Language Selection

புதிய ஜனநாயகம் 2010

“ஆதார்” எனப்படும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம், கடந்த செப்டம்பர் 29 அன்று மன்மோகன் சிங், சோனியா காந்தி, இன்போசிஸ் முன்னாள் இயக்குனர் நந்தன் நிலகேணி ஆகியோரால் தொடங்கிவைக்கப்பட்டது.  இந்த தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கான இந்திய தேசிய அடையாள அட்டை ஆணையம், திட்டக் கமிசனால் உருவாக்கப்பட்டு, நந்தன் நிலகேணி அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளையைப் பற்றி ஊடகங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. நீதிமன்றங்களில் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. வெட்டவெளிச்சமாக நடக்கும் மணல் கொள்ளை பற்றி சட்டமன்றத்தில்கூட எதிர்க்கட்சியினர் முறையிட்டுள்ளனர். மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த பல அரசு ஊழியர்களும் சமூக ஆர்வலர்களும் உயிரையே இழந்துள்ளனர். இவ்வளவுக்குப் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இப்போது தாமிரபரணி மற்றும் பாலாற்றில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதற்கு மட்டும் தடைவிதிக்கிறது, தமிழக அரசு.

நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்குப் பரிந்துரை செய்திருந்த கல்விக் கட்டணத்தின் மீது உயர் நீதிமன்றத்தின் ஒரு நபர் நீதிபதி விதித்திருந்த தடையை நீக்கி உயர் நீதிமன்ற ஆயம் தீர்ப்பளித்திருக்கிறது. இதன்படி பார்த்தால், தமிழகத்திலுள்ள 10,000- க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள் தற்போதைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்திற்கு மேல் ஒரு பைசாகூடக் கூடுதலாக வசூலிக்கக் கூடாது என அவ்வாயம் நேர்மறையான தீர்ப்பை அளித்திருக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றமோ பாம்பும் சாகக் கூடாது; தடியும் நோகக்கூடாது என்ற உத்திப்படித் தனது தீர்ப்பை அளித்திருக்கிறது.

“பல்வேறு குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டிருக்கும் காவி பயங்கரவாதம் நமது நாட்டில் புதிதாகத் தலை தூக்கியுள்ளது” என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூறினார். இந்து பயங்கரவாத அமைப்பினர் உடனே துள்ளிக் குதிக்கத் தொடங்கினர். அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டனர். நாடாளுமன்ற மேலவையை ஒருநாள் இயங்கவிடாமல் முடக்கினர்.

ஒரு உரிமையியல் மூல வழக்கில் முஸ்லிம்களின் ஆவணச் சான்றுகளையும் அனுபோக உரிமையையும் புறக்கணித்துவிட்டு, ராமன்பிறந்த இடம் இதுதான் என்று தீர்ப்பளித்திருப்பதன் மூலம் பார்ப்பனப் புராணப் புரட்டுகளுக்கும் இந்துவெறி பாசிச சதிகளுக்கும் சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது, அலகாபாத் உயர்நீதி மன்றம். 1992-இல் நடந்த பாபர் மசூதி இடிப்பை அங்கீகரித்து, இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளைக்  கௌரவித்திருக்கிறது, இந்த அநீதி மன்றம். இந்துவெறி பயங்கரவாதிகள் இத்தனை காலமும் என்ன சொல்லி வந்தார்களோ, அதையே அயோத்தி வழக்கில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று தீர்ப்பாக வழங்கியிருக்கிறார்கள், மூன்று பேர் கொண்ட அலகாபாத் உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள்.

ராஜீவ் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த 1992-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர், மத்திய அரசு இத்தடையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட இத்தடை நீட்டிப்பு உத்தரவு, நடுவர் மன்றத்தில் ஆறு மாதங்களுக்குள் உறுதி செய்யப்பட வேண்டும். இச்சடங்கின்படி, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

பெண்ணாடம் நகருக்குத் தெற்கே அமைந்துள்ள அரசினர் ஆண்கள் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கிப் பத்தாம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவன் 2.9.2010 அன்று நண்பகல் 12 மணியளவில் அவ்விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இச்செய்தியைக் கேள்விப்பட்டுப் பதறித் துடித்து வந்த அம் மாணவனின் பெற்றோரிடம் அவ்விடுதியில் சமையல் வேலை செய்யும் ராமச்சந்திரனும் செல்வராம் மேலே பிணம் கிடப்பதாக அலட்சியமாகப் பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து இறந்துபோன மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் இம்மர்மச் சாவு பற்றி போலீசிடம் புகார் அளிக்கச் சென்றபொழுது, போலீசு நிலையத்தில் விடுதிக் காப்பாளர் சுந்தர்ராஜன் போலீசாரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 

""நாபாம்'' தீக்குண்டு, ""ஏஜெண்ட் ஆரஞ்ச்'' போன்ற இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் உலக முன்னணி நிறுவனம் ""டௌ கெமிக்கல்ஸ்''. அதன் நாசகார ஆயுத உற்பத்திக்கு எதிராக அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மக்கள் போராடுகிறார்கள். குறிப்பாக, வியத்நாம் போரில் பயன்படுத்தப்பட்ட பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்ததும் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் தான்.

 

""அமெரிக்கப் படைகள் இராக்கில் நடத்தி வந்த போர் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31, 2010 அன்றோடு முடிவடைந்துவிட்டதாக'' அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா. அவர் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, இராக்கை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படைகளின் ஒரு பகுதி இராக்கிலிருந்து வெளியேறியது. இந்த நடவடிக்கைகள் மூலம், ""இராக் தற்பொழுது சுதந்திரமான சுயாதிபத்தியமுள்ள நாடாக ஆகிவிட்டதாகவும், இராக்கிற்கு விடுதலை பெற்றுத்தரும் தனது நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டதாகவும்'' உலக நாடுகளுக்கு அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

 

சென்னை, சேத்துப்பட்டு பள்ளிக்கூடச் சாலை "டோபி கானா' எதிரில் பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் 1997 முதல் சாராயக் கடை (ஒயின்ஸ் கடை) ஒன்று இயங்கி வந்தது. அதை அகற்றும்படி கோரி பொதுமக்கள் ம.க.இ.க. தலைமையில் பல ஆண்டு களாகப் போராடி வருகின்றனர். தனியார் முதலாளியிடம் இருந்தபோது இப்பகுதியின் ரவுடி தங்கைய்யாவையும் போலீசையும் வைத்து தோழர்களை மிரட்டியும் விலைக்கு வாங்கவும் முயன்று தோற்றுப் போனார்கள். மாவட்ட ஆட்சியாளர் ஆய்வுக் குழு அனுப்பினார். அதைச் சந்தித்து முறையிடப் போன மக்கள் ஊர்வலத்தை வழிமறித்த போலீசு சாராய வியாபாரிக்குத் துணை நின்றது.

 

திருவாரூர் தனி மாவட்டம் ஆன பின், மாவட்ட நிர்வாகக் கட்டிடங்களைக் கட்டுவதற்காக திருவாரூரின் அருகே அமைந்துள்ள விளமல், சிங்களாஞ்சேரி, தண்டலை, மே.மங்கலம் ஆகிய கிராமங்களின் விளைநிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதனால் வேலை இழந்த விவசாயிகளுக்கு எவ்வித மாற்று வேலையும் வழங்கப்படவில்லை. மாறாக, அவர்கள் அரசு உயர் அதிகாரிகள், அரசு ஒப்பந்தக்காரர்களின் வீடுகளில் துப்புரவு பணியாளர்களாகவும், எடுபிடிகளாகவும் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

 

புதுவை வடமங்கலத்திலுள்ள இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் தொடர்ந்து நிலவிவரும் தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டித்தும், பு.ஜ.தொ.மு. இணைப்பு சங்கமான இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் தோழர் அய்யனார் 12(3) ஊதிய ஒப்பந்தத்தின் குறைகளை சுட்டிக் காட்டியதால், அவருக்கு வழங்கப்பட்ட 10 நாட்கள் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரியும் 15.09.2010 அன்று ஆலைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 


 

 

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் எழில் தலைமை உரையாற்றினார். தோழர் முத்துக்கிருஷ்ணன், தோழர் லோகநாதன் கண்டன உரையாற்றினர். பு.மா.இ.மு. புதுவை மாநில அமைப்பாளர் தோழர் கலை மற்றும் பு.ஜ.தொ.மு. புதுவை மாநிலப் பொருளாளர் செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி வருவதையும் நமது வரிப்பணத்தில் கொழுத்து வருவதையும் அதற்கு துணைநிற்கும் ஓட்டுக்கட்சித் துரோகிகளையும் அம்பலப்படுத்திப் பேசினார்கள்.

மாற்றுத் தொழிற்சங்கத்தை அம்பலப்படுத்தியும், சாதிரீதியாக தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி வைத்திருப்பதை உணர்த்தும் வகையில் தோழர்கள் பேசியதும், தொழிலாளர்கள் அனைவரும் வர்க்கமாய் அணிதிரண்டு நக்சல்பாரிப் பாதையில் போராட வேண்டும் என்று அறைகூவி அழைத்ததும் தொழிலாளர் மத்தியில் புதுத்தெம்பையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

பு.ஜ.தொ.மு., புதுவை.

""விலைவாசி உயர்வு, பன்னாட்டுத் தொழில் கழகங்களின் ஆலைகளில் தொழிற்சங்கங்கள் நிறுவும் உரிமை, 8 மணி நேர வேலை, பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு போன்ற உரிமைகள், ஒப்பந்த வேலைமுறை ஒழிப்பு, ஊக வாணிபத்துக்குத் தடை, தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கலைக் கைவிடுதல்'' முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு.; எச்.எம்.எஸ்., உள்ளிட்ட எட்டு மையத் தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 7ந் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

 

அயோத்தியில் இந்துவெறியர்களால் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இத்தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த போது, சமரசத் தீர்வு காண்பதற்கு இன்னும் ஒரு வாய்ப்பளிக்கலாம் என்று கூறி, அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட ஒரு வாரம் தடைவிதித்து உத்தரவிட்டு மீண்டும் இழுத்தடித்தது, உச்ச நீதிமன்றம்.

 

விவசாயத்துடன் கறிக்கோழி வளர்ப்பை ஒரு துணைத்தொழிலாக மேற்கொண்டு வந்த தமிழக விவசாயிகள், கடந்த இரு மாத காலமாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலுள்ள கறிக்கோழி உற்பத்தி செய்யும் விவசாயிகள், இறந்த கோழிகளை சுகுணா நிறுவனத்தின் முன்பாகப் போட்டு, அந்நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கான கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் தமது 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஏறத்தாழ 2 இலட்சம் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழகத்தில் இப்போராட்டம் தற்போது ஓய்ந்திருப்பதைப் போலத் தோன்றினாலும், அது நீறுபூத்த நெருப்பாகவே நீடிக்கிறது.

ஈராண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா உருவாக்கிய பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்தும் சதிகளுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அணிதிரண்டு அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் பிரான்ஸ் நாடே குலுங்குகிறது. பிரான்சின் முக்கிய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலை ஏற்று கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று நடந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஏறத்தாழ 20 லட்சம் பேர் வீதிகளில் திரண்டு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். பள்ளி-கல்லூரிகள், ஆலைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், போக்குவரத்து உள்ளிட்டு அனைத்து துறைகளும் அன்று செயலிழந்து முடமாகிப் போயின. தொழிலாளர்களும் மாணவர்களும் இளைஞர்களும் அரசு ஊழியர்களும் குடும்பம் குடும்பமாக அணிதிரண்டு நாடெங்கும்  220-க்கும் மேற்பட்ட இடங்களில்  ஆர்ப்பாட்டங்களை  நடத்தியுள்ளனர்.

1984 நச்சு வாயுப் படுகொலைகள் வழக்கில் போபால் வழக்குமன்றத் தீர்ப்பு வந்தவுடன் நாடே கொந்தளித்துப் போனது. அக்கோரச் சம்பவம் நடந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. அன்று போபாலில் என்ன நடந்தது; எப்படி நடந்தது; எவ்வளவு பேரழிவும் துயரமும் நிகழ்ந்தது என்று இன்று கேள்விப்படும் புதிய தலைமுறையினரின் நெஞ்சிலே எழும் முதற்கேள்விகள் இவைதாம்: இத்தனைக்கும் காரணமான குற்றவாளி யார்? அவனுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?

பட்டினியோடு போராடி வரும் ஏழைகளுக்கு அரசின் தானியக் கிடங்குகளில் கெட்டுப்   போகக்கூடிய நிலையிலுள்ள உணவு தானியங்களை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ மைய அரசு வழங்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியத் தரகு முதலாளிகள் சங்கங்களில் ஒன்றான ‘இந்தியத் தொழில் கூட்டமைப்பு’ (Confederation of Indian Industry) ‘2025-இல் தமிழகம்’ -(Tamilnadu Vision 2025) என்றொரு அறிக்கையை 2008-இல் வெளியிட்டிருக்கிறது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் (Price Water Coopers) என்ற சர்வதேச ஆலோசனை நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கை, வரவிருக்கும் ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்லவேண்டும் என்பது குறித்த பார்வையையும் இலக்குகளையும் முன்வைத்திருக்கிறது.

தன்னுடைய சாதனைகளையும் தகுதியையும் இந்த தேசம் நியாயமாக மதிப்பிட்டுப் பார்த்திருக்கும் பட்சத்தில், காந்தி – நேரு வரிசையில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேசியத் தலைவராகத் தான் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் கருத்து. இலவசத் திட்டங்களால் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் தன்னைப் போற்றிப் புகழ்வதாக அவர் கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.