1.பேரினவாத அரசு என்ற வகையில் தமிழ், முஸ்லீம் மக்களிற்கும்; உலகமயமாக்கலின் அடிமை நாய்கள் என்ற வகையில் முழு இலங்கை மக்களிற்கும் இலங்கை அரசு பொது எதிரியாகும்.
2.நிலவும் காலகட்டத்தில் மகிந்தா உலக மகாகொலைகாரனில் ஒருவன் மட்டுமின்றி, அவனது கொள்ளைக்கார குடும்பத்தின் தலைவன்.
3.நான் விபரம் தெரிந்த நாள் முதல் இலங்கை அரசையும், இயக்கங்களின் வன்முறைகளையும் மற்றும் பிராந்திய, சர்வதேச மக்கள் விரோத அரசுகளையும் எதிர்த்து வருகின்றேன்.
சைவர்கள் காலையில் எழுந்ததும் எரித்த சாணியை அள்ளிப் பூசுவது போல், கிறிஸ்த்தவர்கள் சாப்பிடுவதற்கு முன்னும், படுக்கைக்கு போக முன்னும், பிறகு ஒரு முக்கியமான காரியத்திற்கு முன்னும் செபம் சொல்லுவது போல் ஒவ்வொரு கட்டுரை எழுதும் போதும்; மேலே குறிப்பிட்ட ழூன்று விடயங்களையும் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் மக்கள் விரோதிகளை எதிர்த்து வந்தாலும் இலங்கை, இந்திய அரசின் உளவாளிகள் என்று ரூம் போட்டு யோசித்து ஒரு கட்டுரை எழுதி விடுவார்கள். ஆனால் இப்படியான பொய்க் குற்றச்சாட்டுக்களை வைக்கும் இணையங்களில் தான் புலிகளின் ஆதரவாளர்களும் மகிந்தாவின் ஆதரவாளர்களும் ஈழவிடுதலை, மனிதாபிமானம், புரட்சி என்று கட்டுரைகள் எழுதி காமடி பண்ணுகின்றார்கள்.