Language Selection

பி.இரயாகரன் -2013

வர்க்கப் போராட்டத்தைக் கோரும் மார்க்சியவாதிகள், சுயநிர்ணயம் பற்றிய மார்க்சிய கண்ணோட்டம் என்ன என்பதை விளக்கி, அதை அரசியல்ரீதியாக முதலில் முன்னிறுத்த வேண்டும். இதன்பின் இன்றைய சமூக அமைப்;பில் சுயநிர்ணயம் இலங்கைக்கும், உலகுக்கும் பொருந்தாது காலாவதியாகிவிட்டது என்றால், அதை அரசியல்ரீதியாக நிறுவி நிராகரிக்க வேண்டும். இதன் மூலம் தான் "சுயநிர்ணயம்" பற்றிய இன்றைய விவாதங்களையும், அரசியல் முன்னெடுப்புகளையும் சரியாக அணுக முடியும்.

இலங்கையில் இனமுரண்பாட்டை கடந்து செல்லும் வர்க்கப் போரட்டத்துக்கான பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் செயல்தந்திரம் என்ன? செயல்தந்திரமாக சுயநிர்ணயத்தை பாட்டாளி வர்க்கம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், இலங்கை முதலாளித்துவ பூர்சுவா ஜனநாயகப் புரட்சியே இன்னமும் அரசியல் கூறாக இருக்கவேண்டும். முதலாளித்துவ பூர்சுவா ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தை இலங்கை கடந்து விட்டதா இல்லையா என்பது தான், சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றது. அதேநேரம் இலங்கையில் உள்ள நவகாலனிய தரகுமுதலாளித்துவமும், தேசங்கடந்த பன்நாட்டு முதலாளித்துவமும், இலங்கையில் பூர்சுவா ஜனநாயக புரட்சியை நிறைவுசெய்து அதை இல்லாதாக்கிவிட்டதா என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.

இன்று இலங்கையில் நிலவும் இனமுரண்பாட்டை சுயநிர்ணயம் மூலமான வர்க்கப் போராட்டம் மூலம் கடக்க முடியுமா? அல்லது கடக்க முடியாதா? இன்று இதுதான் பாட்டாளி வர்க்க சக்திகளின் முன்னுள்ள கேள்வி. எந்த அரசியல் வழியில் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும் என்பதை, நாம் நிறுவியாக வேண்டும். இந்த வகையில்

1.மார்க்சியம் முன்வைக்கும் முரணற்ற ஜனநாயகமே, சுயநிர்ணய உரிமை. இதை அரசியல் ரீதியாக முரணற்ற வகையில் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்சியம் முன்வைக்கும் சுயநிர்ணயம் முதலாளித்துவ தேசியவாதத்துக்கு எதிரானது என்பதையும், அது எந்த அடிப்படையில் அப்படி இருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்வதன் மூலமே, வர்க்கப் போராட்டத்தை நடத்த சுயநிர்ணயத்தைக் கையாள முடியும். இதை விளக்கியாக வேண்டும்.

2.தேசிய முதலாளித்துவ சமூகக்கட்டமைப்பை இலங்கை கடந்துவிடவில்லை என்பதை நிறுவியாக வேண்டும். இதை நிறுவுவதன் மூலம், சுயநிர்ணயம் மூலம் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும் என்பதை தெளிவுபடுத்த முடியும்.

அமெரிக்காவையும், அதன் தலைமையிலான ஐ.நாவையும் மீண்டும் நம்ப வைப்பதன் மூலம், மக்களின் கழுத்தை மீண்டும் ஒருமுறை அறுக்க முனைகின்றனர். மகிந்த நடத்திய இனவழிப்பு வெறியாட்டம் போல், ஐ.நா சார்ந்த நம்பிக்கை என்பது இனவழிப்புக்கு உடந்தையாக இருக்கும் அரசியல் செயலாகும். அன்று தமிழ் மக்களை இலங்கை அரசு பலியெடுக்க, தேசியத்தின் பெயரில் பலி கொடுத்த அதே அரசியல். அதே நபர்கள், அதே அரசியல் வேஷங்களுடன், அன்று போல் இன்று, மீண்டும் அமெரிக்கா ஐ.நா என்று மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்களை தமிழ் மக்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அழிப்பதற்கான தீர்மானமும், அதற்கான போராட்டமும் தான் அமெரிக்கா தலைமையில் இன்று நடக்கின்றது. 1983 களில் தமிழ் மக்களுக்கான போராட்டத்தின் பெயரில் இந்தியா வழங்கிய அரசியல் வழிகாட்டல்கள், இராணுவப் பயிற்சிகள், ஆயுதங்கள் முதல் பணமும் தான் தமிழ் மக்களின் போராட்டத்தையே அழித்தது. இந்தியாவின் இந்தச் செயலைச் சுற்றிய ஆதரவு தான், சொந்த மக்களின் போராட்டத்தை இல்லாமலாக்கியது. இறுதியில் இனத்தையே அழித்தது. இங்கு மகிந்த அரசு ஒரு கருவி. மக்களை அவர்களின் சொந்தப் போராட்டத்தில் இருந்து அன்னியமாக்குகின்ற, மக்கள் தமக்காக தாம் போராட வேண்டும் என்ற மனித உணர்வைச் சிதைக்கின்ற அரசியலுக்கு, 1983 இல் இந்தியா தலைமை தாங்கியது. அதேபோல் 2013 இல் அமெரிக்கா தலைமை தாங்குகின்றது. ஒரே வேலையைத் தான், இந்தியாவின் ஆசியுடன் இன்று அமெரிக்கா செய்கின்றது.

