Language Selection

பி.இரயாகரன் -2012

இதுதான் அரசின் தெரிவு. இங்கு குற்றவாளிகளே நாட்டை ஆளுகின்றனர். கடத்தல், கப்பம், காணாமல் போதல் மூலம் பல ஆயிரம் பேரை நேரடியாக வழிகாட்டி கொன்றவர்கள் தான் நாட்டை தலைமை தாங்குகின்றனர். அன்று புலிகள் ராஜீவைக் கொன்ற பின் புலித்தலைவர் பிரபாகரன் மீள முடியாத அரசியல் புதைகுழியில் எப்படி சிக்கினாரோ, அதே பரிதாப நிலையில் மகிந்த குடும்பம் உள்ளது. எதைத்தான், எங்கே, யார் விசாரிப்பது. தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில், நாட்டை பாசிசமாக்குவதைத் தவிர வேறு தெரிவு கிடையாது.

ஒவ்வொரு சமூகக் கூறும் இந்தச் சமூக அமைப்பில் வர்க்கம் சார்ந்து இயங்கும் போது, ஒவ்வொரு சமூக முரண்பாட்டையும் ஒன்றுக்கு ஒன்று "சமாந்தரமாக" முன்னிறுத்துவது எதற்காக!? ஒவ்வொரு சமூக முரண்பாட்டிலும் உள்ள அடிப்படை முரண்பாடான வர்க்க அடிப்படையை மறுப்பதாகும். சமாந்தரங்கள் என்றும் ஒரு புள்ளியில் சந்திப்பதில்லை. ஆக இது ஒரு புள்ளியில் ஐக்கியப்படுவதில்லை. இந்தச் சமூக அமைப்பில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறையையும் மறுக்கின்ற, ஒரு புள்ளியிலான ஐக்கியத்துக்கு பதில், சமாந்தரமாக இருத்தல் என்பது ஐக்கியத்தை மறுத்தலாகும். இந்த வகையில் ஒவ்வொரு சிந்தனையும், செயலும், நோக்கமும் கூட வர்க்கம் சார்ந்தது.

 

ஆரியச் சடங்கை அடிப்படையாக கொண்டு உருவானதுதான் தீண்டாமைச் சாதியம். இந்த வகையில் உருவான வரலாறு, எப்படி எந்தக் காரணத்தினால் உருவானது.

குறிப்பு : விஜிதரனை யார் கடத்தியது என்றான். நான் நீங்கள் தான் என்று சொல்ல ஏன் என்றார். விஜிக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சனையும் இல்லை. அமைப்புக் குழுவின் தோற்றமும் அது புலிக்கு எதிராக போராடியதும், அதில் விஜி முன்நின்றதும் விஜிதரன் கடத்தப்பட்டதற்கான காரணம் என்றேன்.

தன் சொந்த புதைகுழியை வெட்டியபடி, தன் மேல் மண்ணை அள்ளிப் போட்டு புதைக்கக் கோருகின்றது இலங்கை அரசு. இதனைத்தான் அன்று புலிகள் செய்தனர். புலிகள் தம்மை பாதுகாக்க மக்களை பலிகொடுத்தும், இறுதியில் சரணடைந்த பின்னணியில்  படுகொலைக்குள்ளாகி அழிந்தனர். இந்த வகையில் இலங்கை அரசும், தன்னைத் தானே சர்வதேச முரண்பாட்டுகளுக்குள் புதைத்து வருகின்றது.

அரசியல் சதியுடன் கூடிய ஊடக விபச்சாரமே, புலித் தேசியத்தின் பின் பரவலாக திட்டமிட்டு அரங்கேறியது. இதன் பின்னணியில் இவற்றைப் புனைந்தவர்களுக்கு, முன்கூட்டியே சனல் 4 வெளியிட இருக்கும் காட்சிகள் என்ன என்பதும் தெரிந்திருக்கின்றது. சனல் 4 காட்சிகள் பல உண்மைகள் மூடிமறைக்கப்பட்ட பின்னணியில், சிலரின் தேவைகளுக்காக முடக்கப்பட்டு காட்சியாக்கப்பட்டு வெளிவருகின்றது. இதை நாம் தனியாக வேறு ஒரு இடத்தில் ஆராய்வோம். இங்கு பிரபாகரனை கேட்டு மகனை கொன்றதான புனைவை ஆராய்வோம்.

சமூகத்தை வியாக்கியானம் செய்யும் அறிவுப்புலமை சார்ந்த பிழைப்புவாத பிரமுகர் லும்பன் அரசியலா அல்லது சமூகத்தை தலைகீழாகப் புரட்டிப் போடும் புரட்சியாளர்களின் நடைமுறை அரசியலா என்பதை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் - இலக்கிய சமூகக் கூறுகளை குறிப்பாகவும் நுட்பமாகவும் ஆராய்ந்து தெளிவுபெற்று நாம் அணி திரள வேண்டும். எது போலி எது உண்மை என்பது, மக்களுடன் அவர்கள் கொண்டுள்ள ஈடுபாடும் அதன்பாலான அவர்களின் நடைமுறையும்தான் தீர்மானிக்கின்றது. நடைமுறையைக் கோராத, நடைமுறையில் பங்குகொள்ளாத வெளியில், தனிப்பட்ட கருத்துகள் வியாக்கியானங்கள் தனிநபர் பிழைப்புவாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் தான் அரசியல் விளைவாக தருகின்றது.

நெடுந்தீவைச் சேர்ந்த 12 வயதேயான சிறுமி, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகின்றாள். இப்படி நடந்த இந்த அவலத்துக்கு யார் எல்லாம் பொறுப்பாளிகள்? குற்றத்தை இழைத்த குற்றவாளி மீது மட்டும் குற்றம் சாட்டுவதன் மூலம், பொறுப்பேற்கத் தவறுகின்ற அரசியல் பின்னணியில் தான் இந்தக் குற்றங்கள் தொடருகின்றது.

ஈபிடிபியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) பா.உ. குத்துக்கரணமடித்து வெளியிட்ட அறிக்கை இதற்கு நல்ல உதாரணம். அவர்கள் வெளியிட்ட அறிக்கை முதலில் உண்மையை மூடிமறைக்கின்றது. அதன்பின் அறிக்கை திரிக்கப்பட்டு இரண்டு விதமாக வெளிவருகின்றது. அவற்றை நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள். யார் குற்றவாளிகளுக்கு உடந்தையாக முன்நின்று தொடர்ந்து அரசியல் செய்கின்றனர் என்பதை இனங்காண, இந்தத் திரிபான வரிகள் போதுமானது. இந்தத் திரிபுக்கு வெளியில் உண்மை என்பது, புதைக்கப்பட்டு இருக்கின்றது.

தம்மை முதன்மைப்படுத்தி தமக்காக வாழத்தெரிந்த அரசியல் இலக்கியப் பிரமுகர்கள், சமூகத்துக்காக தம்மை முதன்மைப்படுத்தி வாழ்ந்தவர்களையும் வாழ்பவர்களையும், இதன் பொருட்டு தம் உயிரை இழந்தவர்கள் எல்லாம் வாழத் தெரியாதவர்களாகக் காட்டுகின்றனர். பிரமுகராக இருப்பதற்கே அரசியல் - இலக்கியம் என்று சொல்லும் அளவுக்கு விளக்கங்கள் வியாக்கியானங்கள். மக்களுக்கான அரசியல் இலக்கிய முயற்சியா? அல்லது பிரமுகராக இருப்பதற்கா அரசியல் இலக்கிய முயற்சியா? என்ற சுய கேள்வியை எம்முன்னும் தள்ளுகின்றனர். மக்களுக்காக இயங்குவதை நிறுத்துங்கள் என்று சொல்லாமல் சொல்லுகின்றனர். இப்படி புலத்தில் இருந்து மண் வரை பிரமுகர்கள் கூடுகின்றனர். மக்களை அணிதிரட்டுவதை மறுத்து, அதற்காக அரசியல் இலக்கிய முயற்சி செய்வதை மறுத்து, நடைமுறையில் தம் கருத்துக்காக போராடுவதை மறுத்து, சமூகத்தையும் சமூக முரண்பாட்டையும் பயன்படுத்தி பிரமுகராக இருக்க முனைகின்றனர்.

என்மண்குழந்தை லக்சினியை தின்றவரே

பேய்களே
பிணந்தின்னிக் கூட்டமே
வன்னிவரை தின்றடங்கா கூட்டே
யார் ஆட்சியானாலும் கால்கழுவி
வாலாட்டி எலும்பெறிய கவ்விப்போ இரணியரே
யார் கேட்டு எம்மண்ணை சூழ்ந்து கொண்டாய்

தாங்கள் ஒடுக்குபவர்களுடன் இல்லை, ஒடுக்கப்படும் மக்களுடனும் இல்லை என்கின்றது "சாம்பல்" கோட்பாடு. ஏனெனின் இப்படி இருத்தல் "ஒற்றைப்பரிமாண அரசியல்", "ஒன்றுக்கொன்று முரணான எதிரெதிரான நோக்குநிலைகள்" என்கின்றனர். இதுவே இவர்களின் "சாம்பல்" கோட்பாட்டுத் தத்துவம். பிரமுகரான தங்கள் சுயஇருப்பை மையப்படுத்தி "ஒரு வாழும் யதார்த்தம்" என்று அவர்கள் கருதுவது இதைத்தான். இதன் பின்னணியில் தான் அரசியல் இலக்கிய புலமைசார் மோசடிகள்.

பிரிவினையை முன்னிறுத்தும் குறுந் தமிழ்தேசியத்தை நிராகரிக்காத, சுயநிர்ணய அடிப்படையில் ஜக்கியத்துக்கான தேசியத்தை முன்வைக்காத, அரசியல் பார்வைகள் அனைத்தும், ரகுமான் ஜானின் கூற்றுப்படி அயோக்கியத்தனமானது தான். "தம்மை முற்போக்காளர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் பிரகடனப்படுத்திக்கொண்டு இதே தவறை செய்யும் போது அது அவர்களது அறியாமையைக் காட்டவில்லை. மாறாக அவர்களது அயோக்கியத்தனத்தை மாத்திரமே கோடிட்டுக் காட்டுகிறது." இதைக் கூறிய மே18 ரகுமான் கூற்று, அவருக்கே விதிவிலக்கின்றி பொருந்துகின்றது. பிரிவினையை முன்னிறுத்தும் குறுந்தேசியத்தை நிராகரிக்காத, அதன் பின் நின்று செய்யும் ஆய்வுகள், விளக்கங்கள், தர்க்கங்கள்;, விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள் அனைத்தும் போலியானது புரட்டுத்தனமானது. இங்கு குறுந்தேசிய "பிரிவினை" கூட இதே சமூகத்தின் பின்னணியில் வால்பிடித்து முன்வைத்தவைதான்;. ஏன் ரகுமான் ஜான் குறுக்கி முன்வைக்கும் "தன்னியல்புவாத" போக்கையும், அரசியல் விளக்கத்தையும் தாண்டியதல்ல "பிரிவினை". ஆக இங்கு அரசியல் அயோக்கியர்கள், தங்களைத் தாங்களே இங்கு அம்பலப்படுத்திக் கொள்கின்றனர்.

மக்களை அணிதிரட்ட முனையாத பிரமுகர்த்தன அரசியல் மற்றும் இலக்கிய முகமூடிகளின் பின்னணியிலான, புலி மீதான திடீர் விமர்சனங்கள் மோசடித்தனமானது. இது தன் இருப்பை மையப்படுத்தி மக்களை மோசடி செய்யும், அறிவு சார்ந்த குறுகிய அற்ப உணர்வாகும். அறிவு சார்ந்த தன்னை மையப்படுத்தி முதன்மைப்படுத்தும் பிரமுகர்த்தனம், கருத்துச் சுதந்திரத்தின் பின்னால் ஒன்றையொன்று சார்ந்து நின்று முதுகுசொறிவதன் மூலம் கூடிக் கும்மியடிக்கின்றது. இது மக்களை சார்ந்து நின்று, மக்களை அணிதிரட்ட முன்வருவதில்லை.

பாசிட்டுக்கள் மீண்டும் மூடிமறைத்து களமிறங்குகின்றனர். 1980 களில் வர்க்கரீதியான சமூக விடுதலையைப் பேசியபடி தான், பாசிசத்தை புலிகள் நிறுவினர். பார்க்க "சோசலிசத் தமிழீழம் - விடுதலைப்புலிகள் இயக்கமும் தேசிய விடுதலைப் போராட்டமும்" என்ற புலிகள் முன்வைத்த அரசியல் அறிக்கையை.

ஒட்டுமொத்த மக்களையும் மோசடி செய்யாமல் பாசிசம் வெற்றி பெறுவதில்லை. இன்று புலிகள் பாசிச இயக்கமல்ல என்று கூறுவதும் இந்த அரசியல் அடிப்படையில் தான். மீண்டும் புலி அரசியலை நிறுவ, அரசியல் மோசடியில் இறங்குகின்றனர்.

மனிதவுரிமையை நிலைநாட்டவா? தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு தீர்வு காணவா? தமிழ் மக்களின் மீதான குற்றங்களுக்கு நீதி வழங்கவா? ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவா? தேசத்தின் சுயாதிபத்தியத்தை பாதுகாக்கவா? சொல்லுங்கள்? இதனால் எதற்காவது நியாயம் கிடைக்குமா? இல்லை நியாயம் கிடைக்கும் என்று கூறுகின்ற, காட்டுகின்ற அனைத்தும், ஏன் இந்த மோசடியை அம்பலப்படுத்தாத அனைத்தும் பொய்யானது புரட்டுத்தனமானது. இதை ஒட்டுமொத்தமாக முன்வைத்துக் கோராத, போராடாத அனைத்தும் மோசடியானது.

குறிப்பு : ஐந்தாம் படை பற்றி கேள்வி கேட்டு, அதைப் பற்றி விளக்கமும் தந்தார்.

விளக்கம் : நீங்கள் எல்லாம் ஐந்தாம் படை என்று மிரட்டியதுடன், கைக்கூலிகள் என்றார். யாருடைய கைக்கூலிகள் என்றதை மட்டும் அவர்கள் சொல்லவில்லை. அதாவது நாங்கள் மக்களின் கைக்கூலிகள் என்பதால், அதை மட்டும் அவர் சொல்லவில்லை. மக்களின் விடுதலையை நேசிப்பது கைக்கூலித்தனம் என, புலிகளின் பாசிச அகராதி கூறுகின்றது. மக்கள் நிலவும் சமுதாயத்தில் எதிர்கொள்வது, வெறும் இனவாத ஒடுக்குமுறையை மட்டுமல்ல. சாதியம், ஆணாதிக்கம், சுரண்டல், பிரதேசவாதம் என்று பரந்த தளத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். இதற்கு எதிராக போராடுவது, கைக்கூலித்தனம் என்று தான் வலதுசாரிய புலிகளின் பாசிச அகராதி கூறுகின்றது. தாம் மட்டும் அரசுக்கு எதிராக போராடுவதையே, விடுதலைப் போராட்டம் என்கின்றனர். சாதியத்தை, ஆணாதிக்கத்தை, வர்க்க ஒடுக்கமுறையை எதிர்த்து போராடுவது, ஐந்தாம் படைக்குரிய செயல் என்றான். மக்களின் அடிப்படையான விடுதலைப் போராட்டம், விடுதலைப் புலிகள் சுரண்டி வாழும் பாசிச சொகுசு வாழ்க்கையை அழித்தொழிக்கும். அதனால் இதை ஐந்தாம் படைக்குரிய செயலாக வருணித்து, மக்களை நேசித்த தேசப் பற்றாளர்களை கொன்று ஒழித்தனர்.

வேதமோ வேத-ஆரிய வரலாறாகும். இது அவர்கள் இந்தியாவில் நிலைபெறல் வரையிலான ஒரு காலத்தை உள்ளடக்கியதே.இது குறைந்தபட்சம் உழைத்து வாழும் மனித நாகரிகத்தை ஒரு சமூக வாழ்வாக கொண்ட, ஒரு சமூகத்தை அடிப்படையாகக் கொண்டவையல்ல.

முழு இலங்கை மக்கள் மேலான யுத்தம் ஒன்றை அரசு தொடங்கி இருக்கின்றது. இந்த யுத்தத்துக்கு இன அடையாளம் கிடையாது. சாதி அடையாளம் கிடையாது. மத அடையாளம் கிடையாது. ஆண் பெண் பால் அடையாளம் கிடையாது. இப்படி எந்தக் குறுகிய அடையாளமும் கிடையாது. முழு மக்களையும் பாதிக்கும் இந்த யுத்தத்தின் விளைவுகளை அனுபவிப்பதில் மட்டும்தான், இந்த அடையாளங்களும் வேறுபாடு;களும் குறிப்பாக வேறுபடுகின்றது. இப்படி அரசு வர்க்கரீதியான யுத்தத்தை முழு மக்கள் மேலும் நடத்துகின்றது. இனவழிப்பு யுத்தத்தின் பின், அரசு முழு மக்கள் மேலான வர்க்க ரீதியான ஒரு யுத்தத்தை உலக வங்கியின் துணையுடன் தொடங்கி இருக்கின்றது. பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் முதல் இது யாரையும் விட்டு வைக்கவில்லை.

மேற்கு சார்பாக இந்திய மேலாதிக்கத்தை இலங்கையில் நிறுவுவதில் ஏற்பட்ட தோல்விதான், அமெரிக்காவை நேரடியாகக் களத்தில் இறக்கியிருக்கின்றது. இந்தியாவின் இழுபடும் நழுவல் ராஜதந்திரத்துக்குப் பதில், வெளிப்படையான மிரட்டலை இலங்கையில் வைத்தே அமெரிக்கா விட்டிருக்கின்றது.

தென்னாசியாவில் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கமே மேற்கின் உலக மேலாதிக்கத்துடன் இணைந்துதான் இயங்குகின்றது. ஒன்றையொன்று சார்ந்தது. இந்த நிலையில் இலங்கை அரசு மேற்குக்கு எதிரான ஏகாதிபத்தியங்களான ருசியா, சீனா முதல் ஈரான் வரை இலங்கையில் முன்னிறுத்திய, அதன் அணுகுமுறை அமெரிக்காவின் வெளிப்படையான எதிர் தன்மை கொண்ட தலையீடாக மாறுகின்றது.

கிரேக்க நெருக்கடி பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும், பொருளாதார வல்லுனர்களும் மக்களுக்கு எதிராக செய்யும் தொடர் பிரச்சாரத்தை தாண்டியது எதார்த்த உண்மை. கிரேக்கத்தில் சட்டப்படி இருந்த குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை 22 சதவீதத்தால் குறைப்பதன் மூலம் கிரேக்க நெருக்கடிக்கு தீர்வு என்பது, யாருக்கு என்பதை இது தெளிவாக அம்பலமாக்கி விடுகின்றது. இங்கு ஏழைகள் மேலும் ஏழையாவது நெருக்கடியல்ல என்பதுதான், தேர்ந்தெடுத்த ஐரோப்பிய "ஜனநாயக"வாதிகளினதும் மற்றும் உலக வங்கியினதும் கொள்கையாகும். ஏழைகளை மேலும் ஏழையாக்குவதன் மூலம், யாருக்கு எதை எப்படி தீர்வு காண்கின்றனர்? இப்படி மக்கள்விரோத அரசாக தன்னை முன்னிறுத்தி நிற்கின்றது. "மக்கள் தேர்ந்தெடுத்த" பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு கொடுத்த பரிசு இது. இதுதான் பாராளுமன்ற "ஜனநாயகம்". இதுதான் ஐரோப்பிய நாடுகளை ஆளும் "ஜனநாயகவாதிகளிள்" பொதுக் கொள்கையாகி, அதை கிரேக்கத்தில் திணித்து பரிசோதிக்கின்றது. நாளை ஐரோப்பா எங்கும், உலகமெங்கும் இதுதான் கொள்கையாக, இதுவே மூலதனத்தின் அடிப்படைக் கொள்கையாக மாறவுள்ளது.