Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்திற்கு விதிக்கப்பட்ட ஜனநாயகத்திற்கு முரணான சிறைத்தண்டனை முடிய இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ளன. அவரின் இலங்கைக் குடியுரிமையை உறுதி செய்வதற்கு பதிலாக ஆட்சியாளர்கள் அவரை மீண்டும் நாடு கடத்த முடிவெடுத்துள்ளனர். இதனை கண்டித்தும், உறுதி செய்வதாக வாக்குறுதியளித்த ஜனநாயகத்தை நிலை நாட்டக்கோரியும் இன்று கண்டி நகரத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மௌனப் போட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.  

பௌத்த மத அடிப்படைவாதமானது "பௌத்தத்தை" சிங்களவர்களுடன் ஒப்பிடுவது போன்று, இந்துமத அடிப்படைவாதமானது சைவத்தை (இந்து மதத்தை) "தமிழர்களுடன்" பொருத்திக் காட்டி விடுகின்றது. இது போன்று இஸ்லாமிய மத அடிப்படைவாதம், முஸ்லிம் மக்களுடன்  பொருத்திக் காட்டி விடுகின்றது. 

இங்கு சிங்கள, தமிழ் மொழி பேசும் மக்கள் மத்தியிலும் இனரீதியான சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மத்தியிலும், மதமற்ற நாத்திகர்கள் முதல் பிற மதத்தினர் இருப்பதை மத அடிப்படைவாதம் மறுக்கின்றது. இந்த மறுதளிப்பில் இருந்துதான், தங்கள் மனிதவிரோத கோட்பாடுகளையும் செயற்பாடுகளையும் ஆரம்பிக்கின்றனர். 

தங்கள் மத அடிப்படைவாத கண்ணோட்டத்துக்கு அடங்காத பிற மதத்தையும், மொழியையும்  பின்பற்றாத மக்களை, மத இன எதிரியாக காட்டி விடுகின்றனர்.       

சிறைச்சாலை உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பிரேம்குமார் குணரத்னத்திற்கு நீதிமன்றினால் வழங்கிய சிறை தண்டனை எதிர் வரும் டிசம்பர் 9ந் திகதி பகல் 12.04 ற்கு முடிவுக்கு வருகிறது.

அதன் பிறகு அவரை இலங்கையில் வைத்துக்கொள்வதற்கு அல்லது நாடு கடத்துவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்டவரால் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியுள்ளது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்தப் போவதாக கொடுத்த வாக்குறுதிக்கு அமைய முடிவை எடுப்பாரா அல்லது முன்னைய ஆட்சியாளர்கள் அனைவரையும் போல தேர்தலில் வெல்ல சொல்லப்பட்ட பொய் வாக்குறுதி தானா இது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இலங்கையில் இருக்கவிட வேண்டுமானால், அவரின் குடியுரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை எனின் அன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரை நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம்.

கியூபா புரட்சியில் தீர்மானம் மிக்க பாத்திரத்தை பூர்த்தி செய்த தலைவரான தோழர் பிடெல் கஸ்ட்ரோ தனது பத்து தசாப்தகால வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு எம்மை விட்டும் பிரிந்து சென்றுவிட்டார். தோழர் பிடெலின் வாழ்க்கையும், அவரது வாழ்க்கை முறையும் அவரது அரசியல் நடவடிக்கைகளும் எமக்கும், எமது சந்ததியினருக்கும் கற்க வேண்டிய பல பாடங்களை விட்டுச் சென்றுள்ளது.

தென்னமெரிக்கா முழுவதும் சர்வதேச நிறுவனங்களின் சுரண்டல். குறிப்பாக அமெரிக்காவின் சுரண்டலும் அமெரிக்கா கை காட்டுபவர்களும் தான் ஆட்சியில் இருக்க முடியும் என்ற அராஜகமும் தான் மாற்ற முடியாத விதியா இருந்தது. இராணுவ சர்வாதிகாரிகள் தம் பங்கிற்கு சதி செய்து ஆட்சியைப் பிடித்து அராஜகம் செய்வார்கள். 1952 இல் இராணுவச் சதி மூலம் கியூபாவில் பட்டிஸ்டாவின் ஆட்சி. அமெரிக்காவிற்கு அடி பணிந்து நாட்டை விற்றல், ராணுவ ஆட்சி, எதிர்ப்பவர்களைக் கொலை செய்தல், ஊழல் என்று எல்லா சர்வாதிகாரிகளையும் போல அவன் காட்டாட்சி நடத்துகிறான்.

ஸ்பானிய காலனித்துவவாதிகளிற்கு எதிராக அமைப்பின் இயங்கு சக்தியாகவும், தேச பக்த கவிஞராகவும் விளங்கிய ஜோசே மார்த்தியின் கியுபத் தேசியத்தையும்; கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்சின் வழி வந்த மார்க்கசியத்தையும் தன் இரு வழிகளாகக் கொண்ட பிடல் காஸ்ரோவும் அவனையொத்த தோழர்களும் பாடிஸ்டாவின் அராஜகத்திற்கு எதிராகவும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா நடத்தும் கொள்ளைகளிற்கு எதிராகவும் ஒன்று சேருகிறார்கள்.

பொதுவுடமைக் கட்சியினரும், சிறுபான்மை தமிழர் மகாசபையும் முன்னின்று நடத்திய சாதி ஒழிப்பு போராட்டங்கள் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து விட்டன. இந்தக் கதையின் "கந்தையா அப்பு" நூறாண்டுகள் வாழ்ந்து அண்மையில் காலமாகி விட்டார். ஆனால் சாதி, இன்றைக்கும் தமிழ் வாழ்வில் மாறாத அவலமாக கோரமுகம் கட்டி நிற்கிறது. 07.08.2012 இல் வெளிவந்த "கந்தையா அப்பு"வின் வாழ்வு குறித்த கதையை அவரது நினைவாக மறுபிரசுரம் செய்கிறோம்.

குமார் குணரத்தினம் தனது பிறப்புரிமையான பிரஜாவுரிமையைக் கோரியதால் கடந்த ஒரு வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மனிதவுரிமை மீறலுக்கு எதிராக நீண்ட தொடர்ச்சியான போராட்டங்கள் தொடருகின்றது. 

குமாரை சிறையில் அடைத்து வைத்திருக்கும் தண்டனைக் காலம் சட்டரீதியாக முடிவுக்கு வருகின்றது. "நல்லாட்சி" வழங்கிய சிறைத் தண்டனைக்கு பின்பாகவும், அவரை மீண்டும் தண்டிக்க முனைகின்றது. அதாவது அவரின் பிறப்புரிமையான பிரஜாவுரிமையை மறுத்து நாடு கடத்த முனைகின்றது. நாட்டின் சட்டம், நீதி, ஜனநாயகம் எல்லாம் இருண்டதாக தொடருகின்றது. மக்களை ஒடுக்குவதே அரசு. சுரண்டும் வர்க்கத்துக்கு சேவை செய்வதே அரசு. இதை நிறுவுகின்ற திசையில் "நல்லாட்சி" தொடர்ந்து இயங்குகின்றது.              

ஒரு மனிதன் தான் பிறந்து வாழ்ந்த நாட்டில் ஏதோ ஒரு காரணத்தால் வாழமுடியாத போது தான், வேறு நாடுகளில் சென்று வாழ்வதற்கான சூழல் உருவாகின்றது. இப்படியான ஒரு நிலை உருவாவதற்கான பொறுப்பினை, அந்த நாடும் அதை ஆண்ட அரசுகளும் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் மக்களுக்கான உண்மையான அரசினது தார்மீகக் கடமை. இதுவே தான் மக்களுக்கான நல்லாட்சியாக இருக்க முடியும். 

குமார் குணரத்தினத்தை நாடு கடத்த மைத்திரி - ரணில் அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிராக கடந்த 21ம் திகதி காலியில் மௌனப் போராட்டத்தை முன்னிலை சோசலிச கட்சியினர் ஆரம்பித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து 22ம் திகதி நிட்டம்புவ நகரத்தில் இந்த மௌனப் போராட்டம் இடம்பெற்றது. நேற்று (23/11/2016) பொல்லநறுவ நகரில் குமாரின் விடுதலை மற்றும் குடியுரிமையினை உறுதி செய்யும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றது. 

இலங்கை(க்கான) சிவசேனவின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், "சைவர்கள் மட்டுமே தமிழராக" இருக்கின்றனர் அல்லது "தமிழர்கள் மட்டுமே சைவராக" இருக்கின்றனர் என்று கூறியதன் மூலம் மதவாதப் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கின்றார். 400 வருடமாக சைவத்தை விட்டு மதம் மாறியவர்கள் "சிங்களவராக" மாறிவிட்டதாக ஒரு கருத்தையும் முன்வைத்திருக்கின்றார். "தமிழராக" இருக்க வேண்டும் என்றால் நீங்கள் "சைவராக" இருக்க வேண்டும் என்கின்றார். சைவத்தை முன்னிறுத்துவதன் மூலமே, தமிழைப் பாதுகாக்க முடியும் என்கின்றார். 

இங்கு மதம் "மாறியவர்கள்" குறித்தும், அவர்கள் "தமிழர் அல்லாத சிங்களவராக" மாறியதும் குறித்ததல்ல இக்கட்டுரை. மாறாக இந்து மதத்துக்குப் பதில் "சைவத்தையும்", தேசியத்துக்கு பதில் "தமிழரையும்" சிவசேனா முன்னிறுத்துவது குறித்து குறிப்பாகப் பார்ப்போம். 

தனது பிரஜாவுரிமையினை மீளக்கோரிய முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்தை, உறுதி செய்வதாக வாக்குறுதி அளித்த  ஜனநாயகத்திற்கு விரோதமாக சிறைக்குள் தள்ளியுள்ளது மைத்திரி - ரணில் கூட்டாட்சி. குமாரை விடுதலை செய்து அவரின் பிரஜாவுரிமையினை மீள வழங்குமாறு கோரி சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், கலைஞர்கள், இளம் ஊடகவியலாளர்கள், இடதுசாரிய கட்சிகள் என பல்வேறு அமைப்புக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை கடந்த ஒரு வருடமாக நடாத்திக் கொண்டு இருக்கின்றனர். இவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது, மைத்திரி - ரணில் கூட்டாட்சி குமாரை நாடு கடத்த முடிவெடுத்துள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான போராட்டத்துக்கு என்ன நடந்தது? திடீரென போராட்டங்கள் கைவிடப்பட்டது ஏன்? இதன் பின்னான அரசியல் என்ன? 

2009 இல் முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு நடந்தது என்னவோ, அதுதான் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நடந்தது. இந்த பின்னணியை விளங்கிக் கொள்வதும், எதிர்வினையாற்றுவதுமே மக்கள் அரசியல். 

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் உணர்ச்சியற்ற "ஹர்த்தால்கள்",மீளவும் போராட்ட வடிவமாக அறிமுகமாகத் தொடங்கி இருக்கின்றது. "எழுக தமிழ்" என்ற பெயரில் தமிழினவாதக் ஹர்த்தாலையும்,அதைத் தொடர்ந்த பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தன்னெழுச்சியான போராட்டங்களை முடக்க ஹர்த்தாலையும் நடத்தி இருக்கின்றனர்.

கல்பனா என்று அழைக்கப்படும் மலையகத்தின் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த கற்பகவள்ளி சுப்பிரமணியம் பழனியாண்டி என்ற பெண் சவுதி அரேபியாவில் மரணமடைந்து உள்ளார். இவருக்கு கிரிசாந்தி (வயது 13), கரிசாந்தன் (வயது 12), மோகனப்பிரியா (வயது 8) என்ற மூன்று சிறு குழந்தைகள் உள்ளனர். சவுதி அரேபியாவில் ஒரு வருடமாக பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த இவருக்கு இது வரை சம்பளமே கொடுக்கப்படவில்லை என்றும் அதனால் தான் இலங்கை திரும்பப் போவதாகவும் தனது சம்பளத்தை தருமாறும் கேட்ட போது சவுதி முதலாளி மறுத்து சண்டை பிடித்திருக்கிறார்.

கூட்டு ஒப்பந்த ஏமாற்றுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஆரம்பிப்பதற்கான பொதுக்கூட்டம் இன்று மாத்தளையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இன்று முதல் மலையகம் முழுவதுமாக நடைபெறும் இவ்வேலைத்திட்டத்தில் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளை கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி என்ற பெயரில் மைத்திரி - ரணில் அரசு பதவி ஏற்ற காலம் முதல் ஏகாதிபத்தியங்கள் மற்றும் பல்தேசிய கம்பனிகளின் கொள்ளைக்காக பல திட்டங்களை திரை மறைவில் நடைமுறைப்படுத்தி வந்தது. 2017ம் ஆண்டிற்க்கான பஜட்டானது; இந்த திரை மறைவு நிலையில் இருந்த நல்லாட்சி என்பது கொள்ளை ஆட்சி என்பதனையும், மக்களுக்கு குழிபறித்து சகலதையும் பறித்தெடுத்து நடுவீதிக்கு கொண்டு வந்து விடுவதற்க்கான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்திருக்கின்றது என்பதனை  தெளிவாக்கியுள்ளது.

கல்வி மற்றும் மருத்துவம் விற்பனைக்கு, அநியாய வரிகள், அபதார கட்டணங்கள்.

எதிர்வரும் 17ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு, கொழும்பு பெற்றாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

வரவு செலவு திட்டத்திலுள்ள பரிந்துரைகள் சில...

• அரச சேவைக்கு புதிதாக இணைத்துக்கொள்வதை வெட்டுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதனால், தொழில் பிரச்சினை உக்கிரமடைவது நிச்சயம்.

• அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை ஒழித்துவிட்டு அதற்காக சம்பளத்திலிருந்து தவணைப் பணம் அறவிடப்போகிறார்கள். 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE