Language Selection

பி.இரயாகரன் -2012

குறிப்பு : மாத்தையா கூறினான், நாம் யார் ஆயுதம் வைத்திருந்தாலும் பிடிப்பம் என்றார்.

விளக்கம் : ஆயுதம் யார் வைத்திருந்தாலும் பிடித்துக் கொல்வோம் என்றான். இதன் மூலம் மக்கள் ஆயுதம் ஏந்தும் உரிமையை, அழித்தொழிப்போம் என்றான். போராடும் உரிமையை மறுத்து, தங்கள் பாசிச சர்வாதிகார வழியில் அழிப்போம் என்றான். தாம் மட்டும் ஆயுதம் வைத்திருக்கவும், ஆயுதமுனையில் மக்களை சுரண்டி வாழ்வதே தேசிய போராட்டம் என்றான். மக்கள் தமது சொந்த விடுதலைக்கு அணிதிரள்வதையும், ஆயுதம் ஏந்துவதையும் படுகொலைகள் மூலம் அடக்கி ஒடுக்குவோம் என்றான். தமது பாசிசத்துக்கு அடிபணிந்து கைகட்டி வாய் பொத்தி ஆண்டை அடிமை வாழ்வை வாழ்வதே, தமிழ் மக்களின் விடுதலை என்றான்.

 

சிரியாவின் ஜனநாயகத்துக்கான மக்கள் போராட்டத்தை, முரண்பட்ட ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலனுக்கான உள்நாட்டு யுத்தமாக மாற்றிவிட்டது. அரபு உலக எழுச்சிகள் அனைத்தும், உலகை மறுபடியும் ஏகாதிபத்தியங்கள் தமக்கு இடையில் மறுபங்கீடு செய்து கொள்ளும் வண்ணம் ஏகாதிபத்தியங்களுக்கே பயன்பட்டது. நிதி மூலதனம் மற்றும் உற்பத்தி மூலதனம் மூலம், அரபுலகம் மீது மேற்கு அல்லாத நாடுகள் பெற்றுக் கொண்டு வந்த செல்வாக்கை, ஜனநாயகப் போராட்டங்கள் மூலம் மேற்கு தனக்கு சார்பாக மறுபங்கீடு செய்து கொண்டது. இதுதான் அரபுலக எழுச்சியின் அரசியல் விளைவு. இந்த வகையில் சிரியாவில் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம், மேற்கு அல்லாத ஏகாதிபத்தியங்களின் முயற்சி வெளிப்படையான ஏகாதிபத்திய மோதலாக மாறியிருக்கின்றது. அது சிரியாவில் உள்நாட்டு யுத்தமாக மாறியிருக்கின்றது.

இன்றைய பார்ப்பனர்கள் அனைவரும் ஒரு அடியைச் சேர்ந்த, 4000 வருடமாக வாழ்ந்து வந்த இரத்த உறவு வாரிசுகளா? எனின் இல்லை. பல இடைக்கட்டங்களின்றி, இன்றைய பார்ப்பனர்கள் உருவாகவில்லை. ஏன் பார்ப்பனியம் கூடத்தான்.

பலரும் கண்டு கொள்ளாமல் போன விவகாரம் இது. இலங்கையில் மனிதவுரிமையை அமுல்படுத்தும் பொறுப்பை வகித்த ஆணையாளரின் இராஜினாமா இது. இலங்கையில் மனிதவுரிமை எந்த நிலையில் இருக்கின்றது என்பதைக் எடுத்துக் காட்டிய மற்றொரு சம்பவம் இது. இதுபோல் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தேர்தல் அதிகாரி சுதந்திரமாக தேர்தலை நடத்த முடியாது போனதும், தன்மீது திணிக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்க வேண்டிய சூழலை அடுத்து, தன் பதவியை இது போன்று துறப்பதாக அன்று அறிவித்தார். மகிந்த குடும்பம் அவரை மிரட்டி, தொடர்ந்து அவரை பதவியில் வைத்து தேர்தலை வெல்லுகின்றது. இதனால் என்னவோ "தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக கருதக்கூடாது," என்று ஆனந்த மெண்டிஸ் கூறித்தான், தனது இராஜினாமாவை உலகறிய அறிவித்தார்.

தம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாக கூறுகின்றவர்கள், தமக்குள்ளான அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்த்துப் போராட வேண்டும். அதேநேரம் தமக்கு வெளியில் உள்ள ஒடுக்குமுறைகளையும் கூட, எதிர்த்துப் போராட வேண்டும். இவ்விரண்டையும் செய்யாத போராட்டம், ("தலித்திய") அடையாளம் போலியானது புரட்டுத்தனமானது. ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் குறுகிய அரசியலாகும். இதுபோல் பிறப்பு சார்ந்த ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் போது, பிறப்புக் கடந்த மனிதனாக தன்னை மையப்படுத்திப் போராடாத பிறப்பு சார்ந்த குறுகிய அரசியல் படுபிற்போக்கானது.

மக்களைச் சார்ந்து நின்று கூறாத எந்தத் தர்க்கங்களும் எந்த அரசியலும் புரட்டுத்தனமானது. கேட்பவர்களை கேனயனாக்குகின்ற, தம்மை நம்புகின்றவர்களையும் முட்டாளாக்குகின்ற அறிவு சார்ந்த புரட்டுத்தனமான முயற்சியாகும். இப்படித்தான் "வெள்ளாள மார்க்சியம்" என்ற கூற்றும், அது சார்ந்த தர்க்கங்களுமாகும். மறுதளத்தில் இவர்களால் "வெள்ளாள மார்க்சியம்" என்று குற்றச்சாட்டபட்டவர்கள், மார்க்சியத்தை சரியாக முன்வைக்கின்றார் என்று அர்த்தமல்ல. ஒன்றையொன்று சார்ந்து தன்னை நேராக்க முடியாது.

இனப்பிரச்சனை இலங்கையில் கிடையாது என்பதே அரசின் கொள்கை. அதனால் அரசிடமும், ஆளும் கட்சியிடமும் பேசுவதற்கு எதுவுமில்லை. ஆக தமிழ்மக்களை ஒடுக்குவதைத் தவிர, அதனிடம் வேறு எந்தத் தீர்வும் கிடையாது. இதுதான் உண்மை.

இலங்கையின் பிரதான முரண்பாடான இன முரண்பாட்டை பேசித் தீர்க்க தயாரற்ற அரசு, தானாக முன்வந்து ஒரு தீர்வை முன்வைக்க தயாரற்ற அரசு, ஒடுக்கித் தீர்வு காணமுனைகின்றது. யுத்தம் மூலம் புலியை வென்ற அரசு, அதேபாணியில் தமிழ் மக்களை ஒடுக்கியே வெல்ல முனைகின்றது. இதற்கு ஒரு நாடகம். அதில் ஒப்பாரி வேஷம் கூட்டமைப்புக்கு. இன முரண்பாட்டையும், இனப் பதற்றத்தையும் உருவாக்கி, இராணுவ ஆட்சியைத் தொடர்ந்து தமிழ் பிரதேசத்தில் தக்கவைப்பதன் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வெல்வதே அரசின் கொள்கை.

முதலில் இவர்கள் மக்களைச் சார்ந்து நின்று எதையும் சொல்பவர்கள் அல்ல. இந்த வகையில் இவர்கள் முதல்தரமான மக்கள் விரோதிகள். மக்களுடன் நிற்காத, அவர்களின் கோரிக்கைகளுடன் ஒன்றிணையாத இவர்களின் சமூகம் பற்றிய கருத்துகள் முதல் அக்கறைகள் வரை போலியானது மட்டுமின்றி மோசடித்தனமானதுமாகும். மக்களை ஒடுக்குகின்ற பிரிவுடன் சேர்ந்து நின்று, தங்கள் கருத்துக்களை முன்வைப்பதன் மூலம், அக்கறையை வெளிப்படுத்துவதன் மூலம் தங்கள் பிழைப்பைத் தொடங்குகின்றனர். இவர்கள் எப்போதும் சந்தர்ப்பவாதிகளாக, பிழைப்புவாதிகளாக வாழ்பவர்கள். ஒரு விடையத்தை "முற்போக்காக" முன்னிறுத்திக் காட்டிக் கொண்டு, மற்றைய விடையங்களில் படுபிற்போக்காகவே தம்மை அடையாளப்படுத்துவர்கள். இதன் பின் வலது இடதுமற்ற சந்தர்ப்பவாதிகளாக, "முற்போக்கை"க் காட்டி முதுகுசொறிகின்ற பிழைப்புவாத அரசியல் மூலம் பிரமுகர் அரசியலையம், முகம் காட்டும் சடங்கு அரசியலையும் அரங்கேற்றுகின்றனர்.

தூக்கில் போடும் அலுக்கோசு போல்தான், அப்துல்கலாம் என்ற அலுக்கோசும். சமூகத்தையும், மனித உரிமைகளையும் தூக்கில்போடும் "அறிவு"சார் ஆளும் வர்க்க அலட்டல்கள். இந்தியாவின் ஆசியுடன் மகிந்த குடும்பம் நடத்தும் கொலைகார பாசிச ஆட்சியின் வக்கிரத்துக்கு ஏற்ப, அனுமானாக இலங்கையில் ஆட்டம் போட்டது அப்துல்கலாம் என்ற குரங்கு. "தலைசிறந்த விஞ்ஞானி', "அறிவாளி" என்று கூறி, பூனூல் போட்ட கூட்டம் கூடி கும்மியடிக்கும் கூட்டத்தின் துணையுடன் நின்று கூறுகின்றார்

1. இலங்கையில் மும்மொழியைக் கற்றலே, இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று

2. இலங்கை கடலில் வாரத்தில் (கிழமையில்) மூன்று நாள் வீதம் இலங்கை இந்தியா மீனவர்கள் மீன்பிடிப்பதன் மூலம் பிரச்சனையைத் தீர்க்கலாம்

என்று தன் அறிவால், விஞ்ஞான அறிவால் கண்டுபிடித்து முன்வைக்கின்றார்.

குறிப்பு : நான் 06.05.1987 மாலை 7 மணி வரையான காலத்தில், பின்வரும் விடையங்களை படிப்படியாக இரண்டாம் திகதி தொடங்கி ஏற்றேன். அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது ஏதோ விதத்தில் என்னுடன் சம்பந்தப்பட்டவை என்பதை ஏற்றேன். அவை மக்கள் குரல், தீக்கதிர், எஸ்.எம்.ஜீ (S.M.G) வாங்கியது, 80000 ரூபாவை கொடுத்த இரண்டு ஏகே-47 வாங்க பணம் கொடுத்தது. ஆயுத புத்தகம், றோனியோ 2, மாணவர் அமைப்பு நோட்டிஸ், பணம் என்பனவற்றை வசந்தனிடம் கொடுத்தாக ஏற்றேன். இதன் பின்னால் நான் அவிழ்க்கப்பட்டேன். இவை பல்வேறு தொடர்ச்சியான முரண்பட்ட அவர்களின் கேள்விகள் ஊடாக ஒத்துக்கொண்ட நான், கடைசிவரையும் ஆயுதப் புத்தகம் கொடுத்தை ஒத்துக் கொள்ளவில்லை. இறுதியாக அவர்கள் அடிக்கடி மாறி மாறி குறிப்பெடுக்கும் போது, சுரேஸ் என்பவர் எனது ஆயுதப் புத்தகம் மேல் பேப்பர் வைத்து குறிப்பு எடுத்ததை அவதானித்த நான், அதையும் ஒப்புக் கொண்டதன் மூலம், வசந்தனிடம் நான் கொடுத்ததாக அவர் ஒப்புக் கொண்டவை முடிவுக்கு வந்தது.

"மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்ற தீங்கானதும், காட்டிக்கொடுப்பதுமான அரசியல், திடீர் மார்க்சிய அரசியல் பேசும்; நாவலனால் இனியொருவில் முன்வைக்கப்பட்டது. அதேநேரம் மீண்டும் ஆயுதப்போராட்டம் பற்றி அரசின் எச்சரிக்கைகள் மூலம் பொது அடக்குமுறைகள் ஏவப்படுகின்றது. மக்கள் போராட்டங்களைக் கூட, இந்த "மீண்டும் போர்" ஆயுதம் என்ற அரசியல் பின்னணியில் அரசு ஒடுக்குகின்றது. இதற்கு அரசியல்ரீதியாக உதவும் வண்ணம் "மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்று பௌத்த பேரினவாத வரலாற்றைச் சொல்லி புரட்சிகரமான வாய்ச்சொல் மூலம் யுத்தம் முன்வைக்கப்படுகின்றது. பிரபாகரனின் மாவீரர்தின உரைகள் முதல் புலிகள் நடத்திய யுத்தம் வரை, இப்படி பௌத்த பேரினவாதத்தைக் கூறித்தான் போரை மட்டுமே நடத்தி அழிந்தனர். "மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு" என்றதன் பின்னான அரசியல் சித்தாந்தத்தின் உள்ளடக்கத்தை குறிப்பாக ஆராய்வோம்.

இதை ஈ.என்.டி.எல்.எப் கூறவில்லை. இந்தியக் கூலிக்குழுக்கள் கூறவில்லை. முன்னாள் புலிப்பினாமியான யதீந்திரா இதை, இடதுசாரிய வேஷமிட்டு வியாபாரம் செய்யும் காலச்சுவட்டில் கூறுகின்றார். அவர் தன் "கட்டுடைப்பாக" பீற்றி வைக்கும் தர்க்கம் வாதம் "இந்தியாவின் ஆதரவின்றி அல்லது அனுசரணையின்றி ஈழத் தமிழர்கள் எக்காலத்திலும் எந்தவொரு தீர்வையும் அடைய முடியாது என்பதே பின் – முள்ளிவாய்க்கால் யதார்த்தமாகும்." என்கின்றார். முள்ளிவாய்க்கால்களிள் பின் ஒரு பிழைப்புவாதியிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இலங்கை அரசின் ஆதரவும் அனுசரணையுமின்றி தீர்வைப் பெறமுடியாது என்று சொல்கின்ற அரசு கைக்கூலிகளின் அதே தர்க்கமும் அதே வாதமும். இங்கு இரண்டும் ஒரே அரசியல் தளத்தில் இயங்குகின்றது.

குறிப்பு : காம்பிலிருந்தோர் மாத்தையா, விசு, சலீம், தீபன், மாஸ்டர், வினோத், கவியப்பா, ஹப்பி, சுரேவி, ரமேஸ், ஜெயக்குமார், பாலகிருஸ்ணன், தயாளன் ----

குறிப்பு : மிக அண்மையில் (தப்பிய காலத்தில்) இக் காம் இரண்டாக பிரிக்கப்பட்டு வேறு இடத்தில் போடப்பட்டது.

புலியெதிர்ப்பு புலியழிப்பைக் கோரியது போல், இனவெதிர்ப்பு இனவழிப்பைக் கோருகின்றது. புலியெதிரிப்பு அரசியல், புலியில்லாத வெற்றிடத்தில் இன்று இனவெதிர்ப்பு அரசியலாக மாறியிருக்கின்றது. இதை மூடிமறைக்க, குறித்த இனத்தின் உள்ளார்ந்த சமூக முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி நிற்கின்றது. இதன் மூலம் தன்னை முற்போக்காகவும், மக்கள் சார்பாகவும் காட்டிக் கொள்ள முனைகின்றது. இனத்தின் இருப்பும், இன அடையாளமும் தான், சமூகத்துக்குள்ளான சமூக ஒடுக்குமுறைக்கு எல்லாம் காரணம் என்று கூறி, தாம் போராடத் தடையாக இதுதான் இருப்பதாகக் கூறியும், இனவழிப்பைக் கோருகின்றது. அந்த வகையில் இனவொடுக்குமுறைக்கு உதவுகின்றது.

இதுவே தான் இந்தியாவில் ஏழ்மையை உருவாக்குகின்றது. இது இப்படி இருக்க, இந்த ஏழ்மையை இந்தியாவின் தேசிய "அவமானம்" என்கின்றார் இந்திய பிரதமர். உழைக்கும் மக்களின் உழைப்பைச் சூறையாடி கொழுக்க வைக்கும் உன் கொழுப்புத்தான், தேசிய அவமானமாகும். ஊட்டச்சத்து இன்றி, வருடம் தோறும் இலட்சக்கணக்கில் மரணிக்கின்ற நிலைக்கு யார் காரணம்? அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணி யார்? இன்று 42 சதவீதமான இந்தியக் குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி மரணத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் போராட யார் தான் காரணம்? அவமானம்" என்று கூறுகின்றனரோ, அவரும் அவரின் வர்க்கமும் தான் இதற்கு காரணமாகும். மனித உழைப்பை சுரண்டிக் கொழுக்கும் அட்டைகளாக உள்ள இந்த சமூக அமைப்பும், அந்த அட்டைகளைப் பாதுகாக்கும் அரசமைப்பும் தான் இந்த "தேசிய அவமானத்தை" உருவாக்குகின்றது. உன் நடத்தைக்கு வெளியில், எங்கிருந்துதான், "தேசிய அவமானம்" வருகின்றது.

 

இந்திய மீனவர்கள் இந்திய "எல்லை தாண்டுவது தான்", அவர்கள் மேலான வன்முறைக்கு காரணம் என்று இந்திய மத்திய அரசு மதுரை நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இப்படி இலங்கைக் கடற்படையின் தொடர்ச்சியான குற்றங்களுக்கு, நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்து இருக்கின்றது இந்திய மத்திய அரசு. இந்த வகையில் இந்தக் குற்றத்தை செய்வதற்கான தனது பக்கத் தர்க்கத்தை முன்வைத்ததன் மூலம், இதற்கான தனது ஓத்துழைப்பை நியாயப்படுத்தி இருக்கின்றது. இலங்கைக்கடற்படை எல்லை கடந்து இனப்படுகொலைக் குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், எல்லை தாண்டிய குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், சுயவிளக்கம் ஒன்றை இந்திய அரசு வழங்கி இருக்கின்றது. மறுதளத்தில் எல்லை தாண்டியதால் தான் இந்த நிலையென்று எடுத்துக் கொண்டால்;, அவர்கள் கொல்வதும் தாக்குவதும் சரியென்ற தர்க்கத்தையும், நியாயப்படுத்தலையும் வழங்கி இருக்கின்றது. எல்லை தாண்டினால் இதுதான் தீர்வா? சர்வதேச சட்டங்கள், மனிதவுரிமை கோட்பாடுகள் அனைத்தையும், மத்திய அரசு தன் காலில் போட்டு மிதித்திருக்கின்றது. அனைத்துக்கும் "எல்லை கடத்தல்" மற்றும் "தடைசெய்யபட்ட வலை"யைத்தான் காரணமாக காட்டியிருக்கின்றது.

"போர்" அறைகூவலும், எச்சரிக்கையும். இப்படி "போர்" க்கான ஒரு புள்ளியில் இரண்டும் சந்திக்கின்றன. இப்படி ஒரே விடையத்தை பேசுகின்றனர். ஒருதரப்பு அறைகூவலாக விட, மறுதரப்பு எச்சரிக்கையை விடுக்கின்றது. இது உண்மை என்றால், தனிநபர் பயங்கரவாதத்தை நடத்தத் தயராகும் இனியொருவின் அறைகூவல் அல்லவா இது!? இதைத்தானா "புலிகள் இரண்டாவது ஆயுதப் போருக்குத் தயாராவதாக" அரச புலானாய்வுத்துறையை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகங்கள் எழுதுகின்றன!?

"தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில், புலம்பெயர்ந்தவர்கள் உள்ளடங்கிய ஒரு அறிக்கை வெளியாகியிருக்கின்றது. பிபிசி தமிழ் சேவை கூட அதை முன்னிறுத்தி பேட்டி கண்டது. குறிப்பாக இந்த அறிக்கை 1990 களில் புலிகள் வடக்கில் வாழ்ந்த முஸ்லீம் மக்களிடம் இருந்த அனைத்தையும் புடுங்கிவிட்டு துரத்திய முஸ்லீம் மக்களைப் பற்றிய கருசனையின் பெயரில் வெளியாகி இருக்கின்றது. முதலில் இதன் அரசியல் பின்னணியையும், அரசியல் அடிப்படையையும் என்ன என்பதைப் பார்ப்போம்.

 

புத்தாண்டு முதற்திகதி முதல், பிரஞ்சு மக்கள் மீதான புதிய வரிகள். மக்களின் கூலி உழைப்பில் இருந்து, உற்பத்தியில் ஈடுபடாத மூலதனம் 180 கோடி ஈரோவை மேலதிகமாக பிடுங்கும் புதிய அறிவித்தலுடன், மூலதனத்தின் நுகர்வுப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் பிறக்கின்றது. உணவகங்கள், குளிர்பானங்கள், கட்டிட வேலைகள், புத்தகங்கள், களியாட்ட நிகழ்வுகள், தொலைக்காட்சி, போக்குவரத்து ரிக்கற், தங்குவிடுதிகள் ….. என்ற பல சேவைத்துறை மற்றும் பொருட்கள் மீதான வரி 1.5 சதவீதத்தால் அதிகரிக்கின்றது. இதன் மூலம் வட்டிக்காரர்களுக்கு வட்டியைக் கொடுக்க புதிய வரிகள். பொருளாதார நெருக்கடியின் அரசியல்சாரமே இதுதான்.

குறிப்பு : 01.05.1987 இரவு மீண்டும் கண் கட்டப்பட்டது. மாத்தையா வந்தார். உண்மையை நீர் கூறவில்லை எனவே முகாம் மாற்றப்படும் என கூறினார்.

விளக்கம் : எதையும் நான் கூறாத நிலையில், தொடர்ச்சியாக அடிக்கடி சித்திரவதை செய்யக்கூடிய பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முடிவு எடுத்தனர். அத்துடன் தமது சித்திரவதையின் கோர அலறல்கள் மக்களுக்கு கேட்காத அமைதியான பிரதேசத்துக்கு கொண்டு சென்றனர். இந்த வதைமுகாமில் தான், முதன்முதலாக மாத்தையா சித்திரவதைகளில் நேரடியாக ஈடுபட்டான்.

குறிப்பு : 3ம், 4ம் நாளே உன்னுடைய காதலி இன்னார் என வந்து சொல்லப்பட்டது.