Language Selection

புதிய ஜனநாயகம் 2006

03_2006.jpg

காங்கிரசு அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை போலி கம்யூனிஸ்டுகள் விலக்கிக் கொள்வார்களா? ""மன்மோகனுக்கு மார்க்சிஸ்டுகள் குடைச்சல்'', ""சிதம்பரத்துக்கு நமைச்சல்'', ""நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்புவார்கள் இடதுசாரிகள்'' என்பன போன்ற தலைப்புச் செய்திகளைப் படித்தால், அப்படி ஏதோ நடக்கப் போவதைப் போன்ற பிரமை ஏற்படத்தான் செய்கிறது. பிரமைகளை விடுத்து நாம் உண்மைகளைப் பரிசீலிப்போம்.

03_2006.jpg

வமானம்! தமிழகம் மிகப்பெரும் அவமானத்தைச் சுமந்து நிற்கிறது. தனது""பணப்புழக்க'' ஆட்சியில், போராடிய விவசாயிகளையும் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களையும் மிருகத்தனமாக ஒடுக்கி வந்த பாசிச ஜெயா, தேர்தல் நெருங்கிவிட்டதும் இப்போது சலுகைகளை வாரியிறைக்கிறார். கடன்சுமை தாளமுடியாமல் தஞ்சை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது, ""வைப்பாட்டி வைத்திருந்த விசயம் வெளியே தெரிந்து விட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக''

03_2006.jpg

மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, இந்தியப் பொருளாதாரமும் எல்லா உற்பத்தி மற்றும் விநியோகத் துறைகளும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப் பிடிக்குள் சிக்கி வருவதை நாமறிவோம். இந்தப் பொருளாதார அடிமைத்தனத்தை விஞ்சும் அளவில் அரசியல் மற்றும் இராணுவ அடிமைத்தனத்திற்கான சங்கிலிகள் நம்மீது பூட்டப்படுகின்றன. தனது குறைந்தபட்ச செயல்திட்டத்தில், பாரதிய ஜனதாவைப் போலன்றி தன்னை ஒரு அமெரிக்க எதிர்ப்பாளனாக சித்தரித்துக் கொண்டது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி.

03_2006.jpg

இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக்கப் போவதாகவும் முன்னேற்றப் போவதாகவும் கூறிக் கொண்டு உலக மேலாதிக்கப் பயங்கரவாதியும் அமெரிக்க அதிபருமான புஷ் நம் நட்டிற்கு வருவதும், இந்தப் போர்க் கிரிமினலுக்கு தேசத்துரோக காங்கிரசு கூட்டணி அரசு தடபுடலான வரவேற்பு அளிப்பதும் நம் அனைவருக்கும் நேர்ந்துள்ள தேசிய அவமானம்.

03_2006.jpg

"அவர்கள் என் அங்கங்களைத்தான் சிதைத்து விட்டார்கள்; என் குரல் இன்னும் என்னிடம் உள்ளது; நான் இன்னமும் பாடுவேன்!''

 

போராட்டம் என்றாலே ஒதுங்கிப் போய்விடும் சமரச மனோபாவம் ஊட்டி வளர்க்கப்படும் இந்தக் காலத்தில், எப்படிபட்ட நிலையிலும் துவண்டு போய்விடாமல் நீதிக்காகப் போராடுவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் மனிதர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடியும். அப்படிபட்ட அபூர்வ மனிதர்தான், பாந்த் சிங்.

02_2006.jpgஜனவரி இதழின் அட்டைப்பட விளம்பரமே அரசியல் ஆர்வலர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் வகையில் அருமையாக வெளிவந்துள்ளது. இப்""புத்தாண்டு சிறப்புத் தள்ளுபடி'' விளம்பரத்தையும் அட்டைப்படக் கட்டுரையையும் விளக்கிப் பிரச்சாரம் செய்தபோது பேருந்துகளில் பு.ஜ. இதழ் பரபரப்பாக விற்பனையாகியது. ஜெகந்நாபாத் சிறைத் தகர்ப்பு பற்றிய சி.பி.எம். தலைவர் யெச்சூரியின் துரோகத்தனத்தையும் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்திக் காட்டிய ""சிவப்பென்றால் சிலருக்கு பயம்! பயம்!!'' எனும் கட்டுரை சிறப்பு.

வாசகர்கள், திருப்பூர்.

02_2006.jpgசில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பை ஜனவரி 25ஆம் தேதியன்று காங்கிரசு அரசு வெளியிட்டுள்ளது. மதுபானம், பெட்ரோலிய கட்டுமானம், தானியக் கிட்டங்கிகள், பருத்திரப்பர் வணிகம், வைரம் உள்ளிட்ட கனிமச் சுரங்கங்கள், தொழில்துறைக்கான வெடி மருந்துகள், விமான நிலையங்கள், மின்சாரத்தை வாங்கி விற்கும் வணிகம் போன்றவற்றில் இனி 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவதாகவும் இந்த அறிவிப்பு கூறுகிறது. பன்னாட்டு

மறுகாலனியத் தாக்குதல் மூர்க்கமாக அரங்கேறி வருகிறது. அரசுத்துறைகளைத் தாரை வார்ப்பதற்கு கூறப்பட்ட பொய்க் காரணங்கள் கூட இல்லாமல், இப்போது லாபமீட்டும் அரசுத்துறை நிறுவனங்களான விமான நிலைய ஆணையகத்தின் கீழுள்ள தில்லி, மும்பை விமான நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. இக்கொடுமைக்கெதிராகப் போராடும் விமானநிலைய ஊழியர்கள் மீது மும்பை போலீசு காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளது. விமான நிலையங்கள் விமானப்படையைக் கொண்டு

02_2006.jpgகடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று, தமது நிலங்களில் டாடா உருக்கு ஆலைக்கான சுற்றுச்சுவர் கட்டப்படுவதை எதிர்த்து திரண்டமைக்காக, ஒரிசா மாநிலத்தின் ஜஜ்பூர் மாவட்டத்திலுள்ள கலிங்கா நகர் பகுதியின் பழங்குடியினர் 13 வயது சிறுவனும், மூன்று பெண்களும் உட்பட 12 பேர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ""இரண்டாவது ஜாலியன் வாலாபாக்'' எனத்தக்க வகையில், போராடிய மக்களை அரசு நிர்வாகமும், டாடா நிறுவனமும் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளன. கொலைவெறியாட்டத்தின் உச்ச கட்டமாய், காயம்பட்ட ஆறு பேரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, அவர்களுடைய கரங்களை வெட்டிப் பிணங்களாக திருப்பி அளித்திருக்கிறது, போலீசு.

02_2006.jpg"கொடுமை, கொடுமை என்று கோயிலுக்குப் போனால், அங்கே ஏழு கொடுமை எதிரிலே வந்ததாம்!'' என்று ஒரு சொலவடை உண்டு. அந்தக் கதையாக, கடன் சுமையால் தத்தளிக்கும் விவசாயிகள் வேறுவழியின்றி ஒப்பந்த விவசாயம் செய்தால், அங்கேயும் வஞ்சிக்கப்பட்டு போண்டியாக்கப்பட்டு வருகிறார்கள்.

02_2006.jpgமக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துப் போட வேண்டும் என்று மக்களுக்கு உபதேசிக்கும் ஆளும் கும்பல், எகாதிபத்திய நாடுகளின் கழிவுகளை அமெரிக்க டாலருக்காக இறக்குமதி செய்து, இந்தியாவைக் குப்பைத் தொட்டியாக்குகின்றது

 

02_2006.jpgஅக்டோபர் நவம்பர் மாதங்களில் பெய்த பேய் மழை புயலால், தமிழகமே வெள்ளக் காடாக மாறித் தத்தளித்தது. தமிழகத்திற்கு முன்பாக, ஒரே ஒருநாள் கொட்டித் தீர்த்த அடைமழையால், மும்பய் மாநகரமே மூழ்கிப் போனது. இந்த மழை வெள்ளம் பங்களாவாசிகளைக் கூட விட்டு வைக்காததால், அப்பெருமக்கள் அனைவரும் நாட்டின் அடிக்கட்டுமான வசதி பற்றி அங்கலாய்த்து வருகிறார்கள்.

02_2006.jpgதஞ்சை திருவையாற்றில் கடந்த 19.1.06 அன்று நடந்த தியாகராசர் ஆராதனை விழா நிகழ்ச்சிகளைப் படம் பிடிக்கச் சென்ற ""தினமணி'' நாளேட்டின் புகைப்படக்காரர் கதிரவனை, திருவையாறு போலீசு ஆய்வாளர் முருகவேல் மற்றும் சில போலீசாரும், திருவாரூரிலிருந்து வந்த சீருடையணியாதப் போலீசு முருகதாசும் சேர்ந்து மூர்க்கத்தனமாகத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். புகைப்படக்காரர் கதிரவன் செய்த மிகப் பெரிய "குற்றம்' என்னவென்றால், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மனைவியையும் அம்மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மனைவியையும் ஆராதனை நிகழ்ச்சியைப் பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டு நின்று படம் எடுத்ததுதான்.

