Language Selection

பி.இரயாகரன் -2010

அறிவு, நாணயம், உண்மை என அனைத்தையும் அடகுவைத்த பின், இருவர் பேசிக்கொண்டது தான் தேசம்நெற்றில் வெளிவந்துள்ளது. என்னவோ தெரியவில்லை, தேசம்நெற்  எமக்குள் பரிமாறிய ஈமெயிலை எப்படி பெற்று வெளியிட்டதோ, அதே வழியில் இப் பேட்டியும் வெளிவந்துள்ளது ஆச்சரியமானதல்ல. அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முடியாது தேசம்நெற் என் பெயரில் கூட ஈமெயில் தயாரித்து, அதை வெளியிட்டு அம்பலமானது பழைய கதை.

இந்த வகையில் பேராசிரியர், "ஊடகவியலாளர்" என இருவர் சேர்ந்து, எம்மை எதிர் கொள்ளுகின்றனர். சம்பவத்தை திரித்து புரட்டுவதன் மூலம், கதை சொல்லுகின்றனர். கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் இணைந்து நேராவது போல், இங்கு கேள்விகள்  பதில்கள் மூலம் தங்களை நேராக்கிக் காட்ட முனைகின்றனர்.    

ஆரியர் முற்றாக தமது முந்தைய சமுதாயத் தொடர்ச்சியையும் வாழ்வையும் இழந்தே சிதைந்தனர். இதனால் அந்த சடங்குமுறை கொண்டிருந்த வாழ்வுமுறையை இழந்ததால், உயிரற்றதாகியது. அது உயிர் உள்ள சமூகத்தில், வெறும் சடங்கு மந்திரமாக மாறியது. சிலரின் பிழைப்புக்கான சடங்காகியது.

ஒருபுறம் மக்களை அணிதிரட்டும் அரசியல் மறுக்கப்படுகின்றது. மறுபுறம் மக்கள் அரசியலுக்கான அனைத்தையும் மறுக்கின்ற பாசிசம். இரண்டும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக் கொண்டு இலங்கையிலும், புலத்திலும் இயங்குகின்றது.

புலிகள் இருந்த காலத்தில் புலிப் பாசிசம், தானல்லாத எதையும் அனுமதிக்கவில்லை. மறுபக்கத்தில் புலியல்லாத அரசியல் தளத்தில் மக்கள் அரசியலை துறந்ததுடன், மக்களை அணிதிரட்ட தாம் அணிதிரள்வதை மறுத்து மக்களின் முதுகில் குத்தினர்.

நடந்த போராட்டம் என்ன என்று கூறாது, "மார்க்சியம்;" மூலம் அதை "தமிழ் மக்களின் போராட்டம்" என்கின்றார். "மார்க்சியம்" பேசிய பேராசிரியர் சண்முகரத்தினம். புலியிசம் பேசுகின்ற அரசியல்தளத்தில் நின்று தான் இதை இன்று உரைக்கின்றார். புலியையும், இதன் வலதுசாரிய அரசியல் அடித்தளத்தையும், அதன் ஏகாதிபத்திய ஓட்டுண்ணித்தனத்தையும் காப்பாற்ற, சண்முகரத்தினம் என்ற "மார்க்சிய" சந்தர்ப்பவாதி தன் முற்போக்கு வேட்டியை கோமணமாக்கிக் கொண்டு புதிதாக களத்தில் இறங்கியுள்ளார்.

சாதிய ஒழிப்புப் போராட்டத்தில் இந்த கேள்வி மிக முக்கியமானதாகின்றது. வரலாற்று ரீதியாக இந்த கேள்விக்கு பதிலளிப்பது என்பது மிகவும் அவசியமானதாகின்றது. ஆனால் இது மிகவும் சிக்கலுக்குரிய ஒன்றாகவுமுள்ளது. வரலாற்று ஆய்வுகளில் உள்ள குளறுபடிகள், அதை மேலும் மேலும் கடினமாக்கி, அதை ஆழ்ந்த சிக்கலுக்கு உள்ளாக்குகின்றது.

மேற்கத்தைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இன்று காய் நகர்தல் தான், தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டம் என்கின்றனர். இப்படி வலது இடது அரசியல் பொறுக்கிகள், ஒரு புள்ளியில் சந்திக்கத் தொடங்கியுள்ளனர். இனவாதம் பேசும் வலதுசாரி தமிழ்நெற்றில், இடதுசாரிய சண்முகரத்தினம் கூறுவதைப் பார்ப்போம்.

"When sections of articulating Tamils fail at such a time as this in justifying the need for Tamil independence and in independently demanding the powers to recognize Tamil liberation, some world leftist circles currently misinterpret it as pro-imperialist tendency inherent to the Tamil struggle. Colombo is now capitalizing on it for justifying its genocide as its struggle against an imperialist plot and thus painting a sympathetic picture to the naive third world that it is a state standing up to the powers. The Tamil struggle is doubly penalized by the internal failure of its elite, Tamil circles pointed out, adding that some of the best Tamil minds should come forward in arguing for the due status of the struggle in the international arena, leading to Eezham Tamil independence."

தமிழ்மக்களும், அதன் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்றாக பயணிக்கவில்லை. பிளவுபட்ட தளத்தில், மக்களின் எதிரிகளுடன் தான் அரசியல் பிரதிநிதிகள் கூடிநிற்கின்றனர்.    ஏகாதிபத்தியங்களும், அன்னிய சக்திகளும் நடத்துகின்ற தங்கள் நலன் சார்ந்த தலையீடுகளினூடு தான், அரசியல் பிரதிநிதிகள் கூடி மக்களை காட்டிக்கொடுக்கின்றனர். அன்று இந்தியா வழங்கிய பயிற்சி முதல் இன்று சர்வதேச நாடுகள் மனிதவுரிமை பற்றி வடிக்கும் முதலைக் கண்ணீர் வரை, இவை அனைத்தும் அவர்களின் சொந்த நலன் சார்ந்ததுதான். மக்கள் நலன் சார்ந்ததல்ல. தமிழ் அரசியல் பிரிதிநிதிகள் இதன் மூலம் தமிழ் மக்களின் விடிவைக் காட்டுவதன் பின்னணியில், தங்கள் சொந்த நலனை அடைய முனைகின்றனர்.

மக்களை அணிதிரட்ட மறுப்பது பம்மாத்து அரசியலாகும். அடையாள அரசியலும், பிரமுகர்தனமும் கொண்ட புலியல்லாத அரசியலோ, மக்கள் விரோதத் தன்மை கொண்டது. மக்களின் அரசியல் விழிப்புணர்வற்ற அரசியல் நிலைதான், அடையாள அரசியலுக்கும் பிரமுகர்த்தன அரசியலுக்குமான மூலதனமாகும். மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதை எதிர்ப்பதில், இவர்களின் எதிர்ப்புரட்சி அரசியல் பாத்திரம் இப்படி முதன்மை பெறுகின்றது. 

நோர்வே ஈழத் தமிழர் பேரவையும், அதன் தலைவர் பஞ்சகுலசிங்கமும் சொல்வது இதைத்தான். புலிப் பினாமி என்பதை மூடிமறைக்க நாங்கள் புலிகள் அல்ல என்பதும், புலியை பாதுகாக்க அவர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்று கூறுவதும், இவர்கள் தங்களை மூடிமறைத்து சொல்லும் அரசியல் மந்திரமாகும். புலியைப் பற்றி பேசாமல், அரசைப் பற்றி மட்டும் பேசும் புலி மந்திரமும் இதில் ஒரு வகை. இப்படி வலதுசாரியம் தன்னை அரசியல் ரீதியாக நிலைநிறுத்த, தன்னை மூடிமறைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்கின்றது.  இடதுசாரித்தனத்தைப் பயன்படுத்தி தன்னை மிதப்பாக்கவும், அது எல்லா விதமான நரி வேசமும் போடுகின்றது. தன்னை தீவிர அரசு எதிர்ப்பாளனாக காட்டிக் கொள்ளவும், மக்களின் அவலத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யவும் கூட, அது தயங்குவதில்லை. தான் மட்டும்தான் அதை பேசுவதாகவும், செயல்படுவதாகவும் காட்டி அதை நிறுவ முனைகின்றது. அதே தளத்தில் புலி வலதுசாரியத்தை மூடிமறைப்பதன் மூலமும், அதைப் பேசாது தவிர்ப்பதன் மூலமும், தன்னை அரசியல் ரீதியாக முன்னிறுத்துகின்றது. பினாமிப் பெயர்கள், இடதுசாரி வேசம், தனிமனித பாதிப்பு … என்று அனைத்தையும் அணிந்து கொண்டு மிதக்க முனைகின்றது.

இனம் சார்ந்த வலதுசாரிய உணர்வும், உணர்ச்சியும், மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதிலும் பார்க்க வெடிகுண்டில் தான் அதிக நம்பிக்கை கொள்ள வைக்கின்றது. அதுவும் பிழைப்புவாதிகளின் உணர்ச்சிப் பேச்சை நம்பி பலியானவர்கள், தனிமைப்பட்டுப் போன விரக்தி நிலையில் தனிநபர் பயங்கரவாதத்தை நாடுகின்றனர். ஏன் அரசியல் தற்கொலையைக் கூட நாடுகின்றனர். இப்படிபட்டவர்கள் எந்த மக்களையும் அணிதிரட்ட முடியாது என்று கருதி, தன்னளவில் குண்டு வெடிப்பை முன்வைக்கின்றனர். இந்தக் குண்டு வெடிப்பு, மக்களை மேலும் இவர்களில் இருந்து தனிமைப்படுத்துகின்றது. மக்களை மேலும் மேலும் இவை செயலற்றதாக்குகின்றது.

சாதிய தோற்றம் மீதான திரிபுகளும், அதன் அடிப்படைகளுமே, எங்கும் சாதி பற்றி அறிவாக உள்ளது.  சாதியம் எப்படி தோன்றியது? இதன் மீதான தர்க்கங்கள், வாதங்கள், முடிவுகள் பற்பல திரிபுகளாகவுள்ளது. இது பார்ப்பனியத்தின் அடிக்கட்டுமானத்தையே பாதுகாக்கின்றது. சாதிய மேல்கட்டுமானத்தை அசைப்பதன் மூலம், பார்ப்பனியத்தை தக்கவைக்கின்ற போக்கு ஆதிக்கம் பெற்று காணப்படுகின்றது. இப்படி சாதியம் தோற்றம் பற்றிய திரிபுகளின், மையமான அடிப்படையான எடுகோள்கள் எவை. 

தனிமனிதனிடம் "காதலை", "திருமண பந்தங்களையும்" வடிகட்ட கோருகின்றது. நிபந்தனை போடுகின்றது. நீ நிபந்தனை பூர்த்தி செய்யாவிட்டால் சேர்ந்து வாழமுடியாது என்கின்றது. இப்படியொரு கொடுமையான பிரிட்டிஸ் சட்டம். தனிமனித உரிமைகளை மறுக்கும் சட்டம். நீயே அதை செய், இல்லையென்றால் சட்டப்படி சேர்ந்து வாழ இடமில்லை என்கின்றது. 

அது என்னடா சட்டம் என்றால், ஆங்கிலம் தெரியாதவர்களை நீங்கள் திருமணம் செய்யக் கூடாது என்கின்றது. அப்படிச் செய்தால் அவர்கள் சேர்ந்து வாழ நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டம் போட்டு சொல்லுகின்றார்கள். அன்று செவ்விந்தியர்களைக் கொன்றால் தலைக்கு இவ்வளவு பணம் என்று சட்டம் போட்ட ஆண்ட பரம்பரை இது. அன்று ஆண், பெண், குழந்தை, செவ்விந்திய பிரிவுகளை வகைப்படுத்தி, ஒவ்வொரு தலைக்கும்  இவ்வளவு என்று கூறி, கொன்று குவித்ததற்கு பணம்கொடுத்து இதில் கொழுத்த பரம்பரைதான், இந்த சட்டத்தைப் போடுகின்றது.

பேரினவாதம் மக்களை பிரித்து பிளந்து அதில் குளிர்காய்கின்றது. இதைத்தான் தமிழ் தேசியமும் செய்தது, செய்கின்றது. தமிழ்தேசியம் இன்று செய்ய வேண்டியது, இதை மறுத்து போராடுவதுதான். சிங்கள மக்கள் எங்கள் எதிரிகள் அல்ல, இனவாதமும் அதை முன்வைக்கும் அரசும் தான் எமது எதிரி. இதைக் கூறி,  தமிழ் மக்களை அணிதிரட்ட வேண்டும். இதைச்செய்யாத அனைத்தும், தமிழ் இனவாதம் தான்.

புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் தங்கள் வலதுசாரி அரசியலுடன், போராட்டத்தை அழித்து நாசமாக்கிய கதை ஒருபுறம். மறுபக்கத்தில் இதை எதிர்கொள்ள வேண்டிய இடதுசாரிகள், மக்களின் முதுகில் குத்திய துரோகம் மறுபுறம். இதுதான் மாபெரும் துரோகம். இது இன்றும் தன்னை தொடர்ந்து மூடிமறைக்கின்றது. இதைத்தான் ரகுமான் ஜான் "ஈழவிடுதலைப் போராட்டம் : ஒரு மீளாய்வை நோக்கி…" என்று கூறிக்கொண்டு, அதை மூடிமறைக்கும் முதன்மையான சந்தர்ப்பவாதியாக புலிப் பாசிட்டாகவே கொள்கை விளக்கம் கொடுத்து செயல்படுகின்றார். அவரின் அரசியல் நேர்மை என்ன என்பதை, அவரைச் சுற்றி நடந்த துரோகத்தை மூடிமறைப்பதில் இருந்துதான், நாம் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.

வினவு எதிர்ப்பு ஆணாதிக்க அரசியல், சந்தனமுல்லையையும், லீனாவையும் ஒன்றாகக் காட்ட முனைந்தது. சந்தனமுல்லை விவகாரத்துக்குள், லீனாவைக் கூசுவினர். இப்படி அனைவரும் ஆணாதிக்க பரிவட்டத்தைக் கட்டிக்கொண்டு, வினவு எதிர்ப்பு சின்டிகேட்டை போட்டுக்கொண்டு, எல்லா சமூக ஒடுக்கும் பிரிவுகளும் களத்தில் குய்யோ முறையோவென கும்மியடித்தன.

கொன்றவனை மறுபடியும் கொல்லும் குரூரம், மகிந்த சிந்தனையில் தான் எழுகின்றது. பாரிய மனிதப் படுகொலைகள் மூலம் போர்க்குற்றத்தைச் செய்த கூட்டம், செய்யாத கொலையைச் செய்ததாக மற்றவன் மேல் பழி சுமத்துகின்றது. முறைகேடான சமூக விரோத பேரினவாத அரசியல், இப்படித்தான் புலத்தில் அரங்கேறுகின்றது. பேரினவாத பாசிசம் உண்மைகளை புதைப்பதும், பொய் புரட்டுகளில் அரசியல் செய்வதைத் தவிர, அதற்கு வேறு எந்த அரசியல்  வழியுமிருப்பதில்லை. தமிழ்மக்களின் உரிமைகளை வழங்கி, புலியை எதிர்கொள்ள அரசியல்  அதற்கில்லை.

வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவுவின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டையே எதிர்க்கின்றனர். இந்த எதிர்ப்பு என்பது பொதுவானது. குறிப்பாக இந்த விடையத்தில் ஆணாதிக்கம் அம்பலமாவதைத் தடுத்து, ஆணாதிக்கத்துக்குள்ளேயே தீர்வைக் காட்ட முனைகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணை, தமது வலைக்குள் கட்டி வைக்க முனைகின்றனர். இந்த வகையில் வினவுவை நோண்டி, இந்தா இதைப் பார் என்று தங்கள் ஆணாதிக்க வக்கிரத்தை மூடி மறைத்துக்கொண்டு காட்ட முனைகின்றனர். வினவு தளத்தைக் கடந்து, அதன் அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். இந்த வகையில் வினவு தளம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை கையில் எடுப்பதால், ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பு பலமானதாக உள்ளது. இதனால் வினவுக்கான எதிர்ப்பு, பலமாக பல முனையில் வெளிப்படுகின்றது.
 

சில நாட்களாக பதிவுலகம், இரண்டாகப் பிளவுண்டு கிடக்கின்றது. நண்பர்கள் எதிரிகளாகின்றனர். எதிரிகள் நண்பர்களாகின்றனர். எதிரிக்கு எதிராக புதிய கூட்டுகள். ஆம் ஆணாதிக்கம், பார்ப்பனியம், சாதியம் முதல் வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கும் கூட்டமெல்லாம் ஒன்றாக பதிவுலகில் காட்சியளிக்கின்றது.

இலங்கையில் சீன ஆதிக்கம் பற்றி, சதா தமிழ் இனவாதிகள் புலம்புகின்றனர். இதன் மூலம் இந்திய நலன்களும், இந்திய ஆதிக்கமும் இந்து சமுத்திரத்தில் பறிபோவதாக கூறி,  தமிழ் இனவாத புலி அரசியல் செய்கின்றனர்.

தமிழீழம் என்ற கோசம் பிரிவினையை முன்னிறுத்தி, சிங்கள மக்களுடனான ஐக்கியத்தை நிராகரித்து எழுந்தது. தமிழினவாத வலதுசாரியம், என்றும் ஐக்கியத்தைக் கோரும் சுயநிர்ணயத்தைக் குழிதோண்டிப் புதைத்து வந்தது. சிங்களமக்களை ஐக்கியப்படுத்தும், சுயநிர்ணயத்தை மறுத்தே அது தமிழீழம் என்றது. சுயநிர்ணயமறுப்பே, தமிழீழத்தின் சித்தாந்தமாகவும் நடைமுறையாகவும் மாறியது. இதுவே தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைகளைக் கூட மறுக்கும், வலதுசாரிய தமிழ் பாசிசமாக மாறியது.