பி.இரயாகரன் - சமர்

விதை குழுமம் தொடர்பாகவும் அதன் செயற்பாட்டாளர்கள் சிலர் தொடர்பாகவும் பாலியல் சுரண்டல், நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாற்றுகள் பெப்ரவரி, 2024  இறுதியில் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டிருந்தன.  விதை குழுமத்திலும் அதன் அமைப்புகளான புதிய சொல், கூட்டு வேலைத்திட்டமான தொன்ம யாத்திரை ஆகியவற்றில் அங்கம் வகித்தவன் என்றவகையிலும் அவை சார்பாக பலருடன் உரையாடியவன், கூட்டு வேலைகளை முன்னெடுத்தவன் என்றவகையிலும் இவற்றுக்குப் பதில் சொல்லவும் பொறுப்புக் கூறவும் நான் கடமைப்பட்டுள்ளவன் என நினைக்கிறேன். 

மேலும் படிக்க: விதை குழுமம் தொடர்பான குற்றச்சாற்றுகளும் எனது நிலைப்பாடும்

மக்களை அணிதிரட்டாத, சமூகச் செயற்பாட்டின் பெயரில் தம்மைத் தாம் முன்னிறுத்திய விதை குழுமத்துக்குள், ஆணாதிக்க வக்கிரங்கள் புளுத்து நெளிகின்றது. சுயவிளக்கத்தில் அமைந்த தர்க்கங்களுடன் அமைந்த ஆணாதிக்கக் கோட்பாடுகளுடன் தம்மைத்தாம் மூடிமறைக்க, ஆணாதிக்க பெண் ஒழுக்கத்தை முகமூடியாக்கிக் கொள்ள முனைகின்றது.

இத்தகைய ஆணாதிக்க வக்கிரங்கள், மீண்டும் மீண்டும் சமூகத்தை முன்னிறுத்திக் கொண்டு நடத்துகின்ற பொறுக்கித்தனமான ஆணாதிக்க பாலியல் சுரண்டல்கள் தொடருகின்றது. 


மேலும் படிக்க: ஒன்றுக்கு மேற்பட்ட காதலும் - ஆணாதிக்கச் சுரண்டலும்

நல்லிணக்கபுரம் என்ற தமிழ்க் கிராமமானது, 150 வீடுகளைக் கொண்டிருப்பதுடன் 190 குடும்பங்கள் அங்கு வாழ்கின்றனர். இந்த 190 குடும்பத்தில் அண்ணளவாக 110 குடும்பங்கள் இந்துக் குடும்பங்கள்;. மிகுதி கிறிஸ்துவ குடும்பங்கள். சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட இந்த மக்களின் மீள்குடியேற்ற வாழ்க்கையானது, வெள்ளாளிய அதிகாரத்தினால் தொடர் துயரங்களைக் கொண்டதாக மாறியுள்ளது.  

மேலும் படிக்க: தமிழனைத் தமிழன் ஆளும் அதிகாரமானது, மாவிட்டபுரத்தில் தீண்டாமைச் சுவராக காட்சியளிக்கின்றது 

நடிகை ரம்பாவின் கோடீஸ்வரக் கணவர், தமன்னாவை முன்னிறுத்தி நடத்திய கூத்து யாழ்ப்பாண சமூகத்தின் பொது வெட்டுமுகத்தைத் தோலுரித்திருக்கின்றது. இந்திய தமிழ் சினிமா உற்பத்தி செய்யும் ஆபாசங்களையும் - இசைகளையும், மேடை போட்டுக் காட்ட முற்பட்டபோது, அதைத் தரிசிக்க - ரசிக்க சென்ற கூட்டமானது, தனது லும்பன்தனத்தை தத்துரூபமாக வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டியது.

யாழ்ப்பாண தமிழ் - இந்துத்துவ கிடுகுவேலி ஆணாதிக்க கலாச்சாரத்தை வாய்கிழியப் போற்றிப் புகழ்கின்ற   சமூகமானது, வன்முறை கொண்ட லும்பன் சமூகமாக முன்னிறுத்திய நிகழ்வு தான் இந்த யாழ் நிகழ்வு. 


மேலும் படிக்க: கல்விக்கூடங்களும் களியாட்டங்களும் - ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்

சுவாஸ்திகாவின் கருத்துரிமையை மறுத்து கருத்துரைக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் விஜகுமாரிடம், ஊடகவியலாளர் பிரஸ்ரெவ் கேட்ட கேள்வியும் - முன்வைத்த பதிலும்,  தேசிய இனத்தின் அழிவுக்கு எப்படி சவக்குழி தோண்டப்படுகின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

புலியிசத்தின் பின்னால் பதுங்கி நிற்கும் தங்களது ஜனநாயக மறுப்பு வன்முறை வடிவத்தை, தமிழ் சமூகத்தின் மீட்சிக்கு உதவுமென்று நம்புகின்ற - நம்ப வைக்கின்ற கிணற்றுத் தவளைகளாக தம்மை முன்னிறுத்திக் கொள்கின்றனர்.

முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாக மக்களை பலியெடுத்தவர்களுக்கு திட்டமிட்டே பலிகொடுத்தவர்களின் வாரிசுகளே இவர்கள். எஞ்சி வாழும் மக்களுக்கு சொந்த சவக்குழியைத் தோண்டி வருகின்றனர். ஒரு தேசிய இனத்தின் எல்லாவிதமான சமூக இருத்தலையும், இல்லாதாக்குகின்ற வக்கிரமான லும்பன்தனமான பொறுக்கி அரசியலே - தமிழ் தேசியத்தின் பேரில் அரங்கேறுகின்றது.


மேலும் படிக்க: தமிழ்மக்களுக்கு சவக்குழியைத் தோண்டும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

பாசிசமும் முதலாளித்துவமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்ற அதேநேரம், பாசிசமானது மேலெழும் போது முதலாளித்துவத்தின் ஒரு கூறு அதை எதிர்க்கின்றது. அதாவது எந்த வடிவத்தில் சுரண்டுவது என்பதில், முதலாளித்துவ வர்க்கத்தில் இருக்கக்கூடிய முரண்பாடுகளே இந்த பாசிச எதிர்ப்பு அரசியலுக்கான அடிப்படையாகும். 

மேலும் படிக்க: சுவாஸ்திகாவின் கருத்துரிமை மீது : பாசிசத்துக்கு எதிரான முதலாளித்துவ பிழைப்புவாதிகள் 

ஊடக ஜனநாயகம் என்பது பாசிசத்தை ஆதரிப்பதல்ல. மக்களை ஒடுக்கும் அதிகாரத்தை தொழுவதல்ல. பாசிசத்துக்கும், ஒடுக்கும் அதிகாரத்துக்கும் ஜனநாயகம் உண்டு என்பது, கடைந்தெடுத்த ஒடுக்குமுறையை மூடிமறைத்து நியாயப்படுத்துவதே.

புலிகள் பாசிச இயக்கமல்ல, ஜனநாயக இயக்கம் என்றால், அதை ஊடகவியலாளர் பிரஸ்நொவ் (Breesnove), சுவாஸ்திகாவிடம் கேள்வியாக முன்வைத்திருக்க முடியும். ஆனால் புலிகள் ஜனநாயக இயக்கமல்ல என்பதால், ஊடகவியலாளர் பிரஸ்நொவ் ஜனநாயக அரசியல் சார்ந்து கேள்வியை முன்வைக்க முடியவில்லை. 

மாறாக புலிப் பாசிசத்தை பாதுகாக்கும் குதர்க்கத்தில், தர்க்கத்தில் இருந்துதான் கேள்விகள் அனைத்தும் கேட்கப்பட்டது. ஆனால் சுவாஸ்திகாவிடம் அவைகள் தோற்றுப் போனது.

மேலும் படிக்க: சுவாஸ்திகாவை பேட்டியெடுத்த ஊடகவியலாளரின் ஜனநாயக பண்பு குறித்து

யூதர்களை அழித்த ஹிட்லரின் நாசிகளின் வழியில், யூத சியோனிஸ்டுகள் பாலஸ்தீனத்தை அழித்து வருகின்றனர். 1948 இல் பாலஸ்தீனம் என்ற நாட்டை கூறுபோட்டு சுடுகாடாக்கத் தொடங்கிய மேற்கு ஏகாதிபத்தியமே, இன்று அடுத்த காலடியை எடுத்து வைத்திருக்கின்றது. 

யுத்தமே தீர்வு என்று ஜ.நாவில் வாக்களித்துக் கொண்டு, இஸ்ரேலுக்கு ஆயுதங்களைக் கொடுத்து - புதிய ஆக்கிரமிப்பை தொடங்கியுள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு தடை ஏற்படுவதைத் தடுக்க, ஆயுதக் கப்பல்களை சியோனிஸ்டுகளுக்கு ஆதரவாக கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது அமெரிக்கா.

சர்வதேச நீதிமன்றமோ கண்ணை மூடிக்கொண்டு மேற்கத்தைய ஏகாதிபத்திய கொள்கைக்கு ஏற்ப, நித்திரை கொள்கின்றது. மேற்கத்தைய ஏகாதிபத்திய நலனுக்கும், அதன் தீரப்புக்கும் ஏற்ப, உலக நாடுகளை அடக்கியாளவே சர்வதேச நீதிமன்றம் எப்போதும் விழித்திருந்ததை வரலாறு மறுபடியும் நிறுவி இருக்கின்றது.      

மேலும் படிக்க: அமெரிக்கா தலைமையிலான இஸ்ரேலிய சியோனிஸ்டுகள்

யாழ் பல்கலைக்கழக நிகழ்வில் கருத்துரைக்க வந்த சுவாஸ்திகாவுக்கு, கருத்துரைக்கும் ஜனநாயக உரிமையை மறுத்திருக்கின்றனர் தமிழ் தேசிய லும்பன்கள். 

புலிப் பாசிசமும் - பாசிச நடைமுறையும் சிந்தனையும் புலியுடன் அழிந்துவிடவில்லை, மாறாக இச் சமூகத்தில் நஞ்சாக மாறி புரையோடிக்கிடக்கின்றது. சமூகத்தில் இருந்து நாற்றமெடுக்கின்ற அதேநேரம், ஜனநாயகத்தின் துளிர்களையே கொத்திக் குதறுகின்றது.  

கடந்த வரலாற்றில் தமிழ் மக்களின் இருப்பையும் - வாழ்வையும் அழித்துவிட்ட புலிப் பாசிசமானது, தொடர்ந்தும் எஞ்சிய மானிடக் கூறுகளை வேட்டு வைக்கின்றது. 

சுவாஸ்திகா புலிகள் குறித்து முன்வைத்த கருத்து தவறானது என்று கருதும் ஒருவர், அதை மறுத்து விவாதிக்க முடியும். அதுதான் ஜனநாயகம். இது மட்டும் தான் பகுத்தறிவுடன் கூடிய, நேர்மையான செயலாக இருக்கமுடியும்.

கருத்தை எதிர்த்து விவாதிக்க முடியாத தற்குறிகள், சமூகத்தின் ஜனநாயகத்தை மறுப்பதுடன், கருத்துக் கூறும் மானிட உரிமையை கேலிசெய்து விடுகின்றனர். அடிப்படையில் ஜனநாயகத்துக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதன் மூலம், தங்கள் பாசிச நடத்தைகளை முன்னிறுத்துகின்றனர்.

மேலும் படிக்க: சுவாஸ்திகாவுக்கு மறுக்கப்பட்ட ஜனநாயகத்தின் பின் இருப்பது புலிப் பாசிசம்

தத்துவமும், கோட்பாடுகளுமின்றி எதையும் முத்திரை குத்தமுடியாது, வழிபடவும் முடியாது. தத்துவமும், கோட்பாடுகளுமின்றிய முன்முடிவுகள், அக விருப்புக்கும், சுயநலனுக்கும் உட்பட்டவையே. புலிகள் ஒரு பாசிச இயக்கம் என்று தத்துவமும், கோட்பாடுகளுமின்றி கூறும் போது, அவை மக்கள் விரோத அரசியலிலிருந்து கூறுகின்றனரே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்தல்ல. 

