Language Selection

பி.இரயாகரன் -2010

15.03.2010 முதல் 21.03.2010 வரை எமது நட்சத்திர வாரம். இது எமது கிடைத்த மற்றொரு புதிய வாய்ப்பு. இதற்காக தமிழ்மணத்துக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவர்களின் நோக்கத்துக்கு ஏற்ப இதைச் சிறப்பாக நாம் பயன்படுத்த முனைகின்றோம்.  

 

இதற்கு அமைய, பாலியல் அம்சத்தில் சமூக சீராழிவிலான தனிமனித ஒழுக்கக்கேடு கிடையாது என்ற கோணத்தில், சிறிரங்கன் மார்க்சையும் காதலையும் காட்டுகின்றார். பாலியல் என்பது சமூகம் சார்ந்தல்ல, தனிமனிதனின் பாலியல் சார்ந்து சுதந்திரமானது, தூய்மையானது, அன்பாலானது என்ற காட்டமுனையும் போக்கு அபத்தமானது. சமூகத்ததை கடந்து, அராஜாகவாத கோட்பாட்டை இது முன்தள்ளுகின்றது.

ஜனநாயகப் புரட்சி தான், பாராளுமன்றத்துக்கு ஜனநாயகத்தை வழங்குகின்றது. ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாட்டில், பாராளுமன்றத்தை ஜனநாயக வழியாக காட்டுவது ஜனநாயகம் பற்றிய திரிபாகும்;. ஜனநாயகத்தை மீட்க மகிந்தாவை ஆதரித்த புலியெதிர்ப்பு போன்றது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மகிந்தாவை ஆதரிக்கும் புலியெதிர்ப்பு "மார்க்சியம்" போன்றது.

புனிதம், பக்தி, ஆன்மீகம், அறம், உண்மை என்று தங்களைப் பற்றி ஒரு பிரமைகளை ஏற்படுத்திக் கொண்ட, ஒட்டுண்ணிகளாக வாழமுடிகின்ற சமூகம் இது. இங்கு ஓட்டுண்ணிகள் மனித அறம் பற்றிய போதனைகள் செய்ய முடிகின்றனர். இதன் மூலம் மக்களிடம் பணத்தை பெற்று, கொழுக்கின்றது. சமூகத்தின் முன் நடித்துக்கொண்டும், மக்களை ஏமாற்றிகொண்டும், அவர்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டும், மக்களுக்கே அறிவுரை கூறும் ஒரு கூட்டமாகவும் மாறிவிடுகின்றது.

பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் ஒவ்வொரு புதுக்கட்சியும், இதுவரை பாராளுமன்றம் செல்ல முடியாதவனும், கூறுவது என்ன? தங்கள் தங்கள் இறுதி இலட்சியத்தை அடையத்தான், பாராளுமன்ற வழியை பயன்படுத்துகின்றோம் என்கின்றனர். நாங்கள் நேர்மையானவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள், படித்தவர்கள் என்று இவர்கள் அனைவருமே கூறுகின்றனர்.

நாவலன் பாணியில் தான் ரகுமான் ஜான் கூறுகின்றார், தன் இலட்சியம் பாராளுமன்றமல்ல என்கின்றார். பாரிஸ் தலித் முன்னணி மகிந்தாவின் ஆலோசனையுடன், யாழப்;பாண தேர்தல் களத்தில சுயேட்சையாக களமிறக்கிய "சிறுபான்மைத் தமிழர் மகாசபை"யும், தங்கள் இலட்சியம் பாராளுமன்றமல்ல என்று தான் கூறுகின்றது. எல்லோரும் தங்கள் இறுதி இலட்சியம் பற்றி ஏதோதோ உளறுகின்றனர், கூறுகின்றனர். ஏன் மகிந்தா கூட! சரத் பொன்சேகா கூட! நாவலன் கூடத்தான்! ரகுமான் ஜான் கூடத்தான்! தங்கள் இறுதி இலட்சியத்துக்கு பாராளுமன்றம் உதவும் என்பதுதான், இவர்கள் அனைவரும் சொல்லும் மந்திரம்.

மீளவும் இவர்கள் திடீர் அரசியலுக்கு வந்தவர்கள், மூடிமறைத்த சந்தர்ப்பவாதிகளாகிவிட்டனர். இவர்கள் இன்று மார்க்சியம் கலந்து பேசுவது, மூடிமறைத்த தங்கள் சந்தர்ப்பவாத அரசியலை மேலும் மூடிமறைப்பதற்கே. இவர்கள் தேர்தலில் பங்குபற்றவும், வாக்களிக்கவும் கோருகின்றனர். சரி யாரை?

இனியொரு இணையத்தின் அரசியல் யோக்கியதை என்பது, தங்கள் கடந்தகாலத்தை முற்றாக மூடிமறைத்தல்தான். திடீர் திடீரென மக்கள் நலனை உயர்த்திக் காட்டி நடிப்பதே, இவர்கள் அரசியல் கலை. கடந்து போன தாங்கள் நடத்திய போராட்டத்தின் தோல்விகள் முதல் அங்கே நடந்த மனிதப் படுகொலை வரை பேசாத ஒரு புள்ளியில், முற்போக்கை உருவாக்குவது பற்றி வம்பளக்கின்றனர்.

 

தமிழ் தேசியம், இன்று தேர்தல் சாக்கடையில் நாறுகின்றது. நாதியற்றப் போன மக்கள், கதியற்று நிற்கின்றனர். எந்த சமூக உணர்வுமின்றி, ஏனோ தானோ என்று மக்கள் நடைப்பிணமாக வாழ்கின்றனர். இதுவே வடக்கின் வசந்தமாகவும், கிழக்கில் உதயமாகவும், மொத்தத்தில் இனத்தின் அவலமாகிக் கிடக்கின்றது. இதைக் கண்டுகொள்ளாத சமூக போக்கில், பிழைப்புவாதிகள் ஏய்த்துப் பிழைக்கின்றனர்.    

இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னம் தேர்தல் பகிஸ்கரிப்பை கோரியவர்கள். எப்படி வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவது என்று உபதேசித்தவர்கள். இன்று வாக்குக் கேட்டு வருகின்றனர். வாக்கை தமக்கு போடுமாறு உபதேசிக்கின்றனர். இப்படி ஒரு மாதத்தில் மாறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகள்.

புலிக்கு பின் பல "முற்போக்கு" முகமூடி அரசியல் எல்லாம், வேஷம் கலைந்து பம்முகின்றது.   மகிந்தா முன்தள்ளும் பாசிசத்துக்கு ஏற்ப, அரசியல் விவாதங்கள், விளக்கங்கள். தேனீ முதல் தேசம்நெற் வரை இதற்கு விதிவிலக்கே கிடையாது.

 

இரண்டு கண்ணீரும் பாசிசத்துக்கு எதிராக விட்ட கண்ணீர். ஒன்று ஒடுக்கப்பட்ட இன மக்கள் விட்ட கண்ணீர். மற்றது ஆளும் வர்க்கத்தில் இருந்த ஒருவரின் மனைவி விட்ட கண்ணீர். இரண்டும் போலியானதல்;ல. பாசிசத்தை எதிர்கொண்டு விடும் கண்ணீர். இதை ஒன்றுக்கு எதிராக மற்றதை நிறுத்தி அணுகுவதல்ல மக்கள் அரசியல்.

மகிந்த குடும்பமும், சட்டவிரோதமான கொலைகார கும்பல் ஒன்றும் நடத்திய யுத்த குற்றங்களை, ஒரு விசாரணையில் வெளிப்படுத்த தயார் என்ற அறிவித்தார் சரத் பொன்சேகா. யாரையும் காப்பாற்ற முடியாது என்றார். மறுகணம் சரத் பொன்சேகாவை கைது செய்யுமளவுக்கு, மகிந்த குடும்பத்தின் போர்க் குற்றம் மிகப் பாரியது.

வரிச் சலுகை தடை என்பது, அரசியல் ரீதியானவை. அரசியல் பொருளாதார நலன் சார்ந்ததும், உள்நோக்கம் கொண்டதுமாகும். உலக மயமாக்கலுக்கு உட்பட்டவை. சர்வதேச நாடுகளின் முரண்பாடுகளுக்கு உட்பட்டவை.

மார்க்சியத்தை உருத்திராட்சைக் கொட்டையாக்கினால், பாசிச நடத்தைகளையும் அது சார்ந்த  வக்கிரங்களையும் தொழத் தொடங்கிவிடுகின்றனர். பாசிசத்தைக் கண்டும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டு, மார்க்சிய சொற்களைக் கொண்டு உளறத் தொடங்குகின்றது. புதிய ஜனநாயகக் கட்சி நடந்து முடிந்த தேர்தல் பற்றி வெளியிட்ட அறிக்கையோ கேவலமானதும், கேலிக்குரியதுமாகும்.

தான் அல்லாத எதிர்தரப்பையும், தனக்கு எதிரான ஊடகத்தையும் ஓடுக்குவதே, இந்த அரசின் முதன்மையான இன்றைய அரசியலாக உள்ளது. பாரிய குற்றங்களை செய்வதன் மூலமே, தன் அதிகாரத்தை தக்கவைத்துள்ளது. பாரிய போர்க்குற்றத்தை செய்தும், பல ஆயிரம் மக்களைக் கொன்றும், பல பத்தாயிரம் கோடி பணத்தை சுருட்டியபடியும், பாசிச  ஆட்டம் போடுகின்றது.

எது செயல்? எது கருத்து? சமகாலத்தில் நிலைமைகள் மேல் கருத்தும், அதன் மேலான செயலும் தான், மக்களை வழிகாட்டும் அரசியல் நடைமுறை. இவை எதுவுமின்றி, காலம்கடந்த பின், மற்றவர் கருத்தை திருடியும், அவர்களை மறுத்தும், உருக்கொண்டு திடீர் பிரசங்கங்கள் மூலம் தம்மை நிலைநிறுத்துவதல்ல செயல். அரசியலில் அற்புதங்கள் நடப்பதில்லை.

முறைகேடாகவே ஒரு தேர்தலை நடத்தி, தாமே அதில் வென்றவர்களாக இந்த அரசு தம்மைத்தாம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளரின் "மனச்சாட்சிக்கு விரோதமாக" மோசடியை தமது வெற்றியாக தமது பாசிசம் மூலம் அறிவிக்க வைத்துள்ளது.

தேர்தலில் மகிந்தா வென்று விட்டார் என்பதும், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக கூறுவதும், தேர்தல் என்றால் பலதும் பத்தும் இருக்கும் தான் என்று கூறி அதை நியாயப்படுத்துவதுமான போக்கு இன்று அதிகரிக்கின்றது. வென்றவர்களை ஆதரித்தும், அதைச் சார்ந்தும் நிற்கின்ற போக்கு, மக்களுக்கு எதிரான பாசிச மயமாக்கலை ஆதரிக்கின்ற ஒரு புதிய போக்கு தமிழ் சமூகத்தில் உருவாகி வருகின்றது.

புலம்பெயர் நாட்டில் புலி – புலியெதிர்ப்பு அரசியலாக, அது சரத் - மகிந்தாவுக்கு பின் செல்லும் அரசியலாக, ஆய்வாக, சிந்தனையாக மாறுகின்றது. மகிந்தா வெற்றி பெற்ற நிலையில், அதுவே சரணடைவு அரசியலாக மாறுகின்றது. இதற்கு வெளியில் சிந்திக்க செயலாற்ற, எந்த மாற்று சிந்தனையும், அரசியலும் கிடையாது. மாறாக மக்களின் எதார்த்தத்தை நிராகரிக்கின்றதும், தங்கள் குறுக்கிய குதர்க்க விளக்கங்களுடன் அரசியல் பச்சோந்தித்தனத்தையே விதைக்கின்றது.