Language Selection

பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிந்தனையே அல்லாத ஒன்றை, சிந்தனையாக கூறுவதில் இருந்து தொடங்குகின்றது இந்த இடதுசாரிய திரிபும், புரட்டும். சுரண்டும் வர்க்கம் எந்த வடிவில் எப்படி மக்களை மோதவிட்டு சுரண்டி ஆள்வது என்பதை தாண்டி "மகிந்த சிந்தனை" என்று ஓன்று புதிதாக கிடையாது. இதை "மகிந்த சிந்தனை" என்று ஆளும் சுரண்டும் வர்க்கம் கூறி அழைப்பதால், இதுவொரு புதிய சிந்தனையே கிடையாது. இல்லை, இது ஒரு புது சிந்தனைதான் என்று கூறுகின்ற இடதுசாரியம், ஆளும் வர்க்கத்தின் அதே நோக்கை மீள திணிக்கிறது என்பது தான் இங்குள்ள அரசியலாகும்.

 

யுத்தத்தின் பின்னான அரசியல் வெற்றிடமும், கூர்மையாகும் சமூக முரண்பாடுகளும், தவிர்க்க முடியாமல் வர்க்க அரசியலை முன்னிலைக்கு கொண்டு வருகின்றது. மக்களை மந்தையாக்கி நம்பிக்கை ஊட்டக்கூடியதாக இருந்த கடந்தகால வலதுசாரிய போக்குகள் அனைத்தும் அம்பலமாகி வருகின்றது. வர்க்க அரசியலும், வர்க்கக் கட்சியுமே இந்த அரசியல் வெற்றிடத்தை மட்டுமின்றி, முரண்பாடுகளை தீர்க்க ஆற்றல் பெற்றதாக மாறிவருகின்றது. இந்தப் புதிய சூழல் ஆளும் வர்க்கத்தின் முன் அச்சமூட்டக் கூடியதாக மாறிவருகின்றது.

இந்த நிலையில் ஆளும் வர்க்கங்கள் இதை தடுக்கும் வண்ணம், கோட்பாட்டு ரீதியான திரிபுகளைப் புகுத்துவது அந்த வர்க்கத்தின் அணுகுமுறைகளில் ஒன்று. அதுவும் இடதுசாரியத்தின் பெயரில் தான் அதைச் செய்கின்றது. இது உலகம் தளுவிய பொது அணுகுமுறையுமாகும். இதன் பின்னணியில் தங்களை மூடிமறைத்துக் கொண்டும், திடீர் இடதுசாரிய அரசியல் வருகைகள் ஆங்காங்கே அரங்கேறுகின்றது. இது பல தளத்தில் வெளிப்பட்டு வருகின்றது. தத்துவரீதியான புரட்டுகளோ, வெளிப்படையற்றது ஆனால் சூக்குமமானது. இந்தவகையில் இதை இனங்கண்டு அம்பலப்படுத்துவதன் மூலம், தெளிவை உருவாக்குவது அவசியமானது.

இந்த வகையில் "மகிந்த சிந்தனை" பற்றி தத்துவார்த்தத் தெளிவு அவசியமானது. மகிந்த சிந்தனையை மத, சாதிய, இனக் கோட்பாடாக காட்டுகின்ற திரிபு, இடதுசாரிய போக்கின் ஊடாக முன்வைக்கப்படுகின்றது. இன்று இலங்கையில் "மகிந்த சிந்தனை"யின் பெயரில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாசிசமயமாக்கலுடன் கூடிய இராணுவமயமாக்கலுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வும், வர்க்கப் போராட்டமாக மாறக்கூடாது என்பது தான் அனைத்து ஆளும் வர்க்கத்தினதும் கவலை. இதை மத, சாதிய, இனக் கோட்பாடாக காட்டுவதன் மூலம், இந்த எல்லைக்குள் போராட்டத்தை முடக்குவதுதான் இதன் பின்னுள்ள அரசியல் நோக்கம்.

மகிந்தா அரசின் பாசிசமயமாக்கலுடன் கூடிய இராணுவமயமாக்கல் பலமுனை முரண்பாடுகளை சமூகத்தில் உருவாக்குகின்றது. மகிந்த அரசு "மகிந்த சிந்தனையின்" பெயரில் கொண்டுள்ள இந்த ஒடுக்குமுறையை, வர்க்க ஓடுக்குமுறையல்ல என்று கூற முற்படுவதன் மூலம் இதை திசைதிருப்ப முனைகின்றனர்.

"மகிந்த சிந்தனை" என்பது ஒரு சிந்தனையே அல்ல. சிந்தனை என்பது, ஒரு துறைசார் அறிவாகும். இந்தவகையில் கூட "மகிந்த சிந்தனை" புதிய கோட்பாடுமல்ல. இங்கு "மகிந்த சிந்தனை" என்ற ஒன்று இருப்பதாக கூறுவது, அது இதுதான் என்று கூறி திரிப்பது இடதுசாரியத்தின் பெயரிலான திரிபும், புரட்டுமாகும்.

மகிந்த அரச தன் சொந்த நடத்தையை "மகிந்த சிந்தனை" என்று அழைப்பதால், அது புதிய ஒன்றேயல்ல. ஆனால் அதைப் பின்பற்றி இடதுசாரியத்தின் பெயரில் கூறுவது, மகிந்தாவின் அரசியல் வழிப்பட்ட அதே அரசியலை இடதுசாரியத்தின் பெயரில் கூறுவதுதான்.

"மகிந்த சிந்தனையை" மத, சாதிய, இனம் சார்ந்த ஓன்றாக, மகாவம்சத்தின் அடிவந்த அரசியல் சித்தாந்தமாகவும் அதன் சிந்தனையாகவும் காட்டுவதன் மூலம், இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை திசைதிருப்புவதாகும். இலங்கை அரசின் பின்னால் இருக்கக் கூடிய மத, சாதிய, இனக் கூறுகளைக் காட்டி, அதுவாக அரசை இட்டுக் காட்டுவது அரசு பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்தை திரிப்பதாகும்.

முதலில் அரசு என்பது எங்கும் எப்போதும் ஒரு வர்க்கத்தின் கருவி. வர்க்கம் என்பது மனித உழைப்பை மற்றொரு மனிதன் சுரண்டும் அடிப்படையில் இருந்து உருவாகின்றது. மனிதனை மனிதன் சுரண்டும் உரிமையை சட்டப்படி பாதுகாக்கின்ற நிர்வாகக் கட்டமைப்புத் தான், அரசாக மாறுகின்றது. இந்த சட்டங்ளைப் பாதுகாக்க நீதிமன்றங்கள் முதல் இராணுவக் கட்டமைப்பு வரை இயங்குகின்றது. இந்த வகையில் அரசு இயந்திரம் இயங்குகின்றது. அரசு என்பது சுரண்டும் வர்க்கத்தின் கருவியாகும். மனித உழைப்பைச் சுரண்டும் உரிமையைத்தான் "ஜனநாயகம்", மனித "சுதந்திரம்" என்கின்றது சுரண்டும் வர்க்கம். இங்கு அரசு என்பது, வர்க்கத்தின் சர்வாதிகாரம் தான். இதை மூடிமறைக்க இதை "ஜனநாயக" ஆட்சி என்கின்றது.

இந்தச் சுரண்டும் வர்க்கம் தனது சுரண்டும் இந்தச் செயலை மூடிமறைக்கவும், அதைப் பாதுகாக்கவும், மதம், இனம் பால் சாதி நிறம் நாடு என்று பலவற்றை முன்னிறுத்தி மக்களை மோதவிட்டு பிரித்தாளுகின்றது. இதைத்தான் "மகிந்தசிந்தனை"யின் பெயரில் இலங்கையில் செய்கின்றது. புதிதாக வேறு ஒன்றையுமல்ல.

இப்படித்தான் இலங்கையில் சுரண்டும் வர்க்கம் மத, சாதிய, இனக் கூறுகளை முன்னிறுத்தி மக்களை மோதவிடுகின்றது. இது இன்று நேற்றல்ல, காலனியாதிக்கத்துக்கு பிந்தைய ஆளும் வர்க்க அரசுகளின் வர்க்க ஆட்சி எங்கும் இது காணப்பபடுகின்றது. காலனிய காலத்தில் இது வேறுவிதமாக திசை திருப்பப்பட்டது. காலனிக்கு பிந்தைய சுரண்டும் வர்க்கத்தின் ஆட்சி மத, சாதிய, இன முரண்பாடுகளை முன்னிறுத்தியது. இது மகிந்த அரசு "மகிந்தசிந்தனை"யின் பெயரில் உருவாக்கிக் கொண்ட புதிய சிந்தனையல்ல.

