Language Selection

புதிய ஜனநாயகம் 2010

நக்சல் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் அரசு நடத்திவரும் காட்டுவேட்டை (ஆபரேசன் கிரீன் ஹன்ட்) என்பது, மக்கள் மீது மறுகாலனியாக்கத்தைத் துப்பாக்கி முனையில் திணிக்கும் ஒரு பாசிச போர். இதனைப் பத்திரிகையாளர்கள் உள்ளட்டுப் பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர். ஜன4,"டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளேட்டில் வெளிவந்துள்ள, பி.யு.சி.எல் அமைப்பைச் சார்ந்தவரும் சட்டிஸ்கர் உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான சுதா பரத்வாஜின் நேர்காணல் இதனை நிரூபிக்கிறது. அதன் சாரம் வருமாறு:

கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தம்கோட்டா எனுமிடத்தில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் ஏராளமான குரங்குகள் கூட்டமாக வசித்து வருகின்றன. கோயிலுக்கு வரும்பக்தர்களையும் அருகிலுள்ள குடியிருப்புகளிலும் இக்குரங்குகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தன.

“ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் மீதான வெள்ளை நிறவெறித் தாக்குதல்” சென்ற மாதம் முழுவதும் இந்திய ஊடகங்களில் முக்கியச் செய்தியாகத் தொடர்ந்து இடம் பெற்றிருந்தது.

இந்தியப் போலி கம்யூனிச இயக்கம் இன்னுமொரு தலைமைப் பூசாரியை இழந்துவிட்டது. "வங்கத்துசிங்கம்' என்று சி.பி.எம். கட்சியினரால் சித்தரிக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவரான திருவாளர் ஜோதிபாசு, கடந்த ஜனவரி 17ஆம் நாளன்று தனது 95வது வயதில் மறைந்து விட்டார்.

"ஆபரேசன் கிரீன் ஹண்ட்' (காட்டு வேட்டை) என்ற பெயரில் மாவோயிஸ்டு கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி, ஆந்திர மாநிலங்களின் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்தும் மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகரராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9ஆம் தேதியன்று, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது,

அண்டை நாடான நேபாளம், கடந்த மூன்று மாதங்களாக மக்கள்திரள் போராட்டங்களால் குலுங்குகிறது. ""அந்நிய எஜமானர்களிடம் சரணடையாதே! தேசிய ஜனநாயக நேபாள மக்கள் கூட்டுத்துவ குடியரசு வாழ்க!'' என்ற முழக்கங்களுடன், மாவோயிஸ்டுகள் தலைமையில் வீதியெங்கும் மக்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள், தீவட்டி ஊர்வலங்கள், மறியல் போராட்டங்களால் அந்நாடே அதிர்கிறது. இந்திய மேலாதிக்கமும் அதன் சதிகளும் நேபாளம் எங்கும் காறி உமிழப்படுகிறது.

 

இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், முன்னெப்போதும் கண்டிராத ""இயற்கைப் பெரும் பேரழிவுகளை'' உலகம் கண்டது. கொதிக்கும் கோடைக்காலங்கள், அதிபயங்கர சூறாவளிகளும் புயல்களும், மிக மோசமான வறட்சிகளும் கொட்டித் தீர்த்த பேய்மழைகளும் வெள்ளப் பெருக்குகளும், பயபீதியும் நாசமும் விளைவித்த பெருங்கடற் சீற்றங்கள் கடல்மட்ட உயர்வுகள், இவற்றோடு பல நாடுகளின் விவசாயத்தின் தலைகுப்புற வீழ்ச்சிகள். இத்தகைய நிகழ்வுகள் உலகின் ஏதோ சில பகுதிகளில் மட்டும், எப்போதோ ஒரு சிலதடவைகள், தன்னியல்பாக வரக்கூடிய இயற்கைப் பேரழிவுகள் என்று இனியும் கருதிவிட முடியாது.

பிரதமர் மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் மாதம் மும்பய் நகரில் நடந்த கூட்டமொன்றில், ""நமது கஷ்டகாலம் முடிவுக்கு வந்துவிட்டதாக'' அருள்வாக்கு செõன்னார். அவர் எந்த நேரத்தில் திருவாய் மலர்ந்தாரோ தெரியவில்லை, அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் நாடெங்கும் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்து, பாமர மக்களை மயக்கம் போடவைத்தது.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஆளும்வர்க்க விசுவாசத்தோடு கம்யூனிச எதிர்ப்புக்குக் கரசேவை செய்துவரும் ""தலித்முரசு'' இதழ், தனது நவம்பர் 2009 இதழில், ""அதிகாரம்+நக்சலைட்டுகள்= வர்ணாஸ்ரமம்'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு, தனது வர்க்காஸ்ரம வெறியைக் காட்டியுள்ளது.

இடுபொருட்கள் விலை உயர்வு, கொள்முதல் விலைவீழ்ச்சி, உணவு தானிய தாராள இறக்குமதி முதலானவற்றால் இந்திய விவசாயிகள் போண்டியாகி, கந்துவட்டிக் கடன் சுமையில் சிக்கி ஓட்டாண்டிகளாகி வருகிறார்கள். மறுபுறம், விவசாயத்தைப் புறக்கணித்துவரும் ஆட்சியாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு வரிச் சலுகைகள்,மானியங்கள் என்ற பெயரில் நாளொன்றுக்குப் பலநூறு கோடிகள் வீதம் வாரியிறைக்கின்றனர்.

வடசென்னை அனல் மின்நிலையம் (NCTPS), 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழுள்ள அரசுத்துறை நிறுவனம். நாளொன்றுக்கு 60,000 டன் நிலக்கரி கையாளப்படும் இந்த நிறுவனத்தில், கரியள்ளும் பிரிவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக உழைத்த 261 தொழிலாளர்கள் இன்று வேலையிலிருந்து வீசியெறியப்பட்டுள்ளனர்.

"நீங்கள் நடுநிலையாளர்களாக இருப்பதென்பது குற்றம்!'' — இந்திய அரசு விடுக்கும் எச்சரிக்கை! அது, தெற்கு சத்தீஸ்கரின் வெச்சபல் கிராமம். காட்டின் மடியிலிருந்த அந்தக் கிராமத்தில், அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார் பொன்யாம் பந்துரு. இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்த துப்பாக்கிகளின் வேட்டுச்சத்தம் பந்துருவின் தூக்கத்தைக் கலைத்தது. ""ஐயோ! கொலைகாரர்கள் வந்துவிட்டார்கள்'' என்ற அலறல் எங்கும் எதிöராலித்தது.

"இனியும் இது நீடிக்க முடியாது. எங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது. பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்'' என்று வானொளியில் தோன்றிய அமெரிக்காவின் தலைமைக் கொலை வெறியன் öரானால்டு ரீகன் முழங்கினான்.

போபால் விஷவாயுப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்கள் உரிய நட்ட ஈடு வழங்கக் கோரியும், யூனியன் கார்பைடு முதலாளி வாரன் ஆண்டர்சனைக் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கக் கோரியும் இன்று வரை போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், மன்மோகன் சிங் அரசு, அணு ஆலை விபத்துக்கள் தொடர்பாக ஒரு புதிய மசோதாவொன்றைத் தயாரித்து, அதனைச் சட்டமாக்கிவிட முயன்று வருகிறது.

இருபத்தைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள புதிய ஜனநாயகம் இதழை வாழ்த்தியும், வாசகர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை விளக்கியும் திருச்சி வாசகர் வட்டத் தோழர்கள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து கடந்த 6.12.09 அன்று மாலை அரங்கக் கூட்டத்தைப் பேருற்சாகத்துடன் நடத்தினர். திருச்சி புத்தூர் நாலுரோடு சண்முகா திருமண அரங்கில், மாணவர்களும் மாணவிகளும் இணைந்து நடத்திய தப்பாட்டத்தோடு தொடங்கிய இக்கூட்டத்திற்கு ம.க.இ.க. மையக் கலைக்குழு தோழர் கோவன் தலைமை தாங்கினார்.

புர்ஜ் துபாய் என்ற உலகின் மிக உயர்ந்த கட்டடம், துபாய் மால் என்ற உலகின் மிகப் பெரிய பேரங்காடி, புர்ஜ் அல்அரப் என்ற உலகின் முதல்தர ஏழு நட்சத்திர தகுதி கொண்ட உல்லாச விடுதி, உலகின் எட்டாவது அதிசயம் எனப்படும் ""ஜுமெரா பாம்'' எனப்படும் ஈச்சமர வடிவத் தீவு, ஜபேல் அலி ஏற்றுமதி மையம் எனக் கனவுலகை கண்முன்னே காட்டிய துபாய் இன்று கடனாளியாக நிற்கிறது. ஆரவாரம் அடங்கிவிட்டது. எங்கும் மயான அமைதி. எல்லோருடைய முகத்திலும் பீதி. அடுத்து என்ன நடக்குமோ என்று புரியாத குழப்பத்தில் உறைந்து கிடக்கிறது அந்நாடு.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை ஆக்கிரமித்துக்கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீது ஒரு அநீதியான போரை நடத்தி வருகிறது. சின்னஞ்சிறு ஏழை நாடாக இருந்தாலும், ""ஆப்கான் ஏகாதிபத்தியங்களின் இடுகாடு'' எனக் கூறப்படுவது மீண்டும் நிரூபணமாகி வருகிறது.