Language Selection

பி.இரயாகரன் -2010

நீண்ட ஒரு அரசியல் வேலையூடாக தான், யாழ்பல்கலைக்கழக மாணவர் போராட்டம் அரசியல் மயமானது. இதற்கு மாறாக திடீரென்று அரசியல் அற்புதங்கள் நடப்பதில்லை. அன்று போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக் குழுவின் பெரும்பான்மை, அரசியலற்ற சாதாரண மாணவர்களைக் கொண்டதாகவே இருந்தது. இதைச் சுற்றி இயங்கியவர்கள், அரசியலில் முன்னேறிய பிரிவாகும். இவர்களின்றி, இந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து இருக்க முடியாது. 

1930 களில் கிட்லரின் தலைமையிலான நாசிய ஜெர்மனி, யூதர்களுக்கு எதிரான பல இன, நிறத் தடைகளைக் கொண்டு வந்தது. அதுபோல்தான் இந்தத் தடையும். அன்று போல் இன்றும், சொந்த மக்களை ஏமாற்றும் தடைச் சட்டங்கள்.

சர்வதேச ஒழுங்கை உலகில் பேணிக் கொள்ளும் மேற்குநாடுகளோ, இஸ்லாமிய மத வன்முறையைக் காட்டித்தான் தன்னை நிலைநிறுத்துகின்றது. இதன் மூலம் ஈராக்கிய எண்ணை வயல், ஆப்கானிஸ்தானில் எரிவாயு முதல் கனிம வளங்கள் அனைத்தையும் மேற்கு கொள்ளையிடுகின்றது. தங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை, வெறும் மத வன்முறையாக மட்டும் காட்டுகின்றது. தங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிரானதாக, அது காட்டுவது கிடையாது.

வர்க்க அரசியலை மூடிமறைக்க கடந்தகால போராட்டத்தினை "தன்னியல்பானது" என்று திரித்து காட்டுகின்ற "மே18" அரசியல். கடந்தகால போராட்டங்களை மறுப்பதுடன், நடந்தவைகளை தன்னியல்பானதாகவும் காட்ட முனைகின்றது. இந்த அரசியலின் எடுபிடியாக தன்னை மூடிமறைத்து இயங்கும் தேசம்நெற், தன்னை முனைப்பாக்கி காட்ட வரலாற்றை திரிக்கும் நாவலனின் துணையுடன், யாழ் பல்கலைக்கழகப் போராட்டத்தை "யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் தன்னெழுச்சியான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது." என்கின்றது.

சமூக மாற்றத்தை கோராமல், சமூகத்தை திரிப்பது ஏன்? சமூகத்தில் நடந்த மாற்றங்களை, இல்லையென்று மறுப்பது ஏன்? சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை மறுப்பது ஏன்? இதுவோ இன்று முன்நகர்த்தும் ஒரு மக்கள் விரோத அரசியல். இன்று திடீர் அரசியல், திடீர் மார்க்சியம், திடீர் புரட்சி பேசும் அனைவரும், கடந்த போராட்டத்தை மறுக்கின்றனர். கடந்த கால போராட்டத்தை மறுப்பது, திரிப்பது, அத்தியாகத்தைக் கொச்சைப்படுத்துவது என்பது, இன்றைய எதிர்ப்புரட்சி அரசியலில் மையமான வெளிப்படையான அரசியல் கூறாகும். யாரொல்லாம் கடந்தகால போராட்டத்தை அங்கீகரித்து செல்லவில்லையோ, அவர்கள் தொடர்ந்தும் மக்கள் விரோதிகள்தான்.  

நீதி, சட்டம் முதல் ஜனநாயகம் வரையான அனைத்தும், ஆளும் வர்க்கத்துக்கு விபச்சாரம் செய்வது தான் அதன் தார்மீக ஒழுக்கமாகும். உண்மைக்கும், மக்களின் உரிமைக்கும், மக்களின் வாழ்வுக்கும் இடமில்லை என்பதைத்தான், ஆளும் வர்க்கங்கள் தங்கள் வரலாறாக மனிதகுலத்தின் முன் சொல்லி வந்துள்ளனர். மக்கள் போராடினால் தான் அவர்களுக்கு விடிவும், ஏதாவது கிடைக்கும் என்பதையும் மக்களின் வரலாறு புகட்டி வந்துள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சி தனது 5 வது மாநாட்டில் தனது கட்சியின் பெயரை "புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி" என்று பெயரை மாற்றியுள்ளது. இப்படி தன் பெயரை மாற்றியுள்ள அக்கட்சி, இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை தன் அரசியல் நிகழ்ச்சி நிரலாக முன்னெடுக்குமா என்பதே எம்முன்னுள்ள அரசியல் கேள்வி. புரட்சிகர அரசியல் வெற்றிடத்தை, அக்கட்சி தன் வர்க்கப்போராட்டத்தின் மூலம் முன்னெடுக்குமா?

பெயர் மாற்றங்கள் மட்டும், புரட்சிகர கட்சியாக்கிவிடாது. மாறாக 70 க்கு பிந்தைய தனது 40 வருட இக்கட்சியின் புரட்சிகரமான நடைமுறையற்ற, பிரமுகர் கட்சி என்ற தனது இருப்பை மாற்றியமைக்க வேண்டும். இதை அரசியல் ரீதியாக, குறைந்தபட்சம் விமர்சனத்துக்குள்ளாக்கி இருக்க வேண்டும். ஆனால் வெளியாகிய அறிக்கையோ, இதை எந்தவகையிலும் பிரதிபலிக்கவில்லை.  

தேசம்நெற் தனது வலதுசாரிய அரசியல் பின்னணியுடன், போராட்டத்தை இழிவாகக் காட்டி அதைக் கொச்சைப்படுத்தியிருக்கின்றது. திரிபுகளையும் புரட்டுகளையும், தமது வலதுசாரிய அரசியல் காழ்ப்புடனும் தனிநபர் வெறுப்புடனும் புனைந்து, இதுதான் பல்கலைக்கழகப் போராட்டம் என்று வரலாற்றை திரித்துக் காட்டியது. இதற்கு நாவலனின் திடீர் அரசியல் வருகைக்கு ஏற்ப, அவர் தன்னை நிலைநிறுத்த முன்வைத்த கூற்றுகளின் துணையுடன், தேசம்நெற் தன் அரசியல் அவியலைச் செய்துள்ளது. இப்படி தேசம்நெற் கொச்சைப்படுத்திய இந்தப் போராட்டத்தில் பங்கு பற்றிய பலர், பின்னால் புலிகளால் உதிரிகளாகவே கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டம் எந்தக் கட்டத்தில், எந்தச் சூழலில், எப்படி யாரால் முன்னெடுக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்.    

எந்தவொரு விடையத்தையும் அறிவியல் பூர்வமான விளங்கி, அதை உணர்வுபூர்வமாக முன்னெடுத்தல் மூலம் தான் மாற்றங்கள் நிகழ்கின்றது. சமூக புரட்சிகள், சமூக மாற்றங்கள் கூட அப்படித்தான் நிகழ்கின்றது. அன்று நான் என்.எல்.எவ்.ரி. அமைப்பின் உறுப்பினராக, அதன் மத்திய குழு உறுப்பினராக இருந்தபடி இப்படித்தான் கருதி செயல்பட்டேன். பிரச்சாரம் கிளர்ச்சி என்று முனைப்பாக முன்னெடுக்கும் எனது தீவிர செயல்பாட்டில், தனிநபர்களின் குறிப்பான பாத்திரம் கூட யாழ்பல்கலைக்கழகப் போராட்டத்தில் வெளிப்பட்டது. அன்று ராக்கிங்கை எதிர்த்து போராடுவது என்ற எனது முடிவு, அமைப்பின் பொது அரசியலுடன் இணைந்ததுதான். அதை முன்னெடுப்பதை, நான் எனது பல்கலைக்கழக படிப்புடன் தேர்ந்தெடுத்தேன்.

என்.எல்.எவ்.ரி.யின் துணையுடன், பல்கலைக்கழக முற்போக்கு மாணவர்களின் பங்களிப்புடன் நான் நடத்திய போராட்டம், ராக்கிங் இன்றிய ஆண்டாக மாறியது. புலிகள் தண்டனை மூலம் ஓழிக்கும் ஆர்ப்பாட்டமான துண்டுப்பிரசுர மிரட்டல் பிசுபிசுத்துப் போனது. இப்படி புலிகளின் அரசியலுக்கு அங்கு இடமிருக்கவில்லை. ராக்கிங்கை புலிகளின் வன்முறை மூலம் ஒழிக்க முடியாது என்பது, மாணவர்களின் பொதுக் கருத்தாகியது.   

இப்படி அன்று அன்ரி ராக்கிங் நிலைப்பாடு, பெரும்பான்மையின் கருத்தாகியது. ராக்கிங் செய்ய விரும்பிய சிறிய அணி, தனிமைப்பட்டு அதைக் கைவிட்டது. புலிகள் அரசியல் ரீதியாக ஓரம் கட்டப்பட்டனர். 1986ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் புதிய கல்வி ஆண்டு இப்படித்தான் தொடங்கியது. 

இதை முறியடிக்க புலிகள் குறுக்கு வழியில் இறங்கினர். ராக்கிங் செய்ததாக கூறி, மூவரை யாழ் நகர வீதிகளில் வைத்து தாக்கினர். இப்படித்தான் புலிகள் திட்டமிட்டு, வலிந்து ஒரு தாக்குதலை நடத்தினர். உண்மையில் அவர்கள் ராக்கிங் செய்திருக்கவில்லை. அப்படி செய்தாலும் கூட, தாக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது. பல்கலைக்கழகம் உட்பட நிர்வாகம் வரை, அன்று அதை தண்டித்திருக்கும். துப்பாக்கி முனையில் நாலு குண்டர்கள் சேர்ந்து தாக்குவது போல், புலிக் குண்டர்கள் தாக்கினர்.  

அன்று ராக்கிங் ஒரு பண்பாட்டு அம்சமா என்று கேட்டு வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தை அடுத்து, நடந்த பொதுக் கூட்ட மேடையில் பேச முற்பட்டேன். ஒரு வரி பேசிய போதே கூச்சல்கள் எழுந்தது. என்னைத் தாக்க சிலர் முற்பட்டனர். என்னைப் பாதுகாக்க ஒரு மாணவர் கூட்டம் அணிதிரண்டது.

இப்படி ராக்கிங், அன்ரி ராக்கிங் என இரண்டுபட்ட அணிகள், பல்கலைக்கழகத்தில் தோன்றியது. பெரும்பான்மை எனது துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில் முதன் முறையாக சிந்திக்கத் தொடங்கியது. தொடர்ச்சியான அடுத்தடுத்த நிகழ்வுகள், பெரும்பான்மையை அன்ரி ராக்கிங் பக்கத்துக்கு கொண்டுவந்தது.

1. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எனது துண்டுப்பிரசுரத்தை ஆதரித்து, பகிரங்க அறிக்கை ஒன்றை பத்திரிகையில் வெளியிட்டது.

2. யாழ் ஊழியர் சங்கமும் இதே நிலையை எடுத்தது.

3. நான் அன்ரி ராக்கிங்கை தலைமை தாங்கி அதை முன்னெடுக்கும் வண்ணம் ஒரு குழுவை உருவாக்கினேன்.  

வரலாற்றைப் புரட்டுபவர்கள், அதைத் திரித்து விடுகின்றனர். இதன் மூலம் அந்த அரசியலை மறுத்து, நிகழ்காலத்தில் தங்கள் எதிர்புரட்சி அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வகையில் கடந்த காலத்தில் இயங்கங்களுக்கு எதிராக மக்களுக்காக நடந்த புரட்சிகரமான போராட்டத்தை மறுப்பதும், அதை இருட்டடிப்பு செய்வதும், அதை எதுவுமற்றதாக காட்டுவதே, இன்று திடீர் புரட்சி பேசுவோரின் எதிர்ப்புரட்சி அரசியல் உள்ளடக்கமாகும். இந்த வகையில் தான் எந்த சமூக நோக்கமுமற்ற, தன் மூடிமறைத்த அரசியல் பின்னணியுடன் தேசம்நெற் இயங்குகின்றது. இந்த வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை திரித்துப் புரட்டிவிடுகின்றனர். அன்று இயக்கங்களின் மக்கள்விரோத போக்குக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, கொச்சைப்படுத்தி திரித்து விடுகின்றனர்.

ரஜனி திரணகம "முறிந்தபனை" என்ற தன் நூலில்

"தமது அயலவர் ஒருவர் திடீரெனக் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போனால் மக்கள் அது பற்றிப் பாராமுகமாயிருந்தனர். இவ்வாறு இருக்கத் தயாராயில்லாத சிலர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாவர். விஜிதரன், றயாகரன் எனும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விவகாரத்தின்போது, இத்தகைய சூழ்நிலைகளிலே, அவர்கள் துணிகரமாகச் செயற்பட்டார்கள். .... அது பெருமளவில் உற்சாகத்தைக் காட்டுகின்ற முற்போக்கு இயக்கமாயிருந்தது. ... அதன் எதிர்ப்பு முடிவுற்றதும், அதன் தலைவர்கள் தலைமறைவாகவோ அல்லது வெளிநாட்டுக்குச் செல்லவோ வேண்டியிருந்தது. தலைவர்கள் பலரும் சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான சாதாரண பெண்களும், அவசியமானதும் மூத்தவர்கள் செய்வதற்குப் பின்வாங்கியதுமான ஒன்றைச் செய்வதில், அரியதொரு துணிவைக் காட்டினார்கள்."

இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தையே, தேசம்நெற் தன் பிற்போக்கு அரசியல் நோக்குடன் புரட்டித் திரித்து கொச்சைப்படுத்துகின்றது.

புலிகளின் அழிவின் பின், சமூகத்தில் புரட்சிகரமான அரசியல் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில்,  இலங்கை, இந்தியா முதல் ஏகாதிபத்தியங்கள் வரை குறிப்பாக கவனம் செலுத்துகின்றது. இதுதான் இன்றைய எதிர்ப்புரட்சி அரசியல். இந்த வகையில் தான் கடந்தகாலத்தில் மக்களுக்கான போராட்டங்களை அரசியல் ரீதியாக மறுத்தல் முதல், தன்னார்வ செயல்பாடுகளை முன்னிறுத்துவது வரையான, ஒரு விரிந்த அரசியல் தளத்தில் இந்த எதிர்ப்புரட்சி கூறுகள் இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அரசியல் கருத்துத் தளத்திலும், செயல்தளத்திலும் இது முனைப்பாக வெளிப்படுகின்றது. இதன் பின்னணி என்பது  வெளிப்படையற்றதும், சமூக நோக்கமுமற்றதுமாகும். இது தன்னை  மூடிமறைத்த ஒரு அரசியல் சதித்தளத்தில் தான் செயல்படுகின்றது. இலங்கை, இந்தியா, ஏகாதிபத்திய நலன்களையே தங்கள் அரசியலாகக் கொண்டு, இவை பெருமளவில் வெளிப்படுகின்றது. இது எந்த சமூக மாற்றத்தையும், அதன் அரசியலையும் முன்னிறுத்தி, மக்களைச் சார்ந்து நின்று செயல்படுவது கிடையாது.

இந்த வகையில் "சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே!" என்று தேசம்நெற்றைச் சேர்ந்த ஜெயபாலன், எந்த சமூக மாற்றத்தையும் கோராத மூடிமறைத்த தன் அரசியல் பின்னணியில், சமூகத்துக்கான அன்றைய அரசியல் போராட்டத்தை திரித்துப் புரட்டிக் காட்டுகின்றார். 

அவர்களின் வாழ்வியல் முறைதான் இதற்கு காரணம். கொள்ளையடித்தபடி ஒரு யுத்த நாடோடிகளாக, அரைக் காட்டுமிராண்டிகளாகத் தான், ஆரிய சமூகம் இந்தியாவினுள் வந்தனர். இங்கு இவர்கள் தனித்துவமாகவும், ஆரிய சமூகமாகவும் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.

தமிழ் மக்களின் மீதான தொடர்ச்சியான இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் போராடிய மக்கள், போராடும் உரிமையை சொந்த வலதுசாரி குறுந் தேசியவாதிகளான பாசிச புலிகளிடம் இழந்த பரிதாபம், போராட்டத்தினையே அர்த்தமற்றதாக்கி விட்டது. அண்ணளவாக 25000 பேர், அதாவது நேரடியாக இராணுவத்துக்கு எதிரான போராட்டத்திலும் உள் இயக்க ஜனநாயக போராட்டத்திலும் மாற்றியக்கப் படுகொலைகள் (துரோகத்துக்கு முன்பாக) என்று, நேரடியான போராட்ட நடவடிக்கையில் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். 150000 முதல் 250000 மக்கள் இராணுவ அழித்தொழிப்பு, மற்றும் இயக்கப் படுகொலைகள், இனப் படுகொலைகள் என்ற எல்லைக்குள் தம் உயிரை இழந்துள்ளனர்.

அரச நிகழ்ச்சிநிரலுக்கு உட்பட்ட பல புலம்பெயர் நிகழ்வுகள் ஏற்கனவே உள்ளது. அதனுடன் கே.பி ஊடான புதிய நிகழ்வு இன்று அரங்கேறியுள்ளது. தேசம்நெற்றின் லிட்டில் எய்ட் எப்படியோ, அப்படித்தான் இதுவும். தலித், கிழக்கு என்று எத்தனை வேசம் போட்டாலும், அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் தான் அனைத்தும் அரங்கேறுகின்றது. இதுதான் கே.பி ஊடானதும் கூட. வேறுபாடு கிடையாது.     

இலங்கையில் இனவாதம் என்பது காலனித்துவ வரலாற்றுடன், வரலாற்று தொடர்ச்சியுடையது. பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் இலங்கையை தமது ஆக்கிரமிப்பின் ஊடாக அடிமைப்படுத்தியிருந்தனர். செல்வத்தையும் உழைப்பையும் சூறையாடிய வரலாற்று வளர்ச்சியிலேயே, இந்த இனவாத நாற்று பிரித்தாளும் தந்திரம் மூலம் ஊன்றப்பட்டது. தேசிய வளங்களைச் சார்ந்து வாழ்ந்த மக்களின் வாழ்வை பறித்தவர்கள், மக்களின் கோபத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. கோபம் போராட்டமாக வளர்ச்சி பெற்றபோது, அதற்கு தலைமை தாங்கிய பிரிவுகள் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்களுடன் நின்று போராடுவதற்கு தயாராகவிருக்கவில்லை. அவர்கள் போராட்டத்தை நடத்துவதாக காட்டியபடி, பிரிட்டிஸ் அரசுடன் கூடிக்குலாவியபடி நக்கித் திரிந்தனர்.

வேத ஆரிய மக்களின் இருப்பு, மற்றைய சமுதாயத்தை கொள்ளையிட்டு வாழ்தல்தான். இதற்கு மாறாக அவர்கள் கால்நடைகளை வளர்த்த நாடோடிச் சமூகம் என்பது, முற்றிலும் தவறான ஒரு எடுகோள்.

வேத-ஆரியச் சடங்குப் பாடல்கள் எதைக் கோருகின்றது? அது உழைத்து வாழும் மக்களின் உழைப்பு பாடல்களல்ல. அதுபோல் உழைப்புப் பற்றிய சடங்குகளுமல்ல. உழைப்பை வளப்படுத்தக் கோரிய சடங்குகளுமல்ல. மாறாக கொள்ளையடிக்கும் யுத்தவளத்தையும், அந்த ஆற்றலையும் கோரிய சடங்குகளையே, ஆரிய-வேத பாடல்கள் வெளிப்படுத்;தி நிற்கின்றது.

சமஸ்கிருதம் வேதகால ஆரிய சடங்குகளை செய்யக் கூடியவர்களின் மொழியாகியது. ஆரிய வழிவந்த பூசாரிப் பிரிவுகள் சமூகத்தில் சிதைந்த போதும், சமுதாயத்தில் சுரண்டும் சமூக அமைப்பின் தேவையுடன் உருவான மதங்கள் ஆரிய பூசாரிகளுக்கு புத்துயிர் அளித்தது. தம் பூசாரித் தன்மையூடாக, தனிச்சலுகை பெற்றவராக மாறினர். இந்தியச் சமூக அமைப்பில் அவர்கள் ஒரு சலுகைக்குரிய சுரண்டும் வர்க்கமாக, தனிச் சலுகையுடன் நீடிக்கத் தொடங்கினர். தனிச்சொத்துரிமை அமைப்பில் தனது வர்க்க தனித்துவத்தை பேணவும், இதற்கு மூலமாக இருந்த மந்திரத்தை இரகசியமாக பேணவும் முனைந்தனர். தமது பழைய மொழியின் சிதைவில் இருந்தும், அவர்கள் சிதைந்து வாழ்ந்த புதிய மொழியில் இருந்தும் உருவாக்கிய ஒரு மந்திர மொழியான சமஸ்கிருதத்தை, பார்ப்பனர் சுரண்டி வாழ உதவியதால் அதை இரகசியமாக்கினர். அதை தமக்குள், தம் சாதிக்குள் தக்கவைத்தனர். இந்த மொழி தான் சமஸ்கிருதம்.

யாழ் தெல்லிப்பழையில் வைத்து 28.4.1987 மாலை 6.30 மணியளவில் உரிமை கோரப்படாத ஒரு நிலையில் கடத்தப்பட்டேன். வெளி உலகின் முன்போ, நான் காணாமல் போனேன். இப்படி இனந்தெரியாத நபர்களால், இரகசியமாக, மம்மல் இருட்டில் வைத்து கடத்தப்பட்டேன். பின்புறம் கை கட்டப்பட்டு, கண்கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக்கப்பட்டேன். இதன் பின் இருண்ட அழுக்கடைந்த புலிகளின் வதைமுகாமில் இருந்து, 16.7.1987 மாலை 6.30 மணியளவில் நான் தப்பிச் சென்றேன். இதன் பின்பாக 14 ஆண்டுகள் கடந்த ஒரு நிலையில் தான், 1.5.2001 இல் இதை எழுதத் தொடங்கினேன். இதை விரைவாகத் தொகுக்க பல்வேறு தொடர் எழுத்து வேலைகள் ஊடாக இரண்டு வருடம் சென்றது.

இலங்கையில் அன்னிய நாடுகளின் யுத்தம் மெதுவாக, ஆனால் மிக நுட்பமாகவே தீவிரமடைகின்றது. உலக நாடுகளின் முரண்பட்ட நலன்கள், இந்த மோதலின் அரசியல் அடைப்படையாகும். இலங்கை ஆளும் குடும்பத்தின் குறுகிய நலனும், மேற்கின் நலனும் முரண்பட்டு அவை எதிராக பயணிக்கின்றது. இந்த இடத்தில் மகிந்த குடும்பமல்லாத எந்த ஆட்சி அமையினும், இந்த தீவிரமான முரண்பாடு பொதுத்தளத்தில் அற்றுவிடும். மகிந்த குடும்ப ஆட்சி நீடித்து நிலைக்கும் ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்பதை, மேற்குநலன் மிகத்தெளிவாக இனம் கண்டுள்ளது. தனது போட்டி நாடுகளை சார்ந்து, ஜனநாயகத்தை பாசிசமாக்கி நீடித்து நிற்க முடியும் என்பதையும் இனம் கண்டுள்ளது. இதை முறியடிக்கும் காய் நகர்த்தல் தான், இன்றைய சர்வதேச அழுத்தங்கள். மேற்கின் நலன் இலங்கையில் நிறுவப்படும் வரை, முரண்பாடு தீவிரமடையும். இதற்கு சார்பான ஒரு அரசியல் நிகழ்ச்சிக் போக்கும் வளர்ச்சியுறும்.