இது ருசியாவுக்குரியதும், லெனினிய காலத்துக்குரியதுமா சுயநிர்ணயம்? சுயநிர்ணயத்தை மறுப்பவர்கள் மத்தியில், இப்படியான தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்த வாதம் சரியானதா?

லெனின் தேசிய இயக்கம் தோன்றுவதற்கான அரசியல் அடிப்படையை "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை" என்ற நூலில் எடுத்துக் காட்டுகின்றார். "உலகமுழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றிகொள்ளும் காலகட்டம் தேசீய இயக்கத்துடன் இணைந்துள்ளது" என்றார். மேலும் அவர் உலகம் முழுவதும், அதாவது "பூர்ஷ்வா ஐனநாயகம்" உருவாகாத நாடுகளுக்கு பொருந்தும் என்று கூறினார். இந்த வகையில் "எல்லாத் தேசீய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்வது - ஏனென்றால் பூர்ஷ்வா ஐனநாயகச் சீரமைப்பு இன்னும் முற்றப்பெறவில்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகமானது முரண்பாடற்ற முறையில், தீவிரமாக, மனப்பூர்வமாக தேசீய இனங்களுக்கு சம உரிமைக்காக போராடுகின்றது." என்றார். இந்த வகையில் "ருசியாவில் தேசீய இயக்கங்கள் தோன்றியிருப்பது இதுதான் முதல் தடவையல்ல. அது இந்த நாட்டுக்கு மட்டுமே உரித்தான அம்சமும் அல்ல." என்றார். இந்த அடிப்படையில் இன்று நாம் ஆராய வேண்டும். லெனினிய காலத்துக்குரியது அல்ல சுயநிர்ணயம். முதலாளித்துவ (பூர்ஷ்சுவா) ஐனநாயகம் எங்கெல்லாம் இன்னும் முற்றுப்பெறவில்லையோ, அங்கெல்லாம் சுயநிர்ணயம் பொருந்தும். சுயநிர்ணயம் காலவதியாவதற்கு

நிலவும் இன முரண்பாட்டைப் பயன்படுத்தாது, அதற்கான தீர்வை முன்வைக்கும் சுயநிர்ணயத்தையே ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் என்ற வாதம், மார்க்சிய வர்க்க அரசியல் உள்ளடக்கத்தில் இருந்து விலகிச் செல்வதாகும். இதன் அரசியல் அர்த்தம் இனமுரண்பாட்டை நியாயப்படுத்தும் கோட்பாடாக சுயநிர்ணயத்தைக் காட்டி, இறுதியில் அதை நிராகரித்து விடுவதாகும்.

முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில் எழும் தேசியம் பாட்டாளி வர்க்க கோரிக்கை அல்ல, மாறாக முதலாளித்துவக் கோரிக்கையாகும். அதேநேரம் தேசியம் ஜனநாயகக் கோரிக்கையே ஒழிய, ஏகாதிபத்தியக் (நலன் சார்ந்த) கோரிக்கை அல்ல. இந்த வகையில் இது ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அரசியல் கோரிக்கை. இதை நாம் அரசியல்ரீதியாக, முரணற்ற வகையில் புரிந்து கொள்ளவேண்டும். இதில் பாட்டாளி வர்க்கத்துக்கு எந்தவிதமான அரசியல்ரீதியான குழப்பம் இருக்கக் கூடாது.

இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதில் தடையாக, தொடர்ந்து இனமுரண்பாடும் காணப்படுகின்றது. இனங்களுக்கு இடையில் இனமுரண்பாட்டை தூண்டுவதன் மூலம் தான், ஆளும் வர்க்கங்கள் மக்களை பிரித்தாளுகின்றது. இந்த வகையில் இனங்களுக்கு இடையில் இனவொற்றுமையை ஏற்படுத்துவதை, தன் சொந்த வர்க்கநலனில் இருந்து ஆளும் வர்க்கங்கள் செய்யப் போவதில்லை. இனவொற்றுமையை தடுத்து நிறுத்தும். இது தான் இன்றைய அரசியல் எதார்த்தம்.

இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை நடத்த இன ஐக்கியம் அவசியமானது. இந்த ஐக்கியம் என்பது கூட, முன்கூட்டியே ஐக்கியமும் அதன் பின் வர்க்கப்போராட்டமும் என்பதல்ல. மாறாக இரண்டும் பிரிக்க முடியாததும், ஒருங்கிணைந்ததுமான அரசியல் கூறாகும். ஒருங்கிணைந்தபடி முன்னெடுக்கும் பாட்டாளி வர்க்கத்தின் கோட்பாடு தான் சுயநிர்ணயம். இதற்கு வேறு அரசியல் விளக்கம் கிடையாது. பாட்டாளி வர்க்கமல்லாத (ஆளும்) வர்க்கங்கள் இந்தக் கோட்பாடு தொடர்பாக கொண்டுள்ள எந்த முரணான நிலைப்பாட்டுக்கும், அதன் திரிபுக்கும் எதிராக, பாட்டாளி வர்க்கம் சுயநிர்ணயத்தை சரியாக முன்னிறுத்தி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறன்றி வேறுவழியில் வர்க்கப்போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. இனவொடுக்குமுறைக்கு எதிரான இன ஐக்கியம் என்பது, பாட்டாளி வர்க்க அதிகாரத்தை பெறுவதற்கான அரசியல் போராட்டம். சுயநிர்ணயம் அதற்கு வழிகாட்டுகின்றது.

இன்று எதிர்க்கருத்துகளும், கோட்பாடுகளும், முரண்பாடுகளை மறுக்கும் தூய்மைவாதம் சார்ந்த வரட்டுவாதமாக முன்தள்ளப்படுகின்றது. இதேபோல் அவதூறுகள் என்பது இட்டுக்கட்டப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒழுக்கம் சார்ந்த தூய்மைவாதமாகவும் திணிக்கப்படுகின்றது. இன்று பலமுனையில் பரவலாக இவை இரண்டும் சோடி சேர்ந்து, மக்கள் போராட்டங்களை மறுக்கும் பொது அரசியலாக பயணிக்க முனைகின்றது.

தமிழ் - சிங்கள - முஸ்லிம் - மலையக மக்கள் இணைந்து போராடுவது என்பது சாத்தியமற்றதா!? சாத்தியமற்றதாக்க இவர்கள் முனைகின்றனர். இனவொற்றுமையை கீழ் இருந்து கட்டியமைப்பதற்கான செயல்தந்திரம் என்பது, இனவொடுக்குமுறைகளை எதிர்த்து போராடுவது மூலம் தான் சாத்தியம். வெறும் கோட்பாடுகள், தத்துவங்கள் மூலம் இது சாத்தியமில்லை. கீழ் இருந்து கட்டியமைக்கக் கூடிய மக்கள் போராட்டத்தை, தங்கள் கோட்பாட்டு முரண்பாடுகள் கொண்டு எதிர்ப்பதும், எதிராக முன்னிறுத்துவதும் மக்கள்விரோத அரசியலாகும். கோட்பாடுகள், தத்துவங்கள் மக்கள் மீதான ஒடுக்குமுறையிலான போராட்டத்தை எதிர்ப்பதற்காக அல்ல, அதை வழிநடத்துவற்காகத் தான். அதேநேரம் கோட்பாடுகள் தத்துவங்கள் உருவாக்கும் செயல்தந்திர முரண்பாடுகள், போராட்டங்களை எதிர்ப்பதற்கு பதில் குறைந்தபட்ச ஐக்கியத்தை செயல்பூர்வமான மக்கள் போராட்டங்கள் மேல் கோருகின்றது. இதில் ஊன்றி நின்று கொண்டுதான், கோட்பாடு சார்ந்து முரண்பாடுகளை நடைமுறை மூலம் தீர்க்க முனைய வேண்டும். இதுதான் மக்கள் அரசியல். இன்று இலங்கையில் இனவொடுக்குமுறைக்கு எதிராக, நடைமுறையில் போராடுவது தான் முதன்மையான மையமான அரசியல்.

கட்சித் திட்டத்தில் இருக்ககூடிய சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி, இனவொடுக்குமுறைக்கு எதிரான வெகுஞன அமைப்பின் குறைந்தபட்சத் திட்டத்தை மறுப்பது மக்கள் நலன் சார்ந்த அரசியலல்ல. ஒரு கட்சியிடம் சுயநிர்ணயத்தை முன்வைக்குமாறு கோருவதற்கு உள்ள உரிமை, அக்கட்சி இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடுவதை மறுப்பதாகவோ எதிர்ப்பதாகவோ இருக்கக் கூடாது. இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராடியபடி, சுயநிர்ணயத்தை கட்சித் திட்டத்தில் முன்வைக்குமாறு கோரவேண்டும். இதுதான் மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனையிலான வழிமுறை.

இன்று இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான சமவுரிமைக்கான குறைந்தபட்சத் திட்டத்தை மறுக்க, சுயநிர்ணயத்தை முன்னிறுத்துவது சரியானதா!? சுயநிர்ணயத்தை முன்வைக்காதவர்கள், இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மூலம் "ஏமாற்றி" விடுவார்கள் என்ற தர்க்கம் சரியானதா? சரி சுயநிர்ணயத்தை முன்வைத்தால், இந்த "ஏமாற்றம்" எப்படி இல்லாது போகும்!?

ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சிகள், இந்திய ஆதரவு போன்றவை மக்கள் சார்ந்த சில கூறுகளைச் சார்ந்திருப்பதால் அவை மக்கள் சார்ந்ததாகிவிடுமா? இவை இலங்கை அரசுக்கு முரண்பாடாக இருப்பதால், இது முழுமையான உண்மையாகிவிடுமா?

மக்களைப் பார்வையாளராக்கிய கடந்தகால அரசியல், அன்னிய சக்திகளால் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று வழிகாட்டிய எமது கடந்தகாலப் போக்கு, சமூகத்தை மந்தையாக்கி இருக்கின்றது. இந்தப் பின்னணியில் ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சி, இந்திய ஆதரவு மீது குருட்டுத்தனமாக அவற்றை நம்பிப் பின்பற்றுகின்ற, அதை அரசியல் வழிகாட்டுகின்ற பின்புலத்தில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். உண்மைகள் புதைக்கப்படுகின்றது. நீதி மறுக்கப்படுகின்றது. தங்கள் குறுகிய நோக்கத்துக்கு ஏற்ப இவைகள் உண்மையைப் புதைப்பதில் இருந்து தான் தொடங்குகின்றது. அது என்ன என்பதையும், எதற்காக இவை என்பதையும், தெரிந்து கொள்வதன் மூலம், இந்தச் சதியை, சூழ்ச்சியை நாம் இனம் காணமுடியும்.

சுயநிர்ணயம் என்றால் என்ன? சுயநிர்ணயம் ஏன் முன்வைக்கப்படுகின்றது? சுயநிர்ணய கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் உள்ள உறவு என்ன? இது பற்றிய அரசியல் தெளிவின்மை, முடிவுகளை தவறாக எடுக்க வைக்கின்றது. இன்று இனவாதத்துக்கும் இனவொடுக்குமுறைக்கும் எதிரான போராட்டம் அரசியல் வடிவம் பெற்று அரசியல்ரீதியாக சமவுரிமை இயக்கம் மேலெழுந்து வரும் போது அரசியல் தவறுகள் ஆழமாக பிரதிபலிக்கின்றது. அதேநேரம் ஒவ்வொரு வர்க்கமும், சுயநிர்ணயத்தை தத்தம் வர்க்கநலனில் இருந்து புரிந்துகொள்வதும் முரண்படுவதும் கூட அரசியல் போக்காக மாறிவருகின்றது. சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டு, தேசியவாதம் கூட தன்னை மூடிமறைத்துக் கொண்டு முன்னிறுத்த முனைகின்றது.

இனவாதிகள் தங்கள் "காயடிப்பு" அரசியலை பாதுகாக்கும் போராட்டத்தை, சமவுரிமை இயக்கத்துக்கு எதிராகத் தொடங்கி இருக்கின்றனர். சமவுரிமைக்கான பிரச்சாரமும், போராட்டமும் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக, வலதுசாரிய புலி ஆதரவு தளத்தில் இருந்தும் எதிர்வினைகள் வரத்தொடங்கி இருக்கின்றது. இந்த வகையில் "சிங்கள தேசத்தின் பேரினவாத ஆயுதத்துடன் புலம்பெயர் களத்தில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி!" என்று தலைப்பிட்ட கட்டுரை, தொடர்ச்சியாக பல வலதுசாரிய தமிழ்தேசிய இணையங்களில் வெளியாகியுள்ளது. இதில் "சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்து இனவாதத்திற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தியல் கத்தியைத் தமிழ் மக்களின் நெஞ்சில் சொருக முற்படு"வதாக கூறியிருக்கின்றது. சமவுரிமை இயக்கம் "பேரினவாத ஆயுதத்துடன்" செயற்படுவதாகக் கூறி எதிர்க்கத் தொடங்கி இருக்கின்றனர். முதலில் சமவுரிமை இயக்கத்தை எதிர்க்கத் தொடங்கிய இடதுசாரிய தமிழ்தேசியவாதிகளின் எதிர்வினை "சுயநிர்ணயத்தை" மையப்படுத்தியதாக தொடங்கிய போதும், இறுதியில் அது இந்த அமைப்பில் இருக்கக்கூடிய தனிநபர்கள் மீது இட்டுக்கட்டிய அவதூறாக பரிணமித்து இருக்கின்றது. இதே பாணியில் வலதுசாரியம் சற்று வித்தியாசமாக "இந்தப் பாட்டாளி மக்களது கட்சி? புலம்பெயர் நாடுகள் எங்கும் கூட்டங்கள் போடவும், கொடி பிடிக்கவும், கும்பல் சேர்க்கவும், பயணங்கள் செய்யவும், அலுவலகம் அமைக்கவும் குறைவின்றிக் கிடைக்கும் நிதிக்கான நிதி மூலங்களும் ஆச்சரியமானதே" என்று இட்டுகட்டிய அவதூறுகளை செய்ய முனைந்திருக்கின்றது. பேரினவாதத்துக்கு எதிராக போராட, பேரினவாதமே பணம் தருவதாக மறைமுகமாக கூற முற்படுகின்றது. கடந்தகாலத்தில் மற்றவன் உழைப்பை சுரண்டி போராட்டம் நடத்திய கூட்டம், சொந்த உழைப்பு சார்ந்து போராடுவதை காணமுடியாது. அது அனைத்தையும் தன்னைப்போலவும், தன் சொந்த நடத்தையைப் போலவும் காணவும் காட்டவும் முற்படுகின்றது

மேற்கு ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சியுடன் முரண்படும் இலங்கைக்கு எதிரான, ஏகாதிபத்திய பிரச்சாரத்தின் அரசியல் எடுபிடிகளாக தமிழ்த்தேசியமும், தமிழ் ஊடகங்களும் இயங்குகின்றது. இலங்கை அரசுக்கு எதிராக இன்று பல முனையில் முன்னெடுக்கும் ஏகாதிபத்திய பிரச்சாரங்கள், தமிழ் மக்களின் மீட்புக்கான ஒன்றாக காட்டுகின்ற அரசியலுக்குள், வலதுசாரி தேசியம் முதல் இடதுசாரிய தேசியம் வரை புரளுகின்றனர். இதைத் தாண்டி மக்களைச் சார்ந்த எதையும் முன்வைப்பதில்லை. மக்களைச் சார்ந்து போராடும் அரசியலை எதிர்க்கும் இவர்கள், மாற்றாக மக்கள் அரசியல் எதையும் நடைமுறையுடன் முன்வைப்பதுமில்லை. இந்த அரசியல் பின்புலத்தில் தான், கொல்லப்பட்ட பிரபாகரனின் மகனின் படங்களை புதிதாக வெளியிட்டு செய்திகளையும், போர்க்குற்றங்கள் பற்றியும் பேசுகின்றனர்.

இனவாதம் மூலம் மக்களைப் பிரித்தாண்ட அரசு, புலிக்கு பின் மக்களை மதரீதியாகப் பிளக்க உருவாக்கப்பட்டது தான் "ஹலால்" ஒழிப்பு. இன்று மத மோதலை திட்டமிட்டு தூண்டி வருகின்றது. மதம் சார்ந்த "ஹலால்" குறியீடு, வர்த்தகம் சார்ந்த குறியீடாக சந்தைப் பொருளாக மாறி இருக்கின்ற சூழலைக் கொண்டு மோதலை உருவாக்குகின்றது. இதன் மூலம் அரசு மக்களை பிளக்கத் தொடங்கி இருக்கின்றது. மக்களை ஒற்றுமையுடன் வாழ்வதை தகர்ப்பதன் மூலம் தான், மக்கள்விரோத அரசாக தொடர்ந்து இருக்கமுடியும் என்ற உண்மையை இலங்கையில் "ஹலால்" ஒழிபபு கோசத்தின் பின் காணமுடிகின்றது

இலங்கை பற்றி மேற்கு ஏகாதிபத்திய அக்கறையும், அது சார்ந்து இன்று வெளிப்படும் மக்கள் விரோத அரசியல், தன்னை மாற்று அரசியலாக முன்னிறுத்தி வருகின்றது. இன்று இலங்கை அரசுக்கு எதிரான மக்கள் திரள் போராட்ட அமைப்பை உருவாக்குவதற்குப் பதில், ஏகாதிபத்திய நலன் சார்ந்த அதன் அரசியலை முன்தள்ளுகின்றனர். இன்று அன்றாட செய்திகள் முதல் கட்டுரைகள் வரை ஏகாதிபத்தியம் நலன் சார்ந்த விடையங்களை தங்கள் மையச் செய்தியாக்குவதுடன், அதன் நோக்கம் மக்களுக்கானதாக காட்டுகின்றனர். அதன் மக்கள் விரோதத்தைக் கண்டுகொள்ளாத கள்ள மௌனம் மூலம், இதை நம்பும்படி மக்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

இதற்கமைவாக இலங்கை ஆளும் தரப்பு தொடர்ந்து செய்த செய்து கொண்டு இருக்கின்ற மனிதவிரோத குற்றங்களில் இருந்து, தன்னை தற்காத்துக்கொள்ள நாட்டை ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் மேலும் மேலும் அடகுவைத்து வருகின்றனர். ஏகாதிபத்திய முரண்பாட்டைக் கொண்டும், பிராந்திய நாடுகளின் முரண்பாட்டைக் கொண்டும், நாட்டை அன்னியருக்கு அடிமைப்படுத்தி வருகின்றனர். இதனால் உள்நாட்டு விவகாரங்கள், இன்று சர்வதேச விவகாரங்களாக மாறி வருகின்றது.

பாராளுமன்றவாதிகளை நம்புவதா? முஸ்லிம் அடிப்படைவாதத்தை நம்புவதா? தனிநபர் பயங்கரவாதத்தை நம்புவதா? இன்று இப்படி குறைந்தது இதில் ஒன்றையாவது நம்புகின்ற எல்லைக்குள் மூழ்குவதும், அதில் அதிருப்த்தியும் அவநம்பிக்கையும் கொண்டு வெளிப்படுவதுமாக முஸ்லிம் சமூகம் காணப்படுகின்றது. இதுவே மக்களில் இருந்து அன்னியமான, மக்கள் விரோதமான வன்முறைக் குழுக்களை தோற்றுவிக்கும் அரசியல் அடிப்படையாக இருக்கின்றது. இதற்கு அமைவாக சர்வதேசரீதியாக இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் காணப்படுகின்றது. இந்த அபாயத்தில் இந்து முஸ்லீம் மக்களை தம்மை தற்காத்துக் கொள்ள, அரசியல் விழிப்புணர்வு அவசியமானது. பௌத்த அடிப்படைவாதத்துக்கு எதிரான மக்கள்திரளினை அடிப்படையாகக் கொண்ட மாற்றுப்பாதை அவசியமானது. இல்லாது போனால் பௌத்த அடிப்படைவாதத்தை நிறுத்திவிட முடியாது. இது இஸ்லாமிய அடிப்படைவாதமாக மாறும். இதனால் பௌத்த அடிப்படைவாதம் மேலும் மேலும் தீவிரமாகும்.

முஸ்லீம் சமூகம் மதவழிபாட்டு உரிமையை மத அடிப்படைவாதமாகிவிடாது தடுத்து நிறுத்தி, பௌத்த அடிப்படைவாதத்தை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? இதுதான் இன்று முஸ்லிம் சமூகம் முன்னுள்ள கேள்வி. இதை பேரினவாதத்தை எதிர்கொண்டு தோற்ற அதன் அரசியல் எதிர்மறையில் இருந்து கற்றுக்கொள்ள முடியும்;. தமிழ் இளைஞர்கள் எதிர்கொண்ட தவறான முன்னுதாரணங்களில் இருந்து இதைத் தெரிந்து கொள்ள முனைவோம்.

"சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை" மார்க்ஸ்சின் இந்தக் கூற்று இன்று சமூகம் செயலைக் கோரும் எங்கும் எதிலும் பிரதிபலிக்கின்றது. இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதை மறுத்து, பேஸ்புக்கில் கொசிப்பும், நடைமுறையில் பயந்தாங்கொள்ளிகளையும் உருவாக்குகின்றது. செயற்படாமல் இருக்க, கோட்பாட்டுத் தூய்மை பற்றி பேசப்படுகின்றது. நம்பிக்கையீனங்கள், அவநம்பிக்கைகள், கோழைத்தனம், பயந்தாங்கொள்ளித்தனம் … என்பன அவரவர் நடைமுறைக்குரிய ஒன்றாக தற்காப்பு அரசியலாக மாறுகின்றது. மக்களுக்காக போராடுவது பற்றி மார்க்ஸ் "இங்கே அவநம்பிக்கைகளை அகற்றிவிடுங்கள், எல்லாவிதமான கோழைத்தனத்தையும் ஒழித்துவிடுங்கள்" என்றார். செயலுக்குத் தடையாக இருப்பதை, அதை சிதைப்பது சுயநலம். இந்தச் சுயநலம் தான் அவநம்பிக்கையாக வெளிப்படுகின்றது.

2009 ஆண்டு வரை போராடுவதற்கு புலிகள் தான் தடை என்றவர்கள், அதன் பின்பும் மக்களுடன் இணைந்து செயற்படவேயில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் என அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செயலுக்கான தெளிவான குறைந்தபட்சத் திட்டத்தை வைத்தவுடன், செயலை மறுப்பதற்கான அரசியல் எதிர்வினைகள் அரசியல் அரங்கில் வருகின்றது.

சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாமையால் முன்னிலை சோசலிசக் கட்சியை, இனவாதிகளாக, திரிபுவாதிகளாக, சந்தர்ப்பவாதிகளாக காட்டுகின்ற அரசியல் கேலிக்கூத்தைக் காண்கின்றோம். இப்படி இட்டுக்காட்டி கூறுவது திரிபுவாதமாக, இனவாதமாக இருக்கின்றது. இப்படி திரிக்க தேசிய சுயநிர்ணயம் தொடர்பாக ரோசா லக்சம்பேர்க்குடனான லெனினின் விவாதத்தை எடுத்துக் காட்டுகின்றனர். லெனின் சுயநிர்ணயம் ஏற்க மறுத்த ரோசா லக்சம்பேர்க்கை இனவாதியாகவோ, திரிபுவாதியாகவோ முத்திரை குத்திக் காட்டி விவாதிக்கவில்லை. அவரை எதிரியாகக் காட்டவில்லை, எதிரியாக்கவில்லை. மாறாக அவரை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்தி, அரசியல் விவாதத்தை முன்னெடுத்தார். தமிழ்தேசியம் மட்டும் தான் தன்னுடன் அல்லாத அனைத்தையும் எதிரியாகச் சித்தரித்துக் காட்டுகின்றது.

இந்த அரசியல் தமிழ் தேசியமே ஒழிய சர்வதேசியம் அல்ல. வர்க்க அரசியலை முன்னிறுத்துகின்றபோது, அது கோட்பாடு மற்றும் செயல்தந்திரம் மீதான அரசியல் விமர்சனமாக வெளிப்படும். தேசியத்தை உயர்த்தும் போது அது தமிழினம் சார்ந்த சந்தேகமாக அவநம்பிக்கையாக வெளிப்படும்.

மார்க்சிய சொற்தொடர்கள் மூலம் தம்மை மூடிமறைத்த தமிழ்தேசியவாதிகளை இனம் காட்டுவது, பாட்டாளி வர்க்கக் கட்சியான முன்னிலை சோசலிசக் கட்சியுடனான அதன் பொது அணுகுமுறை தான். முன்னிலை சோசலிச கட்சி வர்க்கக் கட்சியாக இருப்பதால், அதன் பொது வேலைத்திட்டத்தின் ஊடாகவே இனப்பிரச்சனை பற்றிய அதன் அணுகுமுறையை பாட்டாளி வர்க்க சக்திகள் இனம்காண முற்படும்போது, தேசியவாதிகள் இனப்பிரச்சனை ஊடாகவே அக் கட்சியை அணுக முற்படுகின்றனர். இந்த வகையில் சர்வதேசியம், தேசியம் இரு வேறு அணுகுமுறைகளை கொண்டு தம்மை வெளிப்படுத்துகின்றனர்.

40 க்கு மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட இக் கூட்டம், இனவொடுக்குமுறைக்கும், இனவாதத்துக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணரும் வண்ணம் உணர்வூட்டக் கூடியதாக அமைந்து இருந்தது. பெரும்பான்மையானவர்கள் இதன் அவசியத்தை உணர்ந்ததுடன், தங்களாலான பங்களிப்பை வழங்கவும் உறுதியேற்றனர். கேள்வி பதில்களும், கூட்டத்தை அடுத்து தனிப்பட்ட உரையாடல்கள் இதை வளர்த்தெடுக்கும் வண்ணம் ஆரோக்கியமானதாக இருந்தது. யாராலும் மறுக்க முடியாத, யாராலும் நிராகரிக்க முடியாத, சமவுரிமைக்கான அவசியத்தை முன்னோக்காகக் கொண்டு நடக்க கூட்டம் வழிகாட்டியது.

இந்த வகையில் சமவுரிமை இயக்கம் பற்றி முன்வைக்கப்பட்டவற்றில் முக்கியமானது

கருத்துகளை உற்பத்தி செய்வதன் மூலம், அதை மக்களிடம் கொண்டு செல்லும் சரியான உத்திகள் மூலம், புரட்சி செய்ய முடியும் என்று நம்புகின்ற அரசியல் போக்கு தவறானது. மக்களுக்கு புரியும் மொழியில் பிரச்சாரத்தை செய்யாமை தான், புரட்சி நடைபெறாமைக்கான காரணம் என்று அரசியலைப் புரிந்துகொள்வது தவறானது. இதற்கான மொழியும், உத்தியும், பிரச்சாரமும் தான் குறைபாடு என்று கருதும் அரசியல் போக்குத் தவறானது.

மார்க்ஸ் அறிவியல்பூர்வமான தத்துவஞானத்தையும், அமைப்பையும் மறுத்து வில்ஹெம் வியட்லிங் செயற்பட்ட போது கூறியது இங்கு பொருந்தும். "இந்த போதனை ஒரு கற்பனைத் தீர்க்கதரிசியையும் - வாய் பிளந்து நிற்கும் கழுதைகளையுமே உருவாக்குகிறது" என்றார். இது புரட்சியை உருவாக்காது.

சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து, வாக்குப் போட்டு இதைச் சட்டமாக்கும் கும்பலே குற்றக் கும்பல்;. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துக்குவிப்புத் தொடங்கி பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள். இவர்களில் பலர் மாபியாக்களாக செயற்படுவது தொடங்கி பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள். இதற்கு பற்பல முகங்கள் உண்டு. இவர்கள் தான் சட்டத்தை உருவாக்குகின்றனர். இந்த சட்டத்தை கையில் எடுத்து, அதை அமுல்படுத்தும் பொலிஸ் நிலையங்களை கண்டு அஞ்சுமளவுக்கு அவையோ வதைமுகாம்களாக இருக்கின்றது. இது இலங்கை மக்கள் அனைவருக்கும் அனுபவரீதியாக தெரிந்த ஒரு பொது உண்மையும் கூட.

மக்கள் விரோத மாலிய இராணுவ ஆட்சியின் துணையுடன், ஒரு தலைப்பட்சமான ஆக்கிரமிப்பு யுத்தத்தில் பிரஞ்சு ஏகாதிபத்தியம் இறங்கியிருக்கின்றது. தன் நவகாலனியை தக்க வைக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் தான் பிராஞ்சு ஏகாதிபத்தியம் வலிந்து ஈடுபடுகின்றது. ஒருபுறம் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள, நவகாலனிகளை தக்கவைக்கும் போராட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஆக்கரமிப்பு யுத்தங்களாக மாறி இருக்கின்றது. லிபியா, சிரியா,… தொடங்கி மாலி வரை நடப்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடி யுத்தம்தான்.

பொருத்தமான மிகச் சரியான தீர்ப்பு. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட நீதியை பறைசாற்றிய நீதிமன்றங்களின் போலித்தனத்தை துகிலுரிந்து, இறுதியில் அதைத் தூக்கில் ஏற்றி இருக்கின்றனர். இனி நாங்கள் மட்டும் தான், இடையில் நீதிமன்றம் போன்ற இடைத் தரகுக்கு இடமில்லை என்று பாசிட்டுகள் எந்தப் பாசங்குமின்றி சொந்தப் பிரகடனத்தை பாராளுமன்றம் மூலம் செய்து இருக்கின்றனர். யாராவது இதை எதிர்த்து மக்களை அணிதிரட்டினால் போட்டுத்தள்ளுவோம், எங்களோடு இருப்பவர்கள் இதை எதிர்த்தால் தலை உருளும். இது தான் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டமும், தீர்ப்பும். நீதிமன்றங்கள் இதற்கு கொள்கை விளக்கம் வழங்குவதைத் தவிர, இதை மீறி விளக்கம் கொடுக்கக் கூடாது.

ரிசானாவை ஷரியா சட்டம் மூலம் கொன்றதால் அதைப் போற்றும் மதக் காட்டுமிராண்டிகள். சட்டம் என்பது உள்நாட்டு விவகாரம் என்று கூறி, கொன்றதை நியாயப்படுத்தும் அரச பயங்கரவாத பாசிட்டுகள். ரிசானா கொல்லப்பட மத அடிப்படை வாதமும், அரச பாசிசமும் ஒன்றுக்கு ஒன்று துணையாக தூணாக இருந்தது. ஒரு ஏழை, ஒரு தொழிலாளி, ஒரு அபலைப் பெண், ஒரு குழந்தை, அன்னிய நாட்டு கூலி உழைப்பாளி … என்று சமூகத்தில் அடிநிலையில் எந்த சமூக ஆதாரமுமற்றவர்களைக் குற்றவாளியாக்கி கொன்றிருக்கின்றது ஷரியா சட்டமும், அரச பாசிசமும்

இது சொந்த இன ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நிற்கும் இனவாதமாகும். இப்படி தன்னை மூடிமறைத்த சுயநிர்ணயம், நேரடியான இனவாதத்தை விட ஆபத்தானதும், அபாயாகரமானதுமாகும். தனக்கான நேரம் வரும் வரை அது தன்னை வெளிப்படுத்துவதில்லை. தன்னை ஒடுக்கப்பட்ட வர்க்கப் பிரதிநிதியாகக் காட்டிக் கொண்டு, அதிகம் நாசம் செய்கின்ற இனவாதமாகும். இதை அரசியல்ரீதியாக, கோட்பாட்டுரீதியாக இனம் கண்டு கொள்வது இன்று அவசியமாகின்றது. சுயநிர்ணயத்தின் பின் ஒளித்துப் பிடித்து விளையாடுவதை நாம் அனுமதிக்க முடியாது.

இராணுவத்துக்குத் தாம் இணைக்கப்படுகின்றோம் என்று தெரியாது எப்படி அந்தப் பெண்கள் இணைக்கப்பட்டனரோ, அதேபோல் தமிழினவாதிகள் பாலியல்ரீதியாக அந்தப் பெண்களுக்கு தெரியாமலே அவர்களை ஊடகம் மூலம் வன்புணர்ந்துவிட்டனர். இந்தப் பெண்கள் அவர்களுக்கு தெரியாமலே இராணுவத்தில் இணைக்கப்பட்டனர் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள இராணுவம் எப்படித் தயாரில்லையோ, அப்படி தமிழினவாதிகளும் தாங்கள் இந்தப் பெண்களை பாலியல்ரீதியாக ஊடகம் மூலம் வன்முறைக்கு உள்ளாக்கியதை ஒத்துக்கொள்ளத் தயாரில்லை. இந்த உண்மையை மூடிமறைக்க மனநல மருத்துவரைப் பற்றிய விவகாரமாக, அவரின் நடத்தை பற்றிய ஒன்றாக இதை மாற்றிவிட முனைகின்றனர். இந்தப் பெண்கள் "பாலியல் வன்முறைக்கு" உள்ளானதாக கூறி முன்னெடுத்த இனவாத அவதூறுப் பிரச்சாரத்தை, மனநல மருத்துவருக்கு முன்னமே முதலில் நாம் அம்பலப்படுத்தினோம். நாம் இதை முதலில் அம்பலப்படுத்திய பின்னர் தான், மனநல மருத்துவரின் இதை ஒத்த கருத்துகள் வெளியாகியது.

இலங்கை முழு மக்களையும் அடக்கியாள, அரசு தொடர்ந்தும் இனவாதத்தையே முன்தள்ளுகின்றது. சிறுபான்மை இனங்களை ஒடுக்குவதன் மூலம், பெரும்பான்மை மக்களை தங்களுடன் இணைந்து இனவாதியாக இருக்குமாறு கோருகின்றது. இலங்கை மக்களை அடக்கியாள, அரசு கையாளும் இனவாதக் கொள்கை இதுதான்.

மக்களுக்காக வேறு எந்த தேசிய சமூக பொருளாதாரக் கொள்கையும் அரசிடம் கிடையாது. இன்று இலங்கையில் அபிவிருத்தி என்ற பெயரில் நடந்தேறுவது, இலங்கையில் தங்கள் மூலதனத்தை பெருக்க வரும் வெளிநாட்டு மூலதனம் தான். அது உற்பத்தி மூலதனமாக, தரகுவர்த்தகமாக, கடன் சார்ந்த நிதிமூலதனமாக வருவதும், அது தன்னை பெருக்கிக் கொள்ள முனைவதைக் காட்டி, அதையே தான் நாட்டின் அபிவிருத்தி என்கின்றது அரசு. இதுவே அரசின் கொள்கையாகிவிட்டது. இதற்கு வெளியில் வேறு கொள்கை எதுவும் அரசுக்குக் கிடையாது. நாட்டையும், நாட்டு மக்களின் உழைப்பையும் அன்னிய மூலதனம் திருடிச் செல்வது தான் அபிவிருத்தி என்று அரசு காட்டுகின்றது. இதை மூடிமறைத்துப் பாதுகாக்க, இனவாதத்தை தூண்டிவிடுவதை அரசு தன் கொள்கையாகக் கொண்டு செயற்படுகின்றது.