Language Selection

சமர் - 17 : 12 -1995

இரண்டாம் உலக போரில் கிட்டத்தட்ட 2 லட்சம் பெண்களை நிரந்தர விலைமாதர்களாக தனது இராணுவத்தினருக்காக பாடி வீட்டில் வைத்திருந்ததை முதன் முiறாக ஒப்பக் கொண்டுள்ள ஜப்பான் எகாதிபத்தியம். இப் பெண்களில் மிகப் பெரும்பாலோனோர் அச் சமயத்தில் ஜப்பானில் காலனி நாடாக இருந்த கொரியப் பெண்களே ஆவர். பலரையும் கட்டாயப்படுத்தி அடக்கு முறையின் மூலமே இதில் ஈடுபடுத்தி உள்ளது ஜப்பான். ஆனாலும் இன்று ஜப்பான் முழுப் பொறுப்பையும் தானே எற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் பாதி உண்மைகளை மறைத்துவிட படாதுபாடு படுகின்றது ஜப்பான் என்று கொரியப் பெண்கள் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

நேர்முகத் தேர்வு செய்யப்பட்ட 17 வயதுடைய 50 இளைஞர்களில் 90 சத வகிதத்தினருக்கு இங்கிலாந்தை உலக வரைபடத்தில் சரியாகக் காட்டத் தெரியாது. 45 சத விகிதத்தினருக்கு போஸ்னியா எங்கிருக்கிறது என்றே தெரியாது. தனது நாட்டின் வரலாறு பற்றியும், 2ம் உலகப் போர் பற்றியும் 60சத விகிதத்தினருக்குத் தெரியாது. இவையெல்லாம் பின்தங்கிய நாடுகளிலுள்ள இளைஞர்களிடம் கேட்கப்பட்டவை 98சத விகித இளைஞர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த ஒரே விசயம் மதுவைப் பற்றியது தான்.

நன்றி – புதிஜனநாயகம்

உலகில் ஜனநாயகத்தை அமுல்படுத்தும் ஏகாதிபத்தியங்கள் எப்பொழுதும் தமது நலன்களை முன் நிறுத்தி இதை ஒரு கூச்சலாக்கி உள்ளனர். இந்த ஜனநாயகம் என்பது எப்பொழுதும் மக்களைப் பலியிடுவதே.

1 “எல்லா மார்க்சிய வாதிகளையும் மார்க்சிசத்தின் தத்துவ அடிப்படைகளையும் ஆதார வரையறுப்பக்களையும் பாதுகாப்பதற்காக அணிதிரட்டுவதைக் காட்டிலும் முக்கியமானது எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் மார்க்சிசத்தில் பல வகைப்பட்ட” “சகபிரயாணி” களிடையே முதலாளித்துவ செல்வாக்கு பரவியுள்ளதால் எதிரெதிரான திசைகளில் இருந்து இவை திரித்துப் புரட்டப்படுகின்றன. …… பலர் இப்பொழுது தான்முதற் தடைவையாக உண்மையான முறையிலே மார்க்சியத்தைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள். இது சம்பந்தமாக முதலாளித்துவ பத்திரிகைகள் என்றையும் விட அதிகமாக பொய்யான கருத்துக்களை சிருஷ்டித்தும், மிக விரிவாகப் பரப்பியும் வருகின்றன. இந்த நிலைமைகளிலே மார்க்சியவாதிகளின் அணிகளிலே ஏற்படும்  சிதைவு தவிர்க்க முடியாதது என்பதற்குரிய காரணங்களைப் புரிந்து கொள்வதும், இச் சிதைவை எதிர்த்து முரணின்றிப் போராடுவதற்காக அணிகளைத் திரட்டி ஒன்று சேர்ப்பதும் மார்க்சிய வாதிகளுடைய இந் நாளைய கடமையயாகும்.

ஓர் அமெரிக்க டொலர் கட்டணமாக செலுத்தினால் ஒரு நிமிடம் வரை தொலைபேசியில் பாலுணர்வு வக்ரங்களை எதிர்முனையிலுள்ள பெண் கூறக் கேட்கலாம். பல தனியார் கம்பனிகள் கடுமையான போட்டியின் ஊடே வருடம் ஒன்றுக்கு 12,000 கோடி ரூபாய் வருமானம் பெற்றுத் தரும் தொழிலாக இந்த வக்கிர வியாபாரம் தற்பொழுது அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றது. குடியேறிய இந்தியர்களும் இத் தொழிலில் உண்டு. ஐப்பானிலோ பயன்படுது;தப்பட்ட பெண்களின் உள் ஆடைகளையும், பாலுணர்வு ஆபாச புகைப்படங்களையும் விற்கும் நிறுவனங்கள் புற்றீசல் போல் பெருத்து வருகின்றன. குறிப்பாக பள்ளிகளின் அருகிலேயே இதற்கான கடைகள் திறக்கப்பட்டு வருவதுடன், 15ல் இருந்து 20 வயதுக்கு உள்ளான மாணவ – மாணவிகள் தான் இச் சீரழிவுக்கு முதற் பலி ஆகுகின்றனர்.

நன்றி – புதிய ஜனநாயகம்

இன்று உலகில் எழுச்சி பெற்று வீறுநடை போட்டுவரும் மெக்சிக்கோ புரட்சியாளர்களை கண்டு முதலாளித்துவ அறிவு ஜீவிகள் அலறத் தொடங்கியுள்ளார்கள் எந்த நேரமும் மெக்சிக்கோவில் எதுவும் நடக்கலாம் எனப் பீதுp உறைய ஓலமிடத் தொடங்கியுள்ளனர். இங்கு எழுந்து வரும் எழுச்சி, அன்று காலனியாதிக்க வெள்ளை இன வெறியர்களின் இரத்தப் படுகொலை ஆட்சியை தெளிவாக அம்பலப்படுத்தும் ப+ர்வ குடி இந்தியர்கள் தங்கள் சொந்த மண்ணை மீட்டெடுப்பர்.

அழகியல் என்பது எப்பொழுதும் ஒரு வர்க்கம் சார்ந்தே இயங்குகின்றது. அழகியலை பாட்டாளியும், முதலாளியும் பயன்படுத்த முடியும். ஆனால் பாட்டாளி வர்க்கம் தனது சொந்தப் படைப்புகளில், தெளிவான நிலையில், அதாவது பொருளாதார அடிக்கட்டு மானம் மீதான விமர்சனத்தின் மீது மட்டுமே அழகியில் அதற்கு சேவை செய்யும். இல்லாத எல்லா அழிகயற் Nhகட்பாடும இந்த ப+ர்சுவா சமுதாய நலன்களையே பெறும். நாம் இதை நடைமுறை ரீதியாகப் பார்ப்போம். எங்கள மண்ணில் நாம் அதிகளவு கடற்கரையைச் சொந்தமாகக் கொண்டவர்கள். அதற்குச் சென்றுவர பெரிய செலவும் கூடக் கிடையாது. ஆனால், நாம் ஒரு கடற்கரைக் காட்சியை, அதில் களித்தல் என அனைத்தையும் செய்தவர்கள் அல்லர்.

இதைவிட இனம், மதம், சாதி என பலவாக மக்களை மோத விட்டு வேடிக்கையாக தங்கள் கொள்ளை போகத்தை பாதுகாக்க முனைகின்றனர். இன்று இந்தியாவில் பல பாகங்களில் எழிச்சி பெற்று வரும் புரட்சியாளர்களில் பீகார் புரட்சிகர மார்க்சிச அமைப்பினர் வெற்றிகரமாக சாதி, மத எல்லைகதை; தகர்த்தெறிந்த முன்னேறி வருகின்றனர்.

“தன்னியல்பு வாதம் குறித்து” என்ற கட்டுரை 68 பக்கங்களை உள்ளடக்கி உள்ளது. இக்கட்டுரை ஒரே விடயத்தை மீள மீள சொல்லுவதுடன், அதன் குவிய மையம் தன்னியல்பு வாதமும், அது சார்ந்த கோட்பாட்டையும் முறியடிக்க ஒரு புரட்சிகர மாற்றைக் கோரி நிற்கின்றது.

மீண்டும் மார்க்சிய விரோதக் கருததுக்களைத் தாங்கியபடி உயிர்ப்பு – 5 வெளிவந்துள்ளது. அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக சரியான மார்க்சிஸத்தை உயர்த்திப் பிடிக்கும் நாம்,உயிர்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கே ஒரு பெரும் முயற்சி தேவைப்படுகிறது. ஏனெனில் எதிர் விமர்சனத்தை முன் வைத்து வரும் எம் கைகளில் உயிர்ப்புக் கிடைதது விட்டால், அது த்கள் திணிப்பை எங்கே கேள்விக்கு உள்ளாக்கி வீடம் என்பதால், எதிர் விமர்சனத்தைத் தடுக்கும் நோக்கில் பத்திரிகையைக் கிடைக்காமல் செய்து விடுவதில் இவர்கள் மிகவும் கவனமாகவே இருந்து வருகின்றார்கள்.

யாழ் குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் இனவெறி இராணுவம் தனது காட்டுமிராண்டித் தார்ப்பாரை நடத்தும் இன்றைய நிலையில் இது எப்படி இராணுவ ரீதியில் சாத்தியமானது? புலிகளின் இராணுவக் கண்ணோட்டம் சுயமானதாக இருந்து இருப்பின் ஒருக்காலுமே உடனடியாக யாழ் குடாவைக் கைப்பற்றும் இராணுவ முயற்சி சிறிலங்காவக்கு வெற்றி அளித்திருக்க முடியாது.

கடந்த மே மாதம் மொஸ்கோவில் இரண்டாம் உலகப் போரின் 50ம் ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கைகளில் செங்கொடியை ஏந்திக் கொண்டு. “சோவியத் அதிகாரம்”, “சோவியத் ய+னியன்” என முழக்கமிட்டு பிரமாண்டமான பேரணியினை நடத்தினர். அதே நாளில் அதிபர் யெல்ட்சின் இதனைக் கொண்டாட அமெரிக்கா, பிரிட்ன், ஜெர்மனி அதிபர்களுடன் கைகோர்த்துத் திரிந்ததைக் கண்டித்தும் முழங்கினார்கள். இவர்கள் ஊர்வலத்தை வந்த இரண்டாம் உலகப் போர் வீரர்கள் யெல்சின் தங்களுக்கு அறித்த யுத்த நினைவுப் புத்தகங்களை கறற்றி வீசி எறிந்தனர். முன்னாள் சோவியத் ய+னியனில் அங்கம் வகித்த உக்ரேயன். தாஜிக்சிஸ்தான், பால்டிக் குடியரசுகள் உள்ளிட்ட பல நாடுகளிலும் செங்கொடியுடன் மக்கள் இத்தமைகய ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.


நன்றி : புதிய ஜனநாயகம்

முகாராஷ்டிரா மாநிலத்தில் லட்டுர் பகுதியில் ப+கம்பம் தாக்கி இரண்டு வருடங்கள் ஒடி மறைந்து விட்டன. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு 1084 கோடிரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது. அரசின் நிதி உதவியோடு பல்வேறு சமூக நலன் அமைப்புக்களும். தனி மனிதர்களும் கூட நிவாரணப் பணிகளுக்காக அரசுக்குப் பண உதவி அளித்தனர். சமீபத்தில் மகாராஷ்ரா மாநில உயர் நிதி மன்றம் நிவாரணப் பணிகள் பற்றி ஆய்வு செய்ய கமிஷன் ஒன்றை நியமித்தது. இக் கமிஷன் தனது அறிக்கையில் “கடந்த ஒன்றரை வருடங்களில் பாதிப்புக்குள்ளான எந்தவொரு பகுதியிலும் அரசு ஒரு ஓலைக் குடிசையைக் கூட கட்டிக் கொடுக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது பல அமைப்புக்கள் நிவாரண உதவி குறித்து கொடுத்த மனுக்களை விசாரித்த பொழுது தான் இந்த அட்சியப் போக்கு அம்பலமாகியது.


நன்றி : புதிய ஜனநாயகம்

யாழ் குடாநாடு 83களில் 9 லட்சம் குடிமக்களைக் கொண்டிருந்தது. இது இன்று 4 லட்சங்களாகக் குறைந்த நிலையில் மிகுதிப் பேர் கொழும்பு, இந்தியா, மேற்கு நாடுகளென இடம்பெயர்ந்தும் உள்ளனர்.


இன்ற இனவெறி அரசின் தமிழ்ப் பிரதேசத்தை சாம்பல் மேடாக்கும் ‘சூரிய பிரகாச’ நடவடிக்கை வட தென்மராடசி தவிர்ந்த அனைத்து மக்களையும் இன்று யாழ் குடாநாட்டில் எஞ்சியுள்ள 4 இலட்சம் மக்களின் 50 விதத்திற்கு மேல் தாழ்த்தப்பட்ட மக்களும், மிகவும் அடிநிலையில் இருந்த நடுத்தர கீழ்ப் பிரிவுகளுமேயாகும்.

கடந்த 15 வருட யுத்தத்தில் மிக மோசமான ஓர் இன அழிப்பு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த சிறிலங்கா இனவெறி அரசு, புலிகளை யாழ்.குடாநட்டில் தோல்வியுற வைத்துள்ளது. இதைப் புலிகள் ‘பின்வாங்கல்’ என்பதற்குப் பதில் தோல்வியாவே மதிப்பிட வேண்டியுள்ளது.

உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? இந்த சத்திய வசனங்கள்!

இனப்படு கொலை!
9 ஆடி 95 (நவாலி)
22 புரட்டாதி (நாகர்கோவில்)

இன்று தமிழ்த் தேசியம் அழிக்கப்படுகின்றது. தமிழ் கலாசாரம் கற்பழிக்கப்படுகின்றது. தமிழ் பொருளாதாரம் சாம்பலாக்கப்படுகின்றது. தமிழ் உயிர்கள் விளையாட்டுப் பொம்மைகளாக சுட்டு விளையாடப்படுகின்றது. ஆம்! இன்று ஒரு தேசிய இனம் தனது உரிமைக்காகப் போராடுவது என்ற ஒரு சாதாரண மனித உரிமை கூட பந்தாடப்படுகின்றது. ஒரு இனத்தின் அழிவில் தான், இனவெறி அரசு கொள்ளையடித்து சுகபோகம் அனுபவிக்க முடியும் என்பதை இன்றைய நிகழ்வுகள் மீளவும் பறைசாற்றி நிற்கிறது.