Language Selection

புதிய ஜனநாயகம் 2010

மத்திய அமெரிக்காவில் கியூபாவிற்கு அருகில் அமைந்துள்ள ஹெய்தி தீவைச் சேர்ந்த சாதாரண குடிமகன் தொடங்கி அத்தீவின் முன்னாள் இராணுவஅமைச்சர் உள்ளிட்டுப் பலரும் இவ்வார்த்தைகளைத்தான் இப்பொழுது கூறிக் கொண்டிருக்கிறார்கள். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டிற்கு நிவாரணம் வழங்குவது என்ற போர்வையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திவரும் அரசியல் சதிராட்டத்தைத் தோலுரித்துக் காட்டும் வார்த்தைகள் இவை.

தினந்தோறும் உயிரைப் பணயம் வைத்து, ஆழ்கடலில் நெடுந்தொலைவு சென்று நம் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களால்தான், இந்தியாவின் புரதத்தேவையில் பாதியளவு நிறைவு செய்யப்படுகிறது. இம்மீனவர்களின் வாழ்வுரிமையையும் அன்றாடச் செயல்பாடுகளையும், இந்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள ""மீன்பிடித்துறை ஒழுங்குமுறை மசோதா''முடக்கிப் போடப் போகின்றது.

""ஒரு ஹீரோவாக நீங்கள் மாறவேண்டுமானால் முதலில் தேவை ஒரு வில்லன். அல்லது, சில வில்லன்கள். ராமருக்கு ராவணன், எம்.ஜி.ஆருக்கு நம்பியார். இதிகாசத்திலும், திரைப்படத்திலும் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் வில்லன்களும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். குறிப்பாக மார்க்கெட்டிங்கில்'' என்கிறார், நிர்வாகம் மற்றும் விற்பனைத் துறைகளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்தும் எஸ்.எல்.வி.மூர்த்தி.

போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் சிங்கூரில் பாலாய் சாபுய், திவாகர் கோலே ஆகியோர் அண்டை வீட்டுக்காரர்கள். 1970களில் பீடி சுற்றும் தொழிலாளிகளாக இவர்கள் வறுமையில் வாடினர். பாலாய் சாபுய், சி.பி.எம். கட்சியில் சேர்ந்து ஹ_க்ளி மாவட்ட விவசாய சங்கத் தலைவராக உயர்ந்தார். அவர் அரசு போக்குவரத்துத் துறையின் மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்தார். இம்மாவட்டத்தின் அனைத்து வாகனங்களுக்கும் உரிமம்  பர்மிட் வழங்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிங்கூரில் அரசின் நிலக் கையகப்படுத்தல் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். இன்று அவருக்கு சிங்கூரில் இரண்டு அடுக்கு மாடி வீடு உள்ளது. போலேரோ ஜீப்பில் வலம்வரும் அவர் இன்று இப்பகுதியில் முக்கியத் தலைவராவார்.

மே.வங்கம், ஒரிசா, ஜார்கந்து, சட்டிஸ்கர், பீகார் மாநில முதல்வர்களுடன் சேர்ந்து காட்டுவேட்டை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது பற்றி கலந்தாலோசனை செய்ய, கடந்த பிப்ரவரி 9ஆம் தேதியன்று கொலைகார உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கொல்கத்தா வந்தபோது, ""வேதாந்தாவின் கொலைகார அடியாள் ப.சிதம்பரமே திரும்பிப்போ!, டாடாவின் எடுபிடி புத்ததேவ் பட்டாச்சார்யாவே வெளியேறு!'', ""காட்டுவேட்டை என்ற பெயரில் தொடரும் நாட்டு மக்கள் மீதான போரை முறியடிப்போம்!'' என்ற முழக்கங்கள் கொல்கத்தா நகரெங்கும் எதிரொலித்தன.

இந்திய ஆட்சியாளர்கள் பழங்குடி மக்கள் மீது நடத்திவரும் கொலைவெறியாட்டப் போரை திட்டமிட்டு மூடிமறைத்து, நக்சல்பாரி புரட்சியாளர்களைப் பயங்கரவாதிகளாகவும் கொலைகாரர்களாகவும் இழிவுபடுத்தி தமிழக செய்தி ஊடகங்கள் அவதூறு செய்துவரும் நிலையில், ஆளும் கும்பல் நடத்திவரும் நக்சல் வேட்டையின் உள்நோக்கத்தையும், மறுகாலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை விளக்கியும், ""பழங்குடியினர் மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான், அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!'' என்ற முழக்கத்துடன், பல்வேறு வடிவங்களில் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் கடந்த இரு மாதங்களாகத் தொடர்ந்து சூறாவளிப் பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன.

இந்தியாவின் மிகப் பெரிய அந்நிய முதலீட்டுத்திட்டமான தென்கொரியாவின் போஸ்கோ எஃகு ஆலைத் திட்டத்துக்கு எதிராக, போஸ்கோ பிரதிரோத் சங்கராம் சமிதி (பி.பி.எஸ்.எஸ்) என்ற அமைப்பின் தலைமையில் ஒரிசாவின் ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் விவசாயிகள் கடந்த ஜந்தாண்டுகளாகப் போராடிவருகின்றனர். கடந்த ஜனவரி 26 முதலாக போஸ்கோ திட்டத்திற்கு எதிராக காலவரையற்ற தர்ணா போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

 

தென்கொரிய அதிபர் லீ மையூங் பாக், டெல்லியில் கடந்த ஜனவரி 26 அன்று நடந்த "குடியரசு' தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் வருகைக்கு முன்னதாக 3566 ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எஞ்சிய நிலங்களை விரைவில் கையகப்படுத்தி திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது. அதாவது, 2006ஆம் ஆண்டில் கலிங்கா நகரில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 14பேரைக் கொன்றதைப் போல, மிகக் கொடிய தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடத் துடிக்கிறது.

 

ஏறத்தாழ 52,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போஸ்கோ திட்டத்தினால் 30,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்விழக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரிசாவின் உயர்தரமான இரும்புக் கனிமத்தில் 60 கோடிடன் அளவுக்கு அள்ளிச் செல்வதோடு, ஆண்டுக்கு 12கோடி டன் எஃகு உற்பத்தி செய்யும் உருக்காலையும் மின்நிலையமும் தனியார் துறைமுகமும் கொண்ட இத்திட்டம், கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. இத்திட்டத்தால் 11 கிராமங்களிலுள்ள 5000 குடும்பங்கள்  ஏறத்தாழ 30,000 பேர் வெளியேற்றப்படவுள்ளனர். இதுதவிர, ஜடாதாரி ஆற்றையும் அது கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியையும் போஸ்கோ நிறுவனம் ஆக்கிரமிக்கப் போவதால், 52,000 மீனவர்களின் எதிர்கால வாழ்வும் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

எஃகு உருக்காலை மற்றும் மின்நிலையத்துக்கு 4004ஏக்கர் நிலம் தேவை. இதில் 3566 ஏக்கர் புறம்போக்கு மற்றும் காட்டுப்பகுதிகள் அரசால் இந்நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காட்டு நிலங்களையும் காட்டின் விளைபொருட்களையும் பயன்படுத்தி வந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 438 ஏக்கர் நிலம் உள்ளூர் சிறு விவசாயிகளுடையது. இவற்றில் வெற்றிலை, முந்திரி சாகுபடியும் முக்கியமாக, நெல் சாகுபடியும் செய்து வருகின்றனர். இந்த நிலங்களைப் பறிப்பதை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை ஒடுக்க 25 பிளாட்டூன் துணை இராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மூலம் கிராமப் பஞ்சாயத்துகளில் ஒப்புதல் பெறுவதற்கான கூட்டங்கள் நடத்தப்பட்டபோது, தங்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் போஸ்கோ திட்டத்தை எதிர்த்து அனைத்து விவசாயிகளும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால் அரசோ, 15 நாட்களுக்குள் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளாவிட்டால், பின்னர் எவ்வித நிவாரணமும் தரப்பட மாட்டாது என்று கடந்த பிப்ரவரி முதல் நாளன்று அறிவித்து, நிலங்களைப் பறிக்கக் கிளம்பியுள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான மறுகுடியமர்த்தல் மற்றும் நிவாரணத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ""இந்தியாவில் இதுதான் மிகச் சிறந்த நிவாரணத் திட்டம்'' என்கிறார் போஸ்கோ இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளரான மொகந்தி. ஆனாலும் இன்றுவரை எந்த விவசாயியும் நிவாரணத் தொகையை வாங்கவில்லை.

 

ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் பட்னா, கோவிந்த்புர், தின்கியா ஆகிய கிராமங்கள் போராட்டத்தின் முன்னணியில் நிற்கின்றன. விவசாயிகள் போஸ்கோ திட்டம் அமையவுள்ள 4004 ஏக்கர் நிலத்தைச் சுற்றிவளைத்து 17இடங்களில் மட்டும் நுழைவாயில்களை அமைத்துள்ளனர். அவர்களின் அனுமதி இல்லாமல் அந்த மூங்கில் தடுப்பரண்களைத் திறக்க முடியாது. அரசு அதிகாரிகளோ போஸ்கோ நிறுவனத்தினரோ இன்னமும் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் மூங்கில் வேலி போடப்பட்டு அந்நியர்கள் எவரும் நுழைய முடியாதபடி தடுத்துக் கண்காணித்துவருகின்றனர்.

 

""ஏற்கெனவே பாரதீப் துறைமுகப் பகுதியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இதேபோல விளைநிலங்களைப் பறித்துக் கொண்டு மறுவாழ்வு நிவாரணத் திட்டங்களை அறிவித்தது. அதை அன்று விவசாயிகள் நம்பினர். அந்த இடத்தை இன்று யார் வேண்டுமானாலும் நேரில் சென்று பார்க்கட்டும். வெறும் கான்கிரீட் தூண்கள்தான் நிற்கின்றன. அதற்குமேல் நிவாரணத் திட்டம் நகரவேயில்லை. அரசாங்கமே எங்களை வஞ்சித்துவிட்ட நிலையில், அந்நியத்தனியார் ஏகபோக நிறுவனமான போஸ்கோ, நிவாரணத்திட்டத்தை நிறைவேற்றும் என்று நம்புவதற்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை'' என்கிறார், தின்கியா கிராமப்பஞ்சாயத்துத் தலைவரான சிசிரா மகாபத்ரா.

 

நருசிங்க பெஹரா மற்றும் தேவேந்திர சுவாசூன் ஆகியோர் ""போஸ்கோவுக்கு மக்களின் எதிர்ப்பு'' எனும் ஏழுநிமிடக் காணொளியைத் தயாரித்து, அதை நாட்டு மக்கள் அனைவரும் காணுமாறும், விவசாயிகளின் நியாயமான இப்போராட்டத்தை ஆதரிக்குமாறும் கோரியுள்ளனர். ((http://www.youtube.com/watch?v=cizn7zJmyUc)

 

போஸ்கோவை எதிர்த்து வலது கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விவசாயிகளோடு இணைந்து போராடி வருகின்றன. தர்ணா போராட்டம் நடத்தியவர்கள் மீது போஸ்கோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள குண்டர்படையினர் தாக்குதல் நடத்தியதோடு, குண்டுகளையும் வீசியுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது தவிர போலீசு பலமுறை தடியடித்தாக்குதல் நடத்தி இப்போராட்டத்தை நசுக்க முயற்சிக்கிறது. இத்துணை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப்போராட்டம் பற்றிப் படர்ந்து வருகிறது. ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிப்பதும், அதை மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுப்பதும் புரட்சிகரஜனநாயக சக்திகளின் உடனடிக் கடமை; நம் கடமை.


• குணசேகரன்

பழங்குடியினர் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தின் ஜாடுகுடா, யுரேனியவளம் மிக்க பகுதியாகும். இங்கு இந்திய யுரேனியக் கழகம் எனும் அரசுத்துறை நிறுவனத்துக்குச் சொந்தமாகப் பல சுரங்கங்கள் உள்ளன. இந்நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை எதிர்த்து, அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜாடுகுடா வட்டாரமே கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

நுண்கடன் என்ற பெயரில் பத்தாயிரம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்கும் நிதிநிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் வகை தொகையின்றிப் பெருக ஆரம்பித்துள்ளன. பொருளாதார மந்தம் உலகைப் பிடித்தாட்டும் இன்றைய சூழலில், முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்க இவர்கள் வெளிநாடுகளில் செய்யும் விளம்பரங்களில்,""பத்தாயிரம் ரூபாய் உங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் போகலாம்; ஆனால் அதனை நுண்கடனாகக் கொடுப்பதன் மூலம் நீங்கள் இந்தியாவின் பின்தங்கிய பகுதியில் இருக்கும் ஒரு குடும்பத்தைக் கரை சேர்க்கமுடியும். உங்கள் பணம், நிச்சயமாக உங்களிடமே திரும்ப வரும்  அதுவும், அதற்கு உண்டான வட்டியுடன்!'' என விளக்கி இந்தியாவின் வறுமையையே இவர்கள் மூலதனமாக மாற்றுகின்றனர்.

அண்மையில் நாடெங்கிலும் 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் தகுதி நீக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 17 தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இவற்றுள் ஒன்றுதான், தி.க. வீரமணியின் ""பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்''.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இதோ இறுதித் தீர்ப்பு வந்துவிடும், அதுவும் தமிழகத்துக்குச் சாதகமாகவே இருக்கும் என்ற தோரணையில் விசாரணையை நடத்திக் கொண்டிருந்த உச்சநீதி மன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுப் பிரிவு, கடந்த மாதம் திடீர்த்திருப்பமாக கேரள அரசுக்குச் சாதகமாக அடி எடுத்து வைத்து விட்டது.

அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்குச் சந்தைக்கு வரும் ஏழை-எளிய மக்கள் விலைவாசியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தும் கொதித்துப் போயும் கிடக்கிறார்கள். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, பால், காய்கறிகள் முதலிய இன்றியமையாப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக எகிறிக் கொண்டே போகிறது. சந்தையில் கிலோ 13 ரூபாயாக இருந்த அரிசி 28 ரூபாயாக, அதாவது இரண்டு மடங்குக்கு மேலாகி விட்டது. 8 ரூபாயாக இருந்த கோதுமை 15 ரூபாயாகி விட்டது. 17 ரூபாயாக இருந்த சர்க்கரை 47 ரூபாயாகிக் கசக்கிறது.

எண்ணெய்க்காக ஈராக் மீது போர்தொடுத்து, ஆக்கிரமித்துள்ள அமெரிக்க பயங்கரவாதிகளின் வழியில், இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் சூறையாடலுக்காக நாட்டு மக்கள் மீதே காட்டு வேட்டைஎன்ற மிகக் கொடிய போரை நடத்தி வருகிறார், கொலைகார உள்துறை அமைச்ழுஉர் ப.சிதம்பரம்.

சென்ற வருடம் அக்டோபர் மாதம் மத்திய அரசின் மரபணு பொறியியல் ஒப்புதல் குழு, பி.டி. கத்தரிக்காயை வணிக ரீதியில் விளைவிக்கலாம் என ஒப்புதல் கொடுத்துள்ளது. இதற்கு நாடெங்கிலும் அறிவுத்துறையினர், சூழலியவாதிகள், தன்னார்வக் குழுக்கள் முதலானோரிடத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

ஈழப்போரில் பேரழிவும் பின்னடைவும் ஏற்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் புலிகளின் ஆதரவாளர்கள் விடுத்துவரும் அறிக்கைகளும், அவர்கள் எடுத்துவரும் நிலைப்பாடுகளும் தமிழர்களைப் புல்லரிக்க வைக்கின்றன. ஏழு மாதங்களுக்குமுன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஜெயலலிதாவின் "நேர்மையான சந்தர்ப்பவாதமான' ஈழ ஆதரவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, இரட்டை இலைக்கு தெருவெங்கும் வாக்கு சேகரித்தனர், பெரியார் தி.க.வினர்.

அதிகாலையிலேயே எழுந்து ஓட்டமும் நடையுமாக நடுத்தர மேட்டுக்குடிவர்க்கத்தினர் வீடுகளுக்குப் பாத்திரங்கள் விளக்கி, வீடுபெருக்கக் கிளம்பிச் செல்லும் கண்ணம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)வின் கதை இது. எட்டுவயதில் வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்த கண்ணம்மா (வயது 43)இப்போது சென்னை ராயப்பேட்டை பகுதியில் நான்கு வீடுகளில் தினமும் வேலை செய்கிறார்.

போலீசுக்காரர்கள், குறிப்பாக உயர் போலீசு அதிகாரிகள் வக்கிரமான, கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், தண்டனை ஏதுமின்றித் தப்பித் திரிவதும் மட்டுமல்ல அவர்களால் பாதிக்கப்பட்டவர்களே துன்புறுத்தப்படுவதும், கிரிமினல் போலீசார் மேலும்மேலும் பதவி உயர்வும் விருதுகளும் பெறுவதும் கூட புதிதில்லை.

கருப்புப் பட்டியலில் உள்ள தமிழகத்தின் 16 தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற மைய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, கல்விக் கொள்ளையர்களுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் மீண்டும் குமுறி எழுந்து அடங்கியிருக்கிறது.

"பழங்குடியினர் மீனவர்கள் விவசாயிகள்மீதான போர்தான், அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!" என்ற மைய முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்கள், கொலைகார இந்தியஆட்சியாளர் நடத்தும் காட்டுவேட்டை போரின் உள்நோக்கத்தைத் திரைகிழிக்கும் வெளியீடு,

அரசு பயங்கரவாதம் கொடியது. அதிலும் உலகப்பொது எதிரியான அமெரிக்க அரசு பயங்கரவாதம் மிகக்கொடியது. கியூபா எல்லையை ஒட்டியுள்ள குவாண்டனோமோ சிறை, ஈராக்கின் அபு கிரைப் சிறை, அமெரிக்கப் போர்க் கப்பல்கள் என்ற பெயரில் உள்ள 'மிதக்கும் சிறைச்சாலைகள்' முதலானவற்றில் தொடரும் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளும் இரத்தத்தை உறைய வைக்கும் கொடுமைகளும் அடுத்தடுத்து அம்பலமாகி அமெரிக்கப் பயங்கரவாதம் உலகெங்கும் காறி உமிழப்படுகிறது.