Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லங்கா நியூஸ் வெப் இணையம் தங்கள் ஊடகவியல் தில்லுமுல்லுகளை ஒத்துக்கொள்ள மறுக்கும் போது, அதன் பின்னணியும் அதன் நோக்கமும் என்ன என்ற கேள்வி எழுகின்றது.

 

மூன்று மொழியில் வெளிவரும் லங்கா நியூஸ் வெப் இணையம், மகிந்த புதல்வர் நாமல் தாக்கப்பட்டதாக கூறிய ஒரு செய்தியை முதலில் வெளியிட்டது. இதன் போது, தனது தில்லுமுல்லுகளுடன் கூடிய ஒரு போலிப்படத்தை தயாரித்து செய்தியை வெளியிட்டது. தில்லுமுல்லை அடிப்படையாக கொண்டு அந்தப் படத்தின் மூலம், இந்தப் படம் போலியானது என்பதை அம்பலப்படுத்;தினோம். பின் அதன் மூலப்படத்தையும் வெளியிட்டோம். (இதில் வெளியிட்ட படத்தை தங்கள் படமாக, குளோபல் தமிழ் நியூஸ்; படத்தின் மேல் தங்கள் இணையப் பெயரை போட்டு இருந்தனர். இங்கு மூலம் குறிப்பிடப்படவில்லை. இங்கு இரண்டு இணையத்துக்கும் உள்ளது, ஓரே மூலமா? இப்படி இந்த தில்லுமுல்லில் இவர்களுக்கும் பங்கு உண்டு.)  

 

இதன் பின் லங்கா நியூஸ் வெப் ஒரு சுயவிளக்கத்தை வெளியிட்டுள்ளனர். 'மஹிந்தவின் மூத்த புதல்வருக்கு வவுனியா முகாமில் மக்கள் கல்வீச்சு மற்றும் சேறடிப்பு - செய்தி தொடர்பான தெளிவுபடுத்தல்" என்ற தலைப்பில், தங்கள் சொந்த தில்லுமுல்லை புலிகள் போலவே இங்கு ஓப்புக்கொள்ளவில்லை.

 

மாறாக "இந்தச் செய்தியுடன் பிரசுரிக்கப்பட்ட நாமல் ராஜபக்~வின் புகைப்படம், வவுனியா முகாமில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தின்போது எடுக்கப்பட்டது அல்லவெனவும், அதனடிப்படையில் இந்தச் செய்தி பொய்யான தகவல் எனக் கூறுவதற்கும் அந்தக் குழு முயற்சித்து வருகின்றது.

 

அத்துடன், குறித்த செய்தி பொய்யானது என்று விமர்சிக்கும் வகையிலான தகவல்களை மின்னஞ்சல் மூலம் சங்கிலித் தொடராக அந்தக் குழு அனுப்பி வருகின்றது. நாங்கள் செய்திகள் வெளியிடும்போது, அதனுடன் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் வெளியிடவே முயற்சித்து வருகின்றோம். எனினும், இலங்கைக்கு வெளியிலிருந்து செயற்படும் எம்மால் செய்திகளுடன் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை உடனடியாக பெற்றுக்கொள்வது சகல சந்தர்ப்பங்களிலும் சாத்தியமாவதில்லை. இதனால், செய்தியுடன் தொடர்புடைய அல்லது அதற்குப் பொருத்தமான வைப்பகப் படங்களையே நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

 

இதனடிப்படையில், ஜனாதிபதியின் புதல்வர் மீது வவுனியா முகாமில் மேற்கொண்ட தாக்குதல் சம்பந்தமான செய்தியுடன் நாம் வெளியிட்ட புகைப்படம், அந்தச் செய்தியுடன் சம்பந்தப்பட்டதல்ல என்பதையும் அது வைப்பகப் படம் என்பதையும் இத்தருணத்தில் அறியத்தருகின்றோம்.

 

அன்றைய தினம் செய்தி வெளியிடப்பட்டபோது, அந்தப் புகைப்படத்தை எங்கிருந்து பெற்றுக்கொண்டோம் அல்லது அதற்கான ஆதராத்தை வெளியிடத் தவறிவிட்டதை எமது தவறாகக் கருதுகிறோம். இதற்காக நாம் வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறோம்." என்கின்றனர். இப்படி கூறும் இவர்கள், தாங்கள் இதில் செய்த தில்லுமுல்லை தவறானதாக கூறவில்லை.

 

குறித்த சம்பவம் இவர்கள் கூறுவது போல் உண்மையா பொய்யா என்பது எமக்கு தெரியாது. ஆனால் இவர்கள் இதில் செய்த தில்லுமுல்லை ஒத்துக்கொள்ள மறுப்பது தான்;, இவர்களின் செய்திகள் மீதான நம்பிக்கையீனத்தை உருவாக்குகின்றது. குறித்த படம் உங்கள் "வைப்பகப் படம்" என்றால், இந்த படத்தின் பின்னணிக் காட்சிகளை நீங்கள் சிதைத்தது ஏன்? படத்தில் உண்மையான முழுக் காட்சியும் மக்களுக்கு தெரியக் கூடாது என்பது உங்கள் நோக்கமாக இருந்தது. இதை வைத்து மக்களை மேசாடி செய்து ஏமாற்ற வேண்டும் என்பது, உங்கள் குறிக்கோளாக இருந்தது. இதற்காக நீங்கள் மனம் வருந்தவில்லை. அதைத் தவறு என்று ஓப்புக்கொள்ளவில்லை. மாறாக "அது வைப்பகப் படம்" என்று கூறி, நீங்கள் படத்தில்  செய்த மாற்றத்தை தவறாக பார்க்க மறுப்பது புலனாகின்றது. 

 

உண்மையான ஒரு படத்தை நீங்கள் உருச் சிதைத்ததுடன், குறித்த படத்தை தேர்ந்தெடுத்து திட்டமிட்டே போட்ட நோக்கம், இங்கு தெளிவாக மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான். இதற்காக நீங்கள் மனவருந்தவில்லை, அதை தவறு என்று ஓத்துக் கொள்ளவில்லை.

 

இப்படியான உங்கள் ஊடக நடத்தையை வைத்துக்கொண்டு "இந்தச் செய்தி பொய்யான தகவல் எனக் கூறுவதற்கும் அந்தக் குழு முயற்சித்து வருகின்றது." என்று, மற்றவர்களை குற்றம் சாட்டுவதில் எந்த அர்த்தமும் அற்றது. இப்படிப்பட்ட நேர்மையற்ற செயல், உண்மைகளைக் கூட பொய்யாக்கிவிடும். மக்கள் எதிரிகள் இதைக் கூட தமக்கு சாதகமாகவே பயன்படுத்துவர். "இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்ட செய்தி என்பதை தற்போதும் நிச்சயமாகக் கூறுகின்றோம்" என்கின்றீர்கள். இருக்கலாம், ஆனால் உங்கள் நேர்மையற்ற ஊடகத்தனம் இயல்பாகவே நம்பகமற்ற தன்மையை உருவாக்கி தந்துள்ளது. இங்கு நீங்கள் படத்தின் பின்னணியை மறைக்க செய்த தில்லுமுல்லுகளை ஓத்துக்கொள்ளாத வரை, உங்கள் "உண்மைகள்" சமூக உண்மையாக மாறிவிடாது.
 
பி.இரயாகரன்
24.07.2009
 

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது