Language Selection

பி.இரயாகரன் - சமர்

புலிகளின் "மாவீரர்" தினமன்று, வடக்கு கிழக்கில் இராணுவ கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் தீவிரமாகியது. இதற்கு சவால் விடும் வண்ணம் தீபம் ஏற்றுதல், சுவரொட்டி ஒட்டுதல் ஆங்காங்கே நடந்தேறியுள்ளது. இதற்கு எதிரான அரச வன்முறையை, ஆங்காங்கே அரங்கேற்றியும் இருக்கின்றது.

அரசுக்கு எதிரான இந்த உதிரியான எதிர்ப்பு நிகழ்வுகள் வெறும் இனத் "தேசியமாக" புலி சார்பு நிகழ்வுகளாக குறுக்கிக் காட்டி விட முடியாது. இப்படி இதை குறுந்தேசிய அரசியலாகக் காட்டி பிழைப்பவர்களுக்கும், அரச பாசிச நிழலில் ஒதுங்கி பிழைப்பவர்களுக்கும் இது எதிரானது. அதுபோல் மக்கள் அரசியலை முன்னெடுக்கத் தயாரற்றவர்களை, கேலி செய்தும் இருக்கின்றது.

மேற்கு ஏகாதிபத்தியங்கள் இலங்கை அரசை திட்டமிட்ட வகையில் தனிமைப்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. இலங்கை அரசோ தேர்தல் "ஜனநாயக" வடிவங்கள் மூலமும், சட்ட வடிவங்கள் மூலமும், பாசிச சர்வாதிகாரத்தை நிறுவி வருகின்றது. மக்களுக்கு எதிரான இந்த இரண்டு எதிர்ப்புரட்சிச் சக்திகளும், உள்நாட்டு அளவிலும் சர்வதேச அளவிலும் தங்களை அணிதிரட்டி வருகின்றது. ஏகாதிபத்தியத்துக்குள்ளான சர்வதேச முரண்பாட்டுக்குள், இலங்கை மக்கள் ஒடுக்கப்படுவதும், பிளவுபடுத்தப்படுவதும் தீவிரமாகி இருக்கின்றது. இதற்குள் முரண்பாடுகள் கையாளப்படுவதும்;, மக்கள் ஒடுக்கப்படுவதும் நடந்தேறுகின்றது.

60 வருடத்துக்கு மேலாக தொடரும் இனவொடுக்குமுறைக்கு எதிராக, பாரளுமன்றம் - யுத்தம் - பாரளுமன்றம் என்று எல்லைக்குள் வாழ்ந்து இருகின்றோம், வாழ்ந்துகொண்டு இருகின்றோம். இந்த எல்லைக்குள்அரசுடன் பேச்சு வார்த்தைகளை, ஒப்பந்தங்களைசெய்திருகின்றோம், செய்ய முனைகின்றோம். ஆனாலும் பிரச்சனைகள் தீர்க்கப்படமல், இனவொடுக்குமுறை தொடருகின்றது.

தமிழ்தேசியம் எப்படி இனவாதமோ, அப்படித்தான் சிங்களத் தேசியமும் இனவாதமாகும். இதில் ஒடுக்கும் ஒடுக்கப்பட்ட இனம் என்ற அடிப்படையில், அதனுள்ளான இனவாதம் இல்லாமல் போய்விடாது. இனத்தை முன்னிறுத்திய தேசியம் எங்கும் எப்போதும் இனவாதம் தான். முதலாளித்துவ ஜனநாயகத்தை முன்னிறுத்தும் தேசியத்துடன் போட்டுக் குழப்பக் கூடாது. இதனடிப்டையில் இனவாதம் சார்ந்த தேசியத்திற்கு எதிராக, இன வரையறை கடந்த தேசியத்தை முன்னிறுத்தவேண்டும். ஏனென்றால் முதலாளித்துவ தேசியத்தின் முரணற்ற கூறுகள், ஜனநாயகக் கோரிக்கையாக இருக்கின்றது. இனம் சார்ந்த தேசியவாதம், ஜனநாயகக் கோரிக்கைகளை மறுத்து தன்னை அணிதிரட்டுகிறது. அதனால் பாட்டாளி வர்க்கம் இனவாதத்தை மறுக்கும் போது, ஜனநாயகக் கோரிக்கைகளை உயர்த்தவேண்டும்.

தேசியத்தை இனரீதியானதாக பிரித்து சமூகரீதியாக முரண்படும் போது அது இனவாதமாகிவிடுகின்றது. இதில் ஒடுக்கும் இனம் , ஒடுக்கப்படும் இனம் என்ற வித்தியாசம் கிடையாது. ஆனால்  இனம் கடந்த தேசியம் சர்வதேசியமல்ல என்ற போதும், அது இனரீதியாக தன்னைப் பிரிக்காத வரை முதலாளித்துவ ஜனநாயகக் கூறைக்கொண்டு இயங்கும் வரை இதற்குள் முரண்பாடுகளை இனங்களுக்கு இடையில் உருவாக்காத    தன்மை  காணப்படும்.

"அரசியல் பொருளாதாரத் துறையில் சுதந்திர விஞ்ஞான ஆராய்ச்சி சந்திப்பது, மற்றெல்லாத் துறைகளிலும் சந்திக்கிற எதிரிகளை மட்டுமன்று. அது ஆராய்கிற பொருளின் விசேடத் தன்மையானது மானுட நெஞ்சத்தின் உக்கிரமான, இழிவான, குரோதமான உணர்ச்சிகளை, தனி நலனின் ஆவேசங்களை யுத்தகளத்துக்குள் எதிரிகளாக வரவழைக்கிறது." என்று மிக அழகாகவே மார்க்ஸ் தனது மூலதன முன்னுரையில் குறிப்பிடுகின்றார். ஆம் நாம் இன்று சந்திப்பது இதுதான்.

நாங்கள் தனிநபர் செயற்பாட்டை கடந்து அமைப்பாகியதும், வெறும் விவாதங்கள் கடந்து நடைமுறையுடன் கூடிய செயற்பாட்டுக்கு வந்தடைந்து இருப்பதும், இனவாதத்தை பொது அரசியல் உணர்வாக கொண்ட சமூக அமைப்பை எதிர்க்கும் ஒரு அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கும் நிலைக்கு நாம் வந்திருப்பதும், எமக்கு எதிரான எதிரிகளை வரவழைக்கிறது. "உக்கிரமான, இழிவான, குரோதமான உணர்ச்சிகளை, தனிநலனின் ஆவேசங்களை" எம்மீது காறி உமிழ வைக்கின்றது. வரலாற்றைத் திரிக்கின்றனர். தனிநபர்களை பற்றி இட்டுக்கட்டி அவதூறு பொழிகின்றனர்.

இந்த உண்மையை அனைவரும் மூடிமறைக்கவே விரும்புகின்றனர். வடக்கு – கிழக்கில் பெண்கள் உடலை விற்கின்றனர், விற்பது அதிகரித்து வருகின்றது. அவள் ஏன் உடலை விற்கின்றாள்? இதை இந்த சமூகம் ஆராய மறுக்கின்றது. தனது குற்றமாக இதை உணர மறுக்கின்றது. "நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!"  என்ற பேட்டியை ஒரு கற்பனை கதை என்று சொல்பவர்களும், இது ஒரு வியாபாரக் கதை என்ற சொல்பவர்களும் (ஆனந்தவிகடனும் ஈழப் போராட்ட வியாபாரமும் : கோசலன்)  வடக்கு கிழக்கில் பெண் ஏன் உடலை விற்கின்றாள் என்பதற்கு பதில் சொல்லவேண்டும். ஒரு உண்மையை வியாபாரமாக்குபவர்கள், அரசியல்ரீதியாக இழிவுபடுத்துபவர்களைக் கொண்டு, இந்த எதார்த்தத்தை யாரும் புதைத்து விடமுடியாது. இதுவொரு கற்பனை என்றால் கூட, உண்மையான எதார்த்தத்தில் இருந்து தான் புனையப்பட்டது. கற்பனையாளனின் நோக்கத்தை மறுப்பதன் பெயரால், உண்மைகளை புதைப்பதை நாம் அனுமதிக்க முடியாது. முரண்பாடான எதிர்முனை அரசியல் தளத்தில் இருப்பவர்கள், தங்கள் குறுகிய அரசியலில் இருந்து இதை மறுக்கின்றனர். உண்மையை வியாபாரமாக விளக்கி, இதை புதைக்க முனைகின்றனர். இதுவொரு சமூகத்தின் பொது அவலம். ஒடுங்கிச் சிதைந்து போகும் பல நூறு பெண்களின், உண்மையான சொந்தக் கதை.

சமவுரிமை இயக்கத்திற்கான செயற்திட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. இனவாதத்தை மக்கள் மத்தியில் இல்லாது ஒழித்தலும். இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராடுதலுமாகும். இந்த வகையில் அனைவரையும் போராடுமாறும், போராட முன்வருமாறும் கோருகின்றோம். இதன் அர்த்தம் எம்முடன் இணையுமாறு கோரவில்லை. மாறாக இதை நீங்கள் சுயாதீனமாக முன்னெடுக்குமாறு கோருகின்றோம்.

நாம் கொண்டிருக்கக் கூடிய கருத்துக்கள், கட்சிகள் எதற்காக!? அதிலும் பாசிசத்தைக் கண்டு அஞ்சுபர்களுக்கு, கருத்துக்களும் கட்சிகளும் எதற்கு!? பாசிசத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடாத வரை, கருத்துக்களுக்கும் கட்சிகளுக்கும் என்ன தான் பயன்? பாசிசத்தைக் கண்டு அஞ்சுபவர்கள், மக்களை ஒரு நாளும் அணிதிரட்ட முடியாது. ஒரு வர்க்கத்தின் கட்சி இலங்கையில் இன்னும் உருவாகாமல் இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. பாசிசத்தை பகைக்காத வண்ணம் அரசியலை முன்னிறுத்திக் கொள்ளுகின்ற கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை, மக்களை பாசிசத்துக்கு அடிபணிய வைக்கின்றனர். அதைத்தான் தங்கள் கருத்துகளாலும் கட்சிகள் மூலமாயும் செய்கின்றனர்.

"சுயநிர்ணய உரிமையை மறுப்பது தான் இனவாதம்." என்ற "முன்நிபந்தனை" யுடன் கூடிய அரசியல் அளவுகோல் வரட்டுத்தனமானது, இது சாராம்சத்தில் பிரிவினைவாதம் கூட. சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரும் இனவாதிகள் என்ற அரசியல் அடிப்படை மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாத அனைவரையும் இனவாதியாக்கி விடுகின்றனர். இனமுரண்பாட்டுக்கு எதிராக வர்க்கப்போராட்டத்தை நடத்தும் யுத்ததந்திரம் தான் சுயநிர்ணயம் என்பதையே மறுத்துவிடுகின்றனர். மாறாக பிரிவினையை மூடிமறைக்கும் யுத்ததந்திரமாக, சுயநிர்ணயத்தை குறுக்கிவிடுகின்றனர். சுயநிர்ணயத்தை "முன்நிபந்தனை"யாகக் கொண்ட அணுகுமுறையால், வர்க்கப் போராட்டத்தை சிதைத்து விடுகின்றனர். லெனின் சுயநிர்ணயத்தை முன்வைத்தது வர்க்கப்போராட்டத்தை நடத்தவே ஒழிய, அதை "முன்நிபந்தனை"யாகக் கொண்டு வர்க்கப் போராட்டத்தை சிதைக்கவல்ல.

குருச்சேவ் முதலாளித்துவ மீட்சி நடத்தவே ஸ்டாலினை தூற்றினான்

முதலாளித்துவ மீட்சியை பலப்படுத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூற்றும் போது “ஸ்டாலின் ஒரு கோடாரியைக் கொண்டு தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார்” என்றான். அவன் பாட்டாளி வர்க்க ஆட்சியைப்பற்றி குறிப்பிடும் போது, “பயங்கர” ஆட்சி என்றான். மேலும் கூறும் போது “அந்தக் காலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா, தனது மனைவியையும் குழந்தையையும் மீண்டும் காண்போமா என்பதைப் பற்றி நிச்சயமற்றிருந்தான்” என்றான். இப்படி பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தை தூற்றியவ அதே குருசேவ் தான், 1937 இல் “நமது கட்சி, துரோகிகளையும் காட்டிக்கொடுக்கும் கும்பலையும் ஈவு இரக்கமின்றி நசுக்கும். டிராட்ஸ்கிய வலது கழிச்சடைகள் அனைத்தையும் துடைத்தெறியும்.. இதற்கான உத்தரவாதம் நமது மத்திய கமிட்டியின் அசைக்க முடியாத தலைமையாகும். நமது தலைவர் தோழர் ஸ்டாலின் அவர்களின் அசைக்க முடியாத தலைமையாகும். நாம் எதிரிகளை முழுவதுமாக கடைசி மனிதன் வரை அழித்தொழித்து அவர்களுடைய சாம்பலை காற்றில் தூவிவிடுவோம்” என்று பிரகடனம் செய்தான், ஆனால் ஸ்டாலின் மறைவுக்கு பின் தூற்றினான். அனைத்தையும் ஸ்டாலின் மேல் சுமத்தினான். டிராட்ஸ்கிகள் குருச்சேவை ஆதரித்தனர். ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி குறிப்பிடும் போது “உட்புறத்திலிருந்து கோட்டையைக் கைப்பற்றவது மிகவும் எளிது” என்றார். அது தான் நடந்தது. உள்ளிருந்த மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தான், முதலாளித்துவ மீட்சியை உள்ளிருந்து நடத்தியது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE