இது வளர்ச்சியல்ல, இதுதான் எகாதிபத்தியம்!
நக்சல் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் அரசு நடத்திவரும் காட்டுவேட்டை (ஆபரேசன் கிரீன் ஹன்ட்) என்பது, மக்கள் மீது மறுகாலனியாக்கத்தைத் துப்பாக்கி முனையில் திணிக்கும் ஒரு பாசிச போர். இதனைப் பத்திரிகையாளர்கள் உள்ளட்டுப் பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர். ஜன4,"டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளேட்டில் வெளிவந்துள்ள, பி.யு.சி.எல் அமைப்பைச் சார்ந்தவரும் சட்டிஸ்கர் உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான சுதா பரத்வாஜின் நேர்காணல் இதனை நிரூபிக்கிறது. அதன் சாரம் வருமாறு: