Language Selection

புதிய ஜனநாயகம் 2010

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியத்தின் பெருந்தலைவர் பதவி, பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற அரசியல் பிரதிநிதித்துவ அடிப்படையில் தலித் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. பசுவந்தனை அருகிலுள்ள செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எ.பெருமாள் என்ற தலித் பெண் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பெருந்தலைவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வாகனத்தைப் பயன்படுத்துவது, தீர்மானங்கள் ஒப்பந்தங்களை தன்னிச்சையாக முடிவு செய்து நிறைவேற்றுவது என துணைப் பெருந்தலைவராக இருக்கும் ஆதிக்க சாதிவெறியரான மாணிக்கராஜா என்பவர் தான் உண்மையில் பெருந்தலைவராகச் செயல்படுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, கயத்தாறு ஒன்றியத்தில் நடைபெறும் அரசு விழா அழைப்பிதழ்கள், அரசு கல்வெட்டுகள், தனியார் விழா அழைப்பிதழ்கள் என அனைத்திலும் மாணிக்கராஜா பெயரே பெருந்தலைவராகப் போடப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாரவளர்ச்சி அலுவலர் உட்பட அனைத்து அதிகாரிகளும் இச்சட்டவிரோதத் தீண்டாமைக்கு உடந்தையாக நிற்கின்றனர்.

குஜராத் மாநிலத்தின் இந்துவெறிபயங்கரவாத முதல்வர் மோடியின் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிரான குஜராத் படுகொலைகள் நடத்தப்பட்டு 8 ஆண்டுகள் கழிந்து விட்டன. இந்திய வரலாற்றில் மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட இந்த இனப்படுகொலைகள் குறித்த விசாரணை மிகவும் கீழ்த்தரமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை, அவற்றை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மீதான குற்றச்சாட்டுகளே நிரூபித்துக்காட்டுகின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், இந்திய ஜனநாயகத்தில் ஒரு மைல் கல்லாக முதலாளிய செய்தி ஊடகத்தால் சித்தரிக்கப்பட்டது. அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பது ஜனநாயகத்தை மேலும் வலுவுள்ளதாக்கும். அந்த வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மிக முக்கியமானது என்று காட்டப்பட்டது. ""உலகின் மிகப் பெரிய ஜனநாயகக் குடியரசாக அமைந்த பிறகு பல ஆண்டுகளாக இப்படி ஒருஉரிமை இல்லாதிருந்தது ஒரு பெரிய குறைதான். அந்தக்குறை இப்போது நீங்கி விட்டது'' என்று சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது பீற்றிக் கொண்டார்கள்.

அனைத்துலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாளன்று, திருச்சியில் செயல்பட்டுவரும் பெண்கள் விடுதலைமுன்னணி, ""விலைவாசி உலகத்தரம்! பட்டினியே இனி நிரந்தரம்!'' எனும் தலைப்பில் திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் விண்ணதிரும் முழக்கங்களோடு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பெண் தொழிலாளர்களின் போராட்டத்தால் உருவான மகளிர் தினத்தை, உழைக்கும் பெண்களின் அரசியல் ஆர்ப்பாட்ட நாளாக நடத்துவதில்தான் அதன் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது என்பதையும், நமது நாட்டில் பெண்கள் பாலியல் நுகர்பொருளாகவும் உரிமைகளற்ற அடிமைகளாகவும் இருப்பதை அம்பலப்படுத்தியும், இன்றைய மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராகப் பெண்கள் அணிதிரண்டு போராட வேண்டிய அவசியத்தை விளக்கியும் முன்னணியாளர்கள் சிறப்புரையாற்றினர். புரட்சிகரப் பாடல்களும், ம.க.இ.க. மையக்கலைக்குழுத் தோழர்களின் ""துயரம் பருப்பு'' எனும் நாடகமும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

புதுச்சேரியில் ஏம்பலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள புதுக்குப்பம், செம்பியப்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 21 ஆண்டுகளாக சாலை வசதி அமைத்துத் தராமல்  தார்ச்சாலை போட்டுத் தராமல் அதிகார வர்க்கமும் ஓட்டுப் பொறுக்கிகளும் இப்பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொள்ளையடித்து வந்தனர். இச்சட்டமன்றத் தொகுதியில் மாறிமாறிப் பதவிக்கு வந்த தி.மு.க காங்கிரசு, பா.ம.க ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களிடமும் அதிகாரிகளிடமும் இப்பகுதிவாழ் மக்கள் பலமுறை மனுக் கொடுத்து மன்றாடியும், அதை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்தே வந்தனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் கடந்த 40ஆண்டு காலமாக இயங்கிவரும் லியோ பாஸ்ட்னர்ஸ் எனும் போல்ட்நட் தயாரிக்கும் நிறுவனத்தின் கொத்தடிமைத்தனத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராக, பு.ஜ.தொ.மு. சங்கத்தின் தலைமையில் கடந்த ஈராண்டுகளாகத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி என கடந்த இரு மாதங்களாகத் தொழிலாளர் போராட்டம் தீவிரமடைந்த போதிலும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த 22.2.10 முதலாக தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். முதலாளிகளின் எடுபிடிகளாகச் செயல்படும் போலீசு, போராடிய தொழிலாளர்களை போலீசு நிலையத்துக்குக் கொண்டு சென்று மிரட்டிப் பார்த்தது. மிரட்டலுக்கு அஞ்சாமல், போலீசு கொடுத்த உணவையும் புறக்கணித்து தொழிலாளர்கள் அங்கும் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்ததால், அன்றே அனைவரையும் விடுவித்தது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்ற பெரியாரின் கனவை நனவாக்குவதாகக் கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டு, மாணவர்களும் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையில் மதுரை பட்டர்கள் எனப்படும் மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பார்ப்பன அர்ச்சகர்கள், இந்த அரசு உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர். பார்ப்பனர்களின் நீதிமன்றத் தடையாணையை முறியடிக்க வேண்டிய கருணாநிதி அரசு, நீதிமன்ற ஆணைக்குப் பங்கம் வராமல் நடந்து கொள்கிறது. அர்ச்சகர் பள்ளியில் முதல் அணியாகப் பயிற்சி பெற்று, சைவ வைணவப் பெரியோர்களால் தீட்சை சான்றிதழும் பெற்ற 206 மாணவர்கள், பணிநியமனம் இல்லாமல் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். இப்போது இந்தப் பள்ளியில் புதியமாணவர்கள் சேர்க்கப்படவில்லை.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைச் சோதனை முறையில் பயிரிடுவதையும், அதன் பின் அவற்றை வர்த்தகரீதியில் பயிரிட அனுமதிப்பதையும் எதிர்த்து வரும் விவசாயிகள், அறிவியலாளர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக சக்திகளை முடக்கும் வண்ணம் ஒரு புதிய கருப்புச் சட்டத்தைக் கொண்டுவர முயன்று வருகிறது, மைய அரசு. ""உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய வரைவு மசோதா'' என அழைக்கப்படும் இம்மசோதா நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமாக அங்கீகரிக்கப்படுமானால், அச்சட்டத்தின்படி தேசிய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். அமைச்சர்களோ, எம்.பி., எம்.எல்.ஏ.க்களோ, விவசாயிகளின பிரதிநிதிகளோ இன்றி, நான்கு நிபுணர்களை மட்டுமே கொண்டு அமைக்கப்படும் இந்த ஆணையம்தான், இனி, மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயிர்களை உணவுப் பொருட்களை இந்திய மக்கள் மீதி திணிக்கும் விஷயத்தில் வானளாவிய அதிகாரம் கொண்டு செயல்படும்.

நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் "இந்துக்களே' போராடத் தொடங்கியுள்ளனர். இந்துவெறி பயங்கரவாத மோடியின் கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களும், மோடி அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இன்று மரணத்தை விளைவிக்கும் முறைகேடுகள் நிறைந்த பல்கொலைக்கழகமாகச் சீரழிந்து நிற்கிறது.

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், முதலாளிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

“இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கச்ளுக்கு உரியது” என 2010-11 ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவு செலவு அறிக்கை பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பாதி உண்மை; இன்னொரு பாதியோ திரித்துக் கூறப்பட்டிருக்கிறது.

.""இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்களுக்கு உரியது'' என 2010 11ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவுசெலவு அறிக்கைபற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பாதி உண்மை இன்னொரு பாதியோ திரித்துக் கூறப்பட்டிருக்கிறது.

போபால் யூனியன் கார்பைடு ஆலை ""விபத்தை'' இந்திய மக்களும், உக்ரைனின் செர்னோபில் அணுஉலை விபத்தை உலக மக்களும் மறந்துவிடக் கூடாதவை. ஒவ்வொன்றும் ஜந்தாயிரம் மக்களைக் கொன்றதோடு, பல ஆயிரம் பேரை ஊனமுற்றோராக்கி, பிறக்கும் குழந்தைகளையும் தலைமுறை தலைமுறையாக ஊனமுறச் செய்து விட்டன. செர்னோபில் விபத்துக்கு அப்போது அங்கு இல்லாத கம்யூனிச அரசைக் காரணமாக்கிய அமெரிக்க ஏகாதிபத்திய ஏகபோகங்கள், போபால் பேரழிவுக்கு நட்ட ஈடும் கிரிமினல் குற்றத்துக்குத் தண்டனையும் இல்லாமல், பாசிச காங்கிரசு இராஜீவ் கும்பலின் உடந்தையோடு நழுவிக்கொண்டன. இதிலிருந்து பாடங்கற்றுக் கொண்டு இந்த நாட்டு மக்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதம் செய்யும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதில், முழுக்க முழுக்க இலாபவெறியோடு அலையும் அமெரிக்க அணுசக்தி கம்பெனிகளுக்கு ஊழியஞ் செய்யும் வகையில் இந்திய அரசு செயல்படுகிறது.

நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் ‘இந்துக்களே’ போராடத் தொடங்கியுள்ளனர். இந்துவெறி பயங்கரவாத மோடியின் கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களும், மோடி அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

சிவமுராத் திவேதி, தில்லியைச் சேர்ந்த பிரபலமான விபச்சாரத்தரகன். இணையதளத்தின் மூலம் விபச்சாரத் தொழில் செய்து கொடிகட்டிப் பறந்தவன். அவனது தொழிலுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பாக உதவியது காவியுடைதான். பகல் முழுவதும் யோகம், தியானம், ஆன்மீகச் சொற்பொழிவு என ""இச்சாதாரிபாபா''வாக வேடம் போட்ட இந்தக் காவியுடைச் சாமியார், இரவானால் விபச்சார "மாமா'வாகச் செயல்பட்டுள்ளான். இந்த இச்சாதாரி "மாமா' அம்பலமாகி வட இந்தியாவைக் கலக்கிக் கொண்டிருந்த அதே சமயத்தில், காற்று வரும் என நினைத்து கதவைத் திறந்து வைத்து கல்லாக் கட்டிக் கொண்டிருந்த கயவாளி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் கொஞ்சிக் குலாவிய படுக்கையறைக் காட்சிகள் வெளியாகி தமிழகத்தை அதிர வைத்தன.

இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவால் தனிச்சிறப்பான முறையில் கட்டியமைக்கப்பட்டிருக்கும் இராணுவம், போலீசு, உளவுப்படை, ""வெள்ளைவேன்'' கொலைப்படை, பேரினவாதச் செய்தி ஊடகம் ஆகிய கட்டுமான அமைப்பு முழுவதும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற "பயங்கரவாதி'களை ஒழிப்பதற்கும், நாட்டின் ஒருமையைக் காப்பதற்கும் அவசியமானதுதான் என்று சிங்கள சமூகம் நம்பிக் கொண்டிருந்தது.

விவசாயம் போண்டியாகி, பெரும்பாலான கிராமங்கள் காலியாகிக் கொண்டிருக்கும் வேளையில், கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்காகப் புதிய திட்டமொன்றை அறிவித்திருக்கிறது, மைய அரசு. இதன்படி, கிராமப்புறங்களில் நிலவும் மருத்துவர்களின் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகவே ""கிராமப்புறநலவாழ்வு பட்டப் படிப்பு'' (Bachelor of Rural Heath) என்ற பெயரில் புதிய அலோபதி (ஆங்கில) மருத்துவக் கல்வித் திட்டத்தை நாடெங்கும் தொடங்கத் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

 

கொலை, பாலியல் வன்புணரச்சி போன்ற கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் போலீசுக்காரனைத் தண்டிப்பதற்கு நீண்ட நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்பது இன்று  ருச்சிகா வழக்கு பிரபலமான பிறகு  மெத்தப் படித்த அறிவுஜீவிகளுக்கும் புரிந்திருக்கும். அப்படிப்பட்ட போலீசுக்காரனோ, இராணுவச்சிப்பாயோ தீவிரவாதிகளை எதிர்த்துப் "போராடும்' அதிரடிப் படைப் பிரிவைச் சேர்ந்தவனாக இருந்துவிட்டால், அவனது கிரிமினல் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் கேள்விக்கு இடமில்லாதது ஆகிவிடும்.

 

அமெரிக்காவின் அமைதிப் புறா, பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்காவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் கடைத்தேற்ற வந்த "மாற்றத்தின்நாயகன்" , என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாரக் ஒபாமா, அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஓராண்டு முடிந்து விட்டது. அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட போதும், தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்றபோதும் அமெரிக்க ஊடகங்கள் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடின.

நக்சல் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் அரசு நடத்திவரும் காட்டுவேட்டை (ஆபரேஷன் கிரீன்ஹண்ட்)என்பது, நாட்டு மக்கள் மீது மறுகாலனியாக்கத்தை துப்பாக்கி முனையில் திணிக்கும் ஒரு பாசிசப் போர். அதை அம்பலப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும், அரசு அவர்களைச் சகித்துக் கொள்ளாது. மனித உரிமைப் போராளி டாக்டர் பினாயக் சென்னும், காந்தியவாதி ஹிமான்ஷ குமாரும் மட்டுமல்ல் வேட்டை தீவிரமாவதைத் தொடர்ந்து இன்னும் பல முற்போக்கு  புரட்சிகர பத்திரிகையாளர்களும் மனித உரிமை இயக்கத்தினரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வதைக்கப்பட்டு வருகின்றனர்.