02_2006.jpg1980 இல் பாரதிய ஜனசங்கத்தின் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சிக்கு, இது வெள்ளிவிழா ஆண்டு. மும்பையில் நடந்த வெள்ளிவிழா மாநாட்டில் உரையாற்றிய அத்வானி, ""கடந்த 25 ஆண்டுகால அனுபவம் மகிழ்ச்சியாகவும், கட்சி உறுப்பினர் அனைவரும் பெருமை கொள்ளும் வகையிலும் இருந்தது. ஆனால் கடந்த 25 வாரங்களில் இலஞ்சம், ஊழல், உட்கட்சி பிரச்சினைகள், மற்றும் தேர்தல் பின்னடைவுகளால் இப்போது துயர்மிகு

02_2006.jpgகொக்கோ கோலா நிறுவனத்தின் ஆணவத்திற்கு முதலடி விழுந்திருக்கிறது. ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற கங்கைகொண்டான் கிராமசபைக் கூட்டத்தில் ""கோக் ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது. 9 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6,500 வாக்காளர்களைக் கொண்டது இந்தக் கிராமசபை. எமது செப்.12 மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, அக்.2 காந்தி ஜெயந்தியன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பெரும்பான்மை மக்கள் கோக் ஆலையை எதிர்த்ததால், தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் அன்று கிராமசபை, மாவட்ட நிர்வாகத்தால்

02_2006.jpg"தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்!'' என்ற முழக்கத்தின் கீழ் நெல்லை கங்கை கொண்டானில் நாங்கள் நடத்திய போராட்டம் ஒரு மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது. இயற்கை வளமான தண்ணீரை, உயிரின் ஆதாரமான தண்ணீரை விற்பனைச் சரக்காகவும் பன்னாட்டு முதலாளிகளின் தனியுடைமையாகவும் மாற்றும் மறுகாலனியாக்கக் கொள்கையின் கொடிய முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இவ்வியக்கத்தின் குறியிலக்காக, கோக் என்னும் அமெரிக்க மேலாதிக்கத்தின் சின்னத்தைத் தெரிவு செய்தோம்.

02_2006.jpgகுப்புறத் தள்ளிய குதிரை, குழியையும் பறித்த கதையாக, தனியார்மய தாராளமயத்தால் கோடிக்கணக்கான மக்களை வறுமையில் தள்ளிவிட்டுள்ள காங்கிரசு ஆட்சியாளர்கள், இப்போது ரேஷனுக்காக ஒதுக்கப்படும் உணவு மானியத்தையும் குறைத்து நாட்டைப் பட்டினிச் சாவுக்குத் தள்ளிவிட்டுள்ளார்கள். கடந்த ஜனவரி 6ஆம் தேதியன்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம், ரேஷனுக்காக ஒதுக்கப்பட்ட மானியத்தை மேலும் குறைத்து பட்ஜெட்டுக்கு முன்னதாகவே ரூ.4524 கோடியை ஏழைகளிடமிருந்து வழிப்பறி செய்யக் கிளம்பியுள்ளது.

02_2006.jpgசூடு, சொரணை ஏதுமில்லாத அமெரிக்க அடிமைத்தனத்திற்கு இலக்கணம் படைத்து வருகிறது காங்கிரசு அரசு. மறுகாலனியாக்கக் கொள்கைகளை வெகு விசுவாசமாகவும் வெறித்தனமாகவும் மன்மோகன் சிங் அரசு அமல்படுத்தி வருவதனால் மட்டும் நாம் இவ்வாறு கூறவில்லை. இந்தியாவின் உள்நாட்டுக் கொள்கைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் அப்பட்டமாகவும் ஆத்திரமூட்டும் வகையிலும் சென்ற மாதத்தில் மட்டும்

02_2006.jpg"கொலைகார கோக்கைக் குடிக்காதே!'' இது கேரளத்தின் பிளாச்சிமடாவிலும் தமிழகத்தின் நெல்லையிலும் எதிரொலிக்கும் போராட்டக் குரல் அல்ல. ""கோக்''கின் தாயகமான அமெரிக்காவிலிருந்து இந்தப் போராட்டக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க மாணவர்களால் தொடங்கப்பட்ட ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தின் விளைவாக, இப்போது 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக் கழகங்களில் ""கோக்'' விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

03_2006.jpgகோபாலன்; திருப்பூரைச் சேர்ந்த புற்றுநோயாளி; திருவனந்தபுரத்திலுள்ள வட்டார புற்றுநோய் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை தொடர்ந்து கொண்டிருந்த வேளையில், ஒரு புதிய மருந்து வெளிநாட்டிலிருந்து வந்துள்ளதாகக் கூறி மருத்துவர்கள் அம்மருந்தை அவருக்குச் செலுத்தினர்.