Language Selection

புதிய ஜனநாயகம் 2009

கருணாநிதியெல்லாம் ஒரு தேர்ந்த பிழைப்புவாதியாக மாறுவதற்கு ஒரு ஐம்பதாண்டுகள் ஆனதென்றால், திருமாவளவனுக்கோ இந்தப் “பரிணாமம்” எல்லாம் ஒரு ஐந்தாறு ஆண்டுகளுக்குள் முடிந்துவிட்டது.

தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக  வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட 2 வது வார்டில் அமைந்துள்ள கல்லங்காட்டு வலசு என்ற பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் சுமார் 120க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் பெரும்பான்மையான மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதும், இவர்களுக்கு மலம் கழிப்பதற்குப் பொதுக் கழிப்பிடம் கூட இல்லாததும் அவலத்தின் உச்சக்கட்டம்; பெண்களுக்கோ பெரும் திண்டாட்டம்.

கூரைக் கட்டிடம்கூட இல்லாமல் மரத்தடியில் இயங்கும் அரசு பள்ளிக்கூடங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட பரிதாபமான நிலையில் ஒரு பல்கலைக்கழகம், அதுவும் ஒரு தனியார் பல்கலைக்கழகம் இயங்கி வருவதை உங்களால் நம்ப முடியுமா?

திருநெல்வேலி மாவட்டம், ஆலம்பட்டினம் பஞ்சாயத்து யூனியனின் ஆரம்ப சுகாதார நிலையத்தில், சரவணகுமார் என்ற இரண்டு வயது குழந்தை காய்ச்சலுடன் கீழ்தாடை இறுக்கமாகி அசைக்க முடியாமல், ஜன்னி நோய்க்கு ஆளான நிலையில் அனுமதிக்கப்பட்டான்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, வி.வி.மு.வின் ஆதரவாளர் இராசேந்திரன், கடந்த ஆண்டு 20.6.08 அன்று சி.பி.எம். குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை நடந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது.

இரண்டாம் உலகப்போரின்போது, ஹிட்லரின் நாஜிப்படை இலட்சக்கணக்கான யூத இன மக்களை வதைமுகாம்களில் மிருகங்களைப் போல அடைத்து சித்திரவதை செய்து கொன்றது.

இருபதாயிரம் மக்களுக்கும் மேற்பட்டோரைத் துடிதுடிக்கக் கொன்றொழித்து, ஈழப்போரை துயரமான முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது, சிங்கள இனவெறி அரசு. இந்த இன அழிப்புப் போரின் பங்குதாரர்களாக இலங்கை அரசுடன் இந்தியாவும் சீனாவும் கைகோர்த்திருந்தன.

ஓய்வின்றிக் கட்டாய வேலை; சம்பளம் கிடையாது; சம்பளம் கேட்டால் சவுக்கடி; நோய்வாய்ப்பட்டாலும் விடுப்போ, மருத்துவமோ கிடையாது; இக்கொடுமையிலிருந்து தப்பியோட முயற்சித்தால்,

 

என்ன அருள் வந்து இறங்கியதோ தெரியவில்லை. திடீரெனத் "தமிழ்த் தேசியம்'' என்று கூச்சலிட்டுக் கொண்டு சாமியாடக் கிளம்பி விட்டது தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி எனும் பெயரிலுள்ள மணியரசன் கும்பல்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்களை கடத்திச் சென்று கற்பழித்த கண்டோன்மென்ட் போலீசு; ஆட்டோ டிரைவர் செல்வத்தை விசாரணைக்கு அழைத்து சென்று "கொட்டடி கொலை' செய்து பிணத்தை வெளியில் வீசிய உறையூர் போலீசு;

ஒரிசா மாநிலத்தின் இரும்புக் கனிமங்களை வரைமுறையின்றிச் சூறையாடி மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துவரும் "ஜிண்டால்'' எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனம்,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கருமாத்தூர் அருகே வடக்குப்பட்டியிலுள்ள வி.பி.எம். பட்டாசு ஆலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 பேர் கொல்லப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதைக் கண்டு, அந்த வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

ஊழல் கறைபடியாத கட்சியாகக் காட்டிக் கொண்ட சி.பி.எம். கட்சி, இப்போது "ஊழலுக்கு உடந்தையாக இரு! இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்று தனது கட்சி யினரையே மிரட்டத் தொடங்கி விட்டது.

கடந்த ஜூன் 17ஆம் தேதியன்று திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில்  ஒரு டன் எடையுள்ள இரும்புத் தகடு சரிந்து விழுந்து, ரகுபதி என்ற உதிரித் தொழிலாளி கோரமாகக் கொல்லப்பட்டார். எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி உதிரித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள்,

புதிய ஜனநாயகம் இதழின் சாத்தூர் நகர முகவராகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஊக்கமிகு முன்னணி ஊழியராகவும் செயல்பட்ட தோழர் கணேசன், கடந்த ஜூலை 22ஆம் தேதியன்று மாரடைப்பினால் தனது 46வது வயதிலேயே மரணமடைந்து விட்டார்.

இந்த நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கை உழவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைஎளிய மக்களுக்கு மரியாதை செய்திருப்பதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் தொடங்கி முதலாளித்துவ அறிஞர்கள் வரை அனைவரும் ஒரே குரலில் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

சிங்கள இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலை போர்க்கிரிமினலாக அறிவித்து தண்டனை வழங்கக்கோரியும்; சிங்கள இராணுவத்தின் வதை முகாம்களிலிருந்து ஈழத் தமிழர்களை மீட்டு மீள்குடியமர்த்தவும், உடனடியாக நிவாரணமறுவாழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்யக் கோரியும்; ஈழப் பகுதியில் சிங்கள குடியேற்றத்தைத் தடுக்கக் கோரியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு.,பெ.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் கடந்த இருமாதங்களாகத் தொடர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றன.

 இத்தாலி நாட்டில் சமீபத்தில் நடந்த பெரும் எட்டு நாடுகள் (ஜி 8) மாநாட்டில், "அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு அணுசக்தி மூலப்பொருளான யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் தேவைப்படும் தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் வழங்கப் போவதில்லை'' என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

ஏழ்மையின் காரணமாகத் திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி, மணமேடை வரை அழைத்துச் சென்ற பிறகு, மணப்பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால்தான் திருமணம் என்று சொல்லி, அவர்களை இழிவுபடுத்திய கொடுமை மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசே இதனைச் செய்துள்ளது என்பதுதான் இன்னமும் கொடுமை.