Language Selection

பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் நடக்கும் ஓவ்வொரு நிகழ்வையும் தங்கள் சொந்த இனவாதம் ஊடாக அணுகுவது தான் அறிவாகி, அது பரப்புரையாகின்றது. இப்படி கிணற்றுத் தவளைகளாக இருக்கின்றவர்களின் அறியாமையும், மடமையும், எம் இனத்தையே குட்டிச் சுவராக்குகின்றது. அண்மையில் அமைச்சரின் காலில் விழ மறுத்த சிறுவனின் செயலை தமிழன் வீரச் செயலாகவும், ஜே.வி.பி இற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு தமிழனின் தலைமையில் என்று கூறின தமிழினவாத ஊடகங்கள். இப்படி தமிழ் மக்களுக்கு பட்டை நாமம் போட்டபடி, அவர்களை மொட்டை அடித்தனர். குறுகிய குருட்டுப் பார்வை கொண்ட தங்கள் ஊடகவியல் வக்கிரங்களை, தமிழ் என்ற அடையாளத்தை முன்னிறுத்திய இனவாதம் ஊடாகவே உலகை காட்டி நஞ்சை ஊட்டுகின்றன.

 

 

 

அமைச்சரின் காலில் வீழ்ந்து வணங்க மறுத்த சிறுவன், பிரபாகரனின் காலில் வீழ்ந்து வணங்கி இருப்பானா!? இல்லை. மற்றொரு மனிதனை வணங்குவது மட்டுமின்றி, அதை எதிர்பார்ப்பதும் கூட அடிமைத்தனத்தின் எடுப்பான வடிவம். (சிங்கள) அமைச்சரின் காலில் விழ மறுத்ததை வீரமாகக் காட்டி குண்டியை நக்கும் பன்றிக் கூட்டங்கள், பிரபாகரனின் காலில் விழ மறுத்து இருந்தால் அதை துரோகமாக காட்டிக் குலைத்திருப்பார்கள். இப்படி இந்த எல்லைக்குள் ஊடக வக்கிரங்கள் மூலம் இனவாதத்தைக் கக்கி தமிழ்தேசிய அரசியல் செய்யும் எல்லைக்குள் தான், தமிழ் மக்களை மந்தையாக்கியுள்ளனர்.

இலங்கையில் காலில் வீழ்ந்து வணங்கும் தன்மை பொது மரபாக இருந்தது கிடையாது. இந்திய சினிமா ஊடக மேட்டுக்குடி கும்பல் இடையே உதிரியான அடக்குமுறை வடிவமாக, தம் குழந்தைகள் மேலான பெற்றோரின் திணிப்பாக இருந்தது. ஒவ்வொரு குழந்தையும் இதை செய்வதற்கு எதிரான எதிர்ப்பையும், செய்ததன் பின் வெட்கப்படுவதும் அதை மூடிமறைப்பதும் என்பதும் பொதுவான இயல்பாக இருந்தது. இப்படி காலில் வீழ்தல் வழக்கில் இ;ல்லாத ஓன்று.

புலிக்கு பின் நின்று தாளம்போட்டு வாழ்ந்த அதிகார வர்க்க கூட்டங்கள், இன்று அரசுக்கு தன் விசுவாசத்தைக் காட்ட இல்லாத வழக்குகளை குழந்தைகள் மேல் திணிக்கின்றனர். சுயமரியாதையை இழக்க வைக்கும் வண்ணம் இது அங்குமிங்குமாக புகுத்தப்;படுகின்றது. அதிகாரத்தில் உள்ளவர்களின் காலில் வீழ்ந்து தான் எதையும் பெற முடியும் என்று நடைமுறை வக்கிரமடைகின்றது. இங்கு அதிகார வர்க்கம் தன்னைப் போல், பிறரை வாழக்கோரும் நக்குண்ணித்தனத்தை சமூகம் மேல் திணிக்கின்றனர். இதில் பழக்கப்படாத குழந்தைகள், இது போன்ற வெட்கப்படக் கூடிய அடிமைத்தனத்தை மறுப்பது இயல்பானது, இயற்கையானது.

இந்த இடத்தில் இதை புலிகள் கோரியிருந்தாலும், அதைச் செய்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். ஊடகவியல் அதை துரோகமாக காட்டி இருக்கும். இன்று தமிழனின் வீரமாக காட்டும் இந்த ஊடக நக்குண்ணித்தனம்தான், அங்கு காலில் வீழ்ந்து வாழவும் கோருகின்றது.

இந்த ஊடகங்கள் தான் ஜே.வி.பியின் உள் முரண்பாட்டை தமிழனின் தலைமையிலான போராட்டமாக சித்தரிக்கின்றது. அது ஒரு அமைப்பின் உள் நடக்கும் அரசியல் ரீதியான கோட்பாட்டு போராட்டமாகும். தமிழன் சிங்களவன் என்று, நடத்தும் போராட்டமல்ல. தமிழன் - சிங்களவன் போராட்டமாக காட்டுகின்ற இனவாத ஊடகங்கள், ஏட்டிக்குப் போட்டியாக அனைத்துக்கும் இனவாத சாயம் பூசுகின்றது.

சிங்கள இனவாத ஊடகங்கள் தமிழன் தலைமையிலான பிளவு, மீண்டும் தமிழன் தலைமையில் ஆயுதப் போராட்டம் என்று வக்கரிக்க, தமிழினவாதம் தமிழன் தலைமையில் என்று கதை சொல்லுகின்றது. டெயிலி மீரர் தமிழன் தலைமையில் தலைமறைவான ஆயுதப் போராட்டம் பற்றி ஆள்காட்டியாக செயல்பட்டு ஆதாரமற்ற அவதூறுகளை செய்கின்றது. (பார்க்க: Highly placed party sources said that there was a plan by Gunaratnam group to go underground and pave the way for an armed struggle.")

இப்படி இருக்க இனியொரு நாவலன் ".. தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் தேவையையும் அதனை நிறுவனமயப்படுத்தும் கட்சியையும் அதன் பின்பலமாக அமையவல்ல தலைமறைவு இயக்கங்களையும் அதற்கான புதிய சிந்தனை முறையினதும், வழிமுறையினதும் தேவையும் இன்று என்றுமில்லாதவாறு உணர்த்தி நிற்கிறது." என்கின்றனர். இப்படி இனவாத அரசு ஊடகங்கள் முதல் இனியொருவரை ஓருபுள்ளியில் "தலைமறைவு" பற்றி பேசுவதுடன், ஆள்காட்டி வேலையும் செய்கின்றன.

இங்கு தலைமறைவு பற்றிய கோட்பாட்டுத் திரிபு புகுத்தப்படுகின்றது. கட்சி வெகுஜனங்கள் மத்தியில் "தலைமறைவாக" இருப்பது என்பதைத் திரித்து, "தலைமறைவு" கட்சியைக் கட்டுவதும் கோசமாவதும் புரட்சிக்கு எதிர்மறையானது. இன்று மக்களை அணிதிரட்டும் கட்சிதான் தேவை. குண்டுவைக்கும் தலைமறைவு கட்சியல்ல.

இப்படிப்பட்ட "தலைமறைவு" இயக்கம் அவசியமானதா!? இது குண்டு வைக்கும் தனிநபர் பயங்கரவாத அரசியலாகும்;. இலங்கையில் "தலைமறைவு" இயங்கங்கள் அதாவது ஜே.வி.பி முதல் புலிகள் வரை இருந்துள்ளது. இந்த "தலைமறை"வில் இருந்து வேறுபட்ட வடிவம் தான் என்ன? "புதிய சிந்தனையும்" "வழிமுறையும்" இந்த "தலைமறைவு" வடிவத்தை மாற்றிவிடாது. "தலைமறைவு" என்பது மக்களுக்கு தலைமறைவாக இருந்ததுடன், மக்களை ஓடுக்கும் இயக்கமாகத்தான் என்றும் இருந்துள்ளது. "தலைமறை"வாக இருந்தபடி மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் போட்டார்கள். மக்கள்தான் தமக்காக தாம் போராட வேண்டும் என்பதை "தலைமறைவு" கோட்பாடு மறுக்கின்றது.

இன்று தேவை "தலைமறைவு" கட்சியல்ல. இதுபோல் ஆயுதமேந்திய "தலைமறைவு" வன்முறையுமல்ல. வெகுஜனங்களை அணிதிரட்டும் கட்சியும், வெகுஜன கட்சி அமைப்புகளும் தான் இன்று அவசியமானது. வெகுஜனங்களுக்குள் தான் கட்சி இருக்க முடியும். இன்று "தலைமறைவு" கட்சி உடனடித் தேவை என்பது, வெகுஜனங்களை அணிதிரட்டும் கட்சி வடிவத்தை நிராகரிக்கிற அரசியலாகும். கட்சி வெகுஜனங்கள் மத்தியில் தலைமறைவாக இருப்பது என்பதை திரித்து, தலைமறைவையே அரசியல் இயக்கமாக்குவது தனிநபர் பயங்கரவாதத்தின் அரசியல் மூலமாகும். இது தலைமறைவும் ஆயுதப்போராட்டமும் என்ற பழைய, ஆனால் "புதிய சிந்தனை" புதிய "வழிமுறை" என்ற புதிய சட்டிதான்.

இங்கு ஜே.வி.பி யின் உள் மோதல் மூலம் உருவாகும் புதிய பிரிவு, இலங்கை ஊடகங்கள் சொல்லும் நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் அந்த நிகழ்வுகள் நடக்கின்றனவா அல்லது சரியான அணி மீதான அவதூறா என்பதை காலம் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதனை வழிமுறையாக முன்வைக்கும் இனியொருவின் அரசியல் இங்கு வெளிப்படுகின்றது.

இன்று ஜே.வி.பியின் உடைவு அவசியமானது. சரியான ஒரு அரசியல் பிரிவாக உருவாகாவிட்;டாலும் கூட, இந்த உடைவு இலங்கையில் புரட்சிகர அரசியல் சூழலுக்கு அவசியமானது, சாதகமானது.

 

பி.இரயாகரன்

24.09.2011

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது