Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முதலில் இவர்கள் மக்களைச் சார்ந்து நின்று எதையும் சொல்பவர்கள் அல்ல. இந்த வகையில் இவர்கள் முதல்தரமான மக்கள் விரோதிகள். மக்களுடன் நிற்காத, அவர்களின் கோரிக்கைகளுடன் ஒன்றிணையாத இவர்களின் சமூகம் பற்றிய கருத்துகள் முதல் அக்கறைகள் வரை போலியானது மட்டுமின்றி மோசடித்தனமானதுமாகும். மக்களை ஒடுக்குகின்ற பிரிவுடன் சேர்ந்து நின்று, தங்கள் கருத்துக்களை முன்வைப்பதன் மூலம், அக்கறையை வெளிப்படுத்துவதன் மூலம் தங்கள் பிழைப்பைத் தொடங்குகின்றனர். இவர்கள் எப்போதும் சந்தர்ப்பவாதிகளாக, பிழைப்புவாதிகளாக வாழ்பவர்கள். ஒரு விடையத்தை "முற்போக்காக" முன்னிறுத்திக் காட்டிக் கொண்டு, மற்றைய விடையங்களில் படுபிற்போக்காகவே தம்மை அடையாளப்படுத்துவர்கள். இதன் பின் வலது இடதுமற்ற சந்தர்ப்பவாதிகளாக, "முற்போக்கை"க் காட்டி முதுகுசொறிகின்ற பிழைப்புவாத அரசியல் மூலம் பிரமுகர் அரசியலையம், முகம் காட்டும் சடங்கு அரசியலையும் அரங்கேற்றுகின்றனர்.

"ஜனநாயகம்", "சுதந்திரம்", "போராட்டம்", "தலித்தியம்" "மனிதாபிமானம்" "பெண்ணியம்" "தேசியம்" …. முதல் "மார்க்சியம்" வரை, குறைந்தபட்சம் இதில் ஒன்றைத்தன்னும் பேசி தங்கள் எடுபிடித்தனமான பிழைப்பு அரசியலை நடத்துகின்றனர். இவர்களை எடுத்த எடுப்பில் அரசியல் ரீதியாக இனம் கண்டுகொள்வதாயின்,

1. இவர்கள் பேசுகின்ற அரசியலை எப்படி யார் மூலம் முன்னெடுக்கின்றனர் என்பதில் இருந்து, இதை இனம் கண்டுகொள்ள முடியும்.

2. இவர்கள் பேசுகின்ற விடையங்களுக்கு அப்பால் உள்ள மற்றையவற்றில் எந்த நிலையை எடுக்கின்றனர் என்பதில் இருந்து இனம் காண முடியும்.

3. மக்களை மையப்படுத்தாத அரசியல், முரணற்ற வகையில் அனைத்து விடையத்திலும் மக்களை ஒருங்கிணைக்காத அரசியல், தம்மை மையப்படுத்தி இருப்பதில் இருந்தும் இதை இனம் கண்டு கொள்முடியும்.

இவர்கள் மக்களைச் சார்ந்து நின்று, தாம் முன்வைக்கும் அரசியலை முன்னெடுப்பதில்லை. மக்களின் எதிரியுடன் சேர்ந்து நின்று, மக்களுக்கு எதிராகவே இதைப் பேசுகின்றனர். தம்மையும், தம் அரசியல் நடத்தையையும் மூடிமறைக்கவும், மக்களை மோசடி செய்யவும் தான், குறைந்தது ஒரு முரண்பாட்டை மையப்படுத்தி அரசியல் கோஷங்கள், வாதங்கள் உதவுகின்றது. "தேசியத்தை" மட்டும் மையப்படுத்திய புலிகள் போல், "ஜனநாயகத்தை" மட்டும் மையப்படுத்திய அரசும் புலியெதிர்ப்பும் அரசியலும் ஒரே அரசியல் விளைவையும் அரசியல் சாரத்தையும் கொண்டது. இதுபோல் தான் "தலித்தியத்தை" மட்டும் மையப்படுத்திய அரசியலும் கூட. இது போல் "பெண்ணியம்" முதல் "சுரண்டல்" வரை, இதில் குறைந்த பட்சம் ஒன்றை மட்டும் மையப்படுத்திய அரசியல் மக்களைச் சார்ந்து இருப்பதில்லை. சமூகத்தில் நிலவும் அனைத்து முரண்பாடுகள் மீதும், முரணற்ற வகையில் முன்னிறுத்தி அதற்காக போராடாத வரை, அப்போராட்டங்கள் முதல் கருத்துகள் வரை ஏதோ ஒரு ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களை ஒடுக்க தொடர்ந்தும் உதவுகின்றது.

இதில் ஒன்று எப்படியெல்லாம் மக்களை அடக்கியொடுக்கியதோ அதுபோல்தான் மக்களை சார்ந்து நின்று அரசியல் செய்யாத அனைத்தும், இது சார்ந்த அரசியல் வேஷங்களும். இதில் மூடிமறைத்த மக்கள் விரோதப் போக்கு, சமூகத்தின் ஒரு ஒடுக்குமுறையை தூக்கி நிறுத்தி மற்றைய ஒடுக்குமுறைகளைக் கண்டுகொள்ளாமை தான். "தேசிய" ஒடுக்குமுறையை "முற்போக்காக" முன்னிறுத்தி மற்றைய ஒடுக்குமுறையான சாதியம், ஆணாதிக்கம், முஸ்லீம் சிறுபான்மை இனங்கள் மேலான இனவாதம் மதவாதம், சுரண்டல், பிரதேசவாதம்.. என்று அனைத்திலும் பிற்போக்காக செயல்பட்டு ஒடுக்குமுறையை ஏவினர். இப்படித்தான் இன்று "தலித்திய", "முஸ்லீம் மக்கள்" என்ற கோசங்கள் கூட. இந்த அரசியல் பின்னணியின் உள்ளடகத்தை இனம் காண்பதன் மூலம், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் இனம் காணமுடியும்.

1. குறித்த முரண்பாட்டின் அதன் அடிப்படையிலான ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் அரசியல் நடைமுறை என்பது, குறித்த மக்களையும் ஒட்டுமொத்த மக்களையும் சார்ந்து நின்று முரணற்ற வகையில் போராடுவதை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும்;.

2. குறித்த முரண்பாட்டையும் அதன் அடிப்படையிலான ஒடுக்குமுறையையும் முதன்மைப்படுத்தும் போது, மற்றைய முரண்பாட்டையும் அதன் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடுவதையும் அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும்.

3. பிரதான முரண்பாட்டையும் அதன் அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில், குறித்த ஒரு முரண்பாட்டுக்கான தீர்வை உள்ளடக்கி அதை முன்னிலைப்படுத்தி போராடுவதை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும்.

இவை ஒருங்கே முரணற்ற வகையில் அமையாத, மக்களை சாராத அரசியல் என்பது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் அரசியல் மோசடியாகும். இதில் மக்களின் எதிரிகளுடன் இணைந்து நின்று போடும் கோசங்கள், நடத்தைகள், மக்களைப் பிளக்கும் வண்ணம் பிரிவினையையும் பிளவையும் விதைக்கும் குறுகிய அரசியல் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்ட ஒடுக்குமுறையாகும். "தேசிய"த்தின் பெயரில் சிங்கள மக்களை எதிரியாக காட்டி புலிகள் செய்ததைத் தான். "தலித்திய"த்தின் பெயரில், "பிரதேசவாத"த்தின் பெயரில் … செய்கின்றனர். அனைத்து அரசியல் விளைவும் ஒன்றுதான்.

தனது ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் போது, தனக்குள் ஒடுக்குமுறையை வைத்திருக்க முடியாது. அதுபோல் தன்னைச் சுற்றிய மற்றைய ஒடுக்குமுறையை எதிர்க்காது, தனது ஒடுக்குமுறைக்கு போராடுவது என்பது போலியானது பொய்யானது, புரட்டுத்தனமானது. இன்று இதை நாம் பல தளத்தில் இனம் காணமுடியும். இவர்கள் தான் மக்களை ஏய்க்கும் முதல் தரமான மக்கள் விரோதிகள் மட்டுமல்ல, பொறுக்கிகளும் கூட.

பி.இரயாகரன்

29.01.2012

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது