பத்திரிக்கை செய்தி: அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன விவகார தீர்வு தொடர்பாக பேசுவதில் பயனற்றுப்போயுள்ளது எனவும், அப் பேச்சுவார்த்தை எவ்வேளையிலும் முறிவடையலாம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கின்றார். தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பொறுத்து சர்வதேச சமூகத்திடமும், ஐ.நா.விடமும் தமது நிலை குறித்து முறையிட்டு தீர்வு காண்பதற்கு இவர்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும், நியாயம் கோரவும் மக்களை அணி திரட்ட வேண்டிய தேவை தற்பொழுது தமக்கு எழுந்துள்ளதாகவும், இது குறித்து மக்களிடம் செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லையாம்.