Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அருவிய செழு நீர்க் கமலத்துள்

 

விடுதலை

அகவல்

 

முன்னொரு காலத்தில் இந்தியாவுக்குத் தெற்கே ஈழமெனும் அரும் பெரும் நிலப்பரப்பில்… வில்லாதி வீரர்கள் வினைப்பயன் தவத்தால் தெருவெங்கும் பிணங்கள் வீழவும்,இல்லமொடு ஊரும் உருண்டு சிதையவும் சீறிய அம்புகள் சிங்களத்துச் சேனையொடு நட்புடன் குழையக் கிழக்கில் உதித்தான் சூரியச் செல்வன்-சுதந்திரப் புருஷன் சுண்ணாம்புத்தாதா சின்னக்காவடி.கடுந்தவப் பயனால் கெந்தகத்துள் தோன்றிய இருளுலகத் தேவன் பிரண்ட புரத்தான் போரொடு புக்கான் பெரு நகர்.தமிழென்ற மொழிக் கிழத்தித் தாலாட்டிய ஒரு செய் கணத்தை ஒப்ப இது:

 

(நேரிசை வெண்பா)
நெற்றிப் பொட்டில் மஞ்சள் கட்டி
நெரிப்பிலிட்டு நீறாக்கி
நேற்று வைத்த நேற்றிக்கடன்
நெஞ்சுக்குள்ளே நினைவகற்றி

 

நெருப்பாய் போனது தெருவோரம்
ஊரானாலும் அழிந்து தேசம் பிறக்க
தேற்றிய கதைகள் நேற்றுவரை
பொய்மை விழுங்கிப் புடம் போட

 

போனது,போனது உயிருயிராய்
போற்றும் தலையும் தரைகிழித்துச் சுழியோட
புகழும் தளபதி படைவிலத்த
பழிக்கு நிற்கும் பிஞ்சுகளின்

 

உயிரினைப் பறிக்கும் சிங்களமும்
நாளும் சரியும் தலைகொண்டு
நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி
போரிடும் தாய்மண் என்றாக

 

சீண்டிப் பார்க்கும் சிறுகூட்டம்
சேனை கொண்டு அறுவடைக்குப் போனோர்
ஆண்டுகள் கண்டும் நாடடையார்
விடிந்தும் வீடுவரா வேளாண்மை

 

வேறு:

 

குருதி மழை
கோலமிழந்த ஈழ முற்றம்
நெடும்போர்ப் புயற் பொழுது
நெற்கதிர் தலை வீழ்த்திய குருதி வெள்ளம்


கடும் பசி கண்டகம் சுடலைக் கோலம்
வீடுடை குருதியுறை பிணம்
காடுடையான பிஞ்சுகள்
கேடுடையானார் ஈழத்தவர்
மேடுடையான மேன் மக்கள்
மேகத்துள் சொர்க்கம் காட்டிக்
கண் பறித்துச் சித்திரம் காட்ட
‘அழகென்ன அழகு’ என்பர் ஈழத்தவர்!

 

வேறொடு வேறு:
அதுவல்லத் தேசம் இதுவல்லத் தேசம்
ஆண்ட பரம்பரை மீள ஆளுந் தேசம்
தமிழீழ மது தாயினும் மேல்
தமிழெமது உயிரென்பாய்

 

தாகமும் அதுவே என்பாய்
தாயினது உடலம் வீழ்ந்தது
தந்தையும் வீதியில் வீழ்ந்தான் என்றோ
தனயர்களும் தாங்கிய போராயுதம் சரியத்

 

தலை சாய்ந்தார் கிழக்கொடு வடக்கிலும்
மடிப்பிச்சை எடுப்பேன் இறையே
இனியிவர்க்கு மாவீரர் வாழ் மண்ணும் வேண்டாம்
மக்களைத் துடைக்கும் கோனும் வேண்டாம்

 

கோவணம் இல்லை
குடியிருக்க ஊரும் இல்லை
கோயிலும் இல்லைக் குளமும் இல்லை
சுருங்கிய இரைப்பைக்கு ஈழம் எதுவரை?

 

புலிவழி கோன் முறை அரசு என்பாய்
குறைவில்லாத ஈழம் என்பாய்
ஒருவர் இருக்கும்வரை ஓங்கும் போரென்பாய்
அவரும் அழிய ஆவது என்ன என்பேன்?

 

வேறிலும் வேறு:

 

மகிந்தா மனிதர் என்றும்
தமிழருக்கு மேய்ப்பன் என்றும்
மகிழ்ச்சியாய் ஏற்பாய் எலும்பை
அதையும் புனைவாய் விடுதலை என்று

 

நெடுங்குருதி சொல்வாய்
நினைவையும் நெருங்குவாய்
நேற்றையதில் தமிழ்த் தலைமையும் காண்பாய்
அழிபவரை மறந்த மனதொடு அழிந்தவர் பற்றி

 

அவரவருக்கு ஆள்வது அவசியம்
குறிச்சி,வட்டாரம்,கோட்டம்
மாவட்டம்,மாகாணம்,மாநிலம் என்ப
மண்ணுக்கு எல்லைகள் வகுப்பாய்

 

கிழக்கொடு “ஜனநாயகம்” குந்த
கூலிக்குக் கும்பம் வைப்பாய்
குடியிருக்கப் பாரீஸ்சில் பங்களா கேட்டாய்
கொடுத்தவர் கொள்கை வீரர் கருணா-மகிந்தா மாமா

வேறிலும் வேறான வேறு: 


வா வேந்தே வா,நீ “ம்…”கொட்டியவன்!
மார்க்சைக் கூட்டிவா மகுடி வாசிப்பார்
ராகவனை அணைத்துக்கொள் கூத்தடி,கதையாய்ப் புனைகொள்
ஏடாக்கு, நேற்றுக் கோட்டையைப் பிடித்தவர் நாம்

 

பேட்டையைக் கட்டுவதா சிரமம்?
நீ இருக்க எனக்கேது கவலை!
நினைத்தபடி இரு கல்வெட்டொன்று இனியும் வேண்டாமென
நேற்றைய நீயும் நாளைய நானும் என்றாய் உலகம்

 

பெண்ணியமா வேந்தே?நீலி,அந்தரி
செங்கண் அரவு பிறையுடன் பிணைந்த
ராஜேஸ் அக்கா இரவகற்றும் புரட்சி மடந்தை
நிர்மலமும் நீறாய் நெற்றியில் பூசு

 

வல்லவன் நீ
கொல்பவர்களைச் சொல்லியே
கோலம்போடு உலகமெங்கும்
கூப்பாடுகொள் பின் நவீனமாக

 

குடியிருப்புகளுக்குள் கலைத்தல்
அமைப்பைக் குலைத்தலுக்கு அவசியம்
குந்தியிருக்கும் இடத்திலிருந்து ஆரம்பி
அடுப்படிக்குள் சாம்பலையும் வையாதே!

 

தலித்துப்பாட்டு மடை:

 

தண்ணிமுதல் தெரிவை தாகங்கொண்டு
மதிப்புக்கு மறுப்பறிக்கை பகர்க
குடிமனை உழந்த மாதரை நோக்கி
“உடலுறவில் திருப்தி”பற்றிக் கேட்டுவை

 

கடுமனது கொண்டால் சிரித்துவிடு
கனிவொடு மௌனித்தால் மடக்கு
இரவொடு தலித்துவம் பேசி வை
உனக்கா இது சொல்ல?

 

இடிதரும் வெடியும் நீ
கடி தரும் கொங்கைப் பாலும் நீ கேட்பாய்
குடமொடு பொழியும் மடந்தை
குழைவினில் குளிர்பவன் என்ப

 

குருவே,கோசுகனார் கொம்பே!
“வேளாளன் சாதி நீக்கிப் பிரகடனஞ் செய்க”வென
தலித்துவத்தின் விளக்க விரிவுரையே
மலர்பொதி அவிழ்த்த மாண்பே நினது பெருமை சொல்ல?

 

நெடுங்குருதி மருவி
விரிவிடை செரிவு காண
அருவிய செழு நீர்க் கமலத்துள்
நீந்தப் பெருந்தவப் பயன்கொள்-இதுவே தலித்தியம்

 

நிறை:

 

தெரிநிலை தேற்ற மையமுற் றெண் சிறப்
பெதிர்மறை யெச்சம் வினாவிழை வொழியிசை
பிரிப்புக் கழிவாக்க மின்னன விடைப்பொருள்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது