Language Selection

பி.இரயாகரன் 1996-2000

நாம் ஸ்ராலினின் வரையறையான நிலத்தொடர், பொதுப்பாண்பாடு, ஒருமொழி, பொதுவான பொருளாதாரம் என்பது ஒரு தேசம் தேசமாக இருக்க வேண்டின் மிக அடிப்படையாக தேவையானவை இதில் ஏதாவது ஒன்று இல்லாத தேசம் ஒன்றைக் கூடக் உலகில் காட்ட முடியாது, உருவாக்க முடியாது.

இனி நாம் ஸ்ராலின் வரையறுத்த பொதுவான பொருளாதாரம் என்பதைப் பார்ப்போம். ஒரு பொருளாதாரம் இன்றி தேசம் உருவாக முடியும் எனக் கூறுவது அடிப்படையில் கற்பனாவாதக் கருத்து முதல் வாதமாகும்.

இனி நாம் ஸ்ராலினின் வரையறையான பொதுப்பண்பாட்டை எடுப்போம். ஒரு தேசம் உருவாக வேண்டின் ஒரு குறித்த மக்கள் கூட்டம் ஒரு குறித்த பண்பாட்டை, கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டும். பல்வேறு பண்பாட்டை உடைய உதிரிகள் ஒருக்காலும் ஒரு தேசிய இனமாக மாறிவிட முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பண்பாட்டை உடைய வௌவேறு மக்கள் கூட்டம் ஒரு பல்தேசிய இனமாகவோ அல்லது ஒரு தேசிய இனத்துடன் சேர்ந்தோ இருக்க முடியும். எந்தப் பண்பாடும் இல்லாத வெற்றிடத்தில் ஒரு தேசியம் உருவாக முடியாது. ஆகவே ஒரு கூட்டம் மக்களைக் கொண்டு குறைந்த பட்சம் ஒரு பண்பாடு இருக்க வேண்டும்.

அடுத்து ஸ்ராலினின் வரையறையான பொதுவான மொழி என்ற விடையத்தைப் பார்ப்போம். ஒரு மொழி இன்றி ஒரு தேசம் இருக்க முடியுமா? அப்படி ஒரு தேசத்தையும் காட்ட முடியுமா? ஒரு தேசம் இருக்க வேண்டின் நிச்சயம் ஒரு மொழி இருக்க வேண்டும். மொழி தேவையில்லை என கோரின் ஒரு தேசிய இனப் போராட்டத்தை மறுப்பதேயாகும்.

இனி நாம் இதையும் ஸ்ராலினின் வரையறையையும் பார்ப்போம். ஒரு தேசம் தேசமாக இருக்க வேண்டின் ஒரு நிலப்பரப்பு இருக்க வேண்டும். நிலப்பரப்பு இல்லாத ஒரு தேசத்தை காட்டவே முடியாது. நிலப்பரப்பு இல்லாத தேசிய விடுதலையையும் காட்ட முடியாது. அ..மார்க்ஸ் அவரின் சீடர்கள் முன்னைய ரஷ்சியாவில் யூதர் உடைய தேசியசுயநிர்ணயத்தை மறுத்ததாக அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றார்.

இன்று உலகம் உலக மயமாதலில் வேகம் பெற்றுள்ளது. ஒரு சில பன்நாட்டு நிறுவனங்களின் கைகளில் உலகச் செல்வம் குவியத் தொடங்கி உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் 1985 இல் 90 சதவிகித உலக பொருளாதாரத்தை கட்டுப்படுத்தி இருந்தன. 3500 இந்திய கோடிக்கு மேல் ஆண்டு வருமானத்தைக் கொண்டுள்ள 400 தேசம் கடந்த தொழிற்கழகங்கள் இருந்தன. இவை உலகில் மூன்றில் ஒரு உற்பத்தியைக் கட்டுப்படுத்தின.

இவை இரண்டு தளத்தில் நடக்கின்றது.


1) வர்க்க யுத்தம்


2) ஏகாதிபத்திய சார்புக் குழுக்களுக்கிடையில் நடைபெறும் யுத்தம்


வர்க்க யுத்தம் என்பது தவிர்க்க முடியாது சாராம்சத்தில் தேசிய யுத்தமாக உள்ளது. அதாவது ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், தரகு நிலப்பிரபுத்துவப் பிரிவை எதிர்த்தும் நடக்கும் இவ்யுத்தம் சொந்த தேசியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், சுரண்டலை எதிர்த்தும் நடத்தும் இவ்யுத்தம் ஒரு வர்க்க யுத்தமாக இருந்தாலும், சாரம்சத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒரு தேசியமாக உள்ளது. இது சர்வதேசிய நிலைக்குள் நின்று நடப்பதுமாகும். இவ்யுத்தம் நிட்சயமாக பாட்டாளி வர்க்க தலைமையில் மட்டும் நடக்க கூடியது. இவ்யுத்தத்தில் பல்வேறு பிரிவை தனது தலைமையில் அணிதிரட்டும் பாட்டாளி வர்க்கம், ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக தேசியப் பொருளாதாரத்தை பாதுகாக்கக் கோருகிறது. இதற்கு தேசிய முதலாளித்துவப் பிரிவு சுரண்டவும், அதை எதிர்க்கும் முரண்பாடான குணாம்சத்தை இந்த தேசியப் போரின் ஐக்கிய முன்னணி தன்னகத்தே கொண்டுள்ளது.


ஏகாதிபத்திய சார்புக் குழுக்களுக்கிடையே நடக்கும் மோதலும், அதன் ஆட்சி மாற்றங்களும் அடிப்படையில் அம்பலப்பட்ட பிரிவை அகற்றுவது அல்லது ஏகாதிபத்திய சுரண்டல் மண்டலங்களை கைப்பற்றுவது என்றளவில் உள்ளது.


பாட்டாளிகள் இரு பிரிவையும் எதிர்த்து, இதில் எழும் தேசியத்தின் பொய்மையை அம்பலப் படுத்தியும் போராட வேண்டும். மாறாக உண்மையான வர்க்கப் போரை, சாராம்சத்தில் தேசியப் போரை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளுர் ஆளும் அதிகார வர்க்கப் பிரிவுகளை எதிர்த்துக் கோர வேண்டும்.


ஆகவே தேசியம் என்றும் வர்க்கம் சார்ந்தது. தேசியம் என்பது குறைந்த பட்ச பொருளாதார அலகைப் பாதுகாத்தல் என்பதை தாண்டியது அல்ல. இந்தப் பொருளாதார அலகு நிலத் தொடர், கலாச்சராம், மொழி எனப் பல்வேறு துறைகள் மீது தனது ஆதிக்கத்தை பிரதி பலிக்கின்றது.

ஒரு பாட்டாளி வர்க்க நாட்டை எதிர்த்து நடத்தும் ஆக்கிரமிப்புப் போரைப் பார்ப்போம். இங்கு பாட்டாளி வர்க்கம் அரசு உள்ளதால் சுரண்டல் என்பதை ஒழித்துக் கட்டும் ஆட்சியாக நீடிக்கும் வரை, உலகைப் பங்கிட்டு கொள்ளும் யுத்தமோ, மற்றைய நாட்டைச் சுரண்டுவதோ தேவையற்றதாகி விடுகிறது.

ஏகாதிபத்தியம், மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியம் என்பது, பரஸ்பர சந்தையை மையமாக வைத்து இரண்டு சுரண்டும் வர்க்கமும் யுத்தத்தை முன் தள்ளுகின்றன. இந்த முதலாளித்துவ நாடுகள் உலகை தமது காலனியாகவோ, நவகாலனியாகவோ அரைக்காலனியாகவோ நேரடியாகவோ மறைமுகமாகவோ வைத்துள்ளன.

ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நாடு தனது தேசம் கடந்த சுரண்டலை நடத்தவும், அதே நேரம் தனது செல்வாக்கு மணடலங்களை (தனது சுரண்டலைப் பாதுகாக்க) நிறுவவும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றன

இன்று பல்தேசிய இன நாட்டு தேசிய இன முரண்பாடு, தேசிய விடுதலை யுத்தம் சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டும் பண்புகளில் இருந்தே எழுகின்றது. மாறாகப் பாட்டாளி வர்க்கம் இதைக் கோருவதில்லை. ஏன் எனின் நாடு பிரிப்பதால் பாட்டாளி வர்க்கம் எந்த விதமான அனுகூலத்தையும் பெற்று விடுவதில்லை. அதாவது சுரண்டும் வர்க்கத்திற்கு இடையில் நடைபெறும் இழுபறியான போராட்டத்தையே மொத்த மக்கள் முன் தேசிய விடுதலைப் போராக நகர்த்துகின்றனர்.

"தேசியம் ஒரு கற்பிதம் " (கவனிக்க - மாயை என்று நாம் சொல்லவில்லை. கற்பிதம் என்றுதான் சொல்கிறோம்) தேசியப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்கிகுகிறதே யொழிய, எற்கனவே "இயற்கையாகவே" உருப்பெற்ற தேசம் தேசியப் போராட்டத்தை உருவாக்குவதில்லை." என்ற மார்க்சிய விரோத, தேசிய விடுதலைக்கு எதிரான கருத்து முதல் வாதக் கோட்பாட்டை பார்ப்போம். "கற்பிதம் மாயை இல்லை" என்று கூறியபடி "கற்பிதம் என்று தான் கூறுகின்றோம்" எனக் கூறுவதில் என்ன விளக்கம் தான் மிஞ்சியுள்ளது? 'கற்பிதம்" என்றால் என்ன என்று அவர்களால் விளங்க முடியவில்லை.

பாட்டாளி வர்க்கம் தனது சொந்த வர்க்கப்போராட்டத்தை நடத்த, முன்னெடுக்க, சமூகத்தில் உள்ள எல்லாப்பிரச்சனையையும் கவனத்தில் எடுக்கின்றது . ஒரு பிரச்சனையில் பாட்டாளி வர்க்கம் தலையிடுகிறது என்றால், அது வர்க்கப் புரட்சிக்காக மட்டுமே தான் என்பதை ஒரு நிமிடம் கூட மறந்துவிடக் கூடாது. இதை நாம் மறந்து போகும் ஒவ்வொரு நிமிடமும் தன்னெழுச்சியின் பின், சுரண்டும் வர்க்க கனவுகளின் பின் இழுபட்டு, பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் செய்பவர்களாக இருப்போம்.

book _8.jpgஅண்மைக்காலமாக மார்க்சியத்துக்கு எதிரான போக்குகள் தீவிரமடைந்துள்ளது. சோவியத்திலும், சீனாவிலும் அப்பட்டமான முதலாளித்துவ முன்னெடுப்புகள் தொடங்கியதுடன் மார்க்சியம் மீது முன்பை விட அதிகமாக சேறு வீசப்படுகின்றது. இன்று ஈழப் போராட்டம் இராணுவ வாதத்திற்குள் சிக்கி உள்ள நிலையில், குறைந்த பட்ச ஜனநாயக இயக்கத்தைக் கூட விட்டு வைக்காத இன்றைய நிலையில், கடந்த கால சமூக அக்கறைக்குரியவர்கள் உதிரியாகவும், சிறு குழுக்களாகவும் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்தனர்.