சுயதம்பட்டங்களையும், சுயபுராணங்களையும், பெண்கள் மீதான அவதூறுகளையும், பிற இனங்கள் மீதான இனவாதத்தையும்.. முன்வைத்து, சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்வது அர்ச்சுனாவின் பிழைப்புவாத வாக்கு அரசியலாகியது. இதற்காக பாராளுமன்ற சிறப்புரிமையையும், தணிக்கையற்று விளம்பரம் செய்யும் உரிமையையும் பயன்படுத்தி, தனது மக்கள்விரோத அலுக்கோசுத்தனத்தை தனது மனிதவிரோதத்துடன் மேடையேற்றி வருகின்ற அவதாறு மன்னன் அர்ச்சுனா.
2009 முன் தாக்குதலையும், இராணுவத்தின் இறப்பையும் காட்டி மக்களின் ஜனநாயக உரிமைகளையும், மனித வாழ்வியலையும் புதைகுழியில் புதைத்த "தலைவன்" வழியில், "தலைவனின்" பெயரில் தன்னை மய்யப்படுத்தி மக்களை மீண்டும் புதைக்குழிக்குள் அழைத்துச் செல்ல முற்படுகின்றான்.
இதற்கான சுயதம்பட்ட விளம்பரங்களுடன், தேர்தல் எதிரியை போட்டுத் தள்ள அவதூறு ஊழல் ஒழிப்பு சமூக வலைத்தளங்கள் புடை சூழவே, தேர்தலில் களமிறங்கினான். இந்த கூட்டுக்களவாணிக் கும்பலின் தேர்தல் மனுவானது, ஒரு இடம் தவிர மிகுதி அனைத்து இடங்களிலும் நிராகரிக்கப்பட்டிருகின்றது.
தலைக்கனம் கொண்ட "தலைவனின்" தலைமையில் வேட்பு மனுக்களைச் சரியாக சமர்ப்பிக்க முடியவில்லை. தேர்தல் மனுவில் கூட ஊழல். மோசடிகள், பொய்கள், பித்தலாட்டங்களை .. தனது "தலைவன்" வழியில் முன்வைத்து அம்பலமாகி நிற்கின்றனர்.
