எம் தேசக் குழந்தைகளை
பேரினவாதக் கழுகுகளிற்கு இரையாக்கியோர் யார்
வல்லாதிக்கப் பெருச்சாளிகளின் போட்டிக்கு
நாம் வளர்த்த குஞ்சுகளல்லவா குதறப்பட்டிருக்கிறது
உலக அரச பயங்கரவாதம் அமைதியாகவே
எம் இளையதலைமுறையை ஏய்த்து அழித்திருக்கிறது
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
மகிந்தவின் காலைநக்கும் மேவின் வெட்கம் பற்றிப்பேசுவது விந்தையாயிருக்கிறது!-79
"நாட்டை பாதுகாக்கும் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், மற்றும் இராணுவத்தினருக்கு அபகீர்த்தி உண்டாக்கும் நோக்கில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறன.
கோத்தபாய (வெள்ளைவான்) கடத்தலை "கைத்தொழிலாக" செய்கின்றார்! தடுத்து நிறுத்தக் கோரிக்கை!-79
"சிறிலங்கா அரசு பாதுகாப்பு செயலாளர் கோதபாய, ஆட்கடத்தல் குழுவை வைத்து நடத்தி வரும் கைத்தொழிலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இது
தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது."
குகன், லலித் கொழும்பு பொலிஸ் புனர்வாழ்வுப் பிரிவில் தடுத்து வைப்பு
இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற முகமூடியை அணிந்து செயற்பட்டுவரும பாசிச மகிந்தவும் அவனது ராணுவ அரசும் செய்யும் மக்கள் விரோத பாசிச அடாவடித்தனங்களின் ஒரு அங்கம் தான் யுத்தத்தின் இறுதியில் சரணடைந்து காணாமல் போனவர்களிற்க்காக குரல் கொடுத்த இவர்களின் காணாமல் போன சம்பவமாகும்.
ராஜீவின் வாரிசுக்கு ஈழக்குருதி தேவைப்படுகிறது......
ஈழவிடுதலைக் குருதியில் கொழுத்தது
இந்தியதேசத்து நேரு குடும்பம்
ஆழஊடுருவி வளர்த்துச் சிதைத்தது
காந்தியதேசத்து காருண்ய அரசியல்
மகிந்த ஓட்டும் படகு.........
நீள்குழல் பீரங்கியொடு
நெஞ்சுக் கவசமுமற்று போரிடவிட்டு
குண்டு துளைத்துச் சிதறிய உயிர்கள்
சிங்களவர் தமிழர் முஸ்லீம் மலையகத்துப் பிள்ளைகள்
நெஞ்சு பிளந்தோடிய குருதியில் நீராடிய மகிந்த..........
அரபு மக்கள் எப்படிக் கிளர்ந்தனர்...........
கண்டம்விட்டுக் கண்டம்பாயும் ஏவுகணை
விண்ணிருந்து வேவுபார்க்கும் தொழில்நுட்பம்
பொறிபறக்கும் புலனாய்வு நிறுவனங்கள்
மூச்சடைத்து சொக்கிப்போய் ஏகாதிபத்தியங்கள்
அடக்குமுறைக்குள்ளாகும் மக்களே
எழுந்து வாருங்கள் எனச்சொல்கிறார்கள் அரபுமக்கள்
எம் பலத்தின்முன்னே எதிரி ஓட்டம் பிடிக்கிறான்
மக்கள் சக்தியை எள்ளி நகையாடியோர்
தலையை கிள்ளியெறிவோம் எனக் கிளர்தெழுந்திருக்கிறது
மக்கள்திரளென துனிசியமக்கள்
வெல்லும்பலம்
வீரம்செறிந்த எழுச்சி
பற்றிப்படர்கிறது எகிப்தியதேசத்தில்...
கடாபியின் துப்பாக்கிகள் யாரைக் காப்பதற்காய் இரத்தம் குடிக்கிறது!
உங்களிடமுள்ள சுடுகலங்கள்
ஆக்கிரமிப்பாளர்களால் திணிக்கப்பட்டதாயினும்
ஏந்தும் கரமும் இதயமும்
ஏழையின் உறவென்பது சேர்த்தே சிதைக்கப்பட முடியாதது
எண்ணை இருந்தால் ஈழம் மலரலாம்.......
நந்திக் கடலில் பேரம் நடந்தது
எம் மக்கள்
நீந்தவும் முடியாது நிர்க்கதியாய்
கை அசைத்து கடல் நடுவே தத்தளித்து தவித்தனர்
இப்ப மீளவும்
ஈராக்கின் பின்பாய் லிபியாவில் சொல்லப்படுகிறது
இந்தியாவையும் மீறி ஈழம் எடுக்கலாம்
எண்ணையைத் தோண்டிக்கண்டுபிடி தமிழா
யாரெவர் வெடிகொழுத்த முடியும்.....
இழந்தவரை எண்ணித்துயரொடு
அழுதழுது இருப்பவர் உயிர்போகிறது
வெடிக்கும் ஒலி
வன்னிநில அவலமாய் நெஞ்சில் இடிக்கிறது
யாரெவர் வெடிகொழுத்த முடியும்.....
ஈழம் கேட்பது யாருக்காய் சொல்லுங்கள்?
விழித்துப்பார் புலத்தெம் சனமே
கண் முன்னே ஊரைச் சுருட்டிய கும்பல்
ஈழவிடுதலை பேசிய படியே மீள வருகிறது
இந்திய அரசை கெஞ்சிப் பார்ப்போமென
புலி எதிர்ப்பு புத்திமான்களும் புலிப்பினாமிகளும்
டெல்லி நோக்கிய நடையும் பறப்புமாய்
அடுத்த சதிக்கும் கூட்டு அமைக்கப்படுகிறது
மகிந்தகுடும்பத்துத் துப்பாக்கிகள் தொழிலாளர் நெஞ்சில் பாய்கிறது.................
இது என்மண்தான்
இது என்மக்கள்
இது என்தேசமென சொல்லமுடியாச்சோகம்
வெல்லமுடியாப்போரிலல்ல வீழ்ந்தழிந்தவர் நாம்
கொல்லக்கொடுத்த கொடுசதிக்குள்
மெல்ல மெல்ல தள்ளிப் படுகுளிக்குள்
செல்பட்டும் சிறைப்பட்டும்
அல்லல்படவா பேரவலம் கண்டோம்.......
எந்தச் சீமானும் போராடக்காணோம்...............
அம்மாவின் வாய்வழி ஈழச்சொல் விழுமென
காவடியாட காத்துக் கிடக்கிறாங்கள்
இருப்பாய் புழைப்புவாதிகளே
முதல்வர் அம்மாவின் செருப்பாய்
நெருப்பாய் நிமிரும்
தமிழக உணர்வை அணைப்பாய்
சட்டசபை சரித்திரம் படைத்ததாய்
மக்கள் எழுச்சியைத் தடுப்பாய்.....
சங்கிலியன் வாளும் சிங்கத்து வாளும்
நாற்ரெழுந்து கதிர் தள்ளி
சோற்றுப் பருக்கை தரும் நெற்கதிரும்
காற்றில் சுழகெடுத்து தூற்றிய நெல்மணியும்
வயிறாற்றிய கஞ்சியும் அறியார்
சேற்று நிலம் அறியார்
ஏர் உழுத மண்வாசம் ஏதும் அறியார்
ஏன் நேற்றுத் தான்
குண்டுப் பேரவலத்துள் குஞ்சுகளும்
எஞ்சிய சனமும் நெஞ்சுப்படபடப்போடு
இன்னும் இடிக்கிறது ஏதறிவார்...
சோமாலிய முள்ளிவாய்க்கால்!
கொட்டுகின்ற ஒவ்வோர் குண்டும்
அத்தனை குழந்தைகளினதும் பசியாற்றும்
சோமாலியப் பாலைவனத்தில்
இன்னோர்
முள்ளிவாய்க்கால் பிணத்தில் குவிகிறது
உலகின் தெருக்களில் எந்த அசைவுமில்லை
மனித அவலம்
எந்தக் கோமகனையோ பேரரசையோ அசைப்பதாயில்லை
பணவீழ்ச்சிக்கும் பயங்கரவாதத்திற்குமெதிராய்
கிலாரி அம்மையார்
இந்திய-சீனக் கூட்டுக்கு அழைப்பு விடுகிறார்.
எசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்
ஈக்கள் மொய்க்கும் சின்னஞ் சிறுசுகளின்
வறண்டு வெடித்துப்போன உதடுகள்
தொலைக்காட்சி செய்திகட்காய் படமாக்கப்படுகிறது
மொய்க்கும் ஈக்களை எப்பொழுதாவது
இந்தக் குழந்தைகள் பசியில் விழுங்குமாவென
ஒளிப்பட பதிவாளர்கள்
விருது பெறுவதற்காய் காத்துக் கிடக்கிறார்கள்