புலிகள் என்ற ஆயுதமேந்திய பாசிச சர்வாதிகார அதிகார அமைப்பு இன்று இல்லையென்ற போதும், அதன் கோட்பாடுகளே தமிழ் தேசியமாக தொடர்ந்து முன்தள்ளப்படுகின்றது. இப்படித் தமிழ் தேசியமாக உயர்த்தப்படுவது, தமிழ் தேசியமல்ல தமிழ் இனவாதமே. இந்த இனவாதமே, மதவாதமாகவும் திரிவுபடுகின்றது.

இந்த வரலாற்றுப் போக்கில் வளர்ச்சியுற்ற தமிழ் பாசிசத்தை மூடிமறைக்கின்றனர்;. இன்றைய சாதிய சமூக அமைப்பின் வெள்ளாளியச் சிந்தனையை எப்படி மூடிமறைக்கின்றனரோ, அதேபோல் புலிப் பாசிசத்தை மறுதளிக்கின்றனர். இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே. இதுவே ஒடுக்கும் இனவாத சாதிய அரசியலாக நீடிக்கின்றது.

இதை மூடிமறைக்க புலிகளை தேசிய இயக்கமாகக் காட்டுகின்ற பித்தலாட்டத்தை செய்கின்றனர்.  இதனை விரிவாக ஆராய்வது அவசியமாகின்றது.   

புலிகள் தேசிய இயக்கமா? 

தமிழ் இனவாதிகள் கூறுவது போல், புலிகள் தேசிய இயக்கமல்ல. புலிகள் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தாத, அவர்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடாத எந்த இயக்கமும், தேசிய இயக்கமல்ல. இந்த வகையில் 1980களில் தோன்றிய தமிழ் தேசிய இயக்கங்களுக்கு இது பொருந்தும். 

தேசியம் என்பது சமூகப் – பொருளாதாரக் கோட்பாடுகளாலானது. தனிநபர் பயங்கரவாதத்தை நடத்துவதாலோ, இராணுவத் தாக்குதலை நடத்தி விடுவதாலோ அது தேசிய விடுதலை இயக்கமாகிவிடுவதில்லை. உரத்துக் குரல் கொடுத்துவிடுவதால் தேசியவாதியாகி விடுவதில்லை. 

மேலும் படிக்க: புலிகள் பாசிச இயக்கமே ஒழிய, ஜனநாயக இயக்கமல்ல.

முறிந்த பனை நூலின் சட்ட ரீதியான உரிமை, எனது தகவல் (எனக்கு ஆங்கில மொழி பேசவோ - எழுதோவோ தெரியாத குறைபாட்டால் இது ஏற்பட்டது. இந்தத் தவறு தெரிந்து கொள்ளாது மூலப்பிரதியை பிரசுரித்ததும் நானே) தவறானது. இந்த நூல் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதே சரியானது.

எனது இந்தத் தவறு எந்த விதத்திலும், அமெரிக்க அதிகார வர்க்க நலனுக்காகவே, நூல் வெளிவந்தது என்ற உண்மையை மறுதளித்துவிடவில்லை. வர்க்க அடிப்படையில், மத அடிப்படையில், ஏகாதிபத்திய நலன்கள் அடிப்படையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியல் அடிப்படையில் ரஜனியை முன்னிறுத்திக் கொண்டாடும் விசுவாசிகளின் புலம்பலுக்கு எதிரானதே, கட்டுரையின் சாரம். சட்டரீதியான தவறுக்கு இலங்கை அமெரிக்கன் மிசனரியின் வழிபாட்டின் அங்கமான பாவமன்னிப்புககுரியதாக இருந்தாலும், இதன்பின் இருக்கின்ற ஏகாதிபத்திய கடவுள் பொய்யாகிவிடுவதில்லை.


மேலும் படிக்க: விசுவாசிகளின் புலம்பல்கள் : முறிந்தபனை நூல் யாருக்காக எழுதப்பட்டது? 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More