெயவர்த்தன 19.05.1978ல் “புலிகள் அமைப்புக்கும் அதனைப் போன்ற ஏனைய அமைப்புக்களுக்குமான தடைச் சட்டத்தை” அமுலுக்குக் கொண்டு வந்தார். இச் சட்டமே புதிய வடிவம் பெற்று 1979ல் “பயங்கரவாத தடைச் சட்டம்” என்ற பெயரில் இன்று வரை அமுலில் இருந்து வருகிறது.

மூலதனத்தின் கட்டற்ற சுதந்திரத்தை முன்வைத்து, பொருளின் விலையை சந்தையே தீர்மானிக்கும் என்று கூறி உருவானது உலகமயமாதல். இந்த அடிப்படையில் உருவான  புதிய உலக ஒழுங்கில், நாடுகளின் "சுதந்திர" இறைமையானது மூலதனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. உலக மூலதனத்தின் சுதந்திரத்துக்கு ஏற்ப, நாடுகளின் இறைமைகள் அழிக்கப்பட்டது. மூலதனத்தின் கட்டற்ற இந்தச் சுதந்திரமே, நவதாராளவாதமாகியது.

தேசங்களின் எல்லைக்குள் தப்பிப்பிழைத்த சிறு மூலதனங்களையும், அரச மூலதனங்களையும், பெரு மூலதனங்கள் விழுங்கி கொள்வதற்கு இருந்த தடைகளை உலகமயமாதல் அகற்றியது. இதன் மூலம் பெரு மூலதனங்கள் ஒன்றையொன்று அழிக்கும் தமக்குள்ளான போட்டியை மட்டுப்படுத்திக் கொண்டு கொழுக்க முடிந்தது. பெரு மூலதனங்கள் ஒன்றையொன்று அழிக்கும், ஏகாதிபத்திய யுத்தமாக மாறுவதை பின்போட்டது.

உலகெங்கும் சிறு மூலதனங்களை அழித்து பெரும் மூலதனங்கள் கொழுப்பதற்கான உலகமயமாக்கமானது,  பெரும் மூலதனத்துக்குள்ளான முரண்பாட்டை தணித்து விடுவதில்லை.

மாறாக சிறு மூலதனங்களை அழித்து கொழுக்கும் பெரும் மூலதனம், தமக்கு இடையில் ஒன்றையொன்று அழிப்பதற்கு தயார் செய்தது. இதிலிருந்து அமெரிக்க மூலதனங்கள் தப்பிப் பிழைக்க, ஏகாதிபத்தியம் என்ற தனது சொந்த தேசிய அரணுக்குள் சரணடைகின்றது. தனது நாட்டிற்குள் பிற மூலதனங்களுக்கு தடையை ஏற்படுத்தி, உலகைச் சூறையாடும் உலக ஒழுங்கை அமெரிக்க மூலதனங்கள் கோருகின்றது. அமெரிக்க மூலதனத்தின் இந்த தற்காப்பு நிலையானது, உலகத்தை புதிய யுத்த சூழலுக்கு வித்திட்டு இருக்கின்றது.

சாதிய சமூகமல்லாத ஜனநாயக நாட்டில் (மேற்கில்) பிறந்த "தமிழ்" குழந்தைகள், பெற்றோரின் சாதிய வாழ்வியல் நடைமுறைக்குள் ஒத்துப்போவது ஏன். இது எப்படி, எதனால்  சாத்தியமாகின்றது?. இதற்கான சமூகப் பொருளாதாரக் காரணமென்ன? 

புலம்பெயர்ந்த தமிழன் யார்? "தமிழன்" என்பவன் சாதியில் பிறந்து, சாதி பார்த்து வாழ்பவன். இதைத்தான் "தமிழன்" பண்பாடு என்றும், வாழ்க்கை நெறி என்றும் கூறுபவன். தாங்கள் சாதி பார்த்து வாழ்வதுடன், குழந்தைகளுக்கு சாதி வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வைப்பதிலும் வெற்றி பெறுகின்றனர். இந்த அடிப்படையில் தான் சாதிச் சடங்குகள் தொடங்கி "கலாச்சாரம்" வரை பின்பற்றப்படுகின்றது. குறிப்பாக தமிழன் முன்வைக்கும் தமிழ் "கலாச்சாரம்" என்பது

1.பெண்ணை கண்காணிக்கவும், அவளை ஒடுக்கியாளுகின்றதுமான சமூக முறைமையே "தமிழ்க் கலாச்சாரமாக" இருக்கின்றது. அதாவது ஒரு ஆணை வாழ்க்கையில் தேர்ந்தெடுத்து, அவனுடன் மட்டும் படுக்கக் கோரும் பாலியல் கண்காணிப்பு தான், "தமிழ்; கலாச்சாரம்".

2.அதேநேரம் ஒரு பெண் தன் வாழ்க்கைத் துணையை தன் பிறப்பால் நிர்ணயமான  சாதிக்குள் தேர்ந்தெடுக்க அல்லது சேர்த்து வைக்கும் வாழ்க்கை முறைமைகளை கலாச்சாரம் என்கின்றது. சாதிய வாழ்க்கை முறைமைகளை சமூகத்தில் நிலைநாட்டுவதும், சாதியச் சடங்குகளை பின்பற்றுவதையே "கலாச்சாரமாக" கருதுகின்றது.

எப்படி சுத்திசுத்திப் பார்த்தாலும் இதுதான் தமிழன் "கலாச்சாரம்;". இதைத்தான் உன்னதமான கலாச்சாரமாக பீற்றிக்கொள்கின்றான். இது புலம்பெயர்ந்த சமூகத்தில் தகர்ந்துவிடவில்லை. குழந்தைகள் இதற்குள் வழிநடத்தப்படுகின்றனர்.

வெள்ளாளிய இந்துமதத்துக்கு "இஸ்லாமியர்" ஒருவரை அமைச்சாராக்கியதன் (தற்போது விலகியுள்ளார்) மூலம், சமூகப் பிளவுகளை உருவாக்கி, "இஸ்லாமிய பயங்கரவாதிகளை" தோற்றுவிக்க அரசு முனைகின்றது.

நவதாராளவாத சுரண்டலுக்;கு எதிராக மக்கள் ஒன்றிணைவதைத் தடுக்க, மக்களிடையே இனம் - மதம் - சாதி.. முரண்பாடுகளை உருவாக்குவதே அரசின் கொள்கை. இதுதான் நவதாராளவாதக் தேர்தல் கட்சிகளின் கொள்கையாகவும் இருக்கின்றது. நவதாராளவாதக் கட்சிகள் மக்களை தம் பின் திரட்டிக்கொள்ள, தம்மை இனம், மதம், சாதி .. சார்ந்த பிரதிநிதிகளாக முன்னிறுத்திக் கொண்டு, தாம் அல்லாத தரப்பை ஒடுக்குகின்றவராக மாறிவிடுகின்றனர். இதுதான் இன்றைய தேர்தல் அரசியலாகி இருக்கின்றது.

உலகளாவில் ஏகாதிபத்தியங்கள் இஸ்லாமிய மக்களை "பயங்கரவாதியாகவும்" - மக்களின்  எதிரியாகவும் காட்டியே, தத்தம் நாட்டு மக்களை மூலதனத்தின் பின் அணிதிரட்டுவது உலக ஒழுங்காக இருக்கின்றது. அதைச் செய்வதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதங்களை வளர்த்தெடுப்பதும், "பயங்கரவாத" வன்முறையை தூண்டிவிடுவதன் மூலம், மக்களைப் பிரித்து உலகைச் சுரண்ட முடிகின்றது.

பின்தங்கிய மதச் சமூகங்களின் வன்முறை வடிவங்களையும் - அதன் கோட்பாடுகளையும் காட்டி, அந்த மதம் சார்ந்த மக்கள் கூட்டத்தை மனிதகுலத்தின் எதிரியாக சித்தரிக்கின்றது. இதன் மூலம் அவர்களை பிற மக்களில் இருந்து பிரிப்பதுடன், இது தொடர்பாக மக்களிடையே பிளவுகளை உண்டாக்கி, இதைக் கட்டுப்படுத்துவதன் பெயரில் புதிய ஒடுக்குமுறைச் சட்டங்களை உருவாக்கி, மொத்த மக்களையும் ஒடுக்குகின்றது.

இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்தது நமது நாடு. மூளை வளமும் நமது நாட்டில் தாராளமாகவே உண்டு. காலனித்துவ ஆட்சியின் போதும் சரி அவர்கள் நாட்டை விட்டுப் போன பின்னரும் சரி நமது நாட்டின் வளங்களையும் குடிமக்களின் மூளை வளங்களையும் வைத்து இன்று வரையும் பிழைப்பு நடத்துபவர்கள் காலனித்துவ எசமானர்களே.

நாட்டை விட்டுப் போனாலும் காலனித்துவ ஏகாதிபத்தியம் நாட்டின் வளங்களை சுரண்டும் அரசியலை இங்கே விதைத்து வளர்த்து விட்டே சென்றது. அதாவது இன-மத-சாதி-பால்-பிராந்திய-வர்க்க மோதல்களை வளர்க்கும் அரசியல்வாதிகளை உருவாக்கி வைத்து விட்டே சென்றது. அதே காலனித்துவ எசமானர்கள்தான் இன்று வரை எமது மூளை வளங்களை உறிஞ்சி எடுத்தபடியும் இலங்கை இனவாத அரசுக்கு கடன், நன்கொடை கொடுத்தபடியும் அதன் அடக்குமுறை ஆட்சிக்கு ஆயுத உதவி வழங்கியபடியும் சர்வதேச சமூகம் என்ற பெயரில் வந்து நின்று சமாதானம் நல்லிணக்கம் பற்றி போதிக்கின்றனர்

'வாதம்' என்ற உடல் நோய் மனிதனை வாழ விடாது. அதே போன்றே சமூக சிந்தனை மட்டத்திலும் இந்த வாதம்(மனநோய்) நம்மை பீடித்திருப்பதாலேயே குடிமக்களாகிய நாம் அழிவை மட்டும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்-தமிழர்-தமிழ்த் தேசம்-பாரம்பரியம் என்றெல்லாம் கதையாடல்கள் செய்கிறோம். உலகின் முதல் தோன்றிய மொழி தமிழ் என்கிறோம். “கடுகைத் துளைத்து கடலைப் புகுத்திய” குறள் என்கிறோம். முதல் கப்பல் ஓட்டிய தமிழன் என்கிறோம். தமிழ் சாம்ராச்சியங்கள் இருந்ததாக வரலாறுகளை காட்டுகிறோம். “பசுவைக் கொன்றதற்காக மகனையே தண்டித்த மனு நீதிச் சோழன்” பரம்பரை நமது என மார் தட்டுகிறோம். “முல்லைக்குத் தேர் ஈந்த பாரி”யை காட்டி பெருமிதம் கொள்கிறோம். இன்னும் இன்னும் எத்தனையோ பெருமைகளை நாம் கூறிக் கொண்டே போகலாம்.

"தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால்

தேர்ந்தெடுத்தவன் முட்டாள்" 

                                         -தந்தை பெரியார்.

“பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் கதையாகவே” நமது நாட்டில் இன்று  நடைபெறும் சம்பவங்கள் 1970ஆம் ஆண்டு அரசியல் சூழலை மறுபடி ஏற்படுத்தி உள்ளது. தற்போது . காலத்துக்குப் பொருந்தாத-நடைமுறைச் சாத்தியம் அற்ற-யதார்த்தம் புரியாத அரசியல் விளக்கங்களும், கோரிக்கைகளும், அறிக்கைகளும் 2009ல் யுத்தம் முடிவடைந்த காலம் முதல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

யுத்த வெற்றியை மூலதனமாக்கி நாட்டைக் கொள்ளையடித்தவர்களால் இன்று நாடு பகுதி பகுதியாக பிரித்து அளவை செய்யப்பட்டு விற்கப்படுகிறது. நாட்டின் வளங்கள் குத்தகைக்கு விடப்படுகிறது. பல நூறு தலைமுறையாக மக்களை வாழவைத்த சுய தொழில்கள் திட்டமிடப்பட்டு முடக்கப்படுகிறது. குடிமக்கள் அந்நிய நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த ஊதியத்திற்கு உழைத்து உரிமைகளற்ற அடிமைகளாக உழைத்து உருக்குலைந்து மடியும் முறைமை கொண்ட புதிய உலக தாரளவாதப் பொருளாதார நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சாதாரண குடிமக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக நடைமுறையில் இருந்து வந்த அரச சேவைகள் படிப்படியாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. கல்வியும் சுகாதார சேவையும் இவற்றில் மிகவும் முக்கியமானவைகள்.

சாதியை எதிர்ப்பது ஏன்? "முற்போக்காக" முன்னிறுத்திக் கொள்ளவா? சாதி ஒடுக்குமுறையை முன்வைத்து பிழைத்துக் கொள்வதற்காகவா? சாதிய ஒடுக்குமுறை ஒழிப்பது தான், சாதி எதிர்ப்பின் நோக்கமென்றால்!, எப்படி? அதற்கான வழிமுறை என்ன?

ஒடுக்கும் சாதிய சமூகப் படிநிலைகளை முன்னிறுத்தியோ, மேல் இருந்து கீழாக நடக்கும் வன்முறையை எதிரானதாகக் காட்டியோ, சாதியைப் புரிந்துகொள்ள முடியுமா!? இதற்கு எதிராகப் போராடுவதன் மூலம், சாதியை ஒழித்துவிட முடியுமா!?

