நல்லூர் கோயிலில் ஊற்றிய கழிவு ஒயிலும் - இந்துத்துவ வெள்ளாளிய மனப்பாங்கும்
2009 இற்குப் பின் அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டங்களுக்கும், போராட்டங்களில் முன்னின்றவர்களின் வீடுகளுக்கும் கழிவு ஓயில் ஊற்றப்பட்டது. இதையடுத்து திடீர் "கிறிஸ்" மனிதன் தோன்றி, குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. இதன்பின் காணாமல் போன கழிவு ஒயில் இன்று, இந்து வெள்ளாளியக் கலாச்சாரமாக நல்லூரில் காட்சி அளித்திருக்கின்றது.
குறிப்பாக நல்லூருக்கு வழிபட வரும் முதியவர்கள் தங்கள் உடல் இயலாமையால் அமருகின்ற, சாய்கின்ற இடங்களை குறிவைத்து, கழிவு ஒயில்களை ஊற்றி இருக்கின்றார்கள் கலாச்சாரக் காவலர்கள்.
![](/images/pagebuilderck/Nallur_Kovil_Oil_Attack_Issue.jpg)