இப்படி இருக்க இடதுசாரியத்தின் பெயரில் இதை திசைதிருப்ப மகாவம்ச வழிவந்த சிந்தனை தான் "மகிந்த சிந்தனை" என்ற புது இணைப்பை இடைச்செருகலாக புகுத்துகின்றனர். இங்கு வேடிக்கை என்னவென்றால் மகாவம்சத்தை சிந்தனை என்று முதலில் திரிப்பதில் இருந்து தொடங்குகின்றது.

1. புத்த மதத்தை சேர்ந்தவர்கள் மகாவம்சத்தை எழுதினார்கள் என்பதற்கு அப்பால், இது ஒரு மத நூலல்ல.

2. இது ஒரு வரலாறு பற்றிய நூல். இது ஒரு சித்தாந்தமோ, சிந்தனையோ, கோட்பாடோ அல்ல.

3. மகாவம்சம் சாதியம் பற்றி நூலல்ல.

4. மகாவம்சம் இனம் சார்ந்த நூலுமல்ல.

இது அன்றைய வரலாற்று சூழலுக்குள் உள்ள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட, ஒரு வரலாற்று நூல். இதை மதம் சார்ந்ததாக, இனம் சார்ந்ததாக, சாதி சார்ந்ததாக காட்டி, பின் இதை சிந்தனையாக காட்டுவது வரலாற்றுப் புரட்டு. இதை ஒரு சிந்தனை சார்ந்தாக, மத சாதிய இனம் சார்ந்தாக, சுரண்டும் வர்க்கம் மக்களை பிளந்து ஆள இட்டுக்கட்டிக் காட்டினால் இதை மறுத்து போராட வேண்டும். இல்லை அதுதான் இது என்று இடதுசாரியத்தின் பெயரில் கூறுபவர்களின் அரசியல் நோக்கம், சுரண்டும் வர்க்கத்தின் நோக்கமும் இங்கு ஓத்துப் போவதையும், ஓரே நோக்கில் நின்று திரிப்பதையும் நாம் இங்கு இனம் காணமுடியும்.

"மகிந்த சிந்தனை" பெயரில் உள்ளது ஆளும்வர்க்கம் சுரண்டுவதற்காக தேர்ந்தெடுத்த பாசிச இராணுவ மயமாக்கலை அடிப்படையாக கொண்டது. இதன் பின்னணியில் பிராந்திய மற்றும் உலகமேலாதிக்க சக்திகளின் முரண்பட்ட நலன் சார்ந்த கூறுகளும் பின்னிப்பிணைந்த ஒன்று. இங்கு குடும்ப நலன் சார்ந்த சுரண்டும் அதிகார வர்க்க கூறுகளும் ஓன்றிணைந்து வெளிப்படுகின்றது. இது சுரண்டும் வர்க்கம், சுரண்டுவதற்கு தேர்ந்தெடுத்துள்ள ஆளும் வர்க்கம் சார்ந்து வெளிப்படும் அரச வடிவம். இதை "மகிந்த சிந்தனை" என்று அவர்கள் கூறுவது ஒருபுறம் இருக்க, இது உலகெங்கும் உள்ளது தான். சுரண்டலை எப்படி எந்த வடிவில் நடத்துவது என்பது தான், இதில் உள்ள குறிப்பான பண்புரீதியான வேறுபாடு. இதை மூடிமறைக்க மத, சாதிய, இனக் கூறுகளை முன்னிறுத்துவது, எங்கும் நடப்பது போன்றுதான் இங்கும் நடக்கின்றது.

இங்கு "மகிந்த சிந்தனை" என்பதாக புதிதாக ஏதோ இருப்பதாக காட்டுவது, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல் பித்தலாட்டமாகும். இது இடதுசாரியத்தின் பெயரில் வரும் போது, வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்பும் திரிபும் புரட்டுமாகும்.

பி.இரயாகரன்

15.08.2011

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது