Language Selection

புதிய ஜனநாயகம் 2011

கடந்த ஜனவரியில் நடந்த துனிசிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சியைக் கண்டு அஞ்சி, அந்நாட்டின் சர்வாதிகார அதிபரான பென் அலி, குடும்பத்தோடு நாட்டை விட்டே தப்பியோடி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அடக்குமுறையும் கைதுகளும் துப்பாக்கிகளும் கவச வண்டிகளும் மக்கள் சக்தியின் முன் மண்டியிடும் என்பதை இப்பேரெழுச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.

மின்சாரம்:

2003ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த புதிய மின்சாரச் சட்டத்தின்படி மாநிலங்களின் கட்டுப்பாட்டிலிருந்த மின்சார வாரியங்கள் கலைக்கப்பட்டு, உற்பத்தி, பகிர்மாணம், விநியோகம் என மூன்று தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டன. ஆகஸ்ட் 2003 இல் தில்லியின் மின் விநியோகம் தனியார்மயமாக்கப்பட்டு டாடா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனங்கள், அரசிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ1.32 வீதம் மின்சாரத்தை வாங்கி அரசு நிறுவனமான குடிநீர் வாரியத்துக்கு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த, கால்நடை மருத்துவப் பட்டம் பெற்ற 26 வயதான இளம் தோழர் சதாசிவம், கடந்த டிசம்பர் 6ஆம் தேதியன்று எதிர்பாராத விபத்தில் சிக்கி அகால மரணமடைந்து விட்டார்.

 

கல்லூரிப் பருவத்தில் மார்க்சியலெனினிய அரசியலால் ஈர்க்கப்பட்டு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆதரவாளராகச் செயல்பட்ட அவர், வேலை கிடைக்காமல் தவித்த போதிலும் புரட்சிகர உணர்வு குன்றாமல் ஊக்கமுடன் செயல்பட்டார்.

 

புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிக்க வேண்டுமென்ற அவரது புரட்சிகர உணர்வை நெஞ்சிலேந்தி, அவரது புரட்சிகர கனவை நனவாக்கத் தொடர்ந்து போராட உறுதியேற்போம். மனித உரிமை பாதுகாப்பு மையம், நாமக்கல்.

ஸ்பெக்ட்ரம் கொள்ளையில் விற்கப்பட்ட பொருள் என்ன, வாங்கப்பட்ட பொருள் என்ன என்பது குறித்துப் புரிந்து கொள்வது பெரும்பான்மை மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஆயிரம் ரூபாய்க் காகிதத்தைக் கண்ணால் பார்த்திராத மக்களைக் கொண்ட நாட்டில், கோடிக்கு எத்தனை பூச்சியங்கள் என்பதைக்கூட நிச்சயமாகச் சொல்லத் தெரியாத மக்களைக் கொண்ட நாட்டில், கொள்ளையடிக்கப்படும் தொகை எத்தனை கோடியாக இருந்தால்தான் என்ன? ஒரு விதத்தில் பார்த்தால், கொள்ளையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அதுவே திருடர்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகி விடுகிறது.

தமிழகத்திலுள்ள என்.டி.சி. எனப்படும் தேசியப் பஞ்சாலைக் கழகத்துக்குச் சொந்தமான 7 மில்களிலும் (கோவை5, கமுதி1, காளையார்கோவில்1) டிசம்பர் 18 ஆம் தேதியன்று தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற தேர்தலில், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் இணைந்தது) பெருவெற்றி பெற்றிருக்கிறது.

தனியார்மயமும் தாராளமயமும் புகுத்தப்பட்டபோது,  இக்கொள்கைகள் ஊழலின் கதவை இறுக்கிச் சாத்தப்போகின்றன என ஆளும் வர்க்க எடுபிடிகள் அனைவரும் தம்பட்டமடித்தனர். ஆனால்  அதற்கு மாறாக, கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ள, பல்லாயிரம் கோடிகளை  விழுங்கிய பிரபலமான ஊழல்களின் சுருக்கமான பட்டியல் இவை.

அலைக்கற்றை ஊழலின் தொகை கற்பனைக்கு எட்டாததாகவும் பிரம்மாண்டமானதாகவும் இருப்பதே, அந்த ஊழல் மக்கள் மத்தியில் பெரும் முக்கியத்துவம் பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஆனால், தொலைபேசித் துறையில் கிடைக்கின்ற வருவாயின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும், இந்தத் துறையின் போர்த்தந்திர ரீதியான முக்கியத்துவம்தான் ஏகாதிபத்தியங்கள் இதன் மீது தங்கள் கவனத்தைக் குவிப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

“பாசிசம் என்பதை கார்ப்பரேடிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், பாசிசம் என்பது தனியார் குழும முதலாளித்துவத்தின் அதிகாரம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவைக் குறிக்கிறது”

என்று தனது கொள்கையான பாசிசத்துக்கு விளக்கம் அளித்தான் முசோலினி.

"இன்று எங்கும் எதிலும் இலஞ்சஊழல் நிரம்பியுள்ளது. அது அரசியல் அல்லது அதிகார வர்க்க வரம்போடு நின்று விடவில்லை. இலஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டதென்று ஒரே ஒரு நிறுவனத்தைக் கூட என்னால் சொல்ல முடியாது. சில சமீபகாலச் செய்திகளைப் பார்க்கும்போது செய்தி ஊடகமும் கூட இலஞ்சஊழல் சாக்கடையில் இருந்து விடுபட்டதாக இல்லை. எனக்கு எதிராக உட்கார்ந்திருக்கும் செய்தி ஊடகத் துறையைச் சேர்ந்த உங்களில் யாரும், முன்வினைப் பயன் காரணமாக, இலஞ்ச ஊழலை விசாரிக்கும் லோகாயுத அமைப்பின் விசாரணை வரம்புக்குள் வராததால் தப்பிவிட்டீர்கள்'' என்று செய்தி ஊடகத்தாரின் முகத்துக்கு நேராகக் காறி உமிழ்ந்தார், கர்நாடகா லோகயுதா தலைவர் சந்தோஷ் ஹெக்டே.

ஜனநாயகத்தைத் தாங்கி நிற்பதாகக் கூறப்படும் நான்கு தூண்களில் மூன்றை நாடாளுமன்றம், அதிகார வர்க்கம், பத்திரிகை ஆகியவற்றை அலைக்கற்றை ஊழலும், வெளியே கசியவிடப்பட்டுள்ள நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களும் சந்தி சிரிக்க வைத்துவிட்ட நிலையில், இப் போலி ஜனநாயகத்தை ஊழலில் இருந்து காத்து ரக்ஷிக்கும் கடவுளர்களாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகின்றனர். இவ்வூழலை விசாரிக்கும் சாக்கில் நீதிபதிகள் உதிர்த்து வரும் விமர்சனங்களைக் கொட்டை எழுத்துகளில் வெளியிட்டு, அதன் மூலம் நீதிமன்றம் பற்றிய பிரமையை மக்களின் மனதில் திணிக்கின்றன ஊடகங்கள்.

ஓசூர் அருகிலுள்ள பாகலூரில், அண்மைக்காலமாக விவசாய நிலங்களில் மின்சாரக் கம்பிகள் அறுந்து தொங்கி, மின்சாரம் தாக்கிப் பல விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர். இது பற்றிப் பலமுறை முறையிட்டும் மின்சார வாரியம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதோடு, மீட்டர் பொருத்த இலஞ்சம் வாங்கி இழுத்தடிப்பது, டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தால் சீரமைக்காமல் புறக்கணிப்பது, மின்வாரிய ஊழியர்கள் அல்லாமல் புரோக்கர்களை வைத்துச் சீரமைப்பது முதலான முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருகிறது.