சாதிக்கு எதிரான கடந்தகால போராட்டங்கள் தொடங்கி இன்றைய சமூக வலைத்தளங்கள் (பேஸ்புக்) வரை, சாதி ஒழிப்பைக் கோருகின்றதா!? காலத்துக்கு காலம் அரங்கேறிய, அரங்கேறும் சாதி ஒடுக்குமுறை வடிவங்களை அம்பலப்படுத்துவதன் மூலம் அல்லது போராடுவதன் மூலம், சாதியை ஒழிக்க முடியுமா!? அதாவது சாதிக்கு எதிரான இன்றைய "முற்போக்குச்" சிந்தனைமுறை, சாதிய சிந்தனைமுறையினை எதிர்க்கின்றதா அல்லது ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்க்கின்றதா?

உதாரணமாக கலையில் வடிவத்தை முன்னிறுத்தி உள்ளடக்கத்தை மறுப்பது போல் அல்லது வெளித்தோற்றத்தில் விமர்சனத்தைக் கொண்டு அது தோன்றுவதற்கான சமூக உள்ளடக்கத்தை கேள்விக்குள்ளாக்காது அதை பாதுகாக்கும் கலை வடிவங்கள் போல், சாதி உள்ளடக்கத்தை விடுத்து வெளித்தெரியும் வன்முறை வடிவத்தை மட்டும் எதிர்க்கின்ற அரசியல் கூட சாதி அரசியலே. அதாவது சாதியத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றது.

அதாவது சாதியை பாதுகாக்கும் அரசியல் கூட, சாதி எதிர்ப்பை முன்வைக்க முடியும். சாதிய சீர்திருத்தவாதங்களைக் கொண்டு சாதியை தொடர்ந்து முன்னிறுத்துவது கூட, நடக்கத்தான் செய்கின்றது. "சமபந்தி" தொடங்கி உள்ளுராட்சி தேர்தலில் "சாதிய பிரதிநிதித்துவத்தை" வழங்குவதன் மூலம் சாதி சமூக அமைப்புமுறைமையும், சாதியச் சிந்தனைமுறைமையும் பேணப்படுகின்றது. சாதி காலத்துக்கு அவசியமற்ற மரபு என்று கூறும், சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் கூட, சாதியை மறுக்கும் சாதி அரசியலை முன்வைக்கின்றார்.  

இதுபோல் தான் "முற்போக்கு" சாதி எதிர்ப்பும் நடந்தேறுகின்றது.

இனவாத முரண்பாடுகளை வளர்த்து அதில் குளிர்காயும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும், சில முஸ்லீம் அரசியல்வாதிகளும், மஹிந்த காலத்து யாழ்ப்பாணத்து அமைச்சர் பெருமகனாரும்  இணைந்து நடத்திய அரசியலினால் தற்போது வடபகுதியின் மீன்வளம், மற்றும் கடல்வளம் அழிவுக்கு உட்படுத்தப்படுகிறது.

மஹிந்த காலத்தில் கடலடி வளங்களான கடல் அட்டை மற்றும் சங்கு குளிக்கும் அனுமதிப்பத்திரம் சிங்கள மற்றும் முசுலீம் பெரும் பணமுதலைகளுக்கு வழங்கப்பட்டது. இம் முதலைகள் மஹிந்த காலத்து அமைச்சரின் ஆதரவுடனும், கடற்படையின் ஆதரவுடனும் வடமராட்சி தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பிரதேசத்தில், 2009 பின்னான காலத்திற் சிறிது சிறிதாக கடலடி வளங்களை சுரண்டும் வேலையை ஆரம்பித்தனர். தற்போது இவர்களின் ஆதிக்கம் மண்டைதீவு வரை விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடல்வள அழிவு

கடல்வளத்தை சமுக அக்கறையுடன் பகிர்வதில் எந்த முரண்பாடுமில்லை. ஆனால், இன்று தமிழ் பிரதேசத்தில் நடைபெறுவது படுபயங்கரமான முறையில் கடல்சார் வளங்களை அழிவுக்குள்ளாக்கும்  செயற்பாடுகளாகும். பல நூற்றுக்கணக்கான படகுகளில் வந்து வடக்கின் கரையோரங்களில் தாணையம் அமைக்கும் மேற்படி முதலாளிகள், தமது கடற்தொழில் கூலியாட்களின் உதவியுடன் பகலின் Dynamite டைனமைட் பாவித்து மீன்வளத்தின் மீதான கொலையை - வள அழிவை மேற்கொள்கின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE