![](/images/images/2016/October2016/TamilGovermnwnt.jpg)
இலங்கையில் சிவசேனா வெறியர்கள், தமிழ்நாட்டில் தமிழ்க் குறுந்தேசிய லூசுகள், வெளிநாடுகளில் உளவுத்துறைகளின் கைக்கூலிகள், மட்டை விளையாட்டு மாபியாக்கள் எல்லாம் தமிழ்த் தேசிய விடுதலை பேசும் அவலம் நிலவும் சூழலில் பொருத்தம் கருதி 2012 இல் எழுதப்பட்ட கட்டுரையின் மறுபிரசுரம்.
ஒரே மேடையில் பல நாடகங்கள் என்பது போல தமிழரிற்காகவே உயிரையும், உடலையும் வைத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் பல அமைப்புக்கள் இணைந்து கூட்டமொன்றினை நடத்தப் போகின்றார்கள் என்ற செய்தியைப் படித்தான். "வாய் நீண்டதால் வாழ்விழந்தோர் சங்கத்தின்" தலைவர் கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாள். ஆகா! தமிழனைக் காப்பாற்ற இவ்வளவு அமைப்புக்கள் இருக்கின்றதா! என்று பிரமிச்சுப் போன காத்திகேசு, தனது மனிசியிடம் கூட்டத்திற்கு போவதற்கு கெஞ்சிக் கொண்டு நின்றான். அவனின்ரை மனிசி எல்லாத்திற்கும் சாத்திரம் பார்க்கிற பொம்பிளை. இரண்டிலை ஒன்றைத் தொடுங்கோ என்று மனிசி சொல்ல, கார்த்திகேசு சந்தோசமாக சிரிச்சுக் கொண்டு தொட்டான். விரலை தொடச் சொன்னால் எதைத் தொடுகிறீர்கள் எண்டு எரிஞ்சு விழுந்த மனிசியை பரிதாபமாகப் பார்த்த கார்த்திகேசு, ஒன்றையும் விளக்கமாக சொல்லமாட்டாள் என்று சலித்துக் கொண்டான்.