அயோத்தி தீர்ப்பு வெளியானதும், அலகாபாத் நீதிமன்றத்தின் பார்ப்பனப் புரட்டைத் திரைகிழித்தும் இந்துவெறி பாசிசத்துக்கு எதிராகப் போராட அறைகூவியும் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்ட  ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், தாங்கள் செயல்படும் பகுதிகளில் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன. கடந்த 4.12.10 அன்று சிவகங்கை பேருந்து நிலையம் அருகே ஆர்.எம்.ஆர். திருமண மண்டபத்தில் ""அயோத்தி தீர்ப்பு முதல் இராமன் பாலம் வரை'' என்ற தலைப்பில் பார்ப்பன சதிகளை அம்பலப்படுத்தி ம.க.இ.க. சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்திய அரசு நடுநிலையானதாகவும், சுயேச்சையானதாகவும், சமூகத்திலுள்ள அனைத்துப் பிரிவு மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பாகவும் சித்தரிக்கப்படுகிறது. மேலும், அரசு செல்வாக்கு மிக்க ஒரு பிரிவினரின் நலன்களைச் சார்ந்து இயங்குவதைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நீதிமன்றம் போன்றவை கொண்ட அமைப்பென்றும் கூறிக் கொள்கிறார்கள் இந்தப் போலி ஜனநாயகத்தின் ஆதரவாளர்கள். வெளித்தோற்றத்திற்கு உண்மையைப் போலத் தெரியும் இந்த மோசடியை, அலைக்கற்றை ஊழலும், அதையொட்டி கசியவிடப்பட்டுள்ள நீரா ராடியா ஒலிநாடாக்களும் பாமரன்கூடப் புரிந்துகொள்ளும்படி அம்பலப்படுத்திவிட்டன. இந்திய அரசு, ஆளும் வர்க்கமான தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக எப்படியெல்லாம் சேவை செய்கிறது என்பதை இவ்விவகாரம் காட்டிவிட்டது.

முத்துக்குமாரின் உடல் தமிழகத்தைத் தட்டியெழுப்பியதைப் போல, தன் உடலும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று  தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன் படட்ம்   என்ற நம்பிக்கையுடன் கடிதம் எழுதி வைத்து விட்டு, காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் இயங்கிவந்த 21 வயதான பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம் பெண் தோழரான செங்கொடி, கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஞாயிறன்று தனது உடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டு தியாகியாகியுள்ளார்.

அரசியலற்ற அமைதியிலும் விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் மூழ்கடிக்கப்பட்டுள்ள தமிழகத்தைத் தனது தீக்குளிப் பினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தட்டியெழுப்பினார், முத்துக்குமார். இன்றும் அதே நிலைமைதான் தொடர்கிறது. இன்னும் விழித்தெழாத தமிழகத்தின் அரசியலற்ற கோழைத்தனமும், கருணையை எதிர்பார்த்து நிற்கும் அவலமுமே அந்த இளம் பெண்ணின் உள்ளத்தை எரித்திருக்கிறது. மூவர் தூக்கை நிறுத்துமளவுக்கு நம்பிக்கையூட்டும் போராட்டங்களும் அரசியல் முழக்கங்களும் தமிழகத்தைப் பற்றியிருந்தால், செங்கொடி தீக்குளிக்க நேர்ந்திருக்காது.

சென்றுவாருங்கள், தோழர் செங்கொடி! உணர்ச்சி வேகத்தில் நீங்கள் தீக்குளித்திருந்தாலும், சரியான திசையில் போராடாத தமிழகத்தை நீங்கள் சாடியிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டுள்ள தோழர்கள், நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை நிறைவேற்றப் போராடுவார்கள். உங்களின் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தை நெருப்பாய் பற்ற வைக்கும். மூவர் தூக்கிற்குக் காரணமான பாசிச காங்கிரசு அரசு, பாசிச ஜெயா, அநீதியான நீதிமன்றங்கள் மீதான போராட்டத் தீயின் அனலால் தமிழகமே கொதிக்கும்!