Language Selection

பி.இரயாகரன் - சமர்

சுயதம்பட்டங்களையும், சுயபுராணங்களையும், பெண்கள் மீதான அவதூறுகளையும், பிற இனங்கள் மீதான இனவாதத்தையும்.. முன்வைத்து, சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்வது அர்ச்சுனாவின் பிழைப்புவாத வாக்கு அரசியலாகியது. இதற்காக பாராளுமன்ற சிறப்புரிமையையும், தணிக்கையற்று விளம்பரம் செய்யும் உரிமையையும் பயன்படுத்தி, தனது மக்கள்விரோத அலுக்கோசுத்தனத்தை தனது மனிதவிரோதத்துடன் மேடையேற்றி வருகின்ற அவதாறு மன்னன் அர்ச்சுனா.      

2009 முன் தாக்குதலையும், இராணுவத்தின் இறப்பையும் காட்டி மக்களின் ஜனநாயக உரிமைகளையும், மனித வாழ்வியலையும் புதைகுழியில் புதைத்த "தலைவன்" வழியில், "தலைவனின்" பெயரில் தன்னை மய்யப்படுத்தி மக்களை மீண்டும் புதைக்குழிக்குள் அழைத்துச் செல்ல முற்படுகின்றான்.

இதற்கான சுயதம்பட்ட விளம்பரங்களுடன், தேர்தல் எதிரியை போட்டுத் தள்ள அவதூறு ஊழல் ஒழிப்பு சமூக வலைத்தளங்கள் புடை சூழவே, தேர்தலில் களமிறங்கினான். இந்த கூட்டுக்களவாணிக்  கும்பலின் தேர்தல் மனுவானது, ஒரு இடம் தவிர மிகுதி அனைத்து இடங்களிலும் நிராகரிக்கப்பட்டிருகின்றது.

தலைக்கனம் கொண்ட "தலைவனின்" தலைமையில் வேட்பு மனுக்களைச் சரியாக சமர்ப்பிக்க முடியவில்லை. தேர்தல் மனுவில் கூட ஊழல். மோசடிகள், பொய்கள், பித்தலாட்டங்களை .. தனது "தலைவன்" வழியில் முன்வைத்து அம்பலமாகி நிற்கின்றனர்.

ஆணாதிக்கத்தை தங்கள் சிந்தனைமுறையாகக் கொண்டவர்கள், பெண்களை பாலியல் ரீதியாகவே அணுகுவார்கள். இந்த ஆணாதிக்கவாதிகளின் கலாச்சாரமென்பது பெண்ணின் பாலியல் சுதந்திரத்தை மறுக்கும். குறிப்பாக புலித்தேசியமும் - புலியெதிர்ப்பு அரசியலும், தத்தமது எதிரிகளுடன் உள்ள பெண்களை இலக்கு வைக்கின்றது. இந்த வகையில் அருச்சுனாவின் செயற்பாடானது, மறுபக்கத்தில் அர்ச்சுனாவுடன் சம்மந்தப்பட்ட கவுசல்யாவையும் விட்டுவைக்கவில்லை.

பெண்ணை பாலியல்ரீதியாக அவதூறு செய்வதும், பெண்ணை நிர்வாணமாக்கிக் காட்டுவதும், பாலியல் நடத்தை பற்றி அவதூறு செய்வதும், வன்னி ஊழல் ஒழிப்பு அர்ச்சுனா கும்பலின் அரசியல் மட்டுமல்ல - அர்ச்சுனாவுக்கு எதிரான மற்றொரு தரப்பின் அரசியலும் கூட. இதையே தங்கள் அரசியலாக அர்ச்சுனா தரப்பு மாற்றியதுடன்,  சர்வசாதாரணமாக்கி இருக்கின்றது. 

இதன் மூலம் பெண்கள் அரசியலுக்கு வந்தால், இதுதான் கதி என்று மிரட்டுகின்றது. இதற்கு அர்ச்சுனா கும்பல் "தமிழன் - தலைவரின்" பெயரில் தலைமை தாங்குகின்றது. இந்த வக்கிரத்துக்கு பாராளுமன்றத்தில் தமிழனுக்கு அநீதி என்று, தமிழன் பெயரில் சிறிதரன் வக்காலத்து வாங்குகின்றார். தலைவர், தமிழன் என்ற பெயரில் பெண்களைத் தமது பிழைப்புவாத அரசியலுக்காக விற்றுப் பிழைக்கின்றனர்.

பாலியல் காட்சிகளைப் போடுவது, பாலியல் காட்சிகளையிடும் சமூக வலைத்தளத்தை விளம்பரம் செய்வது என்பவை ஊழல் ஒழிப்பாகியிருக்கின்றது. இதுதான் அர்ச்சுனாவினதும் – தமிழடியானினதும் சமூக அக்கறைக்கான, பொது அளவுகோலாகி இருக்கின்றது. 

பெண்களை ஒடுக்கப் பாலியல் காட்சிகளைப் பதிவிடுவது, தமிழனின் ஒழுக்கத்தையும் - கலாச்சாரத்தையும் பாதுகாப்பதாம். இத்தகைய தமிழ் பாசிச அரசியலை முன்னிறுத்தி, சுயபிழைப்பை தொடருகின்றனர் கூட்டுக் களவாணிகள்.

கோயில் கோபுரங்களில் நிர்வாணக் காட்சிகளையும் - புணருகின்ற காட்சிகளையும் அமைத்து, அதை கைகூப்பிக் கும்பிடுகின்ற ஆணாதிக்கச் சமூகத்தின் கலாச்சாரம் தான், சமூக வலைத்தளத்தில் பாலியல் காட்சிகளைப் போட்டு அதை உணர்ச்சிகரமான தமிழ் தேசியமாக்கி கொண்டாடுவது சமூக செயற்பாடாகி இருக்கின்றது. தங்கள் சுய பாலியல் வக்கிரங்களை, தமிழ் தேசியத்தின் பெயரில் பின்னோட்டமாக்கி அவர்களை தம்மை தொடர்பவர்களாக உருவாக்குகின்றது. வாக்குப் போடக் கோருகின்றது. யாருக்கு வாக்கு போடவேண்டும் என்று நேரடியாகவோ - மறைமுகமாகவோ பிரச்சராம் செய்கின்றது. 

1970 களில் தேர்தலில் தங்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்களைத் துரோகியென்று கூறி சுட்டுக் கொன்றது போன்று, 1980 களில் சமூக விரோத ஒழிப்பென்ற பெயரில் இயக்கங்களால் தூண்களில் கட்டிச்  சுட்டுக்கொன்றது போன்று, இன்று ஊழல் ஒழிப்பின் பெயரில் புலிப் பாசிட்டுகள் களமிறங்கியிருக்கின்றனர்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமென்று சொல்லி, தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணமான புலிப் பாசிசத்தை, இந்த ஊழல் ஒழிப்புவாதிகள் கொண்டாடுகின்றனர். பெண்களின் ஒழுக்கம் குறித்தும் - நடத்தை குறித்தும் தங்கள் ஆணாதிக்கப் பாசிச முகத்தை மூடிமறைத்துக் கொண்டு, பூதக் கண்ணாடியோடு அலைகின்றனர். இந்தப் புலிப் பாசிசக் கும்பலின் எடுபிடியாக டொக்டர் அருச்சுனா களமிறங்கியிருக்கின்றார். அறிவு நாணயமற்ற – பகுத்தறிவற்ற புலிப் பாசிச நிழலில் குளிர்காயும் இந்த ஊழல் ஒழிப்பு வேசமானது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

பனை வளம் குறித்தும் அதன் பயன்பாடு குறித்துமான "சாதிய வாதங்களை வைத்து என்.பி.பி பிழைப்பு நடத்துகிறதா?" என்ற தலைப்பில் டொக்டர் அருச்சுனா, சாதி பற்றி தனது கருத்தை முன்வைத்திருக்கின்றார். பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவர் சகாதேவனுக்கு எதிராக வெளியான ஒரு கட்டுரையைப் பகிர்ந்து தனது யூரியூப்பில் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.


இங்கு அருச்சுனா விவாதத்துக்கு முன்வைத்த விடையங்கள், குறிப்பாக அவர் பகிர்ந்த கட்டுரையில் இல்லை. இந்த வகையில்

1.    தவறணைகளை மீள அமைப்பது குறித்தும் 

2.    ஒடுக்கப்பட்ட சாதிகளின் வளர்ச்சிக்கு தவறணை உதவும் என்ற வாதம் 

3.    பனைகளை வெட்டும் அனுமதி பனை அபிவிருத்தி சபைக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து

இவை பற்றி எந்தக் குறிப்பும் அருச்சுனா பகிர்ந்த கட்டுரையில் இல்லை. இருந்த போதும் 

மீளவும் தவறணை அமைப்பதற்கான அனுமதி, பனையை வெட்ட பனை அபிவிருத்தி சபையின் அதிகாரத்தை தரவேண்டும் என்ற கோரிக்கையை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வகையில் அருச்சுனாவின் கண்ணோட்டம், இதற்காக அவர் கூறும் காரணங்களைக் கடந்து சரியானது.

1.பழையபடி தவறணை என்பது, முன்னோக்கிப் பயணிக்க வேண்டிய உற்பத்தி மற்றும் பயன்பாட்டு முறையை பின்னோக்கி கொண்டு வருவது. இருக்கின்ற அறிவைக்கொண்டு சமூகத்தையும், உற்பத்தியையும் பின்நோக்கி இழுப்பது. பழைய சாதிய சமூக உற்பத்தி  - நுகர்வு வடிவத்துக்குள் சமூகத்தை மீளக் கொண்டு வருவது. சாதிய அடிப்படையில் தவறணை சாதியின் வளர்ச்சிக்கு உதவும் என்று  கூறியிருந்தால், பொருளாதார வாதத்தை முன்வைத்து சாதியைப் பின்னோக்கி நகர்த்துவதாகும். இதைப்பற்றி விரிவாக பலவற்றை விவாதிக்க முடியும். 

துரோகிகள், சிங்களவன் காலை நக்குகின்றவர்கள்…என்று தாமல்லாத எதிர்த்தரப்பைக் கூறிக் கொண்டு, நாங்கள் உணர்ச்சியும் அறிவும் மானமுமுள்ள தமிழர்கள் என்று கூறிக்கொண்டு திரிபவர்களே தமிழினவாதிகள். இவர்கள் வேறு யாருமல்ல. அரசு மூலம் சொகுசு வாகனங்களை, மதுபான பெமிற்றுக்களை, பாராளுமன்ற சலுகைகளை, … பெற்றுக்கொண்டு வாழ்பவர்கள். அனைத்து இனவாதிகளும் கூடிக் கும்மியடிக்கும் கடந்தபோன வரலாறு, இந்த தேர்தலில் கணிசமாக இழந்து போனதால் புலம்புகின்றனர். தமிழினத்தின் ஒற்றுமை பற்றி வகுப்பெடுக்கின்றனர். 

இப்படி தோற்றுப் புலம்பும் இந்தத் தமிழினவாதிகள், புலம்பெயர் தமிழினவாதிகளின் பினாமிகள். புலம்பெயர் தமிழினவாத பிழைப்புவாதக் கும்பல்களின் பிளவுகளுக்கேற்ப, கும்மி அடித்த மற்றும் அடிக்கின்ற பிளவுவாதிகள்.                             

புலம்பெயர் தமிழினவாதிகளுள் பிளவு என்பது, கொள்கைரீதியானதல்ல. புலிகளுடன் உருவான இந்த அணியின் பிளவு, புலிச் சொத்துகளை ஆட்டையைப் போடவும், புலியை சொல்லிப் பிழைக்கவும்.. யாருக்கு உரிமையுண்டு என்ற மோதலே, பல புலம்பெயர் தமிழினவாத அணிகளை உருவாக்கியது.

ஒடுக்கப்பட்ட தேசியமென்பது, ஒடுக்குமின மக்களின் ஜக்கியத்தைக் கோராத வரை, அவை சொந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. இந்த வகையில் கீழிருந்து மக்களின் ஐக்கியத்தை முன்வைக்காத, மற்றும் மறுதளிக்கும்; இனவாதத் தேசியம் தோற்கடிக்கப்பட வேணடும்.

இனம் மதம் கடந்து அனைத்து ஒடுக்கப்பட்ட மனிதர்களையும் முன்னிறுத்தாத குறுகிய அரசியலென்பது, ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானது மட்டுமின்றி, தன் இன-மத ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் அரசியலாகும். தமிழனைத் தமிழன் ஒடுக்கும், முஸ்லிமை முஸ்லிம் ஒடுக்கும், மலையகத்தவனை மலையகத்தவன் ஒடுக்கும் அரசியல். இது சிங்களவனைத் சிங்களவன் ஒடுக்கும் இன மத வாத அரசியலே.

பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் இனம் மதம் கடந்த வெற்றியும், இன மத அடையாளம் கடந்து தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்ததென்பது, இன மதம் ஊடாக சிந்திக்கின்ற அனைத்து தரப்புக்கும் எரிச்சல் ஊட்டுகின்ற, தோல்வியாக மாறி இருக்கின்றது. இன மதம் கடந்து, மக்கள் அரசியலை முன்வைக்க முடியாதவர்களின் புலம்பலாக மாறியிருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி எஞ்சிக்கிடக்கும் இனமதவாத கோவணத்தை உருவிவிடுமா என்ற அச்சத்துடன் ஒப்பாரி வைக்கின்றனர். தமிழினவாதம், கிழக்குப் பிரதேசவாதம், முஸ்லிம் இனமத வாதம்;, மலையக இனவாதம்.. என தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றி எதையும் விட்டுவைக்கவில்லை.

தேசிய மக்கள் சக்தி தமிழருக்கு சமஸ்டியைத் தர மறுக்கின்றார்கள், அதைப் பேச மறுக்கின்றார்கள் .. என்று கூறி முன்வைக்கும் தமிழினவாத அரசியல் எத்தகையது?. இவர்கள் கோரும் சமஸ்டி அதிகாரம் யாருக்கெதிரானது? யாருக்கு ஆதரவானது? இதன் அதிகாரம் எப்படிப்பட்டதாக இருக்கும்?

75 வருட சமஸ்டிக்காரர்களின் வரலாறு, இதற்கு மிகத் தெளிவாக பதிலளிக்கின்றது. கடந்த இந்த வரலாறு  கற்பனையல்ல.

1.சமஸ்டிக் கோசத்தை முன்வைத்த தமிழரசுக்கட்சி, என்றைக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலையை முன்வைத்ததில்லை. மாறாக ஒடுக்கப்பட்ட தமிழனை ஒடுக்கும் தமிழனின் அதிகாரத்தையே கோரியது, கோரி வருகின்றது.

தமிழரசுக் கட்சியின் வரலாற்றில், என்றைக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகள் பொதுவிடங்களைப் பயன்படுத்தும் சுதந்திரத்தைக் கோரியதில்லை. 1965 இல் சமஸ்டிக்காரருக்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டத்தின் போதே, பொது இடங்களைப் பயன்படுத்தும் உரிமைகளை ஒடுக்கப்பட்ட சாதிகள் பெற்றனர். இது வரலாறு.

சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்கும் உரிமையை, இவர்கள் முன்வைக்கவில்லை. சமஸ்டிக்காரர்கள் தங்கள் வெள்ளாளிய பாடசாலைகளை அனைவருக்கும் திறக்குமாறு கோரியதுமில்லை, போராடியதுமில்லை. 1960 களில் யாழ்ப்பாணத்து வெள்ளாளியப் பாடசாலைகளை அரசு தேசியமயமாக்கியதன் பின்பு தொடரச்;சியாகச் சமஸ்டிக்காரருக்கு எதிரான தொடர் போராட்டங்களின் மூலமே, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள், தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்க முடிந்தது. 

இன்னும் பல இருந்த போதும், சமஸ்டிக்காரர்களைப் புரிந்துகொள்ள இந்த உண்மைகள் போதுமானது.

திசைகாட்டியின் அரசியலென்பது தட்டுத் தடுமாறியே, பயணித்து வந்திருக்கின்றது. ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியாக தன்னை முன்னிறுத்தி, முதலாளித்துவ சீர்திருத்தவாத அரசியலை முன்வைக்கின்றது. அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் அதன் பயணமென்பது, அரசியல்ரீதியான ஊழலலானது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்ற, அதன் வரலாற்றுரீதியான அரசியலைக் கைவிட்டுவிட்டது. இதை வெளிப்படையாக இன்று சொல்வதில்லை.

இவர் அதிகாரத்தை பெற காரணமான அரகலய போராட்டமானது, தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்த போராட்டமல்ல. மாறாக இன்றைய மக்கள் போராட்ட முன்னணித் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, அதன் அலையில் பல தரப்பினர் இணைந்து கொண்டனர்;. அந்த அலையில் வந்து சேர்ந்தவர்களே ஜே.வி.பி. இதை ஜே.வி.பி. மறுத்தால் அது பொய். நேர்மையற்ற அரசியல் செயற்பாடு.

ஜே.வி.பி. வந்து சேர்ந்திருந்த காலத்தில், ஒரு கால கட்டத்தில் அரகலய அலை ஓய்ந்தது. இந்த அலை ஓய்ந்த போது, அதைவிட்டுக் கரையொதுங்கிய ஜே.வி.பி., போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றது. 

அமெரிக்கத் தேர்தல் முடிவு குறித்து ஒற்றைவரியில் கூறுவதென்றால், உலக யுத்தமானது நான்கு வருடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. தீவிர வலதுசாரியாகக் கருதப்படும், கூறப்படும் டிரம்மின் வெற்றியானது, உலக மேலாதிக்கத்தை எந்தப் பாதை வழியாக எடுத்துச் செல்வதென்பதில், ஜனாதிபதி வேட்பாளருக்கிடையில் அடிப்படையில் வேறுபாடுகளுண்டு.

உலக மேலாதிக்கமென்பது, பொருளாதாரம் மீதான ஏகாபத்தியங்களின் மேலாதிக்கமாகும்.  ஏகாதிபத்தியங்களின் பொருளாதார மேலாதிக்கமென்பது, தனித்தனி ஏகாதிபத்திய நாடுகளின் மேலாதிக்கமாகும். ஏகாதிபத்திய் நாடுகளின் மேலாதிக்கமென்பது, தேசம் கடந்த முதலாளிய வர்க்கத்தின் மேலாதிக்கமாகும்.

இதற்கமையவே ஏகாதிபத்திய இராணுவ மேலாதிக்கம் தொடங்கி ஜனநாயகம் வரை கட்டமைக்கப்படுகின்றது.

1990 களில் திறந்த சந்தைப் பொருளாதாரம் மூலம் தேசங்கடந்த மூலதனம் கொழுக்கும் கொள்கை கொண்டு வரப்பட்டது. தேசம் கடந்த மூலதனங்களுக்காக தேசங்களின் பொருளாதாரம் திறந்துவிடப்பட்டது. அன்னிய மூலதனத்துக்கு வரைமுறையற்ற சுதந்திரமும், சந்தையும் திறந்துவிடப்பட்டது.

இனவாதத் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி தமக்கு வாக்களிக்கக் கோரும் தேர்தல் அரசியல், மக்களுடைய கோரிக்கைகளுக்கு உண்மையாக இருக்கின்றதா!? ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வுடன், தமிழ்த் தேசிய அரசியல் பொருந்திப் போகின்றதா?  

துமிழ்த் தேசியம் என்பதென்ன? தேசிய அரசியலின் உள்ளடக்கமென்ன? தமிழனைத் தமிழன் அடக்கியாளும் அதிகாரத்தைப் பெறுவதா! புலிகளை முன்னிறுத்துவதா! 

இவர்கள் கோரும் தமிழ் அதிகாரம், தமிழனைத் தமிழன் அடக்கியாளும் அதிகாரத்தையா!? 13 வது திருத்தச் சட்டம், சமஸ்டி மூலம் யாரை அடக்கியாள விரும்புகின்றனர்? 13 வது திருத்தச் சட்டம், சமஸ்டி.. கோரும் இவர்களின் சமூகப் பொருளாதாரத் திட்டமென்ன? ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி முன்வைக்கப்படுகின்றதா!  

ஊழலெதிர்ப்பை முன்வைத்து அரசியலுக்கு வந்த டொக்டர் அர்ச்சுனா, ஊழலுக்கு எதிரான அரசியலை முன்வைப்பதைக் கைவிட்டு தமிழ்த் தேசியத்தின் பெயரில், குப்பை கொட்டுமளவுக்கு, தேசியம் குப்பைக் கிடங்காக மாறியிருக்கின்றது. 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE