புளாட்டின் (தலைமையின்) ஆணாதிக்கத்தை மறுக்கும், அசோக்கின் ஆணாதிக்கம் (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 20)
குற்றச்சாட்டு 18.3 தொடர்ச்சி
3. புலியிடம் அந்த அமைப்பால் காட்டிக்கொடுக்கப்பட்டு தீப்பொறியால் அரசியல் அனாதையாக்கப்பட்டு மரணித்த தீப்பொறி கேசவன், இந்த விடையத்தை புதியதோர் உலகம் நாவலில் எப்படி அம்பலப்படுத்துகின்றார் என்று பார்ப்போம்.
"நான் இந்த நெருக்கடிக் கட்டத்தில் என் (உமாமகேஸ்வரன்) திருமணத்தைப் பற்றியே யோசிக்கவில்லை. ஆனால் கலாதரன் (சந்ததியார்) வேண்டுமென்று தமிழீழத்தில் இருந்த என் காதலியை இங்கு வரவழைத்து எனக்குக் கட்டிவைத்தார். என் புகழை குறைக்க வேண்டும் என்று இப்படி திட்டமிட்டுச் செய்திருக்கிறார்"