Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

அன்று கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட விஜிதரன் பல்கலைக்கழக மாணவன் இல்லையா?

இக் காணாமலாக்கலுக்கு காரணமான அரசியல் எது?

கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட விஜிதரனை விடுதலை செய்யும்படி எழுந்த மக்கள் குரல்வளையை திருகி எழுந்த குரல்களை அச்சுறுத்தி அடக்கிய அரசியல் எது?

விஜிதரனை விடுதலை செய்யும்படி சாகும்வரை உண்ணாவிரதமிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்கு மரணதண்டனை தான் பரிசு என பட்டியல் வைத்து அந்த பட்டியலில் இருந்த பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரனை பின்தொடர்ந்து நடுத்தெருவில் நாயைப்போல சுட்டுக்கொன்றவர்கள் அரசியல் எது?

இலங்கையில் மலையகத்தில் வீடு என்பது பெரிய பிரச்சினை. தோட்டப்பகுதிகளிலுள்ள தொழிலாளர்கள் நூற்றாண்டுக்கும் மேலாக மிகச் சிறிய லயன்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த லயன்கள் கூட அவர்களுக்குச் சொந்தமில்லை. தோட்டத்தில் வேலை செய்யும் வரை அங்கே உள்ள விதிமுறைகளுக்கு அமைய குடியிருக்கலாம். அவ்வளவுதான். அதற்கப்பால் தாங்கள் குடியிருக்கும் லயன்களில் ஒரு நிரந்தரக் கட்டிடத்தை கட்டிவிட முடியாது. காரணம், அந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமானதில்லை. தோட்டத்துக்குச் சொந்தமான நிலத்தில், தோட்டக்கூலிகளுக்கு உரித்தில்லை என்பதே இதன் பின்னாலுள்ள சட்ட அதிகாரமாகும். இதனால் ஏகப்பட்ட இழுபறிகளும் போராட்டங்களும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக சில சில இடங்களில் மிகக்குறைந்தளவு ஆட்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன. பலருக்கு இன்னும்இதுவொரு எட்டாக்கனியே.

நடராசா கஜன், பவுண்ராஜ் சுலக்சன் என்னும் இரு யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் இலங்கையின் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த மாணவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? மிக வேகமாக சென்ற அவர்கள் இருவரையும் பொலிசார் இடை மறித்த போது தமது வாகனத்தை நிறுத்தாமல் சென்றதற்காகத் தான் அவர்கள் மீது பொலிசார் சுட்டார்களா? இலங்கையில் பெரும்பாலான சாரதிகள் மிக வேகமாகவும், சாலை விதிகளை மதிக்காமலும் தான் வாகனத்தைச் செலுத்துகிறார்கள். அவர்கள் எவரும் சுடப்பட்டதில்லை என்னும் போது இந்த இரு மாணவர்களும் ஏன் சுடப்பட்டார்கள்?

அண்மையில் வடபகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து பல விதமான அறிவிப்புகள்-செய்திகள்-நடவடிக்கைகள்-ஆய்வுகள்-கண்டனங்கள்-நியாயப்படுத்தல்கள்-ஆறுதல்கள்-உரைகள் என்பன ஊடகப் பரப்பில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

இதேவிதமான ஒரு சூழல் இற்றைக்கு சுமார் 17 மாதங்களுக்கு முன்னர் (13 மே 2015ல்) மாணவி வித்தியா கொலை சம்பவத்தையொட்டி ஏற்பட்டிருந்தது. அதற்கு இன்று வரை நீதித் தீர்ப்பு கிடைக்கவில்லை. நீதி கிடைக்கக் கூடிய திசையில் அவ் வழக்கு செல்லவதாக தென்படவும் இல்லை.

இலங்கை வரலாற்றில் அரச படையினர் குடிமக்களைக் கொலை செய்வது இது முதற் தடவையல்ல. இன்றைய இலங்கை அரசியல் கால நிலையில் இந்த இரு மாணவர்களின் கொலை கடைசித் தடவையாக இருக்கப் போவதுமில்லை.

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மைத்திரி-ரணில் கூட்டு; மகிந்த அரசால் மறுக்கப்பட்ட ஜனநாயகத்தை மக்களுக்கு உறுதி செய்வதாகவும், மகிந்த குடும்ப ஊழல் மோசடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நல்லாட்சியை வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தே ஆட்சியை கைப்பற்றியது. மேலும் மகிந்த ஆட்சியில் அரசியல் காரணங்களிற்க்காக உயிராபத்தை எதிர்கொண்டு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியவர்கள் நாடு திரும்பி அரசியலில் ஈடுபட உத்தரவாதமும் தேர்தலின் போது வழங்கி இருந்தது இந்த நல்லாட்சி கூட்டு.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சன் இருவரும் கடந்த வியாழன் (20/10/2016) இரவு அரச பொலீஸ் ரவுடிகளின் துப்பாக்கி சுட்டிற்கு அநியாயமாக பலியாக்கப்பட்டனர். இரச பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குவதனை எதிர்த்தும் படுகொலைகளிற்கு கண்டனத்தை தெரிவித்தும், நீதியை கோரி இன்று அனைத்து பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் இடம்பெற்றது.

இலங்கை அரசின் பொலீஸ் குண்டர்களால் துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டு யாழ் பல்கலை மாணவர்  படுகொலைக்குள்ளானதை கண்டித்தும், நீதி கோரியும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ஜனநாயகத்திற்கான ஆர்ப்பாட்டகாரர்கள் போராட்டத்தில் இன்று (24/10/2016) ஈடுபட்டிருந்தனர். இதில் இடதுசாரிய கட்சிகள, தொழிற்சங்கங்கள் வெகுஜன அமைப்புக்கள் பங்குபற்றியிருந்தன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து நாளை (24/10/2016) நாட்டின் அனைத்து பல்ககைலக்கழங்களிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நடந்த கொலைக்கு குற்றவாளியை இனங்கண்டு சட்டத்தால் தண்டிக்கலாம். சட்டம் தனிப்பட்ட குற்றவாளியை தண்டிக்குமே ஒழிய, குற்றவாளியை உருவாக்குகின்றவர்களையும் தூண்டி விடுபவர்களையும் தண்டிப்பதில்லை. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலையின் பின்னான உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படப் போவதில்லை. அவர்களை மக்களால் மட்டும் தான் தண்டிக்க முடியும். குற்றவாளிகள் மக்களுடன் அக்கம் பக்கமாக வாழ்ந்தபடி, நடந்த படுகொலையை கண்டித்துக்கொண்டு இருப்பதை இனங்கண்டு கொள்வதே அரசியல். இந்த அரசியல் தான் உண்மை நீதியுடன் கூடிய நேர்மையான மனித உணர்வும் கூட.

மைத்திரி "எளிமையானவராக, நேர்மையானவராக, அதிகார வெறி அற்றவராக" முன்னிறுத்தி முன்னெடுத்த மோசடியான போலி அரசியல் விம்பங்களுடன், இனியும் ஜனாதிபதியால் நடிக்க முடியாது. மக்கள் மேல் அதிகாரத்தை செலுத்த விரும்பிய ஒருவராக மைத்திரி இருந்ததாலேயே அமெரிக்கா சார்பு நவதாராளவாதத்தை முன்னெடுத்த வர்க்கமே தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் அமெரிக்காவின் தலைமையிலான மேற்கின் பொருளாதாரத் தேவைக்காக நடந்ததே ஆட்சி மாற்றம். இது மக்கள் முன் முகமாற்ற ஆட்சி மாற்றமாக நடந்தேறியது.

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மா அவர்கள் 16.04.2010 அன்று மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வருவதற்காக சென்னை விமானநிலையத்திற்கு வந்தார். அவரிடம் இந்தியா வருவதற்கு தேவையான குடிவரவு அனுமதி இருந்தது. ஆனால் சென்னை விமான நிலையத்தில் வைத்து இந்திய குடிவரவு அதிகாரிகளால் அவரிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் மலேசியாவில் இருந்து வந்ததால் அங்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

தோட்ட தொழிலாளர்களின் கூலிக்கான ஒப்பந்தம் என்பது கண்துடைப்பாகும். மாறாக சந்தா தொழிற்சங்கங்களை தொழிலாளர்களிடம் இருந்து காப்பாற்ற, அரசு – முதலாளிகள் - மலையகத் தலைவர்கள் தமக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். அதாவது காலாகாலமாக தொழிலாளர்களை ஏமாற்றி வந்த சந்தா தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் தோற்கடிப்பதை தடுப்பதற்காக, செய்து கொண்ட ஒப்பந்தமே இது.

இலங்கையில் சிவசேனா வெறியர்கள், தமிழ்நாட்டில் தமிழ்க் குறுந்தேசிய லூசுகள், வெளிநாடுகளில் உளவுத்துறைகளின் கைக்கூலிகள், மட்டை விளையாட்டு மாபியாக்கள் எல்லாம் தமிழ்த் தேசிய விடுதலை பேசும் அவலம் நிலவும் சூழலில் பொருத்தம் கருதி 2012 இல் எழுதப்பட்ட கட்டுரையின் மறுபிரசுரம்.

ஒரே மேடையில் பல நாடகங்கள் என்பது போல தமிழரிற்காகவே உயிரையும், உடலையும் வைத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் பல அமைப்புக்கள் இணைந்து கூட்டமொன்றினை நடத்தப் போகின்றார்கள் என்ற செய்தியைப் படித்தான். "வாய் நீண்டதால் வாழ்விழந்தோர் சங்கத்தின்" தலைவர் கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாள். ஆகா! தமிழனைக் காப்பாற்ற இவ்வளவு அமைப்புக்கள் இருக்கின்றதா! என்று பிரமிச்சுப் போன காத்திகேசு, தனது மனிசியிடம் கூட்டத்திற்கு போவதற்கு கெஞ்சிக் கொண்டு நின்றான். அவனின்ரை மனிசி எல்லாத்திற்கும் சாத்திரம் பார்க்கிற பொம்பிளை. இரண்டிலை ஒன்றைத் தொடுங்கோ என்று மனிசி சொல்ல, கார்த்திகேசு சந்தோசமாக சிரிச்சுக் கொண்டு தொட்டான். விரலை தொடச் சொன்னால் எதைத் தொடுகிறீர்கள் எண்டு எரிஞ்சு விழுந்த மனிசியை பரிதாபமாகப் பார்த்த கார்த்திகேசு, ஒன்றையும் விளக்கமாக சொல்லமாட்டாள் என்று சலித்துக் கொண்டான்.

பிரசன்ன விதானகே அவர்களின்  "silence in tha courts" - " உசாவிய நிஹண்டாய்" - "நீதிமன்றத்தில் அமைதி" என்ற சிங்கள திரைப்படம் திரையிடலுக்கான அனுமதியை முன்னாள் நீதிபதி லெனின்  ரத்நாயகவின் புகாரை அடுத்து நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. பிரசன்ன விதானகே இதனை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லெனின் ரத்தநாயக்காவின் வழக்கறிஞர் சமூகமளித்திருக்காத படியால் வழக்கு நாளை விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அது வரை படத்தை திரையிடுவதற்க்கான தடையும் அமுலில் உள்ளது.

அண்மையில் கிளிநொச்சி பொதுச்சந்தைக் கட்டிடம் தீப்பற்றி எரிந்த போது பொருட்கள் களவாடப்பட்டதாக கூறப்பட்டது. அது பற்றி வருந்தியவர் பலர். சமூகம் பற்றிய பார்வை உள்ளவர்களுக்கும்-கரிசனம் கொண்டவர்களுக்கும் அது வேதனைப்பட வேண்டிய விடயம்.

30வருட கால யுத்தத்தையும் அதன் இறுதியில் ஏற்பட்ட பேரழிவையும் நேரில் கண்டு அனுபவித்து பலவிதமான இழப்புக்களின் மத்தியில் தாங்கமுடியாத சோகங்களுடன் தங்கள் வாழ்வை மீளக்கட்டியெழுப்ப முயலும் வேளையில் இப்படியான சமூக விரோத செயல்கள் இடம்பெறுவது என்பது நமது சமூகம் நோய்வாய் பட்டிருப்பதனையே காட்டி நிற்கிறது.

நான் நீ என முந்திக் கொண்டு கவலைகளும்-கண்டனங்களும்-காரசாரமான அறிக்கைகளும் விடப்படுகின்ற அதே சமயம் இச் செயல்களை நிறுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னர் எவராலும் எடுக்கப்பட்டதாகவோ அன்றி இப்போது எடுக்கப்படுவதாகவோ அறிய முடியவில்லை. ஆனால் அதற்கு மாறாக இச்சம்பவங்களை வைத்து அவற்றைத் தங்கள் அரசியலுக்கு மூலதனமாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE