Language Selection

பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அச்சம் சார்ந்த நேர்த்திக்கடன் தான், மகிந்த கையில் உள்ள நூல்கள். தன்னை தற்காத்துக்கொள்ள, கடவுளிடம் வேண்டுதல்கள் வைப்பதன் மூலமான பாசிசம் நம்பிக்கையாக வெளிப்படுகின்றது. இப்படி பாசிசம் கடவுள் மூலமும் தற்காப்பு பெற்றுச் செழிக்க விழைகின்றது. இதுவும் மகிந்த சிந்தனை தான். மக்களுக்கு எதிராகக் குற்றங்களை இழைத்தபடி, கடவுளிடம் தற்காப்புக் கோரிக்கை வைப்பதுமாக, ஒரே நேர்கோட்டில் பாசிசம் தன் கோழைத்தனத்தை மூடிமறைத்தபடி பயணிக்கின்றது.

 

கோழைத்தனத்தின் வெளிப்பாடுதான் பாசிசம். அச்சம் தான் தலைகால் தெரியாத ஒடுக்குமுறையைத் திணிக்கின்றது. இந்தவகையில் மகிந்த பாசிசம் கோமாளித்தனமாகவே மாறி, அங்குமிங்குமாக அலுக்கோசு வேலை செய்கின்றது. வடக்கு கிழக்கு தமிழ்மக்களிடம் தாங்கள் அவர்களைக் கொல்லவில்லை என்று கூறி, இராணுவமும், இராணுவத்தின் துணையுடனும் கையெழுத்து வேட்டை நடத்துகின்றனர்.

ஒரு சிவில் சமூகம் சுதந்திரமாக எந்த முடிவையும் எடுக்கமுடியாத இராணுவ கண்காணிப்பின் கீழான ஒடுக்குமுறைதான் இதுவும்;. தன் குற்றங்களை இப்படி அச்சுறுத்தி மூடிமறைக்க முனையும் பாசிசக் கூத்தும், இதை சுற்றிய வக்கிரங்களும் இதற்கு எதிரான அரசியல் வன்முறைக்கு தொடர்ந்து வழிகாட்டுகின்றது. வெளிப்படையான சுதந்திரமான தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடியாத இடைவெளியில், தங்கள் சுதந்திரமான எதிர்வினையை பிரயோகிக்க முடியாத நிலையில், தனிநபர் பயங்கரவாதம் மூலம் அதை வெளிப்படுத்தக் கோருகின்றது அரச பாசிசம்.

மகிந்த குடும்ப சர்வாதிகாரம் நிறுவியுள்ள பாசிசத்துக்கு ஏற்ப கோமாளிகளாக வடக்கு இராணுவத் தளபதி முதல் கோயபல்ஸ் டக்கிளஸ் வரை மகிந்தாவின் கடவுள் நம்பிக்கை போல் விதவிதமாக அறிக்கைகள் விடுகின்றனர். சுதந்திரமற்ற மக்களிடம் கையெழுத்து வேட்டையை இராணுவத்தின் துணையுடன் நடத்திய அதேநாள், யாழ்.மாவட்டப் படைகளின் கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க "எமது இராணுவத்திலும் சில தவறானவர்கள் இருந்திருக்கிறார்கள் தான். ஆனால் இன்று அவ்வாறானவர்கள் இல்லை. என்னுடைய பொறுப்பின் கீழ் எந்த இராணுவத்தினரும் தவறிழைக்க கூடாது. அப்படி ஏதாவது சம்பவங்கள் நடந்தால் எனக்கு எந்த நேரத்திலும் தெரியப்படுத்தலாம்." என்கின்றார். கையெழுத்து வேட்டையை இராணுவத்தின் துணையுடன் நடத்தும் இந்த பாசிசக் கோமாளியின், மேற்கூறிய கூற்று பாசிசத்தை ஜனநாயகமாக காட்டமுனைகின்றது. இந்த பாசிச கோமாளிகள் தங்களின் ஒட்டுமொத்த ஒடுக்குமுறையை, சில தனிநபர்கள் மேல் பழிபோட்டு குற்றஞ்சாட்டியபடி ஒட்டு மொத்தமாக மக்களை மிரட்டி அடிபணிய வைக்கின்றனர்.

இராணுவம் குற்றம் இழைக்கவில்லை என்று இராணுவ கண்காணிப்பின் கீழான அச்சத்தை பயன்படுத்தியபடி கையெழுத்து வேட்டை நடத்தும் நிலையில், யாழ்.மாவட்டப் படைகளின் கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க பாசிச உபதேசம் செய்கின்றார். இதே போல் தான் இந்த 25 வருடமாக பேரினவாதத்துடன் கூடிக் கூத்தாடும் கொள்கையை மட்டும் அடிப்படையாக கொண்ட டக்கிளஸ் "இன்று அனேகமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது" என்கின்றார். இப்படி கையெழுத்து வாங்குவது தான், ஜனநாயகம் என்பது தான் அவரின் 25 வருட அனுபவம்;.

போர்க்குற்றச்சாட்டு எதிலும் தாமும், தமது அரசும் ஈடுபடவில்லை என்று கோயபல்ஸ் பாணியில் டக்கிளஸ் புளுகிய இரு நாட்களில், கையெழுத்து வாங்குகின்ற பாசிசக் கூத்தை அரங்கேற்றுகின்றனர். இப்படி "இன்று அனேகமான பிரச்சினைகளுக்குத் தீர்வு" காண்கின்ற இவர்களின் ஜனநாயகத்திற்கு ஏற்ற அலுக்கோசு மந்திரி தான் இந்த டக்கிளஸ். இவர்களின் பாசிச "ஜனநாயகத்தில்" சிவில் சமூக கட்டமைப்பு என அனைத்தும், அடக்குமுறைக்கு கீழ் வாழ்வதில் தான் இவர்கள் கோரும் தீர்வுகள். இக்காலத்தில் தான் வடக்கு கிழக்கை சொந்த இடமாக கொண்ட, ஆனால் வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்கள் வடக்கு கிழக்கு செல்வதாயின் சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்று திடீரென அறிவிக்கப்படுகின்றது.

இப்படித்தான் வடக்கு கிழக்கில் சிவில் கட்டமைப்பு என்ற பெயரால், தனிப் பிரதேசமாக இலங்கையில் பிரிந்து போன ஒரு தனிநாடாக வடக்குகிழக்கை மாற்றி அரசு இயங்குகின்றது. யுத்தத்தின் பின் வடக்கு கிழக்கில் நிலவும் அசாதாரணமான சூழல், மிகத் தெளிவாக அரசின் ஒடுக்குமுறையின் கீழ் வாழத் தயாரற்ற மக்கள் அங்கு வாழ்வதை இது பறைசாற்றுகின்றது.

இந்த அரசு எதைக் கண்டு பயப்படுகின்றது? இதற்கு தலைமை தாங்கும் மகிந்த, எதைக் கண்டு அஞ்சி தன் கையில் நூல்களைக் கட்டுகின்றார். தமிழ்ச்செல்வன் காட்டிய பாசிசப் பல்லுப் போலே, மகிந்தாவின் கையில் நூல்கள் அனைத்தும் பாசிசத்தின் மொத்த வெளிப்பாட்டால் வெளிப்படும் தற்பாதுகாப்பு மீதான நம்பிக்கைக் காப்புகளாகும்.

தங்கள் பாசிசத்துக்கு எதிரான எதிர்வினைகள், தங்கள் குற்றங்களை மூடிமறைக்க இராணுவ கண்காணிப்பின் கீழான சிவில் சமூக கட்டமைப்பு, படிப்படியாக அங்கு செல்பவர்கள் மேலான கண்காணிப்பாக மாறுகின்றது. இது நாளை அங்கிருந்து வெளிச்செல்பவர்கள் மேலான கண்காணிப்பாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை. இன்று எந்த நிபந்தனையின் கீழ் வடக்கு கிழக்கு கண்காணிக்கப்படுகின்றதோ, அதே நிபந்தனையின் கீழ் அவர்கள் வெளிச்செல்வதும் கூட பாசிசத்தை அச்சமூட்டுகின்ற அளவுக்கு தமிழ்மக்கள் அங்கு ஒடுக்கப்படுகின்றனர். அதன் வெளிப்பாடு தான் வடக்கு கிழக்கு செல்பவர்கள் மேலான சிறப்பு கண்காணிப்பு முதல் மகிந்தா தன் கையில் கட்டும் நூல்கள் வரை சொல்லுகின்ற அரசியல் செய்தியாகும்;.

பி.இரயாகரன்

09.05.2011

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது