Language Selection

புதிய ஜனநாயகம் 2010

மாபெரும் நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியைக் களத்தில் நின்று தலைமையேற்று வழிநடத்தியவரும் கனு சன்யால் என்று பிரபலமாக அறியப்பட்டவரும் கனுபாபு என்று அன்புடனும் புரட்சிகர மரியாதையுடனும் அழைக்கப்பட்டவருமான கிருஷ்ணகுமார் சன்யால் கடந்த மார்ச் 23ஆம் நாள் நக்சல்பாரி என்று சிறு நகருக்கு அருகே உள்ள ஹட்டிகிசா கிராமத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தி கேட்டு நெஞ்சில் வலியும் வேதனையும் அடையும் இலட்சக்கணக்கான நக்சல்பாரி புரட்சியாளர்களோடு நாமும் இணைந்து கனுபாபுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறோம்.

காலனிய ஆட்சிக் காலத்தில் அன்று பிரிட்டனின் நூற்பாலைகளுக்குப் பருத்தி தேவைப்பட்டது. இத்தேவையை இந்தியாவின் மூலம் நிறைவு செய்வதற்காக அன்றைய சென்னை மாகாணத்தில் பருத்தி உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்துடன் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலியில் 800 ஏக்கரில் பருத்தி விவசாயத்தை சோதனை அடிப்படையில் காலனிய அரசு மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டையில் 1868 இல் விவசாயக் கல்லூரியைத் தொடங்கியது. இது பிரிட்டனுக்குத் தேவையான பருத்தி மற்றும் விவசாயக் கச்சாப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வல்லுநர்களை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள பிளாச்சிமடா கிராமத்தில் அமைந்துள்ள கோக் ஆலையை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நடத்திவரும் போராட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் அப்போராட்டத்தில் தற்பொழுது முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

அனைவருக்குமான பொது விநியோக முறையைக் கொல்லைப்புற வழியாக நீக்கிவிட முயலுகிறது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம். கடந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாளன்று ஈழப்பிரச்சினையையொட்டி பார்ப்பன சகுனி சுப்பிரமணியசாமியை எதிர்த்துப் போராடிய வழக்குரைஞர்களைப் போலீசார் நாள் முழுக்கக் கொடூரமாகத் தாக்கிய பயங்கரவாதத்தைத் தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. இந்தக் காக்கிச் சட்டை பயங்கரவாதத்தில் இருந்து நீதிபதிகளும் தப்பவில்லை. நீதிமன்றத்தையே சூறையாடிய போலீசு பயங்கரவாதத்தை எதிர்த்து வழக்குரைஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் எந்தப் போலீசு அதிகாரி மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா பானுமதி அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்ட போதிலும் கருணாநிதி அரசு அசைந்து கொடுக்கவில்லை.

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துகொண்டே போவதைக் கட்டுப்படுத்துவதற்கு சிறு துரும்பைக்கூட எடுத்துப் போட விரும்பாத மன்மோகன் சிங் அரசு இந்திய மக்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உத்திரவாதப்படுத்துவதற்காகத் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள நகல் சட்டத்தை ஆராந்த மைய அரசின் அமைச்சரவைக் குழு இந்த நகலில் சில திருத்தங்களைச் செய்யச் சொல்லிப் பரிந்துரைத்திருக்கிறது. மைய அரசின் இந்தக் கரிசனத்தைக் கேள்விப்படும்பொழுது ரொட்டி வாங்கமுடியாமல் திண்டாடிய பிரஞ்சு மக்களிடம் கேக் வாங்கிச் சாப்பிடச் சொல்லி பிரஞ்சு பேரரசி கிண்டலடித்த வரலாற்று வக்கிரம்தான் நினைவுக்கு வருகிறது.

""போர்ப் பிரகடனம் செய்!'' என வெறிக் கூச்சல் போடுகிறது இந்தியக் கூட்டுப் பங்குத் தொழில் கழகங்களின் (கார்ப்பரேட் நிறுவனங்களின்) ஊதுகுழலான ""இந்தியா டுடே'' ஏடு. ""மென்மையான அணுகுமுறைகள் தோற்றுப் போய்விட்டன என்று தண்டேவாடா படுகொலைகள் காட்டிவிட்டன. தோட்டாவுக்குத் தோட்டா நக்சல்கள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.'' ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு)களை ஒழித்துக் கட்டுவதோடு மத்திய கிழக்கு இந்தியாவில் வாழும் ஆதிவாசிபழங்குடி மக்களுக்கு எதிரான போரை இந்திய அரசு ஏற்கெனவே தொடங்கி ஆறுமாதங்களுக்கு மேலாகி விட்டன. இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கழகங்களின் கூட்டமைப்பு (FICCI) கடந்த ஆண்டு மத்தியில் விடுத்த கோரிக்கையை ஏற்று மாவோயிஸ்டுகளுக்கு எதிரான காட்டுவேட்டையைத் (ஆப்பரேஷன் கிரீன் ஹண்ட்) தொடங்கி நவீன ஆயுதங்களுடன் 60000 ஆயுதப் படையினரை ஏவிவிட்டதன் மூலம் ஒரு உள்நாட்டுப் போரை அது நடத்தி வருகிறது என்பதுதான் உண்மை.

மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தைச் சேர்ந்த பழங்குடியின விவசாயியும், போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியின் தலைவருமான லால்மோகன் டுடூ, கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று அவரது வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, அருகிலுள்ள வயல்வெளியில் கோரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவருடன், தம்பதிகளான யுவராஜ், சுசித்ராமுர்மூ ஆகிய இரு பழங்குடியினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலக் கடலோர மாவட்டப் பகுதியைச்சேர்ந்த வனிதா என்ற இளம் பெண்ணுக்கு ஒரு நல்லவேலை கிடைப்பதற்கு அவரது முசுலீம் தோழியின் குடும்பம் உதவி செய்தது. இந்த உதவிக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் தனது தோழியின் வீட்டுக்குச் சென்ற வனிதாவை, பஜ்ரங் தள் என்ற சங்கப் பரிவார் அமைப்பைச் சேர்ந்த இந்து மதவெறிக் குண்டர்கள் வழிமறித்துத்தாக்கினர். இந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத வனிதா தற்கொலை செய்துகொண்டு மாண்டு போனார். இச்சம்பவம் நடந்து முடிந்து மூன்றாண்டுகள் ஓடிவிட்ட போதிலும், வனிதாவைத் தாக்கிய, அவரைத் தற்கொலைக்குத்தூண்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ். குண்டர்களுள் ஒருவர் மீதுகூட இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கோவை  தடாகம் சாலையிலுள்ள சிறீ ரெங்கனாதர் இன்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தில் ஏறத்தாழ ஈராண்டுகளாக பு.ஜ.தொ.மு. சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கம் தொடங்கப்பட்டதிலிருந்து ஆலை முதலாளியின் பழிவாங்கலும் அடக்குமுறையும் தீவிரமாகத் தொடங்கியது. சாதி உணர்வு என்ற துருப்புச் சீட்டை ஏவியும், 15.2.10 இல் எவ்வித முன்னறிவிப்புமின்றி சட்டவிரோதக் கதவடைப்பு செய்தும் சங்கத்தை முடக்க முதலாளி வி.நாராயணசாமி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. அதன் பிறகு, முதன்மை நுழைவாயிலைப் பூட்டிவிட்டு பின்வாயில் வழியாகத்தான் அனைத்து தொழிலாளர்களும் உணவருந்தச் செல்ல வேண்டும் என்று தன்னிச்சையாக அறிவித்து, இதனால் ஏற்படும் தாமதத்தை வைத்து தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கியது.தொழிலாளர்களை ஆபாசமாக ஏசுவது, கேவலமாக நடத்துவது, அற்ப விவகாரங்களை வைத்து பழிவாங்குவது என்று ஆலை முதலாளி கேள்விமுறையின்றி சட்டவிரோதமாக கொட்டமடித்து வருகிறார். அதற்குவிசுவாசமாகப் போலீசு வாலாட்டுகிறது.

தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 79வது நினைவு நாளில், அவர்களின் சோசலிசப் புரட்சிக்கனவையும் உழைக்கும் மக்களின் விடுதலை எனும் இலட்சியத்தையும் சாதிக்க உறுதியேற்று, இம்மாவீரர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23 ஆம் தேதியன்று, தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் அத் தியாகத் தோழர்களின் நினைவை நெஞ்சிலேந்தி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தின.

பா.ம.க. நிறுவனரான ராமதாசு, ""சாராயக் கடைகளை ஏலம் விடுவதுபோல் இனி தொகுதிகளையும் ஏலம்விட்டு விடலாம். அந்த அளவுக்கு ஆளும் கட்சி இங்கே வாக்காளர்களை விலை பேசுகிறது'' என்று புலம்பும் அளவுக்கு ஓட்டுச் சீட்டு ஜனநாயகம் சந்தி சிரித்தது. சீமைச் சாராயம், வேட்டி, துண்டு, புடவை, வளையல், மூக்குத்தி, புத்தகப் பை, ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்றெல்லாம் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கோடிகளை வாரியிறைத்து வாக்காளர்களைக் குளிப்பாட்டின. பென்னாகரம் இடைத் தேர்தல் திருவிழாவை ஓட்டுப் பொறுக்கிகள் கோலாகலமாக நடத்திக் கொண்டிருந்த சூழலில், இப்போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரளுமாறு மக்களை அறைகூவி, இப்பகுதியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி வீச்சாகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியத்தின் பெருந்தலைவர் பதவி, பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற அரசியல் பிரதிநிதித்துவ அடிப்படையில் தலித் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. பசுவந்தனை அருகிலுள்ள செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எ.பெருமாள் என்ற தலித் பெண் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பெருந்தலைவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வாகனத்தைப் பயன்படுத்துவது, தீர்மானங்கள் ஒப்பந்தங்களை தன்னிச்சையாக முடிவு செய்து நிறைவேற்றுவது என துணைப் பெருந்தலைவராக இருக்கும் ஆதிக்க சாதிவெறியரான மாணிக்கராஜா என்பவர் தான் உண்மையில் பெருந்தலைவராகச் செயல்படுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, கயத்தாறு ஒன்றியத்தில் நடைபெறும் அரசு விழா அழைப்பிதழ்கள், அரசு கல்வெட்டுகள், தனியார் விழா அழைப்பிதழ்கள் என அனைத்திலும் மாணிக்கராஜா பெயரே பெருந்தலைவராகப் போடப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாரவளர்ச்சி அலுவலர் உட்பட அனைத்து அதிகாரிகளும் இச்சட்டவிரோதத் தீண்டாமைக்கு உடந்தையாக நிற்கின்றனர்.

குஜராத் மாநிலத்தின் இந்துவெறிபயங்கரவாத முதல்வர் மோடியின் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிரான குஜராத் படுகொலைகள் நடத்தப்பட்டு 8 ஆண்டுகள் கழிந்து விட்டன. இந்திய வரலாற்றில் மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட இந்த இனப்படுகொலைகள் குறித்த விசாரணை மிகவும் கீழ்த்தரமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை, அவற்றை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மீதான குற்றச்சாட்டுகளே நிரூபித்துக்காட்டுகின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், இந்திய ஜனநாயகத்தில் ஒரு மைல் கல்லாக முதலாளிய செய்தி ஊடகத்தால் சித்தரிக்கப்பட்டது. அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பது ஜனநாயகத்தை மேலும் வலுவுள்ளதாக்கும். அந்த வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மிக முக்கியமானது என்று காட்டப்பட்டது. ""உலகின் மிகப் பெரிய ஜனநாயகக் குடியரசாக அமைந்த பிறகு பல ஆண்டுகளாக இப்படி ஒருஉரிமை இல்லாதிருந்தது ஒரு பெரிய குறைதான். அந்தக்குறை இப்போது நீங்கி விட்டது'' என்று சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது பீற்றிக் கொண்டார்கள்.

அனைத்துலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாளன்று, திருச்சியில் செயல்பட்டுவரும் பெண்கள் விடுதலைமுன்னணி, ""விலைவாசி உலகத்தரம்! பட்டினியே இனி நிரந்தரம்!'' எனும் தலைப்பில் திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் விண்ணதிரும் முழக்கங்களோடு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பெண் தொழிலாளர்களின் போராட்டத்தால் உருவான மகளிர் தினத்தை, உழைக்கும் பெண்களின் அரசியல் ஆர்ப்பாட்ட நாளாக நடத்துவதில்தான் அதன் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது என்பதையும், நமது நாட்டில் பெண்கள் பாலியல் நுகர்பொருளாகவும் உரிமைகளற்ற அடிமைகளாகவும் இருப்பதை அம்பலப்படுத்தியும், இன்றைய மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராகப் பெண்கள் அணிதிரண்டு போராட வேண்டிய அவசியத்தை விளக்கியும் முன்னணியாளர்கள் சிறப்புரையாற்றினர். புரட்சிகரப் பாடல்களும், ம.க.இ.க. மையக்கலைக்குழுத் தோழர்களின் ""துயரம் பருப்பு'' எனும் நாடகமும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

புதுச்சேரியில் ஏம்பலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள புதுக்குப்பம், செம்பியப்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 21 ஆண்டுகளாக சாலை வசதி அமைத்துத் தராமல்  தார்ச்சாலை போட்டுத் தராமல் அதிகார வர்க்கமும் ஓட்டுப் பொறுக்கிகளும் இப்பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொள்ளையடித்து வந்தனர். இச்சட்டமன்றத் தொகுதியில் மாறிமாறிப் பதவிக்கு வந்த தி.மு.க காங்கிரசு, பா.ம.க ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களிடமும் அதிகாரிகளிடமும் இப்பகுதிவாழ் மக்கள் பலமுறை மனுக் கொடுத்து மன்றாடியும், அதை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்தே வந்தனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் கடந்த 40ஆண்டு காலமாக இயங்கிவரும் லியோ பாஸ்ட்னர்ஸ் எனும் போல்ட்நட் தயாரிக்கும் நிறுவனத்தின் கொத்தடிமைத்தனத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராக, பு.ஜ.தொ.மு. சங்கத்தின் தலைமையில் கடந்த ஈராண்டுகளாகத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி என கடந்த இரு மாதங்களாகத் தொழிலாளர் போராட்டம் தீவிரமடைந்த போதிலும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த 22.2.10 முதலாக தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். முதலாளிகளின் எடுபிடிகளாகச் செயல்படும் போலீசு, போராடிய தொழிலாளர்களை போலீசு நிலையத்துக்குக் கொண்டு சென்று மிரட்டிப் பார்த்தது. மிரட்டலுக்கு அஞ்சாமல், போலீசு கொடுத்த உணவையும் புறக்கணித்து தொழிலாளர்கள் அங்கும் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்ததால், அன்றே அனைவரையும் விடுவித்தது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்ற பெரியாரின் கனவை நனவாக்குவதாகக் கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டு, மாணவர்களும் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையில் மதுரை பட்டர்கள் எனப்படும் மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பார்ப்பன அர்ச்சகர்கள், இந்த அரசு உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர். பார்ப்பனர்களின் நீதிமன்றத் தடையாணையை முறியடிக்க வேண்டிய கருணாநிதி அரசு, நீதிமன்ற ஆணைக்குப் பங்கம் வராமல் நடந்து கொள்கிறது. அர்ச்சகர் பள்ளியில் முதல் அணியாகப் பயிற்சி பெற்று, சைவ வைணவப் பெரியோர்களால் தீட்சை சான்றிதழும் பெற்ற 206 மாணவர்கள், பணிநியமனம் இல்லாமல் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். இப்போது இந்தப் பள்ளியில் புதியமாணவர்கள் சேர்க்கப்படவில்லை.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைச் சோதனை முறையில் பயிரிடுவதையும், அதன் பின் அவற்றை வர்த்தகரீதியில் பயிரிட அனுமதிப்பதையும் எதிர்த்து வரும் விவசாயிகள், அறிவியலாளர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக சக்திகளை முடக்கும் வண்ணம் ஒரு புதிய கருப்புச் சட்டத்தைக் கொண்டுவர முயன்று வருகிறது, மைய அரசு. ""உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய வரைவு மசோதா'' என அழைக்கப்படும் இம்மசோதா நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமாக அங்கீகரிக்கப்படுமானால், அச்சட்டத்தின்படி தேசிய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். அமைச்சர்களோ, எம்.பி., எம்.எல்.ஏ.க்களோ, விவசாயிகளின பிரதிநிதிகளோ இன்றி, நான்கு நிபுணர்களை மட்டுமே கொண்டு அமைக்கப்படும் இந்த ஆணையம்தான், இனி, மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயிர்களை உணவுப் பொருட்களை இந்திய மக்கள் மீதி திணிக்கும் விஷயத்தில் வானளாவிய அதிகாரம் கொண்டு செயல்படும்.

நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் "இந்துக்களே' போராடத் தொடங்கியுள்ளனர். இந்துவெறி பயங்கரவாத மோடியின் கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களும், மோடி அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.