Language Selection

பி.இரயாகரன் -2008

தமிழ் மக்களாகிய எம் கையில் அது உள்ளது. ஆனால் நாம் அடிமைகளாக்கப் பட்டுள்ளோம். செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டு, நாம் நடைப்பிணமாகியுள்ளோம். தமிழ் மக்களையே அழித்தொழிக்கும் பேரினவாத யுத்தத்தை ஒட்டி, தமிழ் மக்களாகிய நாம் எந்தக் கருத்தையும் சுதந்திரமாக கூற முடியாத அவலம். தமிழ் மக்களாகிய நாம், எம் சொந்தத் தலைவிதியைத் தீர்மானிக்க முடியாத வகையில் எமக்கு எதிராக பல துப்பாக்கிகள்.

மக்கள் விரோத தமிழ் தேசியவாதிகளினால் உருவாகும் பேரினவாதத்தின் வெற்றி, தமிழினத்தின் அடிமைத்தனத்தின் மேலான வரலாறாகின்றது. இப்படி இவர்களால் தமிழ் இனம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்?

மக்களின் வரலாற்றில் எது நடக்கக் கூடாதோ, அது இன்று அவர்கள் வரலாறாகி விடுகின்றது. மக்களிள் துயரமும் துன்பமும் விடுதலையின் பெயரில்  வாழ்வாகி விடுகின்றது. இதை போராட்டம் என்று கூறி, தன் சொந்த முடிவை தானே தெரிவு செய்து கொண்டது.

கிழக்கின் ஜனநாயக விடிவெள்ளிகள் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளுகின்றனர். ஜனநாயகத்தை அள்ளிக்கொடுத்த பேரினவாதம், அதிகாரத்துக்காக கொலை செய்வதை அங்கீகரிக்கின்றது. தமக்கு மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது என்பதே, புலிகள் முதல் ஜனநாயக பாராளுமன்றம் வரையான பொதுவான நியதி. இப்படி இலங்கையில் இரண்டு பாசிசம் கொடிகட்டிப் பறக்கின்றது.

புலிகள் தாமே தேர்ந்தெடுத்த தோல்வி இது. இது பேரினவாதத்தின் சொந்த இராணுவ வெற்றியல்ல. இது தமிழ் மக்களின் சொந்த வெற்றியுமல்ல. தமிழ்மக்களோ அனைத்துத் தரப்பாலும் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்கள் மேல் புலிப் பாசிசத்தை நிறுவிய புலிகள், அதன் மூலம் மக்களை தோற்கடித்து அதை இராணுவத்தின் வெற்றியாக்கியுள்ளனர்.

(வன்னி) மக்கள் பற்றி புலிகள் என்ன நினைக்கின்றனரோ, அதுபோல் அரசு என்ன நினைகின்றனரோ, அதைபற்றி மட்டும்தான் பேசுகின்றனர். உண்மையில் இவர்கள் சொல்வதற்கு எதிராகவும் அல்லது ஆதாரவாகவும் குலைக்கின்றனர். இப்படி மனித வாழ்க்கை திரிக்கப்பட்டு, குறுகிய பிரச்சார நோக்கின் அடிப்படையில் தான் உலகில் முன் கொண்டு வரப்படுகின்றது.

மக்களை பிரச்சனைகளை தீர்க்கமுனையும் ஒரு அழகிய கறுப்பு முகம். இப்படித்தான் உருவகப்படுத்தப்படுகின்றர். இதன் பின்னால் இருப்பதோ, சூதும் நயவஞ்சகமும் கடத்தனமுமாகும்.

 

இந்த ஓபாமா எப்படி வழிபாட்டுக்குரியவரானர். மக்களின் அவலம்தான், இதற்கு எதிர்மறையில் பதிலளிக்கின்றது. சமூக அவலம் ஓபாமா மூலம் தீரும் என்ற எதிர்பார்ப்பு, இதில் மண்டிக்கிடக்கின்றது. 

ஓபாமா தலைகீழாக நின்றாலும், இதை மாற்றமுடியாது. இதைச் செய்வதுதான் ஓபாமாவின் ஜனநாயகக் கடமை. இதைத் தாண்டி ஓபாமா, எதையும் மக்களுக்காக மாற்றப்போவதில்லை. இது இப்படியிருக்க, இனம் தெரியாத மாற்றம் பற்றி நடுதர வர்க்கத்தின் குருட்டு நப்பாசைகள் ஒருபுறம்.

அமெரிக்க சமூக அமைப்பை பற்றி மக்களின் அறியாமைதான், ஓபாமா பற்றி பிரமைகளும், நம்பிகைகளும். இது ஏதோ ஒரு மாற்றம் வரும் என்ற எதிர்பார்புகளாகின்றது. மக்களின் செயலற்ற தன்மையும், விழிபற்ற மூடத்தனமும், ஓபாமா மீதான நம்பிக்கையாகின்றது.

கொடூரமான வெள்ளை அமெரிக்கா எகாதிபத்தியத்தில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து உலகம் உள்ளது என்பதை, ஓபாமா வெற்றி பற்றிய குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றது. மூன்றாம் உலக நாட்டு மக்கள் முதல் ஏகாதிபத்திய நாட்டு மக்களும் கூட நம்பிகையுடன் ஓபாமாவை பார்க்கின்றனர்!

தமிழ்மக்களின் உரிமையை எப்படி 'அரசியல் நீக்கம்" செய்வது என்பதை, அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பலிடம் இருந்து கற்றுக்கொள்ளமுடியும். அண்மையில் குமுதம் வெளியீடான தீராநதியில், 'இன்றெமக்கு வேண்டியது சமாதானமே" என்ற தலைப்பில் ஷோபாசக்தியின் பேட்டி ஒன்றை அ.மார்க்ஸ் எடுத்து வெளியிட்டு இருந்தார். இதை அவர் 'வெறும் நேர்காணலாகவன்றி உடன்பாட்டுடன் முன்வைக்கின்றேன்" என்ற அ.மார்க்ஸ் குறிப்புடன் அது வெளிவந்துள்ளது.

பச்சைத் தூசணத்தால், பெண்ணின் பாலியல் உறுப்பால், எனது அம்மாவின் பெயரால், என்னை கொலை செய்யத்தவறியது புலிகளின் மாபெரும் தவறு என்கின்றார்  காசிபாரதி என்று பெயரில் தளம் வைத்துள்ளவர். 'புலிகள் பின் வாங்குகின்றனரா! புலிகள் பாரிய எதிர்தாக்குதலை நடத்தப் போகின்றார்களா!!" என்ற எனது கட்டுரைக்கு இப்படி ஒரு பின்னோட்டம் விட்டுள்ளது.

புலிகள் தாம் விரும்பிய ஒரு 'தேசிய" போராட்டத்தை நடத்துகின்றனர். அது சொந்த மக்களையே, தனது சொந்த எதிரியாக பார்க்கின்றது. மக்களுக்கும் புலிக்கும் இடையில் ஜனநாயக ரீதியான எந்த உறவும் கிடையாது. மாறாக பாசிச வழிமுறைகளில் தான், மக்களை புலிகள் கட்டுப்படுத்துகின்றனர்.

 

செம்மறித் தமிழர்களுக்கு எல்லோரும் நாடகம் காட்டுகின்றனர்.  மோதலும் - சமாதானமும் என்று, போட்டோவில் காட்சியளிக்கின்றனர். ஆம் அன்று மாத்தையாவும் பிரபாகரனும் இப்படித்தான் தமிழ் மக்களுக்கு கதை சொன்னார்கள். கடைசியில் மாத்தையாவின் கதை அனைவரும் அறிந்ததே.

 

காலில் இரும்பிலான விலங்கு ஓட்டப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, எலும்புகள் முறிக்கப்பட்டு கொல்லப்பட்டான் மாத்தையா. தலைவர் உபதலைவர் சண்டை, இப்படித்தான் புலிகளின் வரலாற்றில் முடிந்தது. கொல்லப்பட்ட மாத்தையா ஒன்றும் புனிதமானவனல்ல. இதையே அவனும் அன்றாடம் செய்தவன். புலியின் அதே விதி, அவனையும் விட்டுவைக்கவில்லை.

 

புலிகள் முதல் தமிழ்நாட்டு சினிமாக் கழிசடைகள் வரை, தத்தம் சொந்த சுயநலத்தையே தமிழ் தேசியமாக்கினர். தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்தையும், அவர்களின் அடிப்படை உரிமைகளையும் மறுத்து, கூச்சல் போடுகின்றனர், கூத்தாடுகின்றனர்.

   

தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளை பற்றி அக்கறையற்ற தமிழ் உணர்வு என்பது, தமிழ் மக்களுக்கு எதிரான பாசிசத்தைக் கொம்பு சீவி விடுவதுதான். தமிழ் இனத்தை பேரினவாதம் மட்டும் ஒடுக்கவில்லை. தமிழர்களும் ஒடுக்குகின்றனர். அதாவது பேரினவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக கூறும் புலிகளும் தான் ஒடுக்குகின்றனர். இதைக் கண்டுகொள்ளாத தமிழ் உணர்வு என்பது, போலியானது பொய்யானது. அது ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரானது.

இந்தக் கேள்விக்கு இன்றைய (புலித்) தேசியம் பதிலளிக்க முடியாது திணறுகின்றது. புலிகள் தமிழரை ஆளும் உரிமையைத்தான் தமிழர் பிரச்சனை என்று நம்புகின்ற அடிமுட்டாள் தனத்தில் இருந்து இராணுவ ரீதியான பேரினவாத செயலை நிறுத்துவது தான் தமிழரின் பிரச்சனை என்று கருதுகின்ற பொதுவறிவுக்குள் தான், தமிழரின் மேல் சிங்கள மேலாதிக்கம் நிறுவப்படுகின்றது.

தமிழ்த்தேசியம் எப்போதோ தோற்றுவிட்டது என்பது எதார்த்த உண்மை. இது இன்றைய புலிகளின் இராணுவத் தோல்வி மூலம் நிகழவில்லை என்பது மற்றொரு உண்மை.

இதில் ஒரு மயக்கமும், தத்துவக் குழப்பமும் காணப்படுகின்றது. புலித்தேசியமும், தமிழ் தேசியமும் ஒன்று என்றும், புலிப் பாசிசம் தமிழ் தேசியத்தக்காகத் தான் போராடுகின்றது என்றும் நம்புகின்ற, நம்ப வைக்கின்ற கூத்து அரங்கேறுகின்றது. முன்னாள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும், மாற்று அரசியல் பேசித் திரிந்த சிலரும், தமிழ் உணர்வு என்று இந்தியாவில் பிதற்றுவோரும், இப்படி அரசியலின் பின் கூத்தாடுகின்றனர்.

இதைக் கோருவதுதான் புலித் தேசியம் என்றால், தமிழ்நாட்டு தமிழ் உணர்வும் இதற்குள்  தரங்கெட்டு கிடக்கின்றது. ஒரு இனம் தனக்காக தான் போராடமுடியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளது. இயக்கங்கள் முதல் இந்தியா வரை, தமிழ்மக்கள் தமக்காக போராடுவதை திட்டமிட்டே தடுத்து நிறுத்தினர்.

 

இதன் முதிர்வில் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ்மக்கள் போராடுவது, புலிக்கு எதிராக போராடுவதாக கூறி அவர்கள் மேல் புலிப்பாசிசம் கட்டவிழ்த்து விடப்பட்டது. 

 

அன்று முதல் இன்று வரை இதுதான் கதை. இவர்கள் எப்போதெல்லாம் தலையிட்டார்களோ, அப்போதெல்லாம் ஈழத் தமிழ் மக்களின் துயரம் பெருகியது. இந்தியா தலையிட வேண்டும் என்று இன்று மீண்டும் கூச்சல் போடுபவர்கள், முன்பும் இதுபோல் கூச்சல் இட்டனர். இதன்போது தமிழ் இனத்தையே இந்தியா கொன்று குவித்தது. மறுபடியும் பிழைப்புவாதிகள், ஈழத் துயரத்தை வைத்து தமது சொந்த அரசியலைச் செய்கின்றனர். 

6000 மேற்பட்ட தலையங்களை உள்ளடக்கிய ஒரு இணையம். சமூகத்தின் பல்துறை சார்ந்த கட்டுரைகள் முதல் ஓலி ஒளி பேழைகள் வரை கொண்டவை. விரைவில் 10000 தலையங்களை கொண்டவையாக மாற்ற முனைகின்றோம். மிக இலகுவாக இதை பார்வையிடவும், தெரிவு செய்து படிக்கவும் வகையில், ஒரே முறையில் (கிளிக்கில்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உபதலைப்புக்குள் கூட உட்செல்லத் தேவையி;லை;லை. கீழ் நீலநிறத்தில் உள்ளதைக் கிளிக் செய்து செல்லவும்.   

 

இந்த வகையில்