நக்சல்பாரி புரட்சி நாயகன் தோழர் கனுசன்யாலுக்கு வீரவணக்கம்!
மாபெரும் நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியைக் களத்தில் நின்று தலைமையேற்று வழிநடத்தியவரும் கனு சன்யால் என்று பிரபலமாக அறியப்பட்டவரும் கனுபாபு என்று அன்புடனும் புரட்சிகர மரியாதையுடனும் அழைக்கப்பட்டவருமான கிருஷ்ணகுமார் சன்யால் கடந்த மார்ச் 23ஆம் நாள் நக்சல்பாரி என்று சிறு நகருக்கு அருகே உள்ள ஹட்டிகிசா கிராமத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தி கேட்டு நெஞ்சில் வலியும் வேதனையும் அடையும் இலட்சக்கணக்கான நக்சல்பாரி புரட்சியாளர்களோடு நாமும் இணைந்து கனுபாபுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறோம்.