Language Selection

புதிய ஜனநாயகம் 2010

வடசென்னை அனல் மின்நிலையம் (NCTPS), 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழுள்ள அரசுத்துறை நிறுவனம். நாளொன்றுக்கு 60,000 டன் நிலக்கரி கையாளப்படும் இந்த நிறுவனத்தில், கரியள்ளும் பிரிவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக உழைத்த 261 தொழிலாளர்கள் இன்று வேலையிலிருந்து வீசியெறியப்பட்டுள்ளனர்.

"நீங்கள் நடுநிலையாளர்களாக இருப்பதென்பது குற்றம்!'' — இந்திய அரசு விடுக்கும் எச்சரிக்கை! அது, தெற்கு சத்தீஸ்கரின் வெச்சபல் கிராமம். காட்டின் மடியிலிருந்த அந்தக் கிராமத்தில், அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார் பொன்யாம் பந்துரு. இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்த துப்பாக்கிகளின் வேட்டுச்சத்தம் பந்துருவின் தூக்கத்தைக் கலைத்தது. ""ஐயோ! கொலைகாரர்கள் வந்துவிட்டார்கள்'' என்ற அலறல் எங்கும் எதிöராலித்தது.

"இனியும் இது நீடிக்க முடியாது. எங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது. பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்'' என்று வானொளியில் தோன்றிய அமெரிக்காவின் தலைமைக் கொலை வெறியன் öரானால்டு ரீகன் முழங்கினான்.

போபால் விஷவாயுப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்கள் உரிய நட்ட ஈடு வழங்கக் கோரியும், யூனியன் கார்பைடு முதலாளி வாரன் ஆண்டர்சனைக் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கக் கோரியும் இன்று வரை போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், மன்மோகன் சிங் அரசு, அணு ஆலை விபத்துக்கள் தொடர்பாக ஒரு புதிய மசோதாவொன்றைத் தயாரித்து, அதனைச் சட்டமாக்கிவிட முயன்று வருகிறது.

இருபத்தைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள புதிய ஜனநாயகம் இதழை வாழ்த்தியும், வாசகர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை விளக்கியும் திருச்சி வாசகர் வட்டத் தோழர்கள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து கடந்த 6.12.09 அன்று மாலை அரங்கக் கூட்டத்தைப் பேருற்சாகத்துடன் நடத்தினர். திருச்சி புத்தூர் நாலுரோடு சண்முகா திருமண அரங்கில், மாணவர்களும் மாணவிகளும் இணைந்து நடத்திய தப்பாட்டத்தோடு தொடங்கிய இக்கூட்டத்திற்கு ம.க.இ.க. மையக் கலைக்குழு தோழர் கோவன் தலைமை தாங்கினார்.

புர்ஜ் துபாய் என்ற உலகின் மிக உயர்ந்த கட்டடம், துபாய் மால் என்ற உலகின் மிகப் பெரிய பேரங்காடி, புர்ஜ் அல்அரப் என்ற உலகின் முதல்தர ஏழு நட்சத்திர தகுதி கொண்ட உல்லாச விடுதி, உலகின் எட்டாவது அதிசயம் எனப்படும் ""ஜுமெரா பாம்'' எனப்படும் ஈச்சமர வடிவத் தீவு, ஜபேல் அலி ஏற்றுமதி மையம் எனக் கனவுலகை கண்முன்னே காட்டிய துபாய் இன்று கடனாளியாக நிற்கிறது. ஆரவாரம் அடங்கிவிட்டது. எங்கும் மயான அமைதி. எல்லோருடைய முகத்திலும் பீதி. அடுத்து என்ன நடக்குமோ என்று புரியாத குழப்பத்தில் உறைந்து கிடக்கிறது அந்நாடு.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை ஆக்கிரமித்துக்கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீது ஒரு அநீதியான போரை நடத்தி வருகிறது. சின்னஞ்சிறு ஏழை நாடாக இருந்தாலும், ""ஆப்கான் ஏகாதிபத்தியங்களின் இடுகாடு'' எனக் கூறப்படுவது மீண்டும் நிரூபணமாகி வருகிறது.