Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாடு, எதிர்வரும் மாசி மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. "ஏகாதிபத்திய -நவதாராளவாத பொருளாதரத்துக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு கட்சி!" என்ற கருப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவிருக்கின்றது.  இன்று கொழும்பில் முன்னிலை சோசலிசக் கட்சியின்  பொதுச் செயலாளர் சேனாதிர குணதிலக தலைமையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாநாடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பெயர்:  இரா.சம்பந்தன்

முழு நேரத் தொழில்: "நல்ல காலம் பிறக்கப் போகுது, வாக்குப் போடுங்கள்" என்று தமிழ் மக்களை ஏமாற்றுதல்

பகுதி நேர வேலைகள்:    எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்

நண்பர்கள்:  தமிழ் மக்களைக் கொன்ற கொலைகாரர்கள் மகிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா, மைத்திரி சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்கா, இந்திய அரசு, மேற்கு நாடுகள்

தென்படும் இடங்கள்:  இந்திய, அமெரிக்க தூதரகங்கள்

தம் வாழ்வை உதறி எறிந்து விட்டு தமிழ் மக்களிற்காக போராட வந்த போராளிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கொடிய இலங்கை அரசின் இராணுவத்தில்; தாம் யாரிற்கு எதிராக போரிட்டார்களோ அந்த கொலைகாரர்களின் படைகளில் வயிற்றுப்பசி தாளாது இணைந்து கொள்கிறார்கள். தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில்  ஏகாதிபத்தியங்களின் கொள்ளைகளிற்கு மனிதாபிமான முகமூடி போடும் தன்னார்வ உதவிக் குழுக்களுடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள். அவர்களின் துயர நிலையைப் பயன்படுத்தும் மத அமைப்புக்களால் மதம் மாற்றப்படுகிறார்கள்; அல்லது அந்த மத அமைப்புக்களால் தமது திக்கற்ற நிலைக்கு கிடைக்கப்படும் ஆறுதலால் தாமாகவே மதம் மாறுகிறார்கள்.

வருடம் முடிந்து விட்டது. புது வருடம் பிறந்திருக்கின்றது. புது வருடத்தை புதிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்குமாறு சிலர் சொல்கிறார்கள். ஆனால், இவ்வருடம் எமது வாழ்நிலை கடந்த வரவு செலவு அறிக்கையால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. நாம் எவ்வளவுதான் வணக்க வழிபாடுகளை செய்தாலும், நாள் நட்சத்திரங்களைப் பார்த்தாலும் எமது வாழ்நிலையைத் தீர்மானிப்பது எமது நாட்டின் மிகச்சிறு குழுவினரான அதிகாரபலம், பணபலம் படைத்த வர்க்கமாகும். அவர்கள் சொல்வதையும் செய்வதையும் கொண்டே எமதும் எமது பிள்ளைகளினதும் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது முதலாளித்துவ வர்க்கம் எம்மிடமிருந்து பறித்துக் கொள்பவற்றின் காரணமாகத்தான் எந்நாளும் ஏக்கப் பெருமூச்சு விட வேண்டியுள்ளது.  

இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை, ஆகிய இரண்டிற்கும் சாவுமணி அடிக்கப்படவிருக்கின்றது. உழைக்கும் மக்களின் உரிமையான ஓய்வூதியம், 8 மணி நேர வேலைநாள், EPF-ETF எல்லாமே முடிந்துவிடும். எஞ்சியுள்ள அரச நிறுவனங்கள், இயற்கை வளங்கள் விற்கப்படுகின்றன. உச்சியிலேயே போடப் போகிறார்கள். 

காந்தி என்பவர் யார்? பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று மக்களை பிறப்பின் அடைப்படையில் பிரித்து உயர்வு, தாழ்வு கற்பிக்கும் நால் வருணம் என்னும் குப்பையை தம் வாழ்நாள் முழுவதும் சரியென்று சொல்லி வாதிட்ட ஒரு பிற்போக்குவாதி. எளிமையான வாழ்க்கையை பொது மக்களிற்கு போதித்த அதேவேளை பிர்லா போன்றவர்களின் பெரும் செல்வம் எவ்வாறு குவிந்தது என்பதைப் பற்றி எந்தவொரு விமர்சனமும் இன்றி அவர்களின் மாளிகைகளில் தங்கியிருந்தவர். முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் தனது ஆதரவாளர்களாக வைத்துக் கொண்டிருந்த அதேவேளையில் இந்தியாவிற்கு கிராமியப் பொருளாதாரமே உகந்தது என்று வெட்கமின்றி சொல்லக் கூடிய அரசியல் தான் காந்தியின் அரசியல்.

போராட்டம் இதழ்களின் மேல் அழுத்தி தரவிறக்கம் செய்யவும். இந்த மின்னிதழ்களை நீங்களும் வாசித்து அரசியல் ஈடுபாடுடைய நண்பர்களிற்கும் அறிமுகம் செய்யவும். 

நன்றி போராட்டம் பத்திரிகை  குழு

                               இதழ் 1                                       

இலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. அன்று மஹிந்தவின் ஆட்சி சிறுபான்மை மக்களால் தூக்கி எறியப்படுவதற்கு காரணமாக எந்த இனவாத சக்திகள் இருந்தனவோ, இன்று அதே சக்திகளை நல்லாட்சியின் அங்கமான ஐ.தே.க கையிலெடுத்திருக்கிறது.

ஜனாதிபதியும், பிரதமரும் தத்தமது பலத்தினை நிரூபித்துக்காட்ட வேண்டிய தேவையை விரைவில் நடைபெறுவதற்கு எதிர்பார்க்கப்படும் தேர்தல் ஒன்று உருவாக்கி இருப்பதால், சிங்கள பெரும்பாண்மை மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான உபாயமாக ஜனாதிபதி தேசியவாதத்தினை கையிலெடுத்திருக்கும் அதேவேளை பிரதமர் இனவாதத்தினை கையிலெடுத்திருக்கிறார். அதன் வெளிப்பாடே அண்மைக்காலமாக நடந்தேறி வருகிற நீதியமைச்சரும், பொது பலசேனா கும்பலும் சேர்ந்து நடாத்தி வருகின்ற நிகழ்வுகளாகும்.

புத்தனின் உருவத்தை உடலில் பச்சை குத்தியதற்காக ஒரு வெளிநாட்டவரை புத்தமதத்தை அரசமதமாக கொண்ட இலங்கை அரசு நாட்டிற்குள் வர அனுமதி மறுத்து வெளியேற்றி இருக்கிறது. கெளதம சித்தார்த்தனின் அகிம்சை தத்துவத்தை காலில் போட்டு மிதிக்கும் இலங்கையின் கொலைகார அரசு பச்சை குத்தியதை பெரிய விடயமாக எடுத்தது உங்களிற்கு வியப்பை தரலாம். ஆனால் மதவாதிகள் எப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறார்கள். மதத்தை வைத்து மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு தங்களின் கொள்ளைகள நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

பிறப்புரிமையான பிரஜாவுரிமையை மறுக்கும் இலங்கை அரசின் ஜனநாயக விரோதக் கொள்கைக்கு எதிரான போராட்டம் தான், குமாருக்கான போராட்டமாகும்;. தனிப்பட்ட குமாரின் உரிமைக்கானதல்ல. ஒருவன் வாழ்வு சார்ந்த போராட்டத்தினால், இன்னொரு நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுவிடுவது என்பது ஜனநாயக விரோதமானதல்ல. இதை ஜனநாயக விரோதமாக கருதி, பிறந்த நாட்டின் பிரஜாவுரிமையை மறுக்கும் ஜனநாயக விரோத அரசியல் அமைப்பு முறைக்கு எதிரான போராட்டமே, குமாருக்கான போராட்டமாகும். 

மீள்குடியேற்றமானது, சாதியக் கிராமங்களாக புத்துயிர்ப்பு பெற்றுவரும் பொதுப் பின்னணியில், சாதிக்கலாச்சாரம் கோலோச்சுகின்றது. இந்த யாழ் (தமிழ் மக்கள்) கலாச்சாரத்தை பாதுகாக்க, இந்தியக் கலாச்சாரத்தை இதற்கு முரணாக ஜே.வி.பி. கற்பிக்கின்றது. அதாவது ஒடுக்கும் யாழ் (தமிழ் மக்களின்) கலாச்சாரத்தை, இந்தியாவின் கலாச்சாரத்துக்கு எதிரானதாக முன்னிறுத்துகின்ற ஒரு போலி அரசியலை, ஜே.வி.பி. முன்நகர்த்தத் தொடங்கி இருக்கின்றது.

வருடாந்தம் 25 லட்சம் கோடி கறுப்பு பணத்தை உருவாக்கும் இந்தியத் தனியுடமை முறையானது, வெளிநாட்டு வங்கிகளில் 70 லட்சம் கோடி கறுப்பு பணத்தைப் பதுக்கி வைத்திருக்கின்றது. 

இப்படி உண்மை இருக்க பணச் சுழற்சியிலான பரிவர்த்தனையே கறுப்பு பணத்தை உருவாக்குவதாகவும், வங்கிப் பரிவர்த்தனையில் கறுப்பு பணம் கிடையாது என்றும் கூறி, ஒருங்கிணைந்த ஒரு தாக்குதலை மோடி தலைமையிலான முதலாளிகள் நடத்தி இருக்கின்றனர். பணப் புழக்கத்தில் இருந்த, 85 சதவீதமான 500, 1000 ரூபா பண நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த அந்தக் கணம் முதல், வர்க்க ரீதியான பாரிய தாக்குதலை நடத்தி இருக்கின்றனர். 

“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன? அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர் கேட்டார். அரசியல் உரையாடலை நிகழ்த்த விரும்பி அந்த நண்பர் இது தொடர்பாக மேலும் சில கேள்விகளை எழுப்பினார்.

“தமிழ்த்தேசியம் தொடர்ச்சியாகப் பலவீனப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அதனுடைய அடுத்த கட்டம் என்பது அதற்கிருக்குமா என்பதே கேள்விதான். ஏனென்றால், பலவீனங்களைத் திருத்திக் கொள்ளாமலிருக்கும் எதுவும் பலமாகவோ, உறுதியாகவோ, தொடர்ச்சியாகவே இருக்க முடியாது. பலவீனமாக இருக்கும் எதுவும் வெற்றியை நோக்கி நகரவும் இயலாது. ஆகவே, தமிழ்த்தேசியம் என்பதற்கு அடுத்த கட்டம் என்ற ஒன்றிருக்குமா? என்பதே கேள்விதான். தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்துவது எதிர்த்தரப்பாகிய சிங்களத் தீவிரத் தேசியவாதமே தவிர, தமிழ்த்தரப்பல்ல. தமிழ்த்தேசியத்தைப் பலவீனமடைய வைப்பதற்கு எதிர்த்தரப்பை விடவும் அதைத் தீவிர நிலைப்பட ஆதரிப்போரே தோற்கடித்து வருகின்றனர். அவர்களே தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக வெளியைச் சுருக்கி, ஒருமுகப்படுத்தி, ஒற்றைப்படைத்தன்மையாக்கி, அதை இனஅடிப்படைவாதமாக மாற்றியுள்ளனர். ஆகவே அது தோல்வியின் படிக்கட்டுகளில் இறங்கிச் செல்கிறது. இது வருத்தத்திற்குரிய ஒன்றே. ஆனாலும் இன்றைய நிலை இதுதான்“ என்றேன்.

ஆயிரம் ஆயிரம் மக்கள் எரிநெருப்பில் கருகி மண்ணிற்குள் புதைந்தார்கள். பாலுக்கு பாலகன் வேண்டி அழ பாற்கடல் ஈந்த பிரான்கள் பல்லாயிரம் பாலகர்கள் பாலுக்கல்ல, தவித்த வாய்க்கு தண்ணீர் வேண்டி அழுத போதும் இரங்கி வரவில்லை. இலங்கை இராணுவத்தினால் சிதைக்கப்பட்ட எம்பெண்கள் "என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னைக் கை விட்டீர்" என்று கதறி அழுத போது "நான் எப்பொழுதும் உங்களுடனேயே இருப்பேன்" என்று சொன்ன எந்த கர்த்தரும்  எம்பெண்களுடன் இருக்கவில்லை. காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் படைத்து கும்பிட்ட கடவுள்கள் கண்ணீரும், செந்நீரும் கலத்து ஓட கதறிய போதும் வரவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட 15000 ஏக்கர் காணி விற்கப்படுவதற்கும், துறைமுகத்தை தனியார்மயப்படுத்துவதற்கும் எதிராகவும், தமது தொழில் பாதுகாப்பு ஒழிக்கப்படுவதற்கு எதிராகவும் துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் வேலைக்கு திரும்பாது தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் ஆயின் இன்று 15ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முன்னர் வேலைக்கு திரும்பி பணியை தொடராவிடின், தொழிலை இழந்தவர்களாகக் கருதப்படுவர் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இன்று நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.துறைமுக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு அறிவித்துள்ள ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம், இன்று எட்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஏழு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

1986 தொடக்கம் 1990 வரையான காலகட்டங்களில் 60,000 க்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மன் விக்ரமரட்ண எழுதிய ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி தொடர்பான நூல் 2016 டிசம்பர் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு கொழும்பு 5 தும்முள்ள சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெறும். 27 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சியின் உண்மைச் சம்பவங்கள் இதில் அடங்கியுள்ளன. 880 பக்கங்கள் அடங்கிய இந்நூலில் 74 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 1,289 புகைப்படங்கள் பதியப்பட்டுள்ளன. விலை ரூபா 1,500 ஆகும். வெ ளியிடும் தினத்தில் ரூபா 1,000 க்கும் பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கையில் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் வெளியேற்றம் அதன் குடிமக்களுக்கு சுதந்திரத்தை வழங்காது என்பதனையும் மக்களை இன-மத-சாதி-பால்-பிராந்திய-வர்க்க ரீதியாகப் பிரித்து வைத்து மோத விட்டு அதன் ஊடாக தொடர்ந்தும் அந்நியர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்கும் அரசியல்(கட்டமைப்பு) வழிமுறையையே சுதந்திரம் என்கிற பெயரில் வழங்கப் போகிறார்கள் என்பதனையும் நன்குணர்ந்த திரு ஹன்டி பேரின்பநாயகம் "பாகுபாடுகள்-பேதங்கள்-ஒடுக்குதல்கள்-உயர்வுதாழ்வுகள்"அற்ற 'இலங்கைக் குடிமக்களுக்கான" சுதந்திரத்தை உருவாக்குவதற்கான அடித்தளக் கட்டுமானப் பணிகளுக்காக "யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" என்ற சமூக இயக்கத்தை முன்னெடுத்தார். அதனை ஆரம்பத்திலேயே எமது ஆண்ட பரம்பரையினரின் அரசியல் வியூகங்கள் முகவரி இல்லாமல் செய்து விட்டிருந்தன.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE