தி.கிட்டுவின் குட்டு
«மேதகு» வரலாற்றுண்மைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரபாகரன் என்பாரது உண்மைக் கதை எனப் புனைகிறார்கள். பல வரலாற்றுப் பொய்களை சாட்சியென காட்சிப்படுத்தி அதன் மூலம் கதையில் உலாவ விடப்பட்ட பாத்திரங்களான «தமிழினத் துரோகிகள்» மட்டும் எவ்வாறு பிரபாகரனை போராளியாக்கினர் என பிரபாகரனின் பாசிச வரலாற்றை தூக்கி நிறுத்துகின்றனர்.
ஆரம்பம் முதலே பிரபாகரனுக்கு அரசியல் பாடம் எடுத்ததே தமிழரசுக் கட்சியும், அதன் பின்வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் தான். அவர்களால் துரோகிகளாகச் சுட்டி கைகாட்டப்பட்டவர்களைத்தான் அவர்களின் கைப்பாவையாக நின்று சுட்டுத் தள்ளினர் பிரபாகரன் குழுவினர். ஏன் உமாமகேஸ்வரன் குழுவும் தான்.
இலங்கைப் பொலிசாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் என்றுமே எங்குமே மக்கள் மத்தியில் வெளிப்பட்டிராத குட்டிமணி மற்றும் தங்கத்துரையின் அரசியல் உரைகளில் பிரபாகரன் ஈர்க்கப்பட்டார் என வரலாறு திரிக்கப்படுகிறது.