Language Selection

சமர் - 8 : 1993
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சரிநிகர் 114 இல் (ஜனவரி 23 பெப் 05 1997)இதழில் ''சரிநிகர் போற்றுவது இல்லை''எனத் தலைப்பிட்டு அ.மார்க்ஸ், சத்யா என இருவர் பெயர் போட்டு ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதை எடுத்த எடுப்பில் பார்த்தால் யார் எமுதியது என்ற குழப்பமே வாசகர்களுக்கு எஞ்சும்.

 

கட்டுரையை வாசிக்கும் போதே அ.மார்க்சை மறைமுகத் தலைப்பி;ட்டு அறிமுகம் செய்யும் நோக்கில் அதன் ஆதரவாகக் சத்தியா செயற்பட்டுள்ளது புரியும்.

 

இச் செய்தியில் மறைத்த விடயத்தைச் சுட்டிக்காட்டி நாம் எழுதிய விமர்சனத்தை வழக்கம் போல் குப்பைக்குள் வீசிவிட்டது சரிநிகர். இனி அவர்கள் என்ன கூற முற்படுகிறார்கள் எனப் பார்ப்போம்.

 

நவ உலக செய்திகளை தமிழில் கொண்டு வந்து தமிழில் பரப்பும் ஒரு மேதை எனப் பாராட்டும் சத்யா இலங்கை இந்தியாவில் நவினத்தின் ஒரு நிழலும் இல்லாத உலக ஒழுங்கைப் பற்றிக் கதைக்கத் தயாரில்லை. 90 வீதமான மக்கள் கிராமப்புற சேரி வாழ்க்கையிலும் பட்டினியிலும் வாழ்கின்றனர். 10 வீதமான மேட்டுக்குடியின் சீரழிவை எடுத்து பின் நவீனத்துவம் என கூறி அ.மார்க்ஸ் போன்றோர் ஏகாதிபத்தியக் கனவைப் பூர்த்தி செய்ய கோட்பாட்டு வடிவம் கொடுக்கின்றனர்.

 

இது ஒரு புறம் இருக்க சத்யா மேலும் அ.மார்க்ஸினதும் அவரின் நிறப்பிரிகைப் பத்திரிகைக் குழுவினரும் தீவிர நிலைப்பாட்டை எடுத்ததாகக் கூறிப் பாராட்டுகிறார்.

 

1994 ஆம் ஆண்டு ‘இந்தியா ரூடே’யின் சிறப்புமலரின் பார்ப்பனத்திமிரைக் கண்டித்து நிறப்பிரிகை ஆசிரியர் குழு இந்தியா ரூடேயைக் கிழித்து மலம் துடைத்து இந்தியா ரூடேயிற்கே அனுப்பினர். நல்ல நடவடிக்கை தான். இதைத்தான் சரிநிகர் 114 -ல-; இனை வாசிக்கும் ஒரு வாசகன் நம்புவான். ஆனால் இன்னும் ஒர் உண்மையை சத்தியாவும், சரிநிகரும் திட்டமிட்டு மறைத்துவிட்டனர்.

 

1995 ஆம் ஆண்டு அதே இந்திய பார்ப்பன சிறப்பு மலருக்கு அந்தோனிப்பிள்ளை மார்க்சின் வலது கரமும் நிறப்பிரிகை ஆசிரியருமான ரவிக்குமார் கதை எழுதி வெளிவந்த கதையை சத்யா உட்பட சரிநிகர் மறைத்துவிட்டது. அ.மார்க்சின் கலகம் என்பது மோசடியாகும். தமக்கான பங்கை கோரிய கலகமே தவிர கொள்கை கிடையாது. இது சத்யா கூறுவது போல எமக்கு ""தன்னடக்கமான வார்த்தையல்ல"" கோபத்திற்குரிய கணைகளாகும். இதை மூடிமறைத்து சத்யா, சரிநிகர் ஆசிரியர் குழுவும் தேவை தான் உங்களுக்கு சரிசமன் என்ற பெயரில் ''சரிநிகர் "" என்ற ஒரு பத்திரிகை. வாழ்க நடுநிலைமை தவறாத பக்கச்சார்பு செம்மல்களின் இலவச மூடி மறைத்த பொய் விளம்பரங்கள்.

 

இதை விட இந்த சிறப்பிரிகை குழுவினரின் வேறு சில மோசடிகளைப் பார்ப்போம்.

ஈழத்துக்கவிஞர் செல்வி எழுதிய கவிதைக்கு சர்வதேச விருது ஒன்று கிடைத்ததை நாம் எல்லோரும் அறிந்ததல்லவா. அந்த நேரம் அந்தக் கவிஞர் புலிகளின் வதை முகாமில் சிக்கி இதுவரை வெளிவரவில்லை.

 

(இந்த விருது கிடைத்த நேரம் பாலசிங்கம் இவர் குறித்து விசாரணை முடிய விடுவிப்பதாக அறிவித்தும் இருந்தார்)

 

இந்த பெண் கவிஞரை விடக் கோரியும் மனித உரிமையை மதிக்கக் கோரியும் அந்தோனிப்பிள்ளை மார்க்ஸ் உட்பட பலர் கையெழுத்திட்டு ஒர் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டது நாம் எல்லோரும் அறிவோம். இந்த அந்தோனிப்பிள்ளை இரகசியமாக பாரிஸ் வந்த போது இதைப் புரட்சியின் கலகமாகக் கருதிய நண்பர்கள் அதைப் பாராட்ட திடுக்கிட்ட அ,மார்க்ஸ் எனது விருப்பம் இன்றியே எனது பெயரைப் போட்டு விட்டார்கள் என்றார். அ.மார்க்ஸ் புலியின் தயவை நாடியதைத் தொடர்ந்து செல்வியின் கைது ஜனநாயகம் எனக் நினைக்கின்றார் போலும் கேட்டுப்பாருங்கள் அ,மார்க்சையும் நிறப்பிரிகை பத்திரிகைக் குழுவையும்.

 

அடுத்த கதையைப் பார்ப்போம். அண்மையில் பாரிசில் நாதன், கஜன் படுகொலையைக் கண்டித்து நிறப்பிரிகைக் குழுவும் வேறு பலரும் சேர்ந்து கண்டன அறிக்கை விடுத்து பிரஞ்சுத் தூதுவராலயத்தின் முன்னால் ஆர்ப்பாட் டம் செய்தனர்;. நல்ல விடயம். மக்கள் மீது சவாரி செய்வதே கொலைகாரரின் நோக்கம் என்பதால் அது தெளிவாகக் கண்டிக்கப்பட வேண்டும் என்பது எல்லா ஜனநாயகவாதிகளினதும் விருப்பமாகும். இதே நேரம் இதே பாரிசில் அ.மார்க்ஸ் அவர்களின் ஜரோப்பிய விஜயத்தின் போது கொல்லப்பட்ட சபாலிங்கம் கொலை பற்றி ஏன் இவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. விஜயம் தொடர்பாக எழுதிய புத்தகத்தில் கூட ஒரு வரி குறிப்பிடவில்லை. அ,மார்க்சின் பாரிஸ் விஜயம் இதற்குள் முழுமை பெற்று சுருங்கிய மன உழைச்சலைக் கூட புத்தகம் கொண்டு வரவில்லை ஏன்?

 

சபாலிங்கம் கொலையின் போதும் சரி கஜன் நாதன் கொலையின் போதும் சரி சபாலிங்கம் பற்றிக் கதைக்காத அரசியல் தான் என்ன, அ,மார்க்ஸ் என்ற புரட்சி எழுத்தாளரே?

 

இவர்களுடன் கூட்டு அரசியல் நடத்த எஸ்.வி பற்றி பார்ப்போம்.

 

அண்மையில் ஜரோப்பிய விஜயம் செய்த தீவிர அரசியல் விமர்சகர் எஸ்வி நான் அரசியல் கதைக்க மாட்டேன் ஏன் எனில் அரசியல் கதைப்பின் ஜனநாயகம் . . எனக் கேள்வி எழும். தனது சந்தர்ப்பவாத அரசியல் பிழைப்புக்கு வேட்டு வைத்து விடும் என்பதால் அரசியல் கதைக்க மாட்டேன் என்றார். புரிகிறதல்லவா, இவர்களின் பம்மாத்து அரசியல